சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

வட கொரியாவின் அடுத்த தலைவராக இல் - லின் மகன் கிம் ஜங் உன் நியமனம் Khan11

வட கொரியாவின் அடுத்த தலைவராக இல் - லின் மகன் கிம் ஜங் உன் நியமனம்

Go down

வட கொரியாவின் அடுத்த தலைவராக இல் - லின் மகன் கிம் ஜங் உன் நியமனம் Empty வட கொரியாவின் அடுத்த தலைவராக இல் - லின் மகன் கிம் ஜங் உன் நியமனம்

Post by *சம்ஸ் Wed 21 Dec 2011 - 6:24

வட கொரியாவின் அடுத்த தலைவராக இல் - லின் மகன் கிம் ஜங் உன் நியமனம்
தென் கொரியா தொடர்ந்தும் உஷார் நிலையில்
வட கொரிய தலைவர் கிம் ஜொங் இல்லின் மரணத்தைத் தொடர்ந்து அந்நாட்டின் புதிய தலைவராக இல்லின் மூன்றாவது மற்றும் கடைசி மகன் கிம் ஜொங் உன் நியமிக்கப்படவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

வட கொரியாவின் ஆளும் தொழிலாளர் கட்சி புதிய தலைவராக கிம் ஜொங் உன்னை நியமித்துள்ளதாக அந்நாட்டின் அரச தொலைக்காட்சி அறிவித்துள்ளது. நாட்டின் அடுத்த தலைவரான உன்னின் பின்னால் நாம் அணி திரண்டு நமது ஒற்றுமையை காட்ட வேண்டும் என அரச செய்தி நிறுவனமான கே. சி. என். ஏ. மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

எனினும் கிம் ஜொங் உன் பற்றி மிகக் குறைந்த தகவல்களே இதுவரை வெளிவந்திருக்கின்றன. இவர் முதல் முறையாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதமே பொது மக்கள் முன் அறிமுகமானார்.

இவரது வயது 27, 28 மற்றும் 30 என பல ஊடகங்களும் முரணாக செய்தி வெளியிட்டுள்ளன.

இவர் சுவிட்சர்லாந்தில் கல்வி கற்றவர் எனும் அந்நாட்டு இராணுவத்தில் நான்கு நட்சத்திரம் கொண்ட ஜெனரல் பதவியில் இருப்பவர் என்றும் செய்திகள் குறிப்பிடுகின்றன.

இதனிடையே வட கொரியாவின் புதிய தலைவர் நாட்டை சமாதான வழியில் கொண்டு செல்வார் என தாம் எதிர்பார்ப்பதாக அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிலின்டன் குறிப்பிட்டார். அத்துடன் வட கொரிய மக்களுக்கு உதவத் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை கடந்த சனிக்கிழமை மரணமடைந்த கிம் ஜொங் இல்லின் உடல் நேற்று பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான காட்சிகளை அந்நாட்டு அரச தொலைக்காட்சி நேற்று வெளியிட்டது. இதன் போது கிம் ஜொங் இல் லின் மகன் கிம் ஜொங் உன் மற்றும் வட கொரிய அரசின் உயர் அதிகாரிகளும் அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் காட்சிகள் ஒளிபரப்பப்பட்டன.

கிம் ஜொங் இல் லின் மரணம் குறித்த செய்தியை நேற்று முன்தினமே அந்நாட்டு அரசு அறிவித்தது. இதனையொட்டி வடகொரியாவில் கடந்த 17 ஆம் திகதி முதல் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை துக்க தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. வரும் 28 ஆம் திகதி கிம் ஜொங் இல் லின் இறுதிக் கிரியைகள் இடம் பெறவுள்ளன.

இந்நிலையில் கிம் ஜொங் இல் லின் மரணத்திற்கு அனுதாபம் வெளியிட்டுள்ள கியூபா அரசு, இதனை யொட்டி கியூபாவில் மூன்று நாள் துக்கதினம் அனுஷ்டிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.

அதேபோன்று சீன ஜனாதிபதி ஹ¤ ஹின்டாவொ நேற்று பீஜிங்கிலுள்ள சீன தூதரகத்திற்கு சென்று தனது அனுதாபத்தை வெளியிட்டார்.

மறுபுறத்தில் அயல் நாடான தென் கொரியா தொடர்ந்தும் தனது இராணுவத்தை உஷார் நிலையிலேயே வைத்துள்ளது. அத்துடன் வட கொரிய ஜனாதிபதியின் மரணத்திற்கு எவ்வாறு செயற்படுவது என்பது குறித்து தென் கொரிய ஜனாதிபதி லீ மியுங் - பக் நேற்றைய தினம் தனது உயர் மட்ட அமைச்சர்களுடன் ஆலோசித்துள்ளார்.

இந் நிலையில் வட கொரியாவை ஒட்டிய தென் கொரிய எல்லையில் பிரமாண்டமான கிறிஸ்மஸ் மரத்தை அமைக்கும் திட்டத்தை தென் கொரிய அரசு விலக்கிக் கொள்ளும் என அங்கிருந்து வரும் செய்திகள் குறிப்பிடுகின்றன.

இதில் வட கொரிய தலைவரின் மரணம் குறித்து முன் கூட்டியே செய்திகள் தெரிய வராதது குறித்து தென்கொரிய உளவுப் பிரிவு மீது அந்நாட்டு அரசு குற்றம் சாட்டியுள்ளது. இந்த தவறை தென்கொரிய உளவுப் பிரிவுத் தலைவர் செய் ஹ¤ன் ஒப்புக் கொண்டுள்ளார். இது குறித்து அவர் தென்கொரிய பாராளுமன்ற குழு முன் நேற்று விளக்கமளித்தார். அதில் வட கொரிய அரசு அறிவித்துத் தான் தனக்கு இந்த செய்தி தெரியும் என குறிப்பிட்டார்.

வட கொரிய தலைவர் கிம் ஜொங் இல் கடந்த சனிக்கிழமை மரணமடைந்தாலும் அது குறித்த செய்தியை அந்நாட்டு அரசு இரண்டு நாள் கழித்து நேற்று முன்தினமே வெளியிட்டது.

இதேவேளை, கிம் ஜொங் இல் மரணமடைந்ததாக அறிவிப்பு வெளியான நேற்று முன்தினம் வட கொரியா ஏவுகணை சோதனையும் மேற்கொண்டுள்ளது. குறைந்த தூரம் சென்று இலக்கை தாக்கும் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது என தொலைக்காட்சிகள் செய்தி வெளியிட்டன.

இது குறித்து இராணுவ அதிகாரிகள் எந்த தகவலும் வெளியிடவில்லை. எனினும் வடக்கு கடற்கரை பகுதியில் ஏவுகணை சோதனை நடத்தப்பட்டதாக யான் ஹாப் தொலைக்காட்சி தெரிவித்தது.

உலகின் 5 ஆவது மிகப் பெரிய இராணுவத்தை கொண்ட வட கொரியா அணு ஆயுத சோதனையும் மேற்கொண்டுள்ளது.

இதனால் அங்கு ஏற்படும் ஆட்சி மாற்றம் குறித்து சர்வதேச நாடுகள் உன்னிப்பாக கவனம் செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum