Latest topics
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)by rammalar Today at 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Today at 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Today at 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Today at 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Today at 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Today at 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Today at 4:51
» பல்சுவை - 4
by rammalar Yesterday at 19:25
» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Yesterday at 15:41
» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Yesterday at 15:27
» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Yesterday at 13:17
» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Yesterday at 12:57
» செய்திகள் -பல்சுவை
by rammalar Yesterday at 10:35
» பீட்ரூட் ரசம்
by rammalar Yesterday at 10:07
» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Yesterday at 10:00
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Yesterday at 4:22
» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37
» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53
» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40
» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35
» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49
» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Thu 30 May 2024 - 8:50
» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Thu 30 May 2024 - 8:41
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Thu 30 May 2024 - 5:41
» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Thu 30 May 2024 - 5:37
» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Thu 30 May 2024 - 4:12
» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Thu 30 May 2024 - 4:01
» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed 29 May 2024 - 15:43
» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed 29 May 2024 - 15:41
» மோர்க்களி
by rammalar Wed 29 May 2024 - 15:40
» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Wed 29 May 2024 - 15:30
தமிழக காங்கிரஸ் மீண்டும் உடைகிறது? தமிழ் மாநில காங்கிரஸ் உதயம்?
2 posters
Page 1 of 1
தமிழக காங்கிரஸ் மீண்டும் உடைகிறது? தமிழ் மாநில காங்கிரஸ் உதயம்?
சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சி மீண்டும் ஒரு பிளவை சந்திக்கும் நிலையை உருவாக்கி வைத்திருக்கிறார் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவரான ராகுல் காந்தி. மத்திய அமைச்சர் ஜி.கே. வாசனை முழுமையாக ராகுல் காந்தி ஓரம் கட்டுவதால் மீண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை உருவாக்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்து அரை நூற்றாண்டுகாலத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் திமுக அல்லது அதிமுகவுடன் கூட்டணி வைத்து அந்தக் கட்சி உயிர் பிழைத்துக் கொண்டிருக்கிறது. கணிசமான லோக்சபா தொகுதிகளை பெற்றுக் கொண்டு முக்கிய கட்சியாக வெளிப்படுத்தி வருகிறது.
இந்த அரை நூற்றாண்டு காலத்தில் காங்கிரஸ் கட்சி பலமுறை உடைந்தும் போய் இருக்கிறது. பின்னர் பிரிந்து போனவர்கள் இணைந்தும் