சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகை
by rammalar Today at 4:39

» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Yesterday at 20:01

» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Yesterday at 19:48

» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Yesterday at 13:41

» தயாரிப்பாளர் சென்சார் மேல கடுப்புல இருக்கார்!
by rammalar Yesterday at 13:35

» என்ன பட்டிமன்றம் நடக்குது?
by rammalar Yesterday at 13:28

» இயற்கை கிளென்சர்
by rammalar Yesterday at 5:24

» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Yesterday at 5:20

» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Fri 14 Jun 2024 - 20:21

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Fri 14 Jun 2024 - 19:55

» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Fri 14 Jun 2024 - 14:04

» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:57

» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Fri 14 Jun 2024 - 13:26

» கபிலன் கவிதைகள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:13

» இனி அனைத்து பேருந்துகளிலும் டீசலுக்கு பதில் இதுதான்..
by rammalar Fri 14 Jun 2024 - 6:34

» பல்சுவை -
by rammalar Thu 13 Jun 2024 - 16:24

» கரன்சியும் வெள்ளைத்தாளும் - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:07

» ஆத்தா ஆத்தோரமா!- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:05

» காதலுக்கு காவல் கதவு- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:04

» பாடுபடும் விவசாயி - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:03

» விதிமுறை மீறாத எறும்புகள் படை! - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 16:00

» காடுகள் அழிப்பு - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:59

» இனி - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:57

» உன் அழகை வர்ணிக்க…
by rammalar Thu 13 Jun 2024 - 15:56

» மகா பெரியவா.
by rammalar Thu 13 Jun 2024 - 15:47

» பலாப்பழமும் பாலபாடமும்
by rammalar Thu 13 Jun 2024 - 15:09

» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by rammalar Thu 13 Jun 2024 - 15:05

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by rammalar Thu 13 Jun 2024 - 14:03

» பல்சுவை 11
by rammalar Wed 12 Jun 2024 - 17:13

» ஆடை கட்டி வந்த நிலவோ...
by rammalar Wed 12 Jun 2024 - 17:08

» அம்புட்டு தாங்க மேட்டரு!
by rammalar Wed 12 Jun 2024 - 11:43

» கரிசனம் -நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:36

» விளையாட்டு – நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:33

» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:31

» நாணயம் – பத்து நொடிக் கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:30

 சுட சுட செய்திகள்...ராகவா - Page 2 Khan11

சுட சுட செய்திகள்...ராகவா

+4
rammalar
kalainilaa
*சம்ஸ்
மீனு
8 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

 சுட சுட செய்திகள்...ராகவா - Page 2 Empty சுட சுட செய்திகள்...ராகவா

Post by ராகவா Wed 6 Feb 2013 - 1:39

First topic message reminder :

தினசரி செய்திகள் இந்த பகுதியில் இடமெறும்...

ஆய்வை முடித்தது மத்தியக் குழு: நாளை சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை சமர்ப்பிப்பு


புதுடில்லி: காவிரி டெல்டா பகுதிகளில் நீரின்றி வாடும் நெற்பயிர்களின் நிலை குறித்து ஆராய்வதற்காக, இன்று அப்பகுதிக்கு வந்த மத்தியக்குழு தனது ஆய்வை முடித்தது. இதையடுத்து இந்த அறிக்கை நாளை சுப்ரீம் கோர்ட்டில் சமர்ப்பிக்கப்படுகிறது.

"காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை, அரசிதழில் வெளியிடும்படி, மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி, சுப்ரீம் கோர்ட்டில், தமிழக அரசு மனு செய்தது. இந்த வழக்கின், முந்தைய விசாரணையின் போது, "காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு, ஜனவரி மாத இறுதிக்குள், அரசிதழில் வெளியிடப்படும்' என, மத்திய அரசு தரப்பில், கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதற்கான நடவடிக்கை எதையும், மத்திய அரசு எடுக்கவில்லை. இந்நிலையில், தமிழக அரசு தாக்கல் செய்த மனு, நீதிபதி, லோதா தலைமையிலான பெஞ்ச் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இம்மாதம், 20ம் தேதிக்குள், காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை, அரசிதழில் வெளியிட வேண்டும். காவிரியில், உடனடியாக, தமிழகத்துக்கு, 2 டி.எம்.சி., தண்ணீரை திறந்து விட வேண்டும். அங்கு, தண்ணீரின்றி கருகும் பயிர்களைக் காப்பதற்கு, உடனடியாக, கர்நாடக அரசு, இந்த தண்ணீரை திறந்து விட வேண்டும். மத்திய நீர் வள ஆணையம், மூன்று பேர் அடங்கிய குழுவை அமைத்து, தமிழகம் மற்றும் கர்நாடக அரசுகளுக்கு, தேவையான நீர் எவ்வளவு என்பதை, அந்த மாநிலங்களுக்குச் சென்று, ஆய்வு செய்து, இரண்டு நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


இதன்படி, இன்று காலை மத்திய வேளாண் அமைச்சகத்தின் துணை கமிஷனர் (பயிர்கள்) பிரதீப்குமார் ஷா தலைமையில், மத்திய நீர்வள ஆணையத்தின் தலைமைப் பொறியாளர்கள் ஜேக்கப், மகேந்திரன், கண்காணிப்புப் பொறியாளர் தங்கமணி அடங்கிய மத்திய நிபுணர் குழு ஆய்வு செய்தனர். திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் பாப்பாக்குறிச்சி பகுதியில் ஓடும் உய்யக்கொண்டான் பகுதியில் தங்களது ஆய்வைத் துவக்கியது.


தொடர்ந்து, தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் யூனியனில் கோவில்பத்து பகுதிகளில் கருகிய நெற்பயிர்களை பார்வையிட்டனர். தொடர்ந்து மத்திய குழுவினர்கள் குணமங்கலம், ராயந்தூர் ஆகிய இடங்களிலும், வயல்பரப்பில் நடந்து சென்று ஆய்வு செய்தனர். அங்கு விவசாயிகளிடம் குறைகளை கேட்டனர். அப்போது ராயந்தூரில் தீபன் என்ற விவசாயி, தன் வயலுக்கு டேங்கர் லாரி மூலம் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார். தொடர்ந்து மத்தியக்குழுவினர் தஞ்சை மாவட்டம், பாப்பாநாடு, சொக்கனாவூர் ஆகிய பகுதிகளில் பயிர்களை பார்வையிட்டனர். மத்தியக்குழுவினருடன் வேளாண்மை உற்பத்தி ஆணையர் சந்தீப் சக்சேனா, வேளாண்மைத்துறை கமிஷனர் சிவதாஸ்மீனா, கூடுதல் தலைமை செயலாளரும், வருவாய்த்துறை நிர்வாக கமிஷனருமான ஸ்ரீதர், தஞ்சாவூர் கலெக்டர் பாஸ்கரன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் சென்றனர்.

