சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13

» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47

» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07

» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00

திண்ணை கிளினிக்  இடுப்பு புடுச்சிக்கிட்டா... Khan11

திண்ணை கிளினிக் இடுப்பு புடுச்சிக்கிட்டா...

Go down

திண்ணை கிளினிக்  இடுப்பு புடுச்சிக்கிட்டா... Empty திண்ணை கிளினிக் இடுப்பு புடுச்சிக்கிட்டா...

Post by mufees Sun 25 Mar 2012 - 20:35

பள்ளிகளில் கோடை விடுமுறை இன்னும் சில தினங்களில் தொடங்கிவிடும்... பள்ளிக்குச் சென்று திரும்பும் பிள்ளைகளின் முகத்தில் அந்த உற்சாகம் தெரிந்தது.

அப்பாடா... ஒரு மாதத்திற்கு படி.. படி என்ற இம்சை இருக்காது.

கோடை விடுமுறை என்பது குழந்தைகளின் உலகத்தில் கொண்டாட்டமான காலம்.

வெயில் அழகியது. அதில் மேயும் பசுக்கள் அழகியன என்பான் பாரதி.

அதைப்போல குழந்தைகளுக்கும் வெயில்தான் இருப்பதிலேயே அழகிய பொழுது.

பெருந்தாகமெடுத்தவன் செம்பில் உள்ள நீரைத் துளி கூட மிச்சம் வைக்காமல், குப்புறக் கவிழ்த்து குடித்துவிடுவது போல், கோடை வெயிலை அதன் கடைசிக் கதிர்வரை மிச்சமின்றி அனுபவித்து விட வேண்டுமென மூர்க்கம் கொண்டு அலையும் சிறுவர்களை நாம் பார்த்திருக்கிறோம்.

அவர்களுக்கு அது ஒரு கொண்டாட்டம்.

இதோ... தெருவில் துள்ளியோடும் இந்தப் பள்ளிச் சிறுவர்களின் முகத்திலும், அணையைத் திறந்தவுடன் பெருக்கெடுக்கும் வெள்ளம் போல் ஒரு வகை உற்சாகம் பீறிடுவதைக் காண முடிகிறது.

ஒரு காலத்தில் பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகளிடமும் கூட இந்த உற்சாகத்தைக் காண முடிந்தது.

அப்போது பள்ளிகள் அறிவைத் தரும் போதி மரமாக மட்டுமின்றி, அதே களைப்பில் இளைப்பாறக் கிடைத்த தரு நிழலாகவும் குழந்தைகளுக்கு இருந்தது. இப்போதோ, குழந்தைகளை அச்சுறுத்தும் கொடுஞ்சிறைகளாக வகுப்பறைகள் மாறிவிட்டன. விடுமுறை என்பது அவர்களைப் பொறுத்தவரை விடுதலையாகி விட்டது.... ம்.... எங்கே போய் நிற்கப்போகிறதோ....”

இப்படியாக இழையோடிக் கொண்டிருந்த பொன்னந்தி மாலைப் பொழுதில், திண்ணையில் அமர்ந்திருந்த வைத்தியரின் சிந்தனைச் சரடு சட்டென்று அருகில் கேட்ட குரலால் அறுந்தது.

சற்றே சங்கடத்துடன் திரும்பிய வைத்தியர், இடுப்பை இரண்டு பக்கமும் பிடித்தபடி இருளாண்டி வந்து நிற்பதைப் பார்த்தார்.

“என்னப்பா இருளாண்டி... என்ன புள்ளத்தாச்சி மாதிரி இடுப்புல கைய வச்சுக்கிட்டு வந்திருக்கே... என்ன பிரச்சனை...” வைத்தியரின் கிண்டலான கேள்விக்கு, உடனடியாகப் பதில் சொல்லும் நிலையில் இருளாண்டி இல்லை.

சற்று கூனியபடி மெல்ல நடந்து வந்து திண்ணையில் அமர்ந்து, தன்னைச் சற்றே ஆசுவாசப்படுத்திக் கொண்டபின்னர் தான் அவரால் பேச முடிந்தது.

“வைத்தியரய்யா... காலையில் எழுந்திருக்கும் போதே இடுப்பைப் புடிச்சுக்குது... நிமிரவே முடியலை... சில நேரங்கள்ல பொழுது போகப்போக இடுப்பு வலி குறையும்... சில நேரங்கள்ல ராத்திரி வரைக்கும் அந்த வலி போகாது.

ரெண்டு மூணு நாளா இதே பிரச்சனை... அதான் உங்களப் பார்த்து மருந்து கேட்டுக்கிட்டுப் போகலாம்னு வந்தேன்...”

இருளாண்டி சொல்வதை நமட்டுச் சிரிப்புடன் கேட்டுக்கொண்டிருந்த வைத்தியர், “ஏப்பா இருளாண்டி... இடுப்பு வலின்னா ஏதோ வாய்வு... இல்லாட்டி சதைப்புடிப்புதான்னு எல்லாரும் நினைக்கிறீங்க... ஆனா, இடுப்பப் புடிச்சுக்கிறதுக்கு, இதெல்லாம் விட வேற காரணங்கள் நிறைய இருக்கு... அதையெல்லாம் யாரும் யோசிக்கிறதில்லை...”

“... ஒரு கல்யாண வீட்டுல போய்ச்சாப்பிடுறது கூட ஒத்துக்காமப் போகலாம். காரம் அதிகமுள்ள உணவைச் சாப்பிட்டா குடல் சூடாகும். அதாவது அஷ்ட சூடு, மூலச் சூடுன்னு சொல்றது. இந்த சூடெல்லாம் குடல்ல ஏற்பட்டா, அது வயித்துப் பகுதியோட சேர்த்து, இடுப்பையும் கட்டாயம் புடிச்சுக்கும்... மொத்தத்தில மலச்சிக்கல் வராம, குடல்ல பிரச்சனை வராமப் பார்த்துக்கிட்டாலே இது மாதிரியெல்லாம் புடிச்சுக்காது...

சரி... நீ இப்ப நாட்டு மருந்துக் கடைக்குப் போயி அஷ்ட சூரணம், இல்லாட்டி திரிகடுக சூரணம்னு கேளு... தருவாங்க... காலையும், மாலையும் வெண்ணீர்ல கலந்து அதக்குடிச்சுக்கிட்டு வா... எல்லாம் சரியாப் போகும்...”

வைத்தியர் சொன்னவற்றையெல்லாம் கவனமாகக் கேட்ட இருளாண்டி, அவரிடமிருந்து விடை பெற்று, நேராக நாட்டு மருந்துக் கடை நோக்கி நடந்தார்.
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum