Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27by rammalar Yesterday at 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
முதல்வர் சாண்டி கோரிக்கை மறுப்பு; கருத்துக் கூற பன்சால் தயக்கம்
Page 1 of 1
முதல்வர் சாண்டி கோரிக்கை மறுப்பு; கருத்துக் கூற பன்சால் தயக்கம்
முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு உச்ச நீதிமன்றம் மூலமாக தீர்வு காண்பது காலதாமதத்தை ஏற்படுத்தும். கேரள அரசுடன் பேச்சுவார்த்தை மூலமாக பிரச்சினைக்குத் தீர்வு காண, தமிழக அரசு முன்வர வேண்டும். இரு மாநில அரசுகளுக்கிடையே பேச்சுவார்த்தைகளைத் தொடங்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று, கேரள முதலமைச்சர் உம்மன் சாண்டி தெரிவித்தார். ஆனால் இக்கோரிக்கையை மத்திய அரசு ஏற்றதற்கான அறிகுறி ஏதும் இல்லை.
கேரள அரசின் இந்த நெடுநாளைய கோரிக்கையை மத்திய நீர்வளத்துறை அமைச்சர் பவன்குமார் பன்சாலை, சாண்டி நேற்று முன்தினம் சந்தித்தபோது மீண்டும் வலியுறுத்தினார். சாண்டியின் இந்த கோரிக்கையை பன்சால் கேட்டுக்கொண்டார். ஆனால் சந்திப்பிற்கு பிறகு மத்திய அமைச்சர் பத்திரிகையாளர்களை சந்திக்க மறுத்துவிட்டார். வெளிநாட்டில் வாழும் இந்தியர்களின் மாநாடு, ஜெய்ப்பூரில் கடந்த இரண்டு நாட்களாக நடந்தது. அந்த மாநாட்டில் கலந்துகொண்டு திருவனந்தபுரம் திரும்பும் வழியில், நேற்று முன்தினம் சாண்டி டில்லிக்கு வந்தார். காலை 12 மணிக்கு, ஷ்ரம் சக்தி பவனில் மத்திய நீர்வள அமைச்சர் பன்சாலை சந்தித்தார். இந்த சந்திப்பு 30 நிமிடங்கள் நீடித்தது.
பிறகு கேரள இல்லத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், சாண்டி கூறியதாவது, சமீபத்தில் கேரள அமைச்சரவையில் முல்லைப் பெரியாறு புதிய அணை சம்பந்தமாக எடுத்த முடிவுகள் குறித்து பன்சாலிடம் விளக்கினேன். கேளர அமைச்சரவையின் முடிவின்படி புதிய அணையின் உரிமை, கட்டுப்பாடு ஆகியவை கேரள அரசிடமே இருக்கும். தமிழகத்தோடு நீர் பங்கீடு குறித்து, இரு மாநில அரசுகளின் பிரதிநிதிகளின் கூட்டுக்குழு முடிவு செய்யும். முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதற்கு தமிழக அரசே, 1979 ஆண்டில் ஒத்துக்கொண்டது. புதிய அணை கட்டுவதற்குதமிழக பொறியாளர்கள் ஒத்துக்கொண்டது குறித்த ஆவணங்கள், கேரள அரசிடம் உள்ளது.
புதிய அணை கட்டு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தமிழக ஆரசுக்கு இரண்டு கடிதங்களை அனுப்பியுள்ளேன். அதில் ஒரு கடிதத்திற்குதான் பதில் வந்தது. மத்திய அரசு, இரு மாநில முதல்வர்கள் இடையே பேச்சுவார்த்தை தொடங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். உச்ச நீதிமன்றம் முல்லை பெரியாறு பிரச்சினை குறித்து, தனது தீர்ப்பை தெரிவித்த பிறகு இரு மாநில அரசுகளும் பேச்சுவார்த்தை நடத்தினால் உபயோகமாக இருக்குமா என்ற கேள்விக்கு, உடனடியாக பதில் தர முடியாது. நீதிமன்ற தீர்ப்பு, வருவதற்கு காலதாமதமாகும். அணை உடைந்துவிடுமோ என்ற பீதியில் கேரளமக்கள் அதுவரை இருப்பதை எனது அரசு விரும்பவில்லை.
இவ்வாறு சாண்டி தெரிவித்தார். திரும்பத் திரும்ப புதிய அணை குறித்து வலியுறுத்தும் முதல்வர் சாண்டி பெரியாறு அணை விடயத்தில், நீதிமன்றத்திற்கு வெளியே தீர்வு காண விரும்புவதாக இப்போது கருத்து தெரிவித்திருக்கிறார். உச்ச நீதிமன்றம் இந்த விடயத்தில், தீவிர கவனம் செலுத்தும் நேரத்தில் இம்மாதிரி அடுத்த கருத்தை தெரிவித்து புதிய குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறார். பன்சால் இது தொடர்பாக எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை.
முல்லைப் பெரியாறு பாதுகாப்பு குறித்து, முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் உட்பட பல்வேறு தரப்பினர் தாக்கல் செய்த நிலைய மனுக்களை, கேரள மேல் நீதிமன்றம் நேற்று முன்தினம் தள்ளுபடி செய்தது. முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு குறித்து, கேரள மேல் நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இம்மனுக்கள் நேற்று முன்தினம் கேரள மேல் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி (பொறுப்பு) மஞ்சுளா செல்லூர் மற்றும் நீதிபதி பி. ஆர். ராமச்சந்திரமேனன் ஆகியோர் அடங்கிய ‘டிவிஷன் பெஞ்ச்’ முன் விசாரணைக்கு வந்தது. இதில், அச்சுதானந்தன் தனது மனுவில், அணைக்கட்டுக்கு ஆபத்து நேரிட்டால், இராணுவ பொறியிய லாளர்களை அழைக்க உத்தரவிடவேண்டும் என கோரியிருந்தார். மனுதாரர்கள் கருத்துக்களை பதிவு செய்து கொண்ட ‘டிவிஷன் பெஞ்ச்’ நீதிபதிகள் கூறியதாவது; முல்லைப் பெரியாறு அணைக்கு அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து, கடந்த மாதமே மாநில அரசு அறிக்கை அளித்துள்ளது. கோடை காலம் தொடங்க உள்ள நிலையில், விரைவில் அணையின் நீர்மட்டம் குறையத் தொடங்கிவிடும். கேரள அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளில் எங்களுக்கு திருப்தி உள்ளது. தற்போது, பொதுமக்களிடம் இது குறித்து கவலைகள் குறைந்து விட்டன. எனவே, முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு குறித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. இவ்வாறு ‘டிவிஷன் பெஞ்ச்’ நீதிபதிகள் தெரிவித்தனர்.
கேரள அரசின் இந்த நெடுநாளைய கோரிக்கையை மத்திய நீர்வளத்துறை அமைச்சர் பவன்குமார் பன்சாலை, சாண்டி நேற்று முன்தினம் சந்தித்தபோது மீண்டும் வலியுறுத்தினார். சாண்டியின் இந்த கோரிக்கையை பன்சால் கேட்டுக்கொண்டார். ஆனால் சந்திப்பிற்கு பிறகு மத்திய அமைச்சர் பத்திரிகையாளர்களை சந்திக்க மறுத்துவிட்டார். வெளிநாட்டில் வாழும் இந்தியர்களின் மாநாடு, ஜெய்ப்பூரில் கடந்த இரண்டு நாட்களாக நடந்தது. அந்த மாநாட்டில் கலந்துகொண்டு திருவனந்தபுரம் திரும்பும் வழியில், நேற்று முன்தினம் சாண்டி டில்லிக்கு வந்தார். காலை 12 மணிக்கு, ஷ்ரம் சக்தி பவனில் மத்திய நீர்வள அமைச்சர் பன்சாலை சந்தித்தார். இந்த சந்திப்பு 30 நிமிடங்கள் நீடித்தது.
பிறகு கேரள இல்லத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், சாண்டி கூறியதாவது, சமீபத்தில் கேரள அமைச்சரவையில் முல்லைப் பெரியாறு புதிய அணை சம்பந்தமாக எடுத்த முடிவுகள் குறித்து பன்சாலிடம் விளக்கினேன். கேளர அமைச்சரவையின் முடிவின்படி புதிய அணையின் உரிமை, கட்டுப்பாடு ஆகியவை கேரள அரசிடமே இருக்கும். தமிழகத்தோடு நீர் பங்கீடு குறித்து, இரு மாநில அரசுகளின் பிரதிநிதிகளின் கூட்டுக்குழு முடிவு செய்யும். முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதற்கு தமிழக அரசே, 1979 ஆண்டில் ஒத்துக்கொண்டது. புதிய அணை கட்டுவதற்குதமிழக பொறியாளர்கள் ஒத்துக்கொண்டது குறித்த ஆவணங்கள், கேரள அரசிடம் உள்ளது.