மத்தியக்குழுவை சேர்ந்த மத்திய நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் மகேந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது: நெற்பயிர்களை பார்வையிட்டோம். பயிர்கள் கருகியுள்ளது தெரியவருகிறது. தண்ணீர் இல்லாமல் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதையும் பார்வையிட்டுள்ளோம். பயிரை காப்பாற்ற லாரிகளில் தண்ணீர் எடுத்து வந்து பாய்ச்சுவதையும் பார்த்தோம். விவசாயிகள் கஷ்டப்படுவதை பார்வையிட்டோம். தண்ணீர் தேவை குறித்து சுப்ரீம் கோர்ட்டில் நாளை அறிக்கை தாக்கல் செய்வோம்.

தினமலர்


Last edited by ராகவா on Tue 22 Jul 2014 - 7:44; edited 2 times in total
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down


 சுட சுட செய்திகள்...ராகவா - Page 2 Empty Re: சுட சுட செய்திகள்...ராகவா

Post by ராகவா Fri 8 Feb 2013 - 7:48

"கிட்னி' பாதிப்பால் தத்தளிக்கும் கிராமம்

 சுட சுட செய்திகள்...ராகவா - Page 2 Tamil_News_large_643656

காரியாபட்டி: விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே, டி.வேப்பங்குளம்
ஊராட்சி உட்பட்ட, ஏ.தொட்டியங்குளத்தில், "கிட்னி' பாதிப்பால்
பாதிக்கப்பட்டு, பலர் இறந்துள்ளனர். மூன்று வயது குழந்தைக்குக் கூட, இந்த
பாதிப்பு உள்ளதால், சோகத்தில் மூழ்கிய இக்கிராமத்தினர், ஊரை காலி செய்ய
முடிவுக்கு வந்துள்ளனர். காரியாபட்டி ஏ.தொட்டியங்குளத்தில், 300க்கு
மேற்பட்ட குடும்பங்கள், விவசாயத்தை நம்பி பிழைப்பு நடத்தி வருகின்றனர்.

இவர்களின்,
நிம்மதியான வாழ்க்கைக்கு இடையே, "கிட்னி' பாதிப்பு என்ற பெயரில், விதி
விளையாட துவங்கியது. இதன் பாதிப்பால், இக்கிராமத்தை சேர்ந்த, பலர்
இறந்துள்ளனர். 2005க்கு பின் ஏற்பட்ட, இந்த பாதிப்பை அறியாத கிராமத்தினர்,
முதலில் உடல் நிலை பாதிப்பதால், இறப்பு ஏற்படுவதாக கருதினர்.

ஆனால், தொடர்ந்து பாதிக்கப்பட்ட பலர், அடுத்தடுத்து, இளம் வயதிலே
இறந்ததால், பீதியடைந்த கிராமத்தினர், மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர்.
பலருக்கு உப்புச் சத்து, கல்லடைப்பு இருப்பது தெரிந்தது. மூன்று வயது
குழந்தைகள், உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனை செய்ததில், உப்புச்
சத்து, கல்லடைப்பு, கை, கால் சோர்வு என, பல வித பிரச்னைகள் காணப்பட்டன.
இதை தொடர்ந்து, சில நாட்களிலே "கிட்னி' பாதித்து, இறப்பதும் தொடர்ந்தது.


கடந்த எட்டு ஆண்டுகளில், இக்கிராமத்தில் மட்டும், கிட்னி பாதிப்பால், 25
பேர் இறந்துள்ளனர். குடிநீரினால், இப்பிரச்னை ஏற்படுவதாக கருதி,
அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். ஆனால், இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும்
இல்லை. இப்பிரச்னை அருகில் உள்ள கிராமத்தினருக்கு பரவியதையடுத்து, சுற்று
கிராமத்தினரும் சோகத்தில் உள்ளனர். இனி இங்கு வசித்தால், உயிர் வாழ
முடியாது என கருதிய மக்கள், ஊரை காலி செய்யும் முடிவுக்கு வந்துள்ளனர்.


அக்கிராம மாணவி சுகுணா: ஒன்பதாம் வகுப்பு படிக்கிறேன். <உடல் சோர்ந்து,
கை, கால் வீக்கமாக இருந்தது. இடுப்பு பகுதியில் வலி இருந்தது. மருத்துவ
பரிசோதனையில் "கிட்னி' பாதிக்கப்பட்டது, தெரிந்தது. மருந்து சாப்பிட்டு
வருகிறேன். குடிநீரில், சுண்ணாம்பு சத்து அதிக அளவில் இருப்பதால், கிட்னி
பாதித்திருப்பதாக டாக்டர்கள் கூறினர். எனக்கு ஏற்பட்ட இப்பிரச்னை
மற்றவர்களுக்கு வரக்கூடாது, அதற்குள், நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மணிகண்டன் : குடிநீரை குடத்தில் பிடித்து வைக்கும் போது, சுண்ணாம்பு போல்
கறை படிகிறது. சாப்பாட்டில், தண்ணீரை ஊற்றி காலையில் பார்த்தால், மஞ்சள்
நிறத்தில் நுரைகள் காணப்படுகிறது. பல்வேறு மருத்துவ மனைகளிலிருந்து,
வெளியேறும் கழிவுகளை கிராமத்தின் அருகில் எரிப்பதால், துர்நாற்றம்
ஏற்படுகிறது. காற்று பலமாக வீசும்போது, ஊருக்குள் இருக்க முடியாது. சுவாச
கோளாறும் ஏற்படுகிறது.


சுப்பு: பெண்கள் எல்லோருக்கும், இந்த பிரச்னை உள்ளது. வெளியில் சொல்ல
அச்சப்பட்டு, சொல்ல முடியாமல் தவிக்கிறோம். காய்ச்சல் என்றால் கூட, கிட்னி
பாதிக்கப்பட்டிருக்குமோ என்ற பீதி ஏற்படுகிறது. தற்போது, இந்த நீரை குடிக்க
பயந்து, மினரல் வாட்டர் கேன்களை வாங்கி பயன்படுத்துகிறோம். எத்தனை
நாளைக்கு, இப்படி பணம் செலவு செய்ய முடியும். இளம் வயதிலே பலர் வாழ்க்கையை
இழந்து, சிறு குழந்தைகளுடன் விதவையாக தவிக்கின்றனர்.

எங்களுக்கு,
உரிய நிவாரணம் கிடைக்காவிட்டால், ஒட்டு மொத்தமாக, ஊரை காலி செய்ய முடிவு
செய்துள்ளோம்.ஊராட்சித் தலைவி சின்னப்பிள்ளை: பலர் சிறு வயதில்
இறந்துள்ளனர். மருத்துவ கழிவுகளை எரிப்பதாலும், குடிநீரினாலும் இப்பிரச்னை
ஏற்படுகிறது என, மக்கள் கூறுகின்றனர். அதிகாரிகளிடத்தில் புகார்
கொடுத்தேன். இதுவரை நடவடிக்கை இல்லை. மக்களுக்கு உயிருக்கு உத்தரவாதம்
இல்லாததால், ஊரை காலி செய்ய முடிவு எடுத்துள்ளனர். இனி அதிகாரிகள் தான்
தீர்வு காண வேண்டும். சுகாதாரத்துறை இணை இயக்குனர் வரதராஜனிடம் கேட்ட போது,
""கிராமத்திற்கு சென்று, தண்ணீரை சோதனை செய்து பார்த்தால் தான், உண்மை
நிலவரம் தெரியும்'' என்றார்.


-தினமலர்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

 சுட சுட செய்திகள்...ராகவா - Page 2 Empty Re: சுட சுட செய்திகள்...ராகவா

Post by rammalar Fri 8 Feb 2013 - 9:04

பிரபல ஊடகம், இப்படிப்பட்ட செய்திகளை வெளியிடும்
முன், சம்மந்தப்பட்ட சட்ட மன்ற உறுப்பினருக்கு இவ்விஷயம்
தெரியுமா, அவரது கருத்து என்ன என்றும் கேட்டு,
அந்த விவரங்களையும் வெளியிட வேண்டும்
-
அப்படி செய்வதால், பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில்
வழி பிறக்க உதவியாக இருக்கும்...
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24574
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

 சுட சுட செய்திகள்...ராகவா - Page 2 Empty Re: சுட சுட செய்திகள்...ராகவா

Post by ராகவா Fri 8 Feb 2013 - 10:08

rammalar wrote:பிரபல ஊடகம், இப்படிப்பட்ட செய்திகளை வெளியிடும்
முன், சம்மந்தப்பட்ட சட்ட மன்ற உறுப்பினருக்கு இவ்விஷயம்
தெரியுமா, அவரது கருத்து என்ன என்றும் கேட்டு,
அந்த விவரங்களையும் வெளியிட வேண்டும்
-
அப்படி செய்வதால், பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில்
வழி பிறக்க உதவியாக இருக்கும்...
-
நன்றி  சுட சுட செய்திகள்...ராகவா - Page 2 111433
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

 சுட சுட செய்திகள்...ராகவா - Page 2 Empty Re: சுட சுட செய்திகள்...ராகவா

Post by ராகவா Fri 8 Feb 2013 - 19:34

துப்பாக்கி முனையில் 3 குழந்தைகள் கடத்தல்

சிவகங்கை : மதுரை அவனியாபுரம் அருகே துப்பாக்கி முனையில் 3 குழந்தைகளை
கடத்தி சென்ற நபர்களை போலீசார் மடக்கி பிடித்தனர். பூவந்தி அருகே பிடிபட்ட
இவர்களிடம் திருப்பாச்சேத்தி போலீஸ் ஸ்டேஷனில் வைத்து விசாரித்து
வருகின்றனர்.
-தினமலர்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

 சுட சுட செய்திகள்...ராகவா - Page 2 Empty Re: சுட சுட செய்திகள்...ராகவா

Post by ராகவா Fri 8 Feb 2013 - 19:37

திருப்பதி வந்தார் ராஜபக்ஷே

நகரி: இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்ஷே இன்று திருப்பதி வந்தார். பல்வேறு
அமைப்புககளின் எதிர்ப்புகள் மத்தியில் திருப்பதியில் 60 பேர் கொண்ட
குழுவினருடன் வந்த இவர் ஸ்ரீகிருஷ்ணா விருந்தினர் மாளிகையில்
தங்கியுள்ளார். இங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இவரது வருகைக்கு
எதிர்ப்பு தெரிவிக்க நீலமகால் தியேட்டர் அருகே நின்ற பலரை போலீசார் கைது
செய்தனர்.
-தினமலர்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

 சுட சுட செய்திகள்...ராகவா - Page 2 Empty Re: சுட சுட செய்திகள்...ராகவா

Post by ராகவா Fri 8 Feb 2013 - 19:39

மார்ச்சில் பா.ஜ., தேசிய கவுன்சில் கூட்டம்

புதுடில்லி: வரும் மார்ச் மாதம் நடைபெறும் பா.ஜ., தேசிய கவுன்சில்
கூட்டத்தில், விலைவாசி உயர்வில் அரசின் தோல்வி, ஊழல், உள்நாட்டு
பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள மிரட்டல் குறித்து விவாதிக்க இருப்பதாக
அக்கட்சி கூறியுள்ளது. இது குறித்து அக்கட்சி துணைத்தலைவர் முக்தார்
அப்பாஸ் நக்வி கூறுகையில், மார்ச் 2 மற்றும் 3ம் தேதி அரசியல் சூழ்நிலை ,
பொருளாதார சூழ்நிலை, உள்நாட்டு பாதுகாப்பு, மோசமான நிர்வாகம், விலைவாசி
உயர்வு மற்றும் ஐ.மு.கூ., கூட்டணியின் ஊழல் குறித்து விவாதிக்கப்படும் என
கூறினார். இந்த கூட்டத்தில் மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும்
என்ற வி.எச்.பி., மற்றும் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் கோரிக்கை குறித்தும்
விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது.




 சுட சுட செய்திகள்...ராகவா - Page 2 Blank




-தினமலர்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

 சுட சுட செய்திகள்...ராகவா - Page 2 Empty Re: சுட சுட செய்திகள்...ராகவா

Post by ராகவா Fri 8 Feb 2013 - 19:40

மத்திய பிரதேசத்தில் 9 பேர் கடத்தல்
போபால்: மத்திய பிரதேசத்தில் பள்ளி மாணவர்கள் 7 பேர் உள்பட 9 பேரை ஒரு
கும்பல் கடத்தி சென்றது. பள்ளி முடிந்து திரும்பும் போது வந்த ஒரு மர்ம
ஜீப் இந்த கடத்தல் நடந்தது. போலீசார் கடத்தல்காரர்களை தேடி வருகின்றனர்.
ஒரே நாளில் 9 பேர் கடத்தப்பட்டது எரோரா கிராமத்தில பரபரப்பை
ஏற்படுத்தியிருக்கிறது.

-தினமலர்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

 சுட சுட செய்திகள்...ராகவா - Page 2 Empty Re: சுட சுட செய்திகள்...ராகவா

Post by ராகவா Fri 8 Feb 2013 - 19:40

மோடி எதிர்ப்பாளர்கள் மீது வழக்கு பதிவு

புதுடில்லி : குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் டில்லி விஜயத்தின்
போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது டில்லி போலீசார் வழக்கு பதிவு
செய்துள்ளனர். குஜராத் முதல்வர் மோடி, சமீபத்தில் டில்லி வந்திருந்தார்.
பிரதமருடனான சந்திப்பிற்கு பிறகு, டிலலியின் முன்னணி கல்லூரியில் நடைபெற்ற
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இதற்கு எதிர்ப்பு
தெரிவிக்கும் வகையில், கல்லூரி வாசலில் பல்வேறு அமைப்பினர் கறுப்புக் கொடி
காட்டுதல், போராட்டம், ஆர்ப்பாட்டம் பல்வேறு வகைகளில் போராட்டங்கள்
செய்தனர். ‌மோடி எதிர்ப்பாளர்கள் மீது டில்லி போலீசார் இந்திய குற்றவியல்
சட்டம் 184 ( பொதுச்சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல்)ன் படி வழக்கு பதிவு
செய்துள்ளனர்.

