Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவைby rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13
» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47
» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07
» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00
ஒவ்வொரு இந்தியரிடமும் ஒரு செல்போன்!
+2
நண்பன்
ஹனி
6 posters
Page 1 of 1
ஒவ்வொரு இந்தியரிடமும் ஒரு செல்போன்!
இந்தியாவின் செல்போன் வாடிக்கையாளர் எண்ணிக்கை 50 கோடியை நெருங்கும் நிலையில், நாட்டின் செல்போன் சந்தை மற்றொரு பெரிய மைல்கல்லைத் தாண்டியுள்ளது. அதாவது, இந்தியாவின் நகர்ப்புறத் தொலைத்தொடர்பு அடர்த்தி 100 சதவீதக் குறியீட்டைத் தாண்டியுள்ளது. தொலைத் தொடர்புத் துறை அண்மையில் வெளியிட்ட புள்ளிவிவரத்தில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
எளிமையாகச் சொல்வது என்றால், அரசால் `நகர்ப்புறம்’ என்று வகைப்படுத்தப்பட்டுள்ள பிரிவில் அடங்கியுள்ள நகரங்கள், பெருநகரங்கள், மாநகரங்களில் அவற்றின் மக்கள்தொகைக்கு இணையான செல்போன்கள் பயன்பாட்டில் உள்ளன.
கடந்த ஆண்டு மார்ச்சில் நாட்டின் நகர்ப்புறத் தொலைத்தொடர்பு அடர்த்தி ஏறக்குறைய 60 சதவீதமாக இருந்தது. அது இந்த ஆண்டு மார்ச்சில் 85 சதவீதத்துக்குத் தாவியது. தற்போது 100 சதவீத இலக்கைக் கடந்துள்ளது.
தொலைத் தொடர்புத் துறையில் நடக்கும் தீவிரமான போட்டி, இதுவரையிலான காலகட்டத்திலேயே மிகக் குறைவான கட்டணத்துக்கு வழிவகுத்துள்ளது. ஒரு நொடிக்கு அரை பைசா என்ற நிலைக்குக் கூட செல்போன் நிறுவனங்கள் வந்துவிட்டன. இதனால் சாதனை வளர்ச்சியாக சமீப காலமாக ஒவ்வொரு மாதமும் ஒன்றைக் கோடி செல்போன் வாடிக்கையாளர்கள் அதிகரித்து வந்துள்ளனர்.
இந்தியாவின் 50 கோடி செல்போன் பயன்பாட்டாளர்களில் 70 சதவீதம் பேர் நகர்ப்புறத்தினர். செல்போன் சேவை நிறுவனங்களுக்கு 75 சதவீத வருவாயை அளிப்பவர்களும் இவர்களே.
முக்கியமான விஷயம், கடந்த இரண்டு காலாண்டுகளாக கடுமையான கட்டணப் போட்டியால் மொத்த வருவாய், லாபம் குறைந்த செல்போன் நிறுவனங்கள் தற்போது நகர்ப்புற வளர்ச்சியைக் கிராமப்புறங்களில் எட்டுவதற்கு செலவழிக்கும் அளவை அதிகரிக்க வேண்டும். உண்மையில், இந்திய நகர்ப்புற தொலைத்தொடர்பு அடர்த்தி வளர்ந்த நாடுகளுக்கு இணையாக இருந்தபோதும், அது கிராமப்புறங்களில் 18 சதவீதமாகவே உள்ளது என்று தொலைத்தொடர்புத் துறைப் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
“100 சதவீதத்துக்கு மேல் தொலைத்தொடர்பு அடர்த்தி என்பது உண்மையான வாடிக்கையாளர்கள் அல்ல. ஒன்றுக்கு மேற்பட்ட `சிம்கார்டு’ கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதையே இது காட்டுகிறது. செல்போன் சேவை நிறுவனங்களுக்கு இடையிலான தீவிரமான போட்டி, `சிம்கார்டுகளின்’ எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்துள்ளது. எனவே நகர்ப்புறத்தில் செல்போன் பயன்பாடு சரியாகப் புள்ளிவிவர அளவுக்கு இருக்கிறது என்று கூற முடியாது” என்று ஏர்டெல் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் மனோஜ் கோலி கூறுகிறார்.
