Latest topics
» பேல்பூரி - கண்டதுby rammalar Today at 10:17
» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58
» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45
» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38
» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25
» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32
» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26
» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12
» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40
» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33
» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01
» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05
» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26
» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01
» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40
» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22
» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21
» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29
» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19
» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49
» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56
» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37
» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14
» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13
» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53
» அவர் பயங்கர குடிகாரர்!
by rammalar Sun 17 Mar 2024 - 11:41
» சிட்டுக்குருவி - சிறுவர் பாடல்
by rammalar Sun 17 Mar 2024 - 9:19
» மாணவன்!
by rammalar Sun 17 Mar 2024 - 8:36
» வெளியானது 'துப்பறிவாளன் 2' படத்தின் அப்டேட்...
by rammalar Sun 17 Mar 2024 - 5:31
» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு...
by rammalar Sun 17 Mar 2024 - 5:28
ஏ தமிழக அரசே!
Page 1 of 1
ஏ தமிழக அரசே!
வாய்மையின் வாய்பொத்தி நடக்கும் ஆட்சி
====வஞ்சகம் வாளேந்தி செய்யும் ஆட்சி!
பேய்பிடித்து ஆடுகின்ற பித்தன் கையில்
====பிடிபட்டு வழியின்றி விழித்தி ருக்கும்
சேய்போல ஆனதின்று தமிழர் வாழ்வு!
====சத்தியம் சந்தியில் தவிக்கு திங்கு!
தூய்மனத்தார் துடித்தெழுந்தால் என்ன ஆகும்?
====தாளாது தாரணியே தீயில் வேகும்!
குலபுத்தி கீழ்புத்தி என்று காட்டும்
====குணம்கெட்டச் சிங்கள நாயக ளாலே
பழந்தமிழ் நாட்டுமக்கள் ஆங்கோர் தீவில்
====பரிதவித்துப் பரிதாப மாக மாய
இழவுக்குப் பஞ்சமில்லை; தட்டிக் கேட்கும்
====இங்கித மில்லாத அரசுக் கிங்கே
விழவுக்குப் பஞ்சமில்லை; விழவில் ஏற்கும்
=====விருதுக்கும் பஞ்சமில்லை; பாரீர் மாதோ!
இனமென்றார்; மொழிஎன்றார்; இனத்திற் காக
====இருக்கின்றோம் எந்நாளும் நாங்கள் என்றார்!
வனமாக நாட்டினையே மாற்றி வைப்போம்
====என்றார்;அப் படியேசெய் தார்;ஆம் ஈம
வனமாக நாட்டினையே மாற்றி வைக்க
====வளமான திட்டங்கள் தீட்டி விட்டார்!
பிணமாகக் குவிக்கின்ற சிங்க ளத்து
====அரசுக்கு மௌனத்தால் கைகொ டுத்தார்!
நாற்காலி ஒன்றினையே குறிக்கோ ளாக்கி
====நாக்காலே முப்போதும் பிழைத்தி ருக்கும்
"நாற்காலி கள்"கையில் நாட்டை வைத்தால்
====நாசந்தான் வேறேதும் நன்மை இல்லை!
கார்காலம் என்பதில்லை; வருஷ மெல்லாம்
====கனமழைதான் ஏழையர்தம் கண்ணி இரண்டில்!
நேராக இன்றிதனை உண்மை என்று
===="நல்லாட்சி" யாளராலே கண்டு விட்டோம்!
மத்திய அரசுக்குக் கடித மென்றார்
====மங்கலம் உண்டாகும் நாளை என்றார்!
வித்தைகள் பலவாறு காட்டு கின்றார்!
====விண்ணதிர முழக்கங்கள் நடத்து கின்றார்!
புத்தியினைப் பணத்திடையே புதைத்து விட்டார்
====பொழுதெல்லாம் வீட்டுக்கே சொத்து சேர்த்தார்!
சத்திரத்துச் சாமிகள்போல் பொய்யே சொன்னார்
====செந்தமிழர் இளித்தவாயர் எனநி னைத்தார்!
வேஷத்தை இனிமேலும் நம்ப மாட்டோம்
====வேசிமகள் புன்னகையென் றுணர்ந்து கொண்டோம்!
நாசத்தை இனியேனும் தடுப்ப தற்கு
====நடைபோட்டு நீயாக வந்தால் நன்று!
கோஷத்தை இடுகின்ற பராரி கூட்டம்
====குரல்வளையை நெரித்தற்கும் தயங்கா தென்பேன்!
தேசத்தை அரிக்கின்ற செயல்வி டுப்பாய்
====தமிழகத் தரசுக்கீ தெச்ச ரிக்கை!
(முள்ளிவாய்க்கால் அழிகையில் மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்த தமிழினத் துரோகி கலைஞர் மு.கருணாநிதியின் தி.மு.க. அரசைக் கண்டித்து எழுதிய கவிதை. )
ரௌத்திரன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 5
மதிப்பீடுகள் : 10
Similar topics
» தமிழக உரிமையை விட்டுக் கொடுக்க முடியாது; தமிழக சட்டமன்றம் தீர்மானம்
» தமிழக மீனவர்கள்
» மக்கள் வீடு வாங்கவோ, விற்கவோ முடியாது. அரசே எல்லாவற்றையும் செய்யும்
» ஏழை மாணவர்களுக்கு, தனியார் பள்ளிகளில் ஆகும் கல்விச் செலவை, அரசே செலுத்தும்
» மீன்களுக்கு அரசே விலை நிர்ணயிக்கக்கோரி பாம்பன் விசைப்படகு மீனவர் தொடர் வேலை நிறுத்தம்
» தமிழக மீனவர்கள்
» மக்கள் வீடு வாங்கவோ, விற்கவோ முடியாது. அரசே எல்லாவற்றையும் செய்யும்
» ஏழை மாணவர்களுக்கு, தனியார் பள்ளிகளில் ஆகும் கல்விச் செலவை, அரசே செலுத்தும்
» மீன்களுக்கு அரசே விலை நிர்ணயிக்கக்கோரி பாம்பன் விசைப்படகு மீனவர் தொடர் வேலை நிறுத்தம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|