-தினமலர்




 சுட சுட செய்திகள்...ராகவா - Page 2 Blank
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

 சுட சுட செய்திகள்...ராகவா - Page 2 Empty Re: சுட சுட செய்திகள்...ராகவா

Post by ராகவா Fri 8 Feb 2013 - 19:41

சரக்கு வேன் கவிழ்ந்து 2 ‌மாணவர்கள் பலி

திருநெல்வேலி : நெல்லை மாவட்டம் நக்கனேரி அருகே சரக்கு வேன் கவிழ்ந்து
விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த‌ே பாலிடெக்னிக் மாணவர்கள் 2 பேர்
சம்பவ இடத்திலேயே பலியாயினர். நெல்லை மாவட்டம் பழவூர் அருகே
கங்கனாபுரத்தில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு
படிக்கும் மாணவனது தாயின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள சரக்கு வேனில்
மாணவர்கள் சென்றனர். வேன்,. நக்கனேரி அருகே சென்று கொண்டிருந்த போது,
கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வேனின் அடிப்புறத்தில் சிக்கி
ஈத்தாமொழி பகுதி‌யை சேர்ந்த விஜயன் (18), தேங்காய்பட்டினத்தை சேர்ந்த
அனீஷ் (18) சம்பவ இடத்திலேயே பலியாயினர். 15 மாணவர்கள் படுகாயமடைந்தனர்.
அவர்கள் சிகிச்சைக்காக ராதாபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

-தினமலர்




 சுட சுட செய்திகள்...ராகவா - Page 2 Blank
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

 சுட சுட செய்திகள்...ராகவா - Page 2 Empty Re: சுட சுட செய்திகள்...ராகவா

Post by ராகவா Fri 8 Feb 2013 - 19:42

கோடீஸ்வர நாட்டில் ஏழைகளின் நிலை

ஹாங்காங் : ஆசியாவின் செல்வந்தர் நாடு என்ற பெருமை‌ பெற்ற ஹாங்காங்
நாட்டில் வாழும் ஏழைகள், இரும்பு கூண்டு போன்ற வடிவமைப்பில் வசித்து வருவது
குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக, விக்டோரியா பார்க்
பகுதியில் வசித்து வரும் ஏழைக்குடும்பத்தில் பிறந்த 67 வயதான லியூங் சோ
யின் கூறியதாவது, இந்த இரும்பு கூண்டை, முயல் இறைச்சி வியாபாரம் செய்யும்
வியாபாரியிடம் இருந்து 1300 ஹாங்காங் டாலருக்கு (அமெரிக்க மதிப்பில் 167
டாலர்கள்) வாங்கினேன். இதுதான் எனது வீடு மற்றும் சொத்து.ஆசியாவிலேயே‌
செல்வந்தர் நாடு என்று பெயரெடுத்த ஹாங்காங் நாட்டில் தான் நாம்
வசிக்கிறோமா? என்ற கேள்வி தனக்கு அவ்வப்போது எழுவதுண்டு என்றும் அவர்
கூறினார். முந்தைய பிரிட்டிஷ் காலனியில் வாழ்ந்த 1 லட்சத்திற்கும் மேற்பட்ட
மக்கள் இருக்க இடமின்றி அவதிப்பட்டு வருவதாக பொதுநல அமைப்பு
தெரிவித்துள்ளது.




 சுட சுட செய்திகள்...ராகவா - Page 2 Blank
-தினமலர்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

 சுட சுட செய்திகள்...ராகவா - Page 2 Empty Re: சுட சுட செய்திகள்...ராகவா

Post by ராகவா Fri 8 Feb 2013 - 19:42

திருப்பதியில் தமிழ் ஊடகங்களுக்கு கட்டுப்பாடு
திருப்பதி : இலங்கை அதிபர் ராஜபக்சே, திருப்பதி வந்துள்ளதையடுத்து, அங்கு
தமிழ் ஊடகங்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து
வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு
அமைப்புகளின் கடும எதிர்ப்புகளுக்கிடையில், இலங்கை அதிபர் ராஜபக்சே இந்தியா
வந்துள்ளார். பீகார் பயணத்தை முடித்து விட்டு, அவர் தற்போது திருப்பதி
வந்துள்ளார். இந்நிலையில், செய்தி சேகரிக்கச் சென்ற தமிழ் பத்திரிகை
மற்றும் ஊடக ஊழியர்கள் திருப்பதி விமானநிலையத்தில் தடுத்து
நிறுத்தப்பட்டனர். தமிழ் ஊடகங்களை அனுமதிக்கக் கூடாது போலீஸ்
உயர்அதிகாரிகள் கூறியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதற்கு தெலுங்கு ஊடக
நண்பர்கள் கண்டனம் தெரிவித்ததையடுத்து, கடும் சோதனைகளுக்கு பிறகு தமிழ்
ஊடகங்கள், திருப்பதி செல்ல அனுமதிக்கப்பட்டது. இது கருத்து சுதந்திரத்தை
பறிக்கும் செயல் என்று சமூக நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
-தினமலர்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

 சுட சுட செய்திகள்...ராகவா - Page 2 Empty Re: சுட சுட செய்திகள்...ராகவா

Post by ராகவா Fri 8 Feb 2013 - 19:43

கவாஸ்கரி்ன் சாதனை : சச்சின் சமன்

மும்பை : இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கரின் முதல்தர
கிரிக்கெட்டின் சத சாதனையை, சத சாதனை நாயகன் சச்சின் டெண்டுல்கர் சமன்
செய்துள்ளார். மும்பையில் நடைபெற்று வரும் இரானி கோப்பை டெஸ்ட் தொடரில்,
ரெஸ்ட் ஆப் இந்தியாவிற்கெதிரான டெஸ்ட் போட்டியில், சச்சின டெண்டுல்கர்
81வது சதமடித்ததன் மூலம், கவாஸ்கரின் சாதனை சமன் செய்யப்பட்டுள்ளது. 81
சதங்கள் கடந்து கவாஸ்கர் மற்றும் சச்சின் முதலிடத்தில் உள்ளனர். அதற்கடுத்த
இடத்தில், இந்திய அணியின் பெருஞ்சுவர் என்றழைக்கப்பட்ட ராகுல் டிராவிட் 64
சதங்களுடன் இரண்டாமிடத்தில் உள்ளார்.
-தினமலர்




 சுட சுட செய்திகள்...ராகவா - Page 2 Blank
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

 சுட சுட செய்திகள்...ராகவா - Page 2 Empty Re: சுட சுட செய்திகள்...ராகவா

Post by ராகவா Fri 8 Feb 2013 - 19:44

ஏர்டெல் நிறுவனத்திற்கு ரூ. 650 கோடி அபராதம்

மும்பை : இந்தியாவின் முன்னணி தனியார் ‌தொலைதொடர்பு நிறுவனமான
பார்தி ஏர்டெல் நிறுவனத்திற்கு, உரிமம் மீறல் தொடர்பாக, மத்திய
தொலைதொடர்புத்துறை, ரூ. 650 கோடி அபராதம் விதிக்க பரிந்துரைத்துள்ளது.
இ‌துதொடர்பாக, அத்துறை உயர் அதிகாரி கூறியுள்ளதாவது, 2000 முதல் 2005ம்
ஆண்டு வரையிலான காலகட்டத்தில், தேசிய அளவிலான அழைப்புகள் மற்றும் சர்வதேச
அழைப்புகளின் மூலம், பொதுத்துறை நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்
(பிஎஸ்என்எல்) நிறுவனத்திற்கு, ஏர்டெல் உரிமம் மீறியதன் விளைவாக
பெரும்நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக, ஒரு சர்க்கிளுக்கு ரூ. 50 கோடி
வீதம், ஏர்டெல் நிறுவனத்தின் 13 சர்க்கிள்களுக்கு என ரூ. 650 கோடி அபராதமாக
விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஒப்புதல் பெறும்பொருட்டு,
மத்திய தொலைதொடர்பு அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர்
கூறினார்.




