Latest topics
» மீம்ஸ் - ரசித்தவைby rammalar Today at 4:43
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
கர்ப்ப காலத்தில் பெண்களுக்குள் ஏற்படும் மாற்றங்கள்..என்ன..?
3 posters
Page 1 of 1
கர்ப்ப காலத்தில் பெண்களுக்குள் ஏற்படும் மாற்றங்கள்..என்ன..?
பெண்களின் வாழ்க்கையில் கருத்தரித்த காலகட்டம்தான் மிக சந்தோஷமான காலம். கர்ப்ப காலத்தில் பெண்களின் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகின்றன. இந்த மாற்றங்கள் ஏற்படுவது உண்மைதான் என்றாலும், சிலர் அந்த மாற்றங்களைக் கண்டு திகைப்படைகிறார்கள். சிலர் பயப்படுகிறார்கள். சிலர் எதுவும் புரியாமல் விழிக்கிறார்கள். இன்னும் சிலருக்கு அந்த மாற்றங்கள் மேல் எரிச்சலோ, வெறுப்போ எழும். இவற்றைத் தவிர்க்க எவ்வாறான மாறுதல்கள் உடலில் ஏற்படுகின்றன என்று தெரிந்து கொள்வது நல்லதுதானே.
கர்ப்பகாலம் மூன்று கட்டங்களாக பிரிக்கப்படுகிறது. 1 முதல் 12 வாரம் வரை முதல்கட்டம் ஆகும். 13 வது வாரம் முதல் 27 வது வாரம் வரை இரண்டாவது கட்டம் ஆகும். 28 வாரம் முதல் 40 வாரம் வரை மூன்றாவது கட்டாமாகும். இந்த மூன்று கட்டத்திலும் பெண்களுக்கு ஹார்மோன் சுரப்பு அதிகரித்தலும் அதனால் பல்வேறு விதமான உடல் உபாதைகளும் ஏற்படுகின்றன.
கரு உருவான நாளில் தொடங்கி கர்ப்பிணிகளுக்கு வாந்தி, மயக்கம் வரும் உணர்வு ஏற்படும். காலை வேளைகளில் மட்டும் இது இருக்கும் என்பதில்லை. ஒரு நாளில் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இதுபோன்ற உணர்வுகள் நிகழக்கூடும். இது பனிரெண்டு வாரங்கள் வரை இருக்கும் இது நாளமில்லா சுரப்பிகளிலுள்ள ஹார்மோன்கள் மாறுபாட்டல் ஏற்படக் கூடும்.
மார்பகம் பெருத்தும், இலேசாக வலிப்பது போன்றும், லேசாக புடைத்தும் இருக்கும். இதுவும் ஹார்மோன்களின் மாறுதல்களால் மார்பகத்தில் பால் சுரக்க ஆரம்பிப்பதால் ஏற்படக்கூடியது. இவ்வாறு ஏற்படுவது மார்பகங்களைப் பால் கொடுப்பதற்குத் தயார் செய்வதற்கான அறிகுறியாகும்.
மூக்கு உள்பகுதியில் அதிக இரத்த ஓட்டத்தால் கூடுதல் அழுத்தம் ஏற்படும். இதனால் மூக்கடைப்பு ஏற்படுவதும் உண்டு. மேலும் அதிக அளவிலான உடல் சோர்வு இக்காலகட்டத்தில் இருக்கும். இதற்கு காரணம் குழந்தை உருவாகும்போது அதிக அளவு சக்தி உபயோகப்படுத்தப்படுவதே ஆகும்.
அடிக்கடி சிறுநீர் கழித்தலும் கர்ப்பிணிகள் சாதாரணமாகச் சொல்லக் கூடிய புகார்களில் ஒன்றுதான். இது கர்ப்பப்பை வளருவதால் அது அருகில் இருக்கும் சிறுநீர்ப்பையை அழுத்துவதால் ஏற்படும். மாவுப் பொருள்களின் மீது ஒரு மோகம் இருப்பதும் இயற்கையே. சில கர்ப்பிணிகள் அரிசியை அதிகமாக சாப்பிடுவார்கள். மசக்கை எனும் வாந்தி வரும் பெண்களுக்கு, இந்த மாவுப் பொருட்களின் மீது ஆசை ஏற்படுகிறது. ஏனெனில் இந்த மாவுப் பொருட்கள் தாகத்தைத் தணிக்க உதவும்.
இரண்டாம் கட்டத்து கர்ப்பத்தில் முதல் கட்ட உபாதைகள் குறைந்து ஒரு முழுமையான நலமான உணர்வு தோன்றும். இடுப்பு பெருத்து வயிற்றுப் பகுதி உறுதியாகும். நெஞ்சு எரிச்சல் அதிகரிக்கும். இது கர்ப்பப்பை வளருவதால் இரைப்பையின் மீது அழுத்தத்தை ஏற்படுத்தும். மேலும், இரைப்பையில் அமிலம் சுரப்பது அதிகரிக்கும். கர்ப்பப்பை குடல்களை அழுத்துவதால் மலச்சிக்கல் ஏற்படும்.
உடல் விரிவடையும் அடையாளங்கள் மார்பிலும், வயிற்றுப் பகுதியிலும் தோல் விரிவடைவதால் தோன்றும். விரிவடையும் தோலினால் தோலில் அரிப்பு ஏற்படும். மார்பகக் காம்புகளிலும், தொப்புள் வரையும் தோலில் நிறமாறுதல் ஏற்படுவதால் கருப்பாக மாறும். குழந்தையின் அசைவுகளை சிறிய குத்துக்களைப்போல உணர முடியும்.
உணவில் புளிப்பான பழங்கள் மீதும், உப்பு அதிகமுள்ள உணவுகளான ஊறுகாய்கள் மீதும் ஆவலாய் இருப்பது இயற்கைதான். ஏனெனில், நெஞ்செரிச்சலை, புளிப்பான பதார்தங்கள் சிறிது குறைப்பதாய் உணர்வதோடு, உப்பினைக் குறைத்து சாப்பிடச் சொல்வதால் உப்பின் மீது ஆவலாகவும் இருப்பார்கள்.
மூன்றாவது கட்டத்தில் கர்ப்பிணிகளின் முதுகுக்கு ஆதரவளிக்கும் தசைநார் மற்றும் தசைகள் மீது அதிகமாக அழுத்தமிருப்பதால் முதுகுவலி ஏற்படுகிறது. உங்கள் உடலில் இரத்தத்தின் கொள்ளளவு அதிகரிக்கிறது. ஈர்ப்பு காரணமாக இரத்தம் கால்களுக்குச் செல்கிறது. ஆகையால், தசைகள் மீது அழுத்தம் ஏற்பட்டு, கால்களில் இழுப்பு வருகிறது. குழந்தை உதரவிதானம் மீது அழுத்துகிறது. சுவாசப் பை விரிந்து கொடுப்பதில்லை மற்றும் உங்களுக்கு வேண்டிய அளவு வாயு கிடைப்பதில்லை இதனால் மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. உறங்குவதில் கடினமாக இருக்கும். இதற்கு காரணம் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய தேவை மற்றும் எடை அதிகரிப்பினால் ஏற்படும் அசௌகரியங்களாகும்.
குழந்தையின் அசைவைக் காண முடிகிறது. இப்போது குழந்தையின் எடை கூடுகிறது மற்றும் அது உதைப்பதையும் விக்கலையும் கூட கர்ப்பிணிகள் உணர முடியும். இவை எல்லாம் இன்பமான அவஸ்தைதான். இவற்றையெல்லாம் தெரிந்து வைத்துக்கொண்டவர்களுக்கு இந்த மாற்றங்கள் விரும்பத்தக்கவையாக இருக்கும். ஒரு ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க மனம் தயாராகிவிட்ட உணர்வு எழும் என்கின்றனர் மகப்பேறு மருத்துவர்கள். என்ன கர்ப்பிணிகளே தயாராகிவிட்டீர்களா?
கர்ப்பகாலம் மூன்று கட்டங்களாக பிரிக்கப்படுகிறது. 1 முதல் 12 வாரம் வரை முதல்கட்டம் ஆகும். 13 வது வாரம் முதல் 27 வது வாரம் வரை இரண்டாவது கட்டம் ஆகும். 28 வாரம் முதல் 40 வாரம் வரை மூன்றாவது கட்டாமாகும். இந்த மூன்று கட்டத்திலும் பெண்களுக்கு ஹார்மோன் சுரப்பு அதிகரித்தலும் அதனால் பல்வேறு விதமான உடல் உபாதைகளும் ஏற்படுகின்றன.
கரு உருவான நாளில் தொடங்கி கர்ப்பிணிகளுக்கு வாந்தி, மயக்கம் வரும் உணர்வு ஏற்படும். காலை வேளைகளில் மட்டும் இது இருக்கும் என்பதில்லை. ஒரு நாளில் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இதுபோன்ற உணர்வுகள் நிகழக்கூடும். இது பனிரெண்டு வாரங்கள் வரை இருக்கும் இது நாளமில்லா சுரப்பிகளிலுள்ள ஹார்மோன்கள் மாறுபாட்டல் ஏற்படக் கூடும்.
மார்பகம் பெருத்தும், இலேசாக வலிப்பது போன்றும், லேசாக புடைத்தும் இருக்கும். இதுவும் ஹார்மோன்களின் மாறுதல்களால் மார்பகத்தில் பால் சுரக்க ஆரம்பிப்பதால் ஏற்படக்கூடியது. இவ்வாறு ஏற்படுவது மார்பகங்களைப் பால் கொடுப்பதற்குத் தயார் செய்வதற்கான அறிகுறியாகும்.
மூக்கு உள்பகுதியில் அதிக இரத்த ஓட்டத்தால் கூடுதல் அழுத்தம் ஏற்படும். இதனால் மூக்கடைப்பு ஏற்படுவதும் உண்டு. மேலும் அதிக அளவிலான உடல் சோர்வு இக்காலகட்டத்தில் இருக்கும். இதற்கு காரணம் குழந்தை உருவாகும்போது அதிக அளவு சக்தி உபயோகப்படுத்தப்படுவதே ஆகும்.