புதிய அணை கட்டு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தமிழக ஆரசுக்கு இரண்டு கடிதங்களை அனுப்பியுள்ளேன். அதில் ஒரு கடிதத்திற்குதான் பதில் வந்தது. மத்திய அரசு, இரு மாநில முதல்வர்கள் இடையே பேச்சுவார்த்தை தொடங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். உச்ச நீதிமன்றம் முல்லை பெரியாறு பிரச்சினை குறித்து, தனது தீர்ப்பை தெரிவித்த பிறகு இரு மாநில அரசுகளும் பேச்சுவார்த்தை நடத்தினால் உபயோகமாக இருக்குமா என்ற கேள்விக்கு, உடனடியாக பதில் தர முடியாது. நீதிமன்ற தீர்ப்பு, வருவதற்கு காலதாமதமாகும். அணை உடைந்துவிடுமோ என்ற பீதியில் கேரளமக்கள் அதுவரை இருப்பதை எனது அரசு விரும்பவில்லை.
இவ்வாறு சாண்டி தெரிவித்தார். திரும்பத் திரும்ப புதிய அணை குறித்து வலியுறுத்தும் முதல்வர் சாண்டி பெரியாறு அணை விடயத்தில், நீதிமன்றத்திற்கு வெளியே தீர்வு காண விரும்புவதாக இப்போது கருத்து தெரிவித்திருக்கிறார். உச்ச நீதிமன்றம் இந்த விடயத்தில், தீவிர கவனம் செலுத்தும் நேரத்தில் இம்மாதிரி அடுத்த கருத்தை தெரிவித்து புதிய குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறார். பன்சால் இது தொடர்பாக எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை.
முல்லைப் பெரியாறு பாதுகாப்பு குறித்து, முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் உட்பட பல்வேறு தரப்பினர் தாக்கல் செய்த நிலைய மனுக்களை, கேரள மேல் நீதிமன்றம் நேற்று முன்தினம் தள்ளுபடி செய்தது. முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு குறித்து, கேரள மேல் நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இம்மனுக்கள் நேற்று முன்தினம் கேரள மேல் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி (பொறுப்பு) மஞ்சுளா செல்லூர் மற்றும் நீதிபதி பி. ஆர். ராமச்சந்திரமேனன் ஆகியோர் அடங்கிய ‘டிவிஷன் பெஞ்ச்’ முன் விசாரணைக்கு வந்தது. இதில், அச்சுதானந்தன் தனது மனுவில், அணைக்கட்டுக்கு ஆபத்து நேரிட்டால், இராணுவ பொறியிய லாளர்களை அழைக்க உத்தரவிடவேண்டும் என கோரியிருந்தார். மனுதாரர்கள் கருத்துக்களை பதிவு செய்து கொண்ட ‘டிவிஷன் பெஞ்ச்’ நீதிபதிகள் கூறியதாவது; முல்லைப் பெரியாறு அணைக்கு அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து, கடந்த மாதமே மாநில அரசு அறிக்கை அளித்துள்ளது. கோடை காலம் தொடங்க உள்ள நிலையில், விரைவில் அணையின் நீர்மட்டம் குறையத் தொடங்கிவிடும். கேரள அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளில் எங்களுக்கு திருப்தி உள்ளது. தற்போது, பொதுமக்களிடம் இது குறித்து கவலைகள் குறைந்து விட்டன. எனவே, முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு குறித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. இவ்வாறு ‘டிவிஷன் பெஞ்ச்’ நீதிபதிகள் தெரிவித்தனர்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» சிறப்பு முகாமில் 3 வது நாளாக செந்தூரன் பட்டினிப் போராட்டம். முதல்வர் தலையிட கோரிக்கை!
» புதிய அணை கட்டினால் இந்த பிரச்சினை தீரும் உம்மன் சாண்டி
» இலங்கை அகதிகள் தொடர்பில் யாஹூ வில் கருத்துக் கணிப்பு
» தயக்கம் வேண்டாம்
» முத்தம் கொடுக்க தயக்கம்..!
» புதிய அணை கட்டினால் இந்த பிரச்சினை தீரும் உம்மன் சாண்டி
» இலங்கை அகதிகள் தொடர்பில் யாஹூ வில் கருத்துக் கணிப்பு
» தயக்கம் வேண்டாம்
» முத்தம் கொடுக்க தயக்கம்..!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|