Latest topics
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா? by rammalar Today at 10:53
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
குழந்தைங்க பொறாமைப்படுறாங்களா? – உடனே சரிபண்ணுங்க !
2 posters
Page 1 of 1
குழந்தைங்க பொறாமைப்படுறாங்களா? – உடனே சரிபண்ணுங்க !
குழந்தைங்க பொறாமைப்படுறாங்களா? – உடனே சரிபண்ணுங்க !
பள்ளித்தோழர்கள்,
சகவயது நண்பர்கள், சகோதரன் என யார்மீதாவது உங்கள் குழந்தைகள் பொறாமை
கொள்கின்றனரா ? இந்த பொறாமை குணத்தை சரியான நேரத்தில் கண்டறிந்து அவற்றை
சரிசெய்ய பெற்றோர்கள் முயலவேண்டும். இல்லாவிட்டால் அந்த குழந்தைகள் இளம்
குற்றவாளிகள் ஆகும் கொடூரம் நிகழ்ந்து விடக்கூடும் என்று உளவியலாளர்கள்
எச்சரித்துள்ளனர்.
அவமரியாதை வேண்டாம்
ஒன்றுக்கு
மேற்பட்ட குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்களுக்கு பொறுப்புகள் அதிகம்.
அனைவரும் ஒரே மாதிரி இருப்பதில்லை. மனநிலை, உடல்நிலை, செயல்பாடுகளில்
ஒவ்வொரு குழந்தைக்கும் வித்தியாசம் இருக்கும். எனவே அவர்களை தன் போக்கில்
வளரவிட வேண்டும். தவறுகளை சுட்டிக் காட்டும் போதும் ஒரு பக்குவம் வேண்டும்.
குழந்தைகளால் ஒருபோதும் அவமரியாதைகளை தாங்கிக் கொள்ளமுடியாது. மற்றவர்கள்
முன் குறை கூறுவதும், மற்ற குழந்தைகளோடு ஒப்பிட்டு தாழ்த்தி பேசுவதும்
அவர்களின் குறைகளை களைய உதவாது. மாறாக பொறாமை உணர்வைதான் ஏற்படுத்தும்
என்கின்றனர் உளவியல் வல்லுநர்கள்.
போட்டியே பொறாமையாகும்
குழந்தைகளிடம்
பொறாமை குணம் வளர பெற்றோர்களும் ஒரு விதத்தில் காரணம். பின்விளைவுகளைப்
பற்றி அறியாமல் இரு குழந்தைகளிடையே அவர்கள் போட்டி மனப்பான்மையை உருவாக்கி
விடுகிறார்கள். இரு குழந்தைகளுக்கு இடையே போட்டி இருந்தால் தான் அவர்கள்
உற்சாகத்துடன் செயல்படுவார்கள் என்பது உண்மைதான். குழந்தைகளின் திறமைகளை
வெளிக் கொண்டுவர போட்டி மிகவும் அவசியம். ஆனால் அந்த போட்டி நாளடைவில்
பொறாமையாக மாறிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
தெளிவாக்குவது கடமை
போட்டிக்கும்,
பொறாமைக்கும் நூலிழைதான் வித்தியாசம். அந்த எல்லையை பெற்றோர்
புரிந்துகொண்டு, குழந்தைகளுக்கும் தெளிவாக்கவேண்டும். அதுபோல் வெற்றி பெற்ற
குழந்தைகளை தலையில் தூக்கி வைத்து பாராட்டுவதும், தோற்றுப்போன குழந்தைகளை
இகழ்வதும் அவர்கள் மனதை வெகுவாக காயப்படுத்திவிடும். குழந்தைகளுக்கு தோல்வி
ஏற்படும்போது பெற்றோர்கள் அறிவுபூர்வமாக செயல்பட்டு, குழந்தைகளின் மனதில்
தொய்வு ஏற்பட்டுவிடாமல் சீராக்கவேண்டும். இல்லையென்றால் அது குழந்தைகளை
பொறாமை இருளில் தள்ளிவிடும்.
முக்கியத்துவம் அவசியம்
எல்லா
குழந்தைகளுமே தங்களுக்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என்று
கருதுகின்றன. அதை பெற்றோர்கள் புரியாமல் இருக்கும்போதுதான் சிக்கல்
ஏற்படுகிறது. குடும்பங்களில் எப்போதும் சிறிய குழந்தைக்கே முக்கியத்துவம்
தரப்படுகிறது. பெரிய குழந்தை பல விஷயங்களில் ஒதுக்கப்படுகிறார்கள்.
தனக்கும் பெற்றோர் முக்கியத்துவம் தர வேண்டும் என்பதற்காக சில குழந்தைகள்
தங்களை காயப்படுத்திக் கொள்ளவும் தயங்க மாட்டார்கள். அப்படி ஒரு நிலை
ஏற்பட்டுவிட்டால், பெரிய குழந்தைகளின் கடமைகளை அவர்களுக்கு எடுத்துக் கூறி
குடும்பத்தில் அவருக்கு இருக்கும் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டி,
அவருக்கு பொறாமை குணம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அன்பும்,
சகிப்புதன்மையும்தான் அனைத்திற்கும் அடிப்படை என்பதை பெற்றோர்கள் உணர்த்த
வேண்டும்.
இளங்குற்றவாளிகள்
பொறாமைக் குணம்
கொண்ட குழந்தைகள் எளிதாக அடையாளம் காணப்பட்டு, மற்றவர்களால்
ஓரங்கட்டப்படுவார்கள். அப்படி ஓரங்கட்டப்படும் போது, அவர்களுக்குள் அது
வெறுப்பை உருவாக்கும். அதனால் அவர்களுடைய செயல் பாடுகளில் மாற்றம்
ஏற்படும். அப்போது மற்றவர்களுக்கு ஆபத்தை விளைவிக்கவும் முயற்சிப்பார்கள்.
அதுவே குற்றச் செயலாகி, இளங்குற்றவாளியாகி விடுவார்கள் என்றும்
உளவியலாளர்கள் எச்சரிக்கின்றனர். எனவே குழந்தைகளின் பொறாமை குணத்தை களைந்து
குற்றமற்ற சமுதாயத்தை உருவாக்குவதும் பெற்றோர்களின் கடமையாகும்.
thatstamil
பள்ளித்தோழர்கள்,
சகவயது நண்பர்கள், சகோதரன் என யார்மீதாவது உங்கள் குழந்தைகள் பொறாமை
கொள்கின்றனரா ? இந்த பொறாமை குணத்தை சரியான நேரத்தில் கண்டறிந்து அவற்றை
சரிசெய்ய பெற்றோர்கள் முயலவேண்டும். இல்லாவிட்டால் அந்த குழந்தைகள் இளம்
குற்றவாளிகள் ஆகும் கொடூரம் நிகழ்ந்து விடக்கூடும் என்று உளவியலாளர்கள்
எச்சரித்துள்ளனர்.
அவமரியாதை வேண்டாம்
ஒன்றுக்கு
மேற்பட்ட குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்களுக்கு பொறுப்புகள் அதிகம்.
அனைவரும் ஒரே மாதிரி இருப்பதில்லை. மனநிலை, உடல்நிலை, செயல்பாடுகளில்
ஒவ்வொரு குழந்தைக்கும் வித்தியாசம் இருக்கும். எனவே அவர்களை தன் போக்கில்
வளரவிட வேண்டும். தவறுகளை சுட்டிக் காட்டும் போதும் ஒரு பக்குவம் வேண்டும்.
குழந்தைகளால் ஒருபோதும் அவமரியாதைகளை தாங்கிக் கொள்ளமுடியாது. மற்றவர்கள்
முன் குறை கூறுவதும், மற்ற குழந்தைகளோடு ஒப்பிட்டு தாழ்த்தி பேசுவதும்
அவர்களின் குறைகளை களைய உதவாது. மாறாக பொறாமை உணர்வைதான் ஏற்படுத்தும்
என்கின்றனர் உளவியல் வல்லுநர்கள்.
