Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
ஹமாஸ் தலைவராக காலித் மிஷால் மீண்டும் நியமனம்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
ஹமாஸ் தலைவராக காலித் மிஷால் மீண்டும் நியமனம்
ஹமாஸ் தலைவராக காலித் மிஷால் மீண்டும் நியமனம்
பலஸ்தீன இஸ்லாமிய அமைப்பான ஹமாஸ் தலைவராக காலித் மிஷால் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஹமாஸ் அமைப்பு கடந்த திங்கட்கிழமை இதனை உறுதி செய்தது.
கடந்த 2007 ஆம் ஆண்டு தொடக்கம் காசாவை ஆளும் ஹமாஸ் அமைப்பின் தலைமை பதவியில் காலித் மிஷால் நீடிப்பது தொடர்பில் கடந்த ஓர் ஆண்டாக சந்தேகம் நிலவிவந்த நிலையிலேயே மேலும் நான்கு ஆண்டு தவணைக்கு அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தாம் மேலும் ஒரு தவணைக்கு போட்டியிடப் போவதில்லை என மிஷால் கடந்த ஆண்டு கூறியிருந்தார். எனினும் ஹமாஸ் அமைப்பின் உயரிய சபையான சூரா கவுன்சில் கெய்ரோவில் வைத்து கடந்த திங்கட்கிழமை காலித் மிஷாலை மேலும் நான்கு ஆண்டு தவணைக்கு தேர்வு செய்ததாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
“ஹமாஸ் தலைமைகள் காலித் மிஷாலை தேர்வு செய்தனர்” என அந்த அமைப்பின் உயர்நிலை அதிகாரி ஒருவர் ஏ. எப். பி. செய்திச் சேவைக்கு குறிப்பிட்டார். ஹமாஸ் தலைமைகள் கடந்த ஞாயிறு, திங்கள் ஆகிய இரு தினங்களும் எகிப்து தலைநகர் கெய்ரோவில் கழித்தனர். இதன்போதே நேற்று முன்தினம் புதிய தலைமையை தேர்வு செய்யும் வாக்கெடுப்பும் இடம்பெற்றது. இதில் எதிர் அமைப்பான ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸின் பத்தாவுடன் சமரச உடன்படிக்கையை ஏற்படுத்துவது குறித்தும் ஹமாஸ் தலைமைகள் எகிப்து தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஹமாஸ் அமைப்பின் காசாவுக்கான தலைமைப் பொறுப்பை ஏற்று செயற்படும் பிரதமர் இஸ்மைல் ஹன்யான் மற்றும் அந்த அமைப்பின் இரண்டாம் நிலை தலைவர் மூஸா அபு மர்சூக் ஆகியோரும் ஹமாஸ் தலைமை குழுவில் இருந்தனர்.
காலித் மிஷால் போட்டியிடாத பட்சத்தில் அபு மர்சூக் ஹமாஸ் தலைமை பொறுப்பை ஏற்க அதிக வாய்ப்பு காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
எனினும் திறமையான பேச்சாற்றல் கொண்ட காலித் மிஷாலின் இராஜதந்திர முயற்சியால் முஸ்லிம் மற்றும் அரபு நாடுகளில் ஹமாஸ் அமைப்புக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. அத்துடன் 2011 இல் ஆரம்பமான மத்திய கிழக்கு எழுச்சி போராட்டங்கள் காரணமாக ஹமாஸ் அமைப்பின் நிலைப்பாடு தொடர்பிலும் மாற்றங்கள் ஏற்பட்டன.
“மிஷால் ஹமாஸ் அமைப்புக்கான தேசிய அடையாளத்தை காட்டியவர். அரபு உலகுடன் நல்ல உறவைக் கொண்டுள்ளார். எனவே அவரை தேர்வு செய்யும் நிலைக்கு ஹமாஸ் தள்ளப்பட்டிருக்கிறது” என ஹமாஸ் உயர்நிலை அதிகாரி ஒருவர் ஏ. எப். பிக்கு கூறியுள்ளார்.
ஹமாஸ் அமைப்பின் இணை நிறுவனரான அஹமத் யாசின் மற்றும் அவருக்குப் பின்னர் தலைமைப் பொறுப்பை ஏற்ற அப்தலஸிஸ் அல் ரன்டிசி ஆகியோர் இஸ்ரேலினால் கொல்லப்பட்டதை அடுத்து 2004 ஆம் ஆண்டு காலித் மிஷால் ஹமாஸ் அமைப்பின் தலைமை பொறுப்பை ஏற்றார். மிஷாலை கொல்ல இஸ்ரேல் பல முறை முயற்சித்துள்ளது.
கடந்த 1997 ஆம்ஆண்டு ஜோர்தானில் வைத்து காலித் மிஷாலைக் கொல்லும் இஸ்ரேலின் சதியால் அவர் மயிரிழையிலேயே உயிர் தப்பினார். கனடா நாட்டு சுற்றுலா பயணியாக மாறுவேடமிட்டு வந்த இஸ்ரேலின் மொசாட் உளவாளி அம்மான் வீதியில் வைத்து மிஷாலுக்கு நஞ்சூட்டியதில் அவர் கோமா நிலை வரை சென்றார்.
எனினும் இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட இரு உளவாளிகளை சிறைப்படுத்திய ஜோர்தான் நிர்வாகம் இஸ்ரேலிடம் மாற்று மருந்து பெற்றே மிஷாலை காப்பாற்றியது.
56 வயதான காலித் மிஷால் கடந்த ஆண்டு டிசம்பரிலேயே முதல்முறை காசாவுக்கு விஜயம் மெற்கொண்டார். பிராந்திய சக்திகளான கட்டார், துருக்கி மற்றும் எகிப்து நாடுகளின் ஆதரவைப் பெற்ற மிஷால் தற்போது கட்டாரை மையமாகக் கொண்டு செயற்பட்டு வருகிறார். காலித் மிஷால் மீண்டும் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள நிலையில் ஹமாஸ் -பதா அமைப்புகளுக்கு இடையில் சமரசம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2006ம் ஆண்டு பலஸ்தீன பொதுத் தேர்தலில் வென்ற ஹமாஸ் அமைப்புக்கும் பதாவுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டதை அடுத்து கடந்த 2007 ஆம்ஆண்டு காசா ஹமாஸ் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் கிளையாக 1987 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஹமாஸ் அமைப்பை மேற்கு நாடுகள் தீவிரவாத அமைப்பாக அறிவித்துள்ளன. ஹமாஸ் இஸ்ரேலை ஒரு நாடாக அங்கீகரிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பலஸ்தீன இஸ்லாமிய அமைப்பான ஹமாஸ் தலைவராக காலித் மிஷால் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஹமாஸ் அமைப்பு கடந்த திங்கட்கிழமை இதனை உறுதி செய்தது.
கடந்த 2007 ஆம் ஆண்டு தொடக்கம் காசாவை ஆளும் ஹமாஸ் அமைப்பின் தலைமை பதவியில் காலித் மிஷால் நீடிப்பது தொடர்பில் கடந்த ஓர் ஆண்டாக சந்தேகம் நிலவிவந்த நிலையிலேயே மேலும் நான்கு ஆண்டு தவணைக்கு அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தாம் மேலும் ஒரு தவணைக்கு போட்டியிடப் போவதில்லை என மிஷால் கடந்த ஆண்டு கூறியிருந்தார். எனினும் ஹமாஸ் அமைப்பின் உயரிய சபையான சூரா கவுன்சில் கெய்ரோவில் வைத்து கடந்த திங்கட்கிழமை காலித் மிஷாலை மேலும் நான்கு ஆண்டு தவணைக்கு தேர்வு செய்ததாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
“ஹமாஸ் தலைமைகள் காலித் மிஷாலை தேர்வு செய்தனர்” என அந்த அமைப்பின் உயர்நிலை அதிகாரி ஒருவர் ஏ. எப். பி. செய்திச் சேவைக்கு குறிப்பிட்டார். ஹமாஸ் தலைமைகள் கடந்த ஞாயிறு, திங்கள் ஆகிய இரு தினங்களும் எகிப்து தலைநகர் கெய்ரோவில் கழித்தனர். இதன்போதே நேற்று முன்தினம் புதிய தலைமையை தேர்வு செய்யும் வாக்கெடுப்பும் இடம்பெற்றது. இதில் எதிர் அமைப்பான ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸின் பத்தாவுடன் சமரச உடன்படிக்கையை ஏற்படுத்துவது குறித்தும் ஹமாஸ் தலைமைகள் எகிப்து தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஹமாஸ் அமைப்பின் காசாவுக்கான தலைமைப் பொறுப்பை ஏற்று செயற்படும் பிரதமர் இஸ்மைல் ஹன்யான் மற்றும் அந்த அமைப்பின் இரண்டாம் நிலை தலைவர் மூஸா அபு மர்சூக் ஆகியோரும் ஹமாஸ் தலைமை குழுவில் இருந்தனர்.
காலித் மிஷால் போட்டியிடாத பட்சத்தில் அபு மர்சூக் ஹமாஸ் தலைமை பொறுப்பை ஏற்க அதிக வாய்ப்பு காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
எனினும் திறமையான பேச்சாற்றல் கொண்ட காலித் மிஷாலின் இராஜதந்திர முயற்சியால் முஸ்லிம் மற்றும் அரபு நாடுகளில் ஹமாஸ் அமைப்புக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. அத்துடன் 2011 இல் ஆரம்பமான மத்திய கிழக்கு எழுச்சி போராட்டங்கள் காரணமாக ஹமாஸ் அமைப்பின் நிலைப்பாடு தொடர்பிலும் மாற்றங்கள் ஏற்பட்டன.
“மிஷால் ஹமாஸ் அமைப்புக்கான தேசிய அடையாளத்தை காட்டியவர். அரபு உலகுடன் நல்ல உறவைக் கொண்டுள்ளார். எனவே அவரை தேர்வு செய்யும் நிலைக்கு ஹமாஸ் தள்ளப்பட்டிருக்கிறது” என ஹமாஸ் உயர்நிலை அதிகாரி ஒருவர் ஏ. எப். பிக்கு கூறியுள்ளார்.
ஹமாஸ் அமைப்பின் இணை நிறுவனரான அஹமத் யாசின் மற்றும் அவருக்குப் பின்னர் தலைமைப் பொறுப்பை ஏற்ற அப்தலஸிஸ் அல் ரன்டிசி ஆகியோர் இஸ்ரேலினால் கொல்லப்பட்டதை அடுத்து 2004 ஆம் ஆண்டு காலித் மிஷால் ஹமாஸ் அமைப்பின் தலைமை பொறுப்பை ஏற்றார். மிஷாலை கொல்ல இஸ்ரேல் பல முறை முயற்சித்துள்ளது.
கடந்த 1997 ஆம்ஆண்டு ஜோர்தானில் வைத்து காலித் மிஷாலைக் கொல்லும் இஸ்ரேலின் சதியால் அவர் மயிரிழையிலேயே உயிர் தப்பினார். கனடா நாட்டு சுற்றுலா பயணியாக மாறுவேடமிட்டு வந்த இஸ்ரேலின் மொசாட் உளவாளி அம்மான் வீதியில் வைத்து மிஷாலுக்கு நஞ்சூட்டியதில் அவர் கோமா நிலை வரை சென்றார்.
எனினும் இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட இரு உளவாளிகளை சிறைப்படுத்திய ஜோர்தான் நிர்வாகம் இஸ்ரேலிடம் மாற்று மருந்து பெற்றே மிஷாலை காப்பாற்றியது.
56 வயதான காலித் மிஷால் கடந்த ஆண்டு டிசம்பரிலேயே முதல்முறை காசாவுக்கு விஜயம் மெற்கொண்டார். பிராந்திய சக்திகளான கட்டார், துருக்கி மற்றும் எகிப்து நாடுகளின் ஆதரவைப் பெற்ற மிஷால் தற்போது கட்டாரை மையமாகக் கொண்டு செயற்பட்டு வருகிறார். காலித் மிஷால் மீண்டும் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள நிலையில் ஹமாஸ் -பதா அமைப்புகளுக்கு இடையில் சமரசம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2006ம் ஆண்டு பலஸ்தீன பொதுத் தேர்தலில் வென்ற ஹமாஸ் அமைப்புக்கும் பதாவுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டதை அடுத்து கடந்த 2007 ஆம்ஆண்டு காசா ஹமாஸ் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் கிளையாக 1987 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஹமாஸ் அமைப்பை மேற்கு நாடுகள் தீவிரவாத அமைப்பாக அறிவித்துள்ளன. ஹமாஸ் இஸ்ரேலை ஒரு நாடாக அங்கீகரிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» உலக வங்கித் தலைவராக ஜிம் யோங் கிம் மீண்டும் நியமனம்
» பாராளுமன்ற நெறிமுறை குழு தலைவராக அத்வானி மீண்டும் நியமனம்
» அல்கொய்தாவின் புதிய தலைவராக அல் சவாஹிரி நியமனம்
» திமுக நாடாளுமன்ற குழுத் தலைவராக கனிமொழி நியமனம்..!
» வட கொரியாவின் அடுத்த தலைவராக இல் - லின் மகன் கிம் ஜங் உன் நியமனம்
» பாராளுமன்ற நெறிமுறை குழு தலைவராக அத்வானி மீண்டும் நியமனம்
» அல்கொய்தாவின் புதிய தலைவராக அல் சவாஹிரி நியமனம்
» திமுக நாடாளுமன்ற குழுத் தலைவராக கனிமொழி நியமனம்..!
» வட கொரியாவின் அடுத்த தலைவராக இல் - லின் மகன் கிம் ஜங் உன் நியமனம்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|