 சுட சுட செய்திகள்...ராகவா - Page 2 Blank-தினமலர்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

 சுட சுட செய்திகள்...ராகவா - Page 2 Empty Re: சுட சுட செய்திகள்...ராகவா

Post by ராகவா Fri 8 Feb 2013 - 19:45

சிரியா ராணுவ தொழி்ற்சாலை மீது தாக்குதல் : 54 பேர் பலி
பெய்ரூட் : சிரியாவின் ராணுவ ‌தொழிற்சாலை மீது மர்மநபர்கள் வெடிகுண்டு
நிரப்பப்பட்ட வாகனத்தை கொண்டு தாக்குதல் நடத்திய சம்பவத்தில் 54 பேர்
சம்பவ இடத்திலேயே பலியாயினர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
சிரியா நாட்டின் அல் புராக் பகுதியில், ராணுவ தொழி்ற்சாலை இயங்கி
வருகிறது. இந்த தொழிற்சாலையில், வெடிகுண்டு நிரப்பப்பட்ட வாகனத்தை மோதச்
செய்ததில் 54 பேர் பலியாயினர். இவர்களில் 11 பேர் பெண்கள் ஆவர்.
இத்தாக்குதல் குறித்து மனித உரிமைகள் அமைப்பு கடும் கண்டனத்தை
தெரிவித்துள்ளது.

 சுட சுட செய்திகள்...ராகவா - Page 2 Blank-தினமலர்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

 சுட சுட செய்திகள்...ராகவா - Page 2 Empty Re: சுட சுட செய்திகள்...ராகவா

Post by ராகவா Fri 8 Feb 2013 - 19:46

திருப்பூரில் அனுமதியின்றி செயல்பட்ட சாயப்பட்டறைகள் மூடல்

திருப்பூர் : அனுமதியின்றி செயல்பட்டது‌ மற்றும் கழிவுகளை சங்கிலிப்பள்ளம்
ஓடையில் கலந்த‌து உள்ளிட்ட காரணங்களுக்காக, திருப்பூர் ஷெரீப் நகரில்
இயங்கி வந்த 2 சாயப்பட்டறைகள் மற்றும் ஒரு பட்டன் ஜிப் சாய ஆலையின்
உரிமங்களை மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் பறிமுதல் செய்து மூடவும்
உத்தரவிட்டனர்.

-தினமலர்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

 சுட சுட செய்திகள்...ராகவா - Page 2 Empty Re: சுட சுட செய்திகள்...ராகவா

Post by ராகவா Fri 8 Feb 2013 - 19:46

ராஜபக்ச‌ே ஹிட்லரை போன்றவர் : ஸ்டாலின்

சென்னை : இலங்கை அதிபர் ராஜபக்ச‌ே, ஹிட்லரை போன்று செயல்பட்டு வருவதாக
திமுக பொருளாளர் ஸ்டாலின் கூறியுள்ளார். இலங்கை அதிபர் ராஜபக்சேவின்
இந்திய வருகையை கண்டித்து, திமுக சார்பில் வள்ளுவர் கோட்டத்தில்
கறுப்புச்சட்டை போராட்டம் நடைபெற்றது. இதில் பேசிய கட்சி பொருளாளர்
ஸ்டாலின் கூறியதாவது, இலங்கை அதிபர் ராஜபக்சேவின் செயல்பாடு, சர்வாதிகாரி
ஹிட்லரை ஒத்துள்ளது. இலங்கையில் தமிழர்களுக்கு தன்னாட்சி வழங்கப்படும்
என்று இந்தியாவிடம் உறுதியளித்து விட்டு, வேண்டிய உதவிகளை நம்மிடம் இருந்து
பெற்று , தற்போது தமிழர்களுக்கு தன்னாட்சி வழங்க முடியாது என்று அவர்
கூறுவது கண்டனத்திற்குரியது. அவர் கபட நாடகம் ஆடுவதாக ஸ்டாலின் கூறினார்.






 சுட சுட செய்திகள்...ராகவா - Page 2 Blank




-தினமலர்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

 சுட சுட செய்திகள்...ராகவா - Page 2 Empty Re: சுட சுட செய்திகள்...ராகவா

Post by ராகவா Fri 8 Feb 2013 - 19:47

அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு : விமானப் போக்குவரத்து ஸ்தம்பிப்பு

நியூயார்க் : அமெரிக்காவில், வரலாறு காணாத அளவிற்கு கடும்
பனிப்பொழிவு நிலவி வருவதையடுத்து, அங்கு ‌1000க்கும் மேற்பட்ட விமானஙகளின்
சேவை தாமதப்பட்டுள்ளதோடு மட்டுமல்லாது விமானப்போக்குவரத்து முற்றிலும்
பாதிக்கப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள்
தெரிவிக்கின்றன. இதற்குமுன், 1978ம் ஆண்டில் அதிக அளவிற்கு பனிப்பொழிவு
ஏற்பட்டதன் ‌விளைவாக, விமானப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது
குறிப்பிடத்தக்கது.




 சுட சுட செய்திகள்...ராகவா - Page 2 Blank-தினமலர்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

 சுட சுட செய்திகள்...ராகவா - Page 2 Empty Re: சுட சுட செய்திகள்...ராகவா

Post by ராகவா Fri 8 Feb 2013 - 19:48

குரியன் விவகாரம்: சோனியா அதிருப்தி

புதுடில்லி : சூரிய‌நெல்லி கற்பழிப்பு விவகாரம் தொடர்பாக, ராஜ்யசபா
துணை சபாநாயகர் குரியன் பதவி விலக வேண்டும் என்று கேரளாவில் கம்யூனிஸ்ட்
கட்சியினர் தொடர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், குரியனை சந்திக்க
சோனியா மறுத்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கேரள மாநிலம்
சூரியநெல்லியில், சமீபத்தில் பள்ளி மாணவி ஒருவர், அரசியல்வாதி, அதிகாரிகள்
என பல்வேறு தரப்பட்ட மக்களால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டாள்.
இவ்விவகாரம், கேரளா மட்டுமல்லாது, ஒட்டுமொத்த நாட்டையும் பெரும்
பரபரப்பிற்குள்ளாக்கியது. அந்நேரத்தில், அமைச்சரவையில் குரியன் பதவி
வகித்தார். தற்போது குரியன் ராஜ்யசபா துணை சபாநாயகராக உள்ளார். நாட்டையே
உலுக்கிய இவ்விவகாரத்தில் தொடர்புடைய குரியன், துணை சபாநாயகர் பதவியை
ராஜினாமா செய்ய வேண்டும் என்ப‌தை வலியுறுத்தி, கேரள சட்டசபையில் தொடர
அமளிகள், போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், காங்கிரஸ் தலைவர்
சோனியாவை சந்திக்க குரியன் திட்டமிட்டிருந்தார். குரியனை சந்திக்க, சோனியா
மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 சுட சுட செய்திகள்...ராகவா - Page 2 Blank-தினமலர்