அடிக்கடி சிறுநீர் கழித்தலும் கர்ப்பிணிகள் சாதாரணமாகச் சொல்லக் கூடிய புகார்களில் ஒன்றுதான். இது கர்ப்பப்பை வளருவதால் அது அருகில் இருக்கும் சிறுநீர்ப்பையை அழுத்துவதால் ஏற்படும். மாவுப் பொருள்களின் மீது ஒரு மோகம் இருப்பதும் இயற்கையே. சில கர்ப்பிணிகள் அரிசியை அதிகமாக சாப்பிடுவார்கள். மசக்கை எனும் வாந்தி வரும் பெண்களுக்கு, இந்த மாவுப் பொருட்களின் மீது ஆசை ஏற்படுகிறது. ஏனெனில் இந்த மாவுப் பொருட்கள் தாகத்தைத் தணிக்க உதவும்.
இரண்டாம் கட்டத்து கர்ப்பத்தில் முதல் கட்ட உபாதைகள் குறைந்து ஒரு முழுமையான நலமான உணர்வு தோன்றும். இடுப்பு பெருத்து வயிற்றுப் பகுதி உறுதியாகும். நெஞ்சு எரிச்சல் அதிகரிக்கும். இது கர்ப்பப்பை வளருவதால் இரைப்பையின் மீது அழுத்தத்தை ஏற்படுத்தும். மேலும், இரைப்பையில் அமிலம் சுரப்பது அதிகரிக்கும். கர்ப்பப்பை குடல்களை அழுத்துவதால் மலச்சிக்கல் ஏற்படும்.
உடல் விரிவடையும் அடையாளங்கள் மார்பிலும், வயிற்றுப் பகுதியிலும் தோல் விரிவடைவதால் தோன்றும். விரிவடையும் தோலினால் தோலில் அரிப்பு ஏற்படும். மார்பகக் காம்புகளிலும், தொப்புள் வரையும் தோலில் நிறமாறுதல் ஏற்படுவதால் கருப்பாக மாறும். குழந்தையின் அசைவுகளை சிறிய குத்துக்களைப்போல உணர முடியும்.
உணவில் புளிப்பான பழங்கள் மீதும், உப்பு அதிகமுள்ள உணவுகளான ஊறுகாய்கள் மீதும் ஆவலாய் இருப்பது இயற்கைதான். ஏனெனில், நெஞ்செரிச்சலை, புளிப்பான பதார்தங்கள் சிறிது குறைப்பதாய் உணர்வதோடு, உப்பினைக் குறைத்து சாப்பிடச் சொல்வதால் உப்பின் மீது ஆவலாகவும் இருப்பார்கள்.
மூன்றாவது கட்டத்தில் கர்ப்பிணிகளின் முதுகுக்கு ஆதரவளிக்கும் தசைநார் மற்றும் தசைகள் மீது அதிகமாக அழுத்தமிருப்பதால் முதுகுவலி ஏற்படுகிறது. உங்கள் உடலில் இரத்தத்தின் கொள்ளளவு அதிகரிக்கிறது. ஈர்ப்பு காரணமாக இரத்தம் கால்களுக்குச் செல்கிறது. ஆகையால், தசைகள் மீது அழுத்தம் ஏற்பட்டு, கால்களில் இழுப்பு வருகிறது. குழந்தை உதரவிதானம் மீது அழுத்துகிறது. சுவாசப் பை விரிந்து கொடுப்பதில்லை மற்றும் உங்களுக்கு வேண்டிய அளவு வாயு கிடைப்பதில்லை இதனால் மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. உறங்குவதில் கடினமாக இருக்கும். இதற்கு காரணம் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய தேவை மற்றும் எடை அதிகரிப்பினால் ஏற்படும் அசௌகரியங்களாகும்.
குழந்தையின் அசைவைக் காண முடிகிறது. இப்போது குழந்தையின் எடை கூடுகிறது மற்றும் அது உதைப்பதையும் விக்கலையும் கூட கர்ப்பிணிகள் உணர முடியும். இவை எல்லாம் இன்பமான அவஸ்தைதான். இவற்றையெல்லாம் தெரிந்து வைத்துக்கொண்டவர்களுக்கு இந்த மாற்றங்கள் விரும்பத்தக்கவையாக இருக்கும். ஒரு ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்க மனம் தயாராகிவிட்ட உணர்வு எழும் என்கின்றனர் மகப்பேறு மருத்துவர்கள். என்ன கர்ப்பிணிகளே தயாராகிவிட்டீர்களா?
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Re: கர்ப்ப காலத்தில் பெண்களுக்குள் ஏற்படும் மாற்றங்கள்..என்ன..?
அருமையான பகிவிற்கு நன்றி
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கர்ப்ப காலத்தில் பெண்களுக்குள் ஏற்படும் மாற்றங்கள்..என்ன..?
அருமையான பதிவிற்கு நன்றி :!+: :!+:
lafeer- புதுமுகம்
- பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|