செல்போன் சேவை நிறுவனங்களிடம் உள்ள தகவல்படி, ஒருவரிடம் ஒன்றுக்கு மேற்பட்ட `சிம்கார்டுகள்’ இல்லாவிட்டால், நகர்ப்புறத் தொலைத்தொடர்பு அடர்த்தி 80 சதவீதமாக இருக்கும் என்று மற்றொரு முன்னணி செல்போன் சேவை நிறுவன அதிகாரி தெரிவிக்கிறார்.
தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசா அண்மையில் பாராளுமன்றத்துக்கு அளித்த எழுத்துப்பூர்வ பதிலில் நாட்டிலேயே அதிகபட்சமாக இமாச்சலப் பிரதேசத்தில்தான் தொலைத்தொடர்பு அடர்த்தி 219 சதவீதம் உள்ளது. தொடர்ந்து கேரளாவில் 156 , டெல்லியில் 154 , சென்னையில் 143 , மும்பையில் 125 , ஆந்திராவில் 121 , கர்நாடகாவில் 116 உள்ளது. ராஜஸ்தானிலும், பஞ்சாப்பிலும் ஏறக்குறைய 104 சதவீதமாக உள்ளது.
மற்றொரு செல்போன் சேவை நிறுவனத்தின் தலைமை இயக்குநர் கூறுகையில், அடுத்த இரண்டாண்டுகளில் நகர்ப்புறங்களில் சராசரி செல்போன் பயன்பாடு 140 சதவீதத்தை எட்டும் என்று கூறுகிறார். இப்பகுதியில் ஒவ்வொரு ஐந்தாவது நபரும் குறைந்த வருவாய்ப் பிரிவில் உள்ளனர். இங்கு தொடர்ந்து மிகவும் விருப்பத்துக்குரிய பொருளாக செல்போன் உள்ளது.
“பெருநகரங்கள் மற்றும் நகரங்களில் மக்கள்தொகை அதிகம் என்பதால் அங்கு தொடர்ந்து நல்ல வளர்ச்சி இருக்கும். நகர்ப்புறங்களுக்கு இடம்பெயர்வோர் எண்ணிக்கை வரும் ஆண்டுகளில் தொடர்ந்து அதிகரிக்கத்தான் போகிறது. அதை செல்போன் நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தவிர, தகவல் மற்றும் மதிப்புக் கூட்டு சேவையைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் மேலும் அதிகரிக்கும. காரணம் எல்லா நவீன வசதிகளும் கொண்ட செல்போன் தற்போது 3 ஆயிரத்து 500 ருபாய்க்கே கிடைக்கிறது” என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
ஆக, செல்போன் உபகரண விற்பனை அதிகரிப்பு, வாடிக்கையாளர் எண்ணிக்கை அதிகரிப்பு, கட்டணக் குறைப்பு என்று தொலைத்தொடர்புத் துறையில் எல்லோருக்குமே மகிழ்ச்சியான செய்தி இருக்கு!
ஹனி- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஒவ்வொரு இந்தியரிடமும் ஒரு செல்போன்!
:”@: :”@:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஒவ்வொரு இந்தியரிடமும் ஒரு செல்போன்!
நண்பன் wrote:
:];: :];:
ஹனி- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66
Re: ஒவ்வொரு இந்தியரிடமும் ஒரு செல்போன்!
@.mini wrote: @.
ஹனி- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Similar topics
» ஒவ்வொரு மாநிலப் பெண்களிடமும் ஒவ்வொரு சிறப்பு உண்டு..!
» ஒவ்வொரு மகிழ்ச்சியும் ஒவ்வொரு வரம்!
» ஒவ்வொரு ஊரிலே ஒவ்வொரு ஃபீலிங்...!!
» ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குணம்...!
» ஒவ்வொரு புல்லையும்…
» ஒவ்வொரு மகிழ்ச்சியும் ஒவ்வொரு வரம்!
» ஒவ்வொரு ஊரிலே ஒவ்வொரு ஃபீலிங்...!!
» ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குணம்...!
» ஒவ்வொரு புல்லையும்…
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|