 சுட சுட செய்திகள்...ராகவா - Page 2 Blank
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

 சுட சுட செய்திகள்...ராகவா - Page 2 Empty Re: சுட சுட செய்திகள்...ராகவா

Post by ராகவா Fri 8 Feb 2013 - 19:49

மொபைல் போன் பில் ரூ. 13 கோடி : வாடிக்கையாளர் அதிர்ச்சி

மும்பை: மொபைல்போன் வாடிக்கையாளர்களுக்கு பில் குறித்த விபரங்கள்
குறுந்தகவல்களாக, அவர் சார்ந்த தொலைதொடர்பு நிறுவனங்கள் அனுப்புவது
வழக்கம். ஆனால், சமீபகாலமாக, வாடிக்கையாளர்களுககு பில் தொகை அதிகளவில்
வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், மும்பை தொழிலதிபர் ஒருவருக்கு,
ஜனவரி மா‌த பில், ரூ. 13 கோடி அளவிற்கு வந்துள்ளது அவரை
அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மும்பை காண்டிவ்லி பகுதியை சேர்நதவர்
விஸ்வநாத் ஷெட்டி. அவர் கூறியதாவது, நான் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக
எம்டிஎன்எல் நிறுவனத்தின் டால்பின் மொபைல்போன் சேவை‌யை பயன்படுத்தி
வருகிறேன். கடந்த ஜனவரி மாதத்திற்கு பில் தொகையாக. ரூ. 1318 வந்திருந்தது.
பில் கட்டி விட்டு வீடு திரும்பியிருந்த போது, எனது மொபைலுக்கு
குறுந்தகவல் வந்தது. அதில் தங்களது ஜனவரி மாத பில் தொகை ரூ. 13,18,47,813
என்றும், உடனடியாக பில் தொகையை கட்டவும், இல்லையேல் தொடர்
துண்டிக்கப்படும். பில் பணம் கட்டிவிட்டீர்களானால், இதை புறக்கணித்து
விடவும் என்று தகவல் வந்திருந்தது. இதனால் நான் மிகவும் அதிர்ந்துவிட்டேன்.
இதுகுறித்து, அந்நிறுவனத்தை தொடர்பு கொண்டபோது, இந்த குறுந்தகவல் தலைமை
அலுவலகத்திலிருந்து அனுப்பப்பட்டிருப்பதாகவும், அங்கு சென்று
விசாரிக்குமாறு தெரிவித்தனர். அங்கு விசாரித்ததில், தொழில்நுட்ப குறைபாடு
காரணமாக, தவறுதலாக அந்த குறுந்தகவல் தங்களுக்கு வந்துள்ளதாக தெரிவித்ததாக
அவர் கூறினார்.
 சுட சுட செய்திகள்...ராகவா - Page 2 Blank-தினமலர்





 சுட சுட செய்திகள்...ராகவா - Page 2 Blank
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

 சுட சுட செய்திகள்...ராகவா - Page 2 Empty Re: சுட சுட செய்திகள்...ராகவா

Post by ராகவா Fri 8 Feb 2013 - 19:49

திமுக போராட்டம் : வைகோ‌ கருத்து

புதுடில்லி : இலங்கை அதிபர் ராஜபக்சேவின் இந்திய வருகையை கண்டித்து
திமுக போராட்டம் நடத்தி வருவது, அவர்களை எதிர்த்து அவர்களை போராட்டம்
நடத்திக்கொள்வதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். இலங்கை
அதிபர் ராஜபக்சே, 2 நாட்கள் பயணமாக இந்தியா வந்துள்ளார். அவருக்கு
எதிர்ப்பு தெரிவித்து டில்லியில் பிரதமர் இல்லத்தை முற்றுகையிட முயன்ற வைகோ
உள்ளிட்ட அவரது கட்சியினர் கைது செய்யப்பட்டு பின் விடுதலையாயினர்.
இந்நிலையி்ல், டில்லியில் தனியார் செய்தி சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த
வைகோவிடம், ராஜபக்சேவை கண்டித்து, சென்னையில் திமுக நடத்தும் போராட்டம்
குறித்து கேட்டதற்கு, அவர்களை எதிர்த்து அவர்களே போராட்டம் நடத்தி
வருகிறார்கள், ஏனெனில் அவர்கள் தானே குற்றவாளிகள் என்று வைகோ கூறினார்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்து திமுக வெளியேறினால் அக்கட்சி பற்றி
விமர்சிக்க மாட்டேன் என்று வைகோ கூறியதற்கு, தாங்கள் வெளியேறினால், அவர்
உட்புகலாம் என்று நினைத்திருக்கிறாரோ என்று கருணாநிதி பதிலளித்திருந்தது
குறிப்பிடத்தக்கது.
 சுட சுட செய்திகள்...ராகவா - Page 2 Blank-தினமலர்




 சுட சுட செய்திகள்...ராகவா - Page 2 Blank
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

 சுட சுட செய்திகள்...ராகவா - Page 2 Empty Re: சுட சுட செய்திகள்...ராகவா

Post by ராகவா Fri 8 Feb 2013 - 19:50

டில்லி ஏர்‌போர்ட்டில் ரேடார் பழுது

புதுடில்லி : டில்லியில் இயங்கி வரும் இந்திராகாந்தி சர்வதேச விமான
நிலையத்தில் உள்ள ரேடாரில் பழுது ஏற்பட்டதன் விளைவாக, பல விமான சேவைகள்
தற்காலிகமாக பாதிக்கப்பட்டன. ரேடார் கருவியில் ஏற்பட்டுள்ள பழுது குறித்து
விசாரணை நடைபெற்று வருவதாகவும், இதில் ஏதாவது குளறுபடி நடந்திருக்கலாம்
என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. ரேடாரில் ஏற்பட்ட பழுது
நீக்கப்படும் வரை, மானுவல் முறையிலான சிக்னல்களை கையாண்டு, விமானச் சேவைகள்
நடைபெற்றதாக விமானநிலைய நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது




 சுட சுட செய்திகள்...ராகவா - Page 2 Blank-தினமலர்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

 சுட சுட செய்திகள்...ராகவா - Page 2 Empty Re: சுட சுட செய்திகள்...ராகவா

Post by ராகவா Fri 8 Feb 2013 - 19:54

சென்னையில் "ஹெலிபோர்ட்' அரசு முடிவு : நினைத்த இடத்தில் இனி கிளம்பலாம்
 சுட சுட செய்திகள்...ராகவா - Page 2 Tamil_News_large_644019


புதுடில்லி : ஹெலிகாப்டர்கள் மட்டுமே இறங்கும், புறப்பட்டு செல்லும்,
பிரத்யேக, "ஹெலிபோர்ட்'கள், சென்னை, பெங்களூரு போன்ற முக்கிய நகரங்களில்
விரைவில் துவக்கப்பட உள்ளன. பெரு நகரங்களிலும், முக்கிய நகரங்களிலும்,
போக்குவரத்து நெரிசல் மிக அதிகமாகி வருகிறது. வாகனங்கள் எண்ணிக்கை
அதிகரிப்பு, சாலைகளில் ஆக்கிரமிப்பு போன்ற பல காரணங்களால், குறிப்பிட்ட
நேரத்தில், எங்குமே செல்ல முடியாத நிலை உள்ளது.
இதனால், தொழிலதிபர்கள், வர்த்தக நிறுவனங்களின் தலைவர்கள், ஹெலிகாப்டரை
பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் ஏராளமான சிக்கல்கள் உள்ளன. நினைத்த
இடத்தில், நினைத்த நேரத்தில் ஹெலிகாப்டரை கிளப்பி, நினைத்த இடத்தில் இறங்க
முடியாது. விமான போக்குவரத்து துறையிடம் முன்கூட்டியே அனுமதி பெற்ற
பிறகுதான், ஹெலிகாப்டர்களை கிளப்ப முடியும்.


