Latest topics
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதைby rammalar Yesterday at 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Yesterday at 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Yesterday at 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Yesterday at 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Yesterday at 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Yesterday at 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
புன்னகை!
2 posters
Page 1 of 1
புன்னகை!
–
* நம்மில் சிதறும்
புன்னகைகள்
நமக்கே தெரியாமல் வீடெங்கும்
பட்டுத் தெறிக்கையில்
ஆனந்தம் -
அணைதாண்டிப் பாய்கிறது!
* என்று நினைத்தாலும்
மகிழ்ச்சி நிகழ்வுகளின் பதிவுகள்
நித்தமும் புன்னகைப்
பூவை மலரவே செய்கின்றன!
* பாசத்தில்
கட்டுண்டோமானால்,
இதுவே பேரானந்த
உணர்வுகளின் ஊற்றாகிறது!
* இதை,
நோய்வாய்ப்பட்டவர்களுக்கும்
சோகம் சுமப்பவர்களுக்கும்
ஏன் – நம்மை
வெறுப்பவர்களுக்குங்கூட
பரிசளிக்கலாம்!
* நமக்குள்ளே நிகழும்
சூழ்நிலைச் சிக்கல்களுக்கும்
துளிராத ஆசைகளுக்கும்
முறிந்துபோன முயற்சிகளுக்கும்
புன்னகையொன்றே
பண்படுத்தும் மருந்து!
* உடனடித் தேவைகளுக்கும்
திடீர் சோகங்களுக்கும்
பழைய புன்னகையைக்கூட
தூசுதட்டித் துடைத்துக்
கொடுத்தாலும் புன்னகையின்
நிறம் மாறுவதில்லை!
* மாறாக…
பல்லாண்டுப் பகையையும்
நம் மனம்விட்டுக்
கிள்ளியெறிந்து விடும்!
* எரியும் எந்த பகைமைக்கும்,
முள்ளாய் குத்தும்
துரோகங்களுக்கும்
புன்னகையின் பார்வைகள்
காதலாய்
கசிந்துருகச் செய்யும்!
* புன்னகை
கண நேரத்தில் காதலை
முகிழ்க்கச் செய்யும்…
கவலைகளைக்
கரையச் செய்யும்…
வாழ்வை ரசிக்கச் செய்யும்!
* புன்னகைக்கும் வித்தை
மட்டும் புரிந்து கொண்டால்
இந்த உலகில் – நாம்
கண்ணசைவில் காரியங்கள்
யாவும் சாதித்து விடலாம்!
-
=========================
— செல்லம் ரகு, திருப்பூர்.
நன்றி: வாரமலர்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25136
மதிப்பீடுகள் : 1186
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|