Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!by rammalar Today at 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
பெற்றோரைப் பேணுவோம்
4 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
பெற்றோரைப் பேணுவோம்
நல்லோர்கள் வாழ்வை நாம் புரட்டிப் பார்த்தால் அவர்கள் பெற்றோர் நலன் பேணுவதில்பெரும் அக்கறை எடுத்துக்கொண்ட விதத்தைப் படித்து மெய்சிலிர்த்துப் போகிறோம்.
பின்வரும் நிகழ்வுகளை வாசியுங்கள் சுப்ஹானல்லாஹ் இந்தளவு பேற்றோரைப் பேண முடியுமா என்று மூக்கில் விரல் வைத்து வியப்பின் விளிம்பைத் தொடுவீர்கள்.
இமாம் ஜைனுல் ஆபிதீன்( ரஹ்) சிறந்த ஒரு 'தாபிஈ'.
அவர்களிடம் கேட்கபட்டது: ''நீங்கள் தாயைக் கவனிப்பதில் கண்ணுங்கருத்துமாய் உள்ளவர்கள். ஆனாலும் ஒருமுறை கூட தாயாருடன் ஒன்றாக அமர்ந்து உணவு உண்டதில்லையே. ஏன்?''
அவர்கள் கூறிய பதில்: என் தாயின் பார்வையில் பட்டு அவர்கள் மனம் விரும்பிய ஏதேனும் ஒரு உணவுப் பகுதியை நான் கவனிக்காமல் அள்ளி உண்டுவிடுவேனோ அதன் காரணமாக அவர்களைப் புண்படுத்திய குற்றத்திற்கு ஆளாகிவிடுவேனோ'' என்று அஞ்சுகிறேன்.
முஹம்மது இப்னு சீரீன் (ரஹ்) அவர்கள் தாயாரிடம் உரையாடும்பொழுது குரலைத் தாழ்த்தி தனிந்த குரலில் பேசுவார்கள். பார்க்கிறவர்கள் ''என்ன இப்னு சீரீனுக்கு ஏதாவது உடம்புக்கு முடியலையா?'' அடங்கி ஒடுங்கி அமைதியாக பேசுகிறாரே'' என்று கேட்பார்களாம்.
இப்னு அவ்னில் முஸ்னீ ரஹ் அவர்களும் அப்படித்தானாம். ஆனால் ஒருமுறை அவர்களை அவரது தாயார் சற்று தூரத்தில் நின்றிருந்ததால் சப்தமிட்டு அழைக்க இவர்களும் சப்தமிட்டு குரல் கொடுத்தார்களாம். நம்மைப் பொருத்தவரை இதுவெல்லாம் நம் வாழ்வில் அன்றாட நிகழ்வு. ஆனால் அவர்களோ அதைப் பெருங்குற்றமாக நினைத்து இரண்டு அடிமைகளை உரிமையிட்டு அதற்கு பரிகாரம் தேடினார்கள். :!+:
தல்க் இப்னு ஹபீப் (ரஹ்) அவர்களின் வாழ்வு மிக மிக ஆச்சரியம். அவர்கள் தன் தாயின் தலையைத் தடவி முத்தமிடுவார்கள்; தாய் கீழிருக்கும்போது மாடிக்கு இவர்கள் ஏறியதே இல்லை. தாயின் பாதத்தின் கீழ்தான் சுவனம் உள்ளது அந்த தாயின் தலைக்கு மேல் நம் பாதம் இருப்பதா? அவர்கள் மனம் அதற்கு இடம் தரவே இல்லை.
