Latest topics
» பல்சுவை - 4by rammalar Yesterday at 19:25
» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Yesterday at 15:41
» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Yesterday at 15:27
» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Yesterday at 13:17
» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Yesterday at 12:57
» செய்திகள் -பல்சுவை
by rammalar Yesterday at 10:35
» பீட்ரூட் ரசம்
by rammalar Yesterday at 10:07
» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Yesterday at 10:00
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Yesterday at 4:22
» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37
» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53
» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40
» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35
» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49
» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Thu 30 May 2024 - 8:50
» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Thu 30 May 2024 - 8:41
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Thu 30 May 2024 - 5:41
» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Thu 30 May 2024 - 5:37
» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Thu 30 May 2024 - 4:12
» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Thu 30 May 2024 - 4:01
» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed 29 May 2024 - 15:43
» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed 29 May 2024 - 15:41
» மோர்க்களி
by rammalar Wed 29 May 2024 - 15:40
» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Wed 29 May 2024 - 15:30
» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Wed 29 May 2024 - 15:26
» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Wed 29 May 2024 - 15:21
» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Wed 29 May 2024 - 15:15
» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Wed 29 May 2024 - 15:07
» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Wed 29 May 2024 - 13:52
» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Wed 29 May 2024 - 12:07
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Wed 29 May 2024 - 9:32
முல்லைப்பெரியாறு அணைக்கு நிலநடுக்கத்தால் பாதிப்பு ஏற்படாது
Page 1 of 1
முல்லைப்பெரியாறு அணைக்கு நிலநடுக்கத்தால் பாதிப்பு ஏற்படாது
நீதிபதி ஆனந்த் குழுவிடம் நிபுணர் குழு அறிக்கை
முல்லைப்பெரியாறு அணைக்கு நிலநடுக்கத்தால் பாதிப்பு ஏற்படாது என்று நீதிபதி ஆனந்த் குழுவிடம் நிபுணர் குழு அறிக்கை அளித்துள்ளது.
தமிழகத்தின் 5 தென் மாவட்டங்களுக்கு வாழ்வாதாரமாக விளங்குகிறது முல்லைப்பெரியாறு அணை.
கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள இந்த அணை வலுவிழந்து விட்டதாக கூறி புதிய அணை கட்ட வேண்டும் என்று கேரள அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
தமிழக அரசு மறுப்பு
கேரள அரசின் இந்த பொய் பிரசாரத்தை தமிழக அரசு கடுமையாக எதிர்த்து வருகிறது. ‘முல்லைப் பெரியாறு அணை வலுவாக உள்ளது. கேரளா சொல்வது போல நில நடுக்கத்தால் பாதிக்கப்படாது. புதிய அணை கட்ட வேண்டிய அவசியம் இல்லை. எனவே அணையின் நீர் மட்டத்தை உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்த வேண்டும்’ என்று தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது.
இது தொடர்பாக இரு மாநிலங்களும் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
ஐவர் குழு
இதற்கிடையே இரு மாநிலங்களுக்கும் இடையே நீண்ட காலமாக இருந்து வரும் இந்த பிரச்சினை குறித்து ஆய்வு செய்து பரிந்துரைக்க உச்ச நீதிமன்றம் 5 பேர் குழு ஒன்றை நியமித்தது.
உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஏ. எஸ். ஆனந்த் தலைமையிலான இந்த குழுவில் தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஏ. ஆர் இலட்சுமணன் இடம்பெற்று உள்ளார். இந்த குழு மார்ச் மாதத்துக்குள் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த குழு ஏற்கனவே முல்லைப்பெரியாறு அணை பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டது.
நிபுணர் குழு அறிக்கை
அணையை பார்வையிட்டு கேரளாவின் புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டு இருப்பது பற்றி ஒரு ஆய்வு அறிக்கை தரும்படி 2 பேர் கொண்ட ஒரு நிபுணர் குழுவை ஐவர் குழு நியமித்தது. அந்த இரு நிபுணர்களும் அணையை பார்வையிட்டு ஐவர் குழுவிடம் இடைக்கால அறிக்கையை அளித்து உள்ளனர்.
நிபுணர் குழுவின் அறிக்கையில் கேரளாவின் புகார் நிராகரிக்கப்பட்டு உள்ளது. மேலும் நில நடுக்கத்தால் முல்லைப்பெரியாறு அணைக்கு பாதிப்பு ஏற்படவில்லை என்றும் இலேசான நிலநடுக்கம் ஏற்பட கூடிய பகுதியில் முல்லைப்பெரியாறு அணைப் பகுதி இருப்பதால் எதிர்காலத்திலும் அணைக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை என்றும் நிபுணர் குழு தனது அறிக்கையில் கூறியிருப்பதாக தெரிகிறது.
கேரளா தரப்பில் ஆஜரான ராஜீவ் தவான் வாதாடுகையில் கூறியதாவது : ‘அணையில் விரிசலோ, கீறலோ ஏற்படவில்லை. ஆனால் ரூர்க்கி ஐ. ஐ. டீ. நிபுணர்கள் அளித்த அறிக்கையை தீவிரமாக கவனத்தில் கொள்ள வேண்டும். இடுக்கி மாவட்டம் அடிக்கடி நில நடுக்கம் ஏற்படும் பகுதி. இடுக்கி மாவட்டத்தில்தான் முல்லைப் பெரியாறு அணை உள்ளது. ஆகவே நில நடுக்கத்தால் முல்லைப்பெரியாறு அணைக்கு ஆபத்து உள்ளது. எப்போது வேண்டுமானாலும் அணை உடையும் அச்சம் உள்ளது. எனவே இந்த பிரச்சினைக்கு ஒரே தீர்வு புதிய அணை கட்டுவதுதான். அதுவரை அணையின் நீர் மட்டத்தை 136 அடியில் இருந்து 120 அடியாக குறைக்க வேண்டும்’ என்று வாதிட்டார்.
தமிழக அரசு சார்பில் ஆஜரான சட்டத்தரணி குருகிருஷ்ணா, ‘புதிய அணை கட்ட வேண்டும் என்ற கேரளாவின் கோரிக்கையை ஏற்க முடியாது. ஏனென்றால் முல்லைப் பெரியாறு அணை வலுவாக உள்ளது’ என்று வாதிட்டார்.
அப்போது நீதிபதி ஆனந்த் குறுக்கிட்டு ‘முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டி பராமரிப்புக்கு கூட்டுக் குழுவை நியமிக்கலாமா? புதிய அணையில் குறிப்பிட்ட அளவுக்கு தண்ணீர் தேக்கி வைத்து பராமரிக்க நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம். தமிழக அரசு இதை ஏற்றுக்கொள்ளுமா’ என்று கேட்டார்.
இந்த யோசனையை ஏற்க தமிழக அரசு திட்டவட்டமாக மறுத்து விட்டது.
‘முல்லைப் பெரியாறு அணை மிகவும் பலமாக உள்ளது. அதில் போதிய தண்ணீர் தேக்கி வைக்கும் திறன் நன்றாகவே உள்ளது. ஆகவே புதிய அணை கட்ட வேண்டும் என்று பேச்சுக்கே இடமில்லை. அதற்கு அவசியமும் இல்லை. புதிய அணை கட்டப்பட்டால், ஏற்கனவே உள்ள ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள நீர் பங்கீடு உள்ளிட்ட பல அம்சங்களில் பாதிப்பு ஏற்படும். அணைக்கு 100 ஆண்டு ஆகிவிட்டது. அது உடைந்து விடும் என்று கேரள அரசு மக்களிடம் தேவையில்லாத அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரும் வரை காத்திருக்கலாம்.
சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுப்படி அணையின் , நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த உத்தரவிட வேண்டும்’ என்று தமிழக அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் குழு கிருஷ்ணா வலியுறுத்தி வாதாடினார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆனந்த் தலைமையிலான குழு புதிய அணை கட்டப்பட்டால் தண்ணீர் பங்கீடு பாதுகாப்பு ஏற்பாடு, அணை நிர்வாகம் செய்வது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக இரு மாநிலங்களும் தங்களது பதில்களை வெள்ளிக்கிழமைக்குள் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
முல்லைப்பெரியாறு அணைக்கு நிலநடுக்கத்தால் பாதிப்பு ஏற்படாது என்று நீதிபதி ஆனந்த் குழுவிடம் நிபுணர் குழு அறிக்கை அளித்துள்ளது.
தமிழகத்தின் 5 தென் மாவட்டங்களுக்கு வாழ்வாதாரமாக விளங்குகிறது முல்லைப்பெரியாறு அணை.
கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள இந்த அணை வலுவிழந்து விட்டதாக கூறி புதிய அணை கட்ட வேண்டும் என்று கேரள அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
தமிழக அரசு மறுப்பு
கேரள அரசின் இந்த பொய் பிரசாரத்தை தமிழக அரசு கடுமையாக எதிர்த்து வருகிறது. ‘முல்லைப் பெரியாறு அணை வலுவாக உள்ளது. கேரளா சொல்வது போல நில நடுக்கத்தால் பாதிக்கப்படாது. புதிய அணை கட்ட வேண்டிய அவசியம் இல்லை. எனவே அணையின் நீர் மட்டத்தை உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்த வேண்டும்’ என்று தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது.
இது தொடர்பாக இரு மாநிலங்களும் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
ஐவர் குழு
இதற்கிடையே இரு மாநிலங்களுக்கும் இடையே நீண்ட காலமாக இருந்து வரும் இந்த பிரச்சினை குறித்து ஆய்வு செய்து பரிந்துரைக்க உச்ச நீதிமன்றம் 5 பேர் குழு ஒன்றை நியமித்தது.
உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஏ. எஸ். ஆனந்த் தலைமையிலான இந்த குழுவில் தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஏ. ஆர் இலட்சுமணன் இடம்பெற்று உள்ளார். இந்த குழு மார்ச் மாதத்துக்குள் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த குழு ஏற்கனவே முல்லைப்பெரியாறு அணை பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டது.
நிபுணர் குழு அறிக்கை
அணையை பார்வையிட்டு கேரளாவின் புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டு இருப்பது பற்றி ஒரு ஆய்வு அறிக்கை தரும்படி 2 பேர் கொண்ட ஒரு நிபுணர் குழுவை ஐவர் குழு நியமித்தது. அந்த இரு நிபுணர்களும் அணையை பார்வையிட்டு ஐவர் குழுவிடம் இடைக்கால அறிக்கையை அளித்து உள்ளனர்.
நிபுணர் குழுவின் அறிக்கையில் கேரளாவின் புகார் நிராகரிக்கப்பட்டு உள்ளது. மேலும் நில நடுக்கத்தால் முல்லைப்பெரியாறு அணைக்கு பாதிப்பு ஏற்படவில்லை என்றும் இலேசான நிலநடுக்கம் ஏற்பட கூடிய பகுதியில் முல்லைப்பெரியாறு அணைப் பகுதி இருப்பதால் எதிர்காலத்திலும் அணைக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை என்றும் நிபுணர் குழு தனது அறிக்கையில் கூறியிருப்பதாக தெரிகிறது.
கேரளா தரப்பில் ஆஜரான ராஜீவ் தவான் வாதாடுகையில் கூறியதாவது : ‘அணையில் விரிசலோ, கீறலோ ஏற்படவில்லை. ஆனால் ரூர்க்கி ஐ. ஐ. டீ. நிபுணர்கள் அளித்த அறிக்கையை தீவிரமாக கவனத்தில் கொள்ள வேண்டும். இடுக்கி மாவட்டம் அடிக்கடி நில நடுக்கம் ஏற்படும் பகுதி. இடுக்கி மாவட்டத்தில்தான் முல்லைப் பெரியாறு அணை உள்ளது. ஆகவே நில நடுக்கத்தால் முல்லைப்பெரியாறு அணைக்கு ஆபத்து உள்ளது. எப்போது வேண்டுமானாலும் அணை உடையும் அச்சம் உள்ளது. எனவே இந்த பிரச்சினைக்கு ஒரே தீர்வு புதிய அணை கட்டுவதுதான். அதுவரை அணையின் நீர் மட்டத்தை 136 அடியில் இருந்து 120 அடியாக குறைக்க வேண்டும்’ என்று வாதிட்டார்.
தமிழக அரசு சார்பில் ஆஜரான சட்டத்தரணி குருகிருஷ்ணா, ‘புதிய அணை கட்ட வேண்டும் என்ற கேரளாவின் கோரிக்கையை ஏற்க முடியாது. ஏனென்றால் முல்லைப் பெரியாறு அணை வலுவாக உள்ளது’ என்று வாதிட்டார்.
அப்போது நீதிபதி ஆனந்த் குறுக்கிட்டு ‘முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டி பராமரிப்புக்கு கூட்டுக் குழுவை நியமிக்கலாமா? புதிய அணையில் குறிப்பிட்ட அளவுக்கு தண்ணீர் தேக்கி வைத்து பராமரிக்க நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம். தமிழக அரசு இதை ஏற்றுக்கொள்ளுமா’ என்று கேட்டார்.
இந்த யோசனையை ஏற்க தமிழக அரசு திட்டவட்டமாக மறுத்து விட்டது.
‘முல்லைப் பெரியாறு அணை மிகவும் பலமாக உள்ளது. அதில் போதிய தண்ணீர் தேக்கி வைக்கும் திறன் நன்றாகவே உள்ளது. ஆகவே புதிய அணை கட்ட வேண்டும் என்று பேச்சுக்கே இடமில்லை. அதற்கு அவசியமும் இல்லை. புதிய அணை கட்டப்பட்டால், ஏற்கனவே உள்ள ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள நீர் பங்கீடு உள்ளிட்ட பல அம்சங்களில் பாதிப்பு ஏற்படும். அணைக்கு 100 ஆண்டு ஆகிவிட்டது. அது உடைந்து விடும் என்று கேரள அரசு மக்களிடம் தேவையில்லாத அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரும் வரை காத்திருக்கலாம்.
சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுப்படி அணையின் , நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த உத்தரவிட வேண்டும்’ என்று தமிழக அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் குழு கிருஷ்ணா வலியுறுத்தி வாதாடினார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆனந்த் தலைமையிலான குழு புதிய அணை கட்டப்பட்டால் தண்ணீர் பங்கீடு பாதுகாப்பு ஏற்பாடு, அணை நிர்வாகம் செய்வது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக இரு மாநிலங்களும் தங்களது பதில்களை வெள்ளிக்கிழமைக்குள் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» பூமியை நெருங்கும் ராட்சத பாறையால் பாதிப்பு ஏற்படாது: விஞ்ஞானிகள் கருத்து
» சுனாமி எச்சரிக்கை கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளன இந்திய அணு உலைகளில் விபத்து ஏற்படாது
» கபினி அணை நிரம்பி வருவதால் மேட்டூர் அணைக்கு நீர் வர வாய்ப்பு
» இயல்புநிலை பாதிப்பு
» செல்போன் பயன்படுத்துவதால் உடலில் குறிப்பிடத்தக்க எந்த மாற்றமும் ஏற்படாது
» சுனாமி எச்சரிக்கை கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளன இந்திய அணு உலைகளில் விபத்து ஏற்படாது
» கபினி அணை நிரம்பி வருவதால் மேட்டூர் அணைக்கு நீர் வர வாய்ப்பு
» இயல்புநிலை பாதிப்பு
» செல்போன் பயன்படுத்துவதால் உடலில் குறிப்பிடத்தக்க எந்த மாற்றமும் ஏற்படாது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|