போட்டியே பொறாமையாகும்
குழந்தைகளிடம்
பொறாமை குணம் வளர பெற்றோர்களும் ஒரு விதத்தில் காரணம். பின்விளைவுகளைப்
பற்றி அறியாமல் இரு குழந்தைகளிடையே அவர்கள் போட்டி மனப்பான்மையை உருவாக்கி
விடுகிறார்கள். இரு குழந்தைகளுக்கு இடையே போட்டி இருந்தால் தான் அவர்கள்
உற்சாகத்துடன் செயல்படுவார்கள் என்பது உண்மைதான். குழந்தைகளின் திறமைகளை
வெளிக் கொண்டுவர போட்டி மிகவும் அவசியம். ஆனால் அந்த போட்டி நாளடைவில்
பொறாமையாக மாறிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
தெளிவாக்குவது கடமை
போட்டிக்கும்,
பொறாமைக்கும் நூலிழைதான் வித்தியாசம். அந்த எல்லையை பெற்றோர்
புரிந்துகொண்டு, குழந்தைகளுக்கும் தெளிவாக்கவேண்டும். அதுபோல் வெற்றி பெற்ற
குழந்தைகளை தலையில் தூக்கி வைத்து பாராட்டுவதும், தோற்றுப்போன குழந்தைகளை
இகழ்வதும் அவர்கள் மனதை வெகுவாக காயப்படுத்திவிடும். குழந்தைகளுக்கு தோல்வி
ஏற்படும்போது பெற்றோர்கள் அறிவுபூர்வமாக செயல்பட்டு, குழந்தைகளின் மனதில்
தொய்வு ஏற்பட்டுவிடாமல் சீராக்கவேண்டும். இல்லையென்றால் அது குழந்தைகளை
பொறாமை இருளில் தள்ளிவிடும்.
முக்கியத்துவம் அவசியம்
எல்லா
குழந்தைகளுமே தங்களுக்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என்று
கருதுகின்றன. அதை பெற்றோர்கள் புரியாமல் இருக்கும்போதுதான் சிக்கல்
ஏற்படுகிறது. குடும்பங்களில் எப்போதும் சிறிய குழந்தைக்கே முக்கியத்துவம்
தரப்படுகிறது. பெரிய குழந்தை பல விஷயங்களில் ஒதுக்கப்படுகிறார்கள்.
தனக்கும் பெற்றோர் முக்கியத்துவம் தர வேண்டும் என்பதற்காக சில குழந்தைகள்
தங்களை காயப்படுத்திக் கொள்ளவும் தயங்க மாட்டார்கள். அப்படி ஒரு நிலை
ஏற்பட்டுவிட்டால், பெரிய குழந்தைகளின் கடமைகளை அவர்களுக்கு எடுத்துக் கூறி
குடும்பத்தில் அவருக்கு இருக்கும் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டி,
அவருக்கு பொறாமை குணம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அன்பும்,
சகிப்புதன்மையும்தான் அனைத்திற்கும் அடிப்படை என்பதை பெற்றோர்கள் உணர்த்த
வேண்டும்.
இளங்குற்றவாளிகள்
பொறாமைக் குணம்
கொண்ட குழந்தைகள் எளிதாக அடையாளம் காணப்பட்டு, மற்றவர்களால்
ஓரங்கட்டப்படுவார்கள். அப்படி ஓரங்கட்டப்படும் போது, அவர்களுக்குள் அது
வெறுப்பை உருவாக்கும். அதனால் அவர்களுடைய செயல் பாடுகளில் மாற்றம்
ஏற்படும். அப்போது மற்றவர்களுக்கு ஆபத்தை விளைவிக்கவும் முயற்சிப்பார்கள்.
அதுவே குற்றச் செயலாகி, இளங்குற்றவாளியாகி விடுவார்கள் என்றும்
உளவியலாளர்கள் எச்சரிக்கின்றனர். எனவே குழந்தைகளின் பொறாமை குணத்தை களைந்து
குற்றமற்ற சமுதாயத்தை உருவாக்குவதும் பெற்றோர்களின் கடமையாகும்.
thatstamil
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: குழந்தைங்க பொறாமைப்படுறாங்களா? – உடனே சரிபண்ணுங்க !
முக்கிய பகிர்விற்கு நன்றி கண்டிப்பாக அறியவேண்டிய விடையம் பகிர்விற்க்கு நன்றி தோழரே.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|