விவேகானந்தர் ஒருமுறை அமெரிக்காவிற்கு பிரச்சாரம் செய்யக் கிளம்பினார். அம்மாவிடம் பயணம் சொன்னார். அப்போது அம்மா மகனே அதோ அந்த கத்தியை எடுத்து என்னிடம் தந்துவிட்டுப் போ என்றார். அந்த அவசர நேரத்திலும் கத்தியை எடுத்துக் கொடுத்தார் என்பது ஆச்சரியமல்ல. கத்திமுனையை தன் பக்கமாக பிடித்துகொண்டு பிடியை தாயாரிடம் நீட்டினார். கொடுக்கும் அவசரத்தில் கத்தி குத்தினால் அது என் கையாக வேண்டுமானால் இருக்கட்டும் என் தாயின் கையில் ஒரு கீறல் விழுவதைக்கூட சம்மதியேன். ''மகனே நீ மக்களுக்கு உபதேசம் செய்ய தகுதியானவன். போய்விட்டு வெற்றியோடு திரும்பி வா'' என்று அந்த தாய் வாழ்த்தி வழியனுப்பினாள்.
இறுதி காலத்தில் இப்படியும் மக்கள் மாறிவிடுவார்கள் என்று நபி (ஸல்) கூறினார்கள்:
ஒருவன் தன் நண்பனுக்கு தரும் முக்கியத்துவத்தை தன் தந்தைக்கு தரமாட்டான்; மனைவியை மெச்சுவான்; தாயை இம்சிப்பான் இப்படி பெரும்பாலோரின் மனநிலை மாறும் என்று மாநபி சொன்னது இன்று பொய்த்துப் போய்விடவில்லை.
இமாம் ஸஅதி (ரஹ்) குலிஸ்தானில் சுவையான நிகழ்வு ஒன்றைக் குறிப்பிடுகிறார்கள்: அவர்கள் மக்காவிற்கு ஹஜ்ஜு செய்ய சென்றிருந்தபொழுது அங்கு ஒரு இளைஞரை சந்தித்தார்கள். தம்பி, உங்களுக்கு எந்த ஊர்?'' அதற்கு அவன் தனது ஊரைக் குறிப்பிட்டான். ''அப்படியா? நான் அந்த ஊருக்கு வந்துள்ளேனே. நீ யாருடைய மகன்?'' ''நான் இன்னாருடைய மகன்'' அவன் தனது தந்தையின் பெயரைக் கூறினான். ''அடடா.. உனது தந்தை எனக்கு நண்பராயிற்றே அவர் முன்பு ஒரு தடவை ஹஜ்ஜுக்கு வந்திருந்தபொழுது நானும் வந்திருந்தேன். அவர் துஆ ஏற்றுக்கொள்ளப்படும் இடத்தில் நின்றுகொண்டு தனக்கு ஒரு ஆண் குழந்தை தந்தருளுமாறு இறைஞ்சினார். அதன்மூலம் பெறப்பட்ட குழந்தையா நீ? நல்லது. உன்னைப் பார்த்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. நீ ஊருக்குத் திரும்பியதும் எனது சலாமை உன் தந்தைக்கு தெரியப்படுத்து'' என்று கூறி அவனிடமிருந்து விடைபெற்றார்கள். சில அடிகள்தான் எடுத்து வைத்திருப்பார்கள். அதற்குள் அவன் அவர்களைக் கைதட்டிக் கூப்பிட்டு ''நீங்கள் துஆ ஏற்றுக்கொள்ளப்படும் இடம் என்று கூறினீர்களே. அது எங்கே உள்ளது?'' என்றான். ''ஏனப்பா அதைக் கேட்கிறாய்'?''
''என் தந்தையை இறைவன் சீக்கிரம் எடுத்துக்கொள்ளட்டும் என்று அவ்விடத்தில் நின்று நான் துஆ கேட்கப்போகிறேன்'' என்றானாம். இமாம் ஸஅதி அப்படியே ''ஷாக்'' ஆயிட்டாங்களாம். இந்த மாதிரி பிள்ளைகளாக நாம் இருக்கக்கூடாது.
மேலும் படிக்க..
sadhak-maslahi.blogspot.com/2012/05/blog-post_24.html
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|