மேலும், விமானங்கள் வந்திறங்கும், "ஏர்போர்ட்' போல், ஹெலிகாப்டர்களை இறக்க,
"ஹெலிபோர்ட்'கள் கிடையாது. ஆகவே, விமான நிலையங்களிலும், விமான தளங்களிலும்
தான், ஹெலிகாப்டர்கள் இயக்கப்படுகின்றன. ஹெலிகாப்டரில் பயணம் செய்தாலும்,
விமான நிலையங்களில் இருந்து வெளியே வந்து, மீண்டும் போக்குவரத்து நெரிசலில்
சிக்கி கொள்ளும் நிலை தான் காணப்படுகிறது.

இதனால், ஹெலிகாப்டர்கள் மட்டுமே இறங்கும், புறப்படும், பிரத்யேக,
"ஹெலிபோர்ட்'களை, முன்னணி நகரங்களில் துவக்க, மத்திய அரசு முடிவு
செய்துள்ளது. முதற்கட்டமாக, டில்லி, மும்பை, பெங்களூரு போன்ற நகரங்களிலும்,
அதன் பிறகு, சென்னை, கோல்கத்தா, லக்னோ போன்ற நகரங்களிலும்,
"ஹெலிபோர்ட்'கள் துவக்கப்பட உள்ளன.


இது குறித்து, ஹெலிகாப்டர்களை இயக்கும், "பவான் ஹான்ஸ் ஹெலிகாப்டர்ஸ்'
நிறுவனத்தின் செயல் இயக்குனர், சஞ்சீவ் பஹல் கூறும் போது,
""ஹெலிபோர்ட்களுக்கும், குறைந்தபட்சம், 25 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது.
நகர பகுதிகளில் இவ்வளவு இடம் கிடைப்பது சிரமமாக உள்ளதால், திட்டம் தாமதமாகி
வருகிறது. விரைவில் சில நகரங்களில் இத்திட்டம் துவக்கப்படும்,'' என்றார்.





 சுட சுட செய்திகள்...ராகவா - Page 2 Blank




-தினமலர்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

 சுட சுட செய்திகள்...ராகவா - Page 2 Empty Re: சுட சுட செய்திகள்...ராகவா

Post by ராகவா Fri 8 Feb 2013 - 19:55

 சுட சுட செய்திகள்...ராகவா - Page 2 Tamil_News_large_643950
சென்னை நீங்கலாக 31 மாவட்டங்களும் வறட்சி மாவட்டங்கள்: முதல்வர் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் சென்னை நீங்கலாக 31 மாவட்டங்களும் வறட்சி
மாவட்டங்களாக அறிவிக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபையில் கவர்னர் ஆற்றிய உரைக்கு நன்றி தெரிவிக்கும்
தீர்மானம் மீதான விவாதத்திற்கு பதிலளித்து முதல்வர் ஜெயலலிதா இன்று
பேசினார். அப்போது அவர் கூறுகையில், "காவிரி டெல்டா பகுதிகளில் வறட்சியால்
பாதிக்கப்பட்டு, 50 சதவீதத்திற்கு மேலாக மகசூல் பாதிக்கப்பட்ட
விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றிற்கு ரூ. 15 ஆயிரம் இழப்பீடு வழங்கப்படும்.
இதன் மூலம் 1.75 லட்சம் விவசாயிகள் பலன் பெறுவர். தமிழகத்தில் சென்னை
நீங்கலாக மற்ற 31 மாவட்டங்களும் வறட்சி பாதித்த மாவட்டங்களாக
அறிவிக்கப்படும். காவிரி டெல்டா மாவட்டங்களில், தேசிய கிராமப்புற வேலை
உத்தரவாத சட்டத்தின் கீழ் 100 நாட்களாக உள்ள வேலை நாட்கள் 150 நாட்களாக
உயர்த்தப்படும். தமிழகத்தில் வறட்சி பாதித்து விவசாயிகள் யாரும் தற்கொலை
செய்து கொள்ளவில்லை என்றாலும், தற்கொலை செய்து கொண்டவர்களின் வறுமை நிலையை
கருத்தில் கொண்டு அவர்களின் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் நிவாரணம்
வழங்கப்படும். மேலும், விவசாயிகளுக்கு நிலவரியும் ரத்து செய்யப்படும்.
மாநிலங்களுடனான நதிநீர் பிரச்னைகளில் தமிழகத்தின் உரிமை பாதுகாக்கப்படும்.
ரூ. 181 கோடி செலவில் 15 ஆயிரம் பண்ணைக்குட்டைகள் அமைக்கப்படும்.
பொதுப்பணித்துறை மூலம் ஏரிகள், குளங்கள் தூர்வாரப்படும். கால்நடைகளுக்கு
பசுந்தீவனம் மற்றும் அடர் தீவனங்களுக்காக ரூ. 50 கோடி ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளது. டெல்டா பகுதிகளில் குடிநீர் தேவைக்காக ரூ. 37.28 கோடி
ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது". இவ்வாறு முதல்வர் அறிவித்துள்ளார்.





 சுட சுட செய்திகள்...ராகவா - Page 2 Blank




-தினமலர்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

 சுட சுட செய்திகள்...ராகவா - Page 2 Empty Re: சுட சுட செய்திகள்...ராகவா

Post by ராகவா Fri 8 Feb 2013 - 19:56

சட்டசபையில் தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள் கைகலப்பு: மைக்கேல் ராயப்பனுக்கு விழுந்தது அடி சுட சுட செய்திகள்...ராகவா - Page 2 Tamil_News_large_643947

சென்னை: முதல்வர் ஜெயலலிதாவை புகழ்ந்து பேசிய திட்டக்குடி தே.மு.தி.க.,
எம்.எல்.ஏ., தமிழழகன் மற்றும் இதர எம்.எல்.ஏ.,க்களுக்கு இடையே தமிழக
சட்டசபையில் கைகலப்பு ஏற்பட்டது. இதில் ராதாபுரம் எம்.எல்.ஏ., மைக்கேல்
ராயப்பனுக்கு அடி விழுந்தது.

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் தற்போது நடந்து வருகிறது.
கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று, கவர்னர் உரை மீதான விவாதத்துக்கு நன்றி
தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதல்வர் ஜெயலலிதா பதிலுரை
வழங்கவிருந்தார். இந்நிலையில், இன்று சட்டசபையில் பேசிய திட்டக்குடி
தே.மு.தி.க., எம்.எல்.ஏ., தமிழழகன், தனது தொகுதி பிரச்னைகள் தொடர்பான
முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து முறையிட்டதாகவும், அவற்றை முறையாக
பரிசீலித்த முதல்வர், முடிந்தவரை அவற்றை நிறைவேற்ற உறுதியளித்ததாகவும்,
அதன்பின்னர் தனது தொகுதியில் வளர்ச்சிப்பணிகள் சிறப்பாக நடைபெறுவதாக
தெரிவித்தார். மேலும், தன்னைப் போலவே, மற்ற தே.மு.தி.க., எம்.எல்.ஏ., களும்
முதல்வரை சந்தித்து, தங்களது தொகுதி பிரச்னைகள் குறித்து முறையிட வேண்டும்
என்று தெரிவித்தார். தமிழழகனுக்கு ஆதரவாக ராதாபுரம் தே.மு.தி.க.,
எம்.எல்.ஏ., மைக்கேல் ராயப்பனும் பேசினார்.

இதனால் ஆத்திரமடைந்த மற்ற தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,க்கள் தமிழழகனை தாக்க
முற்பட்டனர். இதைப் பார்த்த மைக்கேல் ராயப்பன், தமிழழகனை யாரும் தாக்காமல்
தடுக்க முயன்றார். இதனால் அவரை தே.மு.தி.க., எம்.எல்.ஏ., சரமாரியாக
தாக்கினர். இதில் காயமடைந்த ராயப்பன் உடனடியாக மருத்துவனைக்கு கொண்டு
செல்லப்பட்டார். மைக்கேல் ராயப்பன் திருப்பித் தாக்கியதில், அனகை முருகேசன்
என்ற தே.மு.தி.க., எம்.எல்.ஏ.,வுக்கு சட்டை கிழிந்தது. இந்த சம்பவம் நடந்த
போது, முதல்வர் ஜெயலலிதா அவையில் இருந்தார்.
-தினமலர்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

 சுட சுட செய்திகள்...ராகவா - Page 2 Empty Re: சுட சுட செய்திகள்...ராகவா

Post by ராகவா Fri 8 Feb 2013 - 19:58

தமிழ், தமிழர்களை அழிக்க கங்கணம் கட்டி வருகிறார் ராஜபக்சே: கருணாநிதி
 சுட சுட செய்திகள்...ராகவா - Page 2 Tamil_News_large_643937

சென்னை: தமிழ், தமிழர்களை அழிக்க இலங்கை அதிபர் ராஜபக்சே கங்கணம் கட்டி
செயல்படுவதாக, சென்னையில் நடந்த கறுப்புச்சட்டை போராட்டத்தில் தி.மு.க.,
தலைவர் கருணாநிதி தெரிவித்தார்.

இலங்கை அதிபர் ராஜபக்சே, 2 நாள் பயணமாக இந்தியா வருகிறார். பீகார்
மாநிலம் புத்தகயா மற்றும் திருப்பதி ஆகிய இடங்களில் அவர் சாமி தரிசனம்
செய்கிறார். தனிப்பட்ட முறையிலான பயணம் என்பதாலும், ராஜபக்சேவின் வருகைக்கு
எதிர்ப்பு தெரிவித்து, தி.மு.க., ம.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகளும், தமிழ்
அமைப்புகளும் போராட்டம் அறிவித்திருப்பதாலும் அவரது பயண விபரம் முறையாக
வெளியிடப்படவில்லை. முன்னதாக, ராஜபக்சே டில்லிக்கு வந்து அங்கிருந்து புத்த
கயா செல்வதாக இருந்தது. ஆனால் போராட்டங்கள் காரணமாக அந்த பிளான்
மாற்றப்பட்டு, ஒடிசா மாநிலம் கட்டாக் சென்று, அங்கிருந்து புத்த கயா
செல்கிறார் ராஜபக்சே. இந்நிலையில், இன்று மாலை 4.30 மணியளவில், ஆந்திர
மாநிலம் ரேணிகுண்டா விமான நிலையம் வரும் அவர், அங்கிருந்து திருப்பதி
வழியாக சாலை மார்க்கமாக திருமலை செல்கிறார். இன்றிரவு திருமலையில் தங்கும்
ராஜபக்சே, நாளை காலை சுப்ரபாத சேவையில் கலந்து கொள்கிறார். பின்னர், நாளை
காலை 9.30 மணியளவில் திருப்பதியிலிருந்து கிளம்புகிறார்.

தி.மு.க., போராட்டம்: ராஜபக்சேவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து,
சென்னையில் தி.மு.க., வினர் அக்கட்சியின் தலைவர் கருணாநிதி தலைமையில்
கறுப்புச் சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில்
கருணாநிதி பேசுகையில், இலங்கை தமிழர்களை பூண்டோடு அழிக்க விரதம் பூண்டுள்ள
இலங்கை அதிபர் ராஜபக்சே, இந்தியா வருவதைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம்
நடத்தப்பட்டு வருகிறது. இலங்கையில் தமிழர்களின் கலை, கலாச்சாரம்,
இலக்கியம், பண்பாடு, மொழி ஆகியவை கங்கணம் கட்டிக்கொண்டு அழிக்கப்பட்டு
வருகிறது. தமிழ் மொழி அடையாளம் தெரியாமல் சிதைக்கப்படுகிறது. ராஜபக்சே அரசு
வெறியாட்டம் போட்டு வருகிறது. இலங்கை தமிழர் பகுதி கிராமங்களில் உள்ள
தமிழ் பெயர்கள், சிங்களப் பெயர்களாக மாற்றப்பட்டு வருகின்றன என்று
பேசினார். இதே போல், டில்லியில் ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ தலைமையில்
அக்கட்சியினர் ஜந்தர்மந்தர் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்திய தலைவர்களை சந்திக்க மாட்டார்: இலங்கை அதிபர் ராஜபக்சேவின் பயணம்,
தனிப்பட்ட முறையிலானது என்பதால் அவர் இந்திய தலைவர்களை சந்திக்க மாட்டார்
என இலங்கை அரசு தெரிவித்துள்ளது. புத்தகயா மற்றும் திருப்பதி ஆகிய
இடங்களுக்கு மட்டுமே அவர் செல்வார் என்றும், தமிழ் அமைப்புகளின் போராட்டம்
காரணமாக அதிபர் ராஜபக்சேவிற்கு இந்தியா பாதுகாப்பளிக்க வேண்டும் என்றும்
இலங்கை தெரிவித்துள்ளது. முன்னதாக, ராஜபக்சே டில்லி வந்து, விரைவில்
அமெரிக்கா சார்பில் இலங்கைக்கு எதிராக ஐ.நா., சபையில் கொண்டுவரப்படவுள்ள
தீர்மானத்திற்கு ஆதரவளிக்க வேண்டாம் என கேட்டுக்கொள்வார் என கூறப்பட்டது.
ஆனால் தற்போது அந்த பிளான் மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

-தினமலர்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

 சுட சுட செய்திகள்...ராகவா - Page 2 Empty Re: சுட சுட செய்திகள்...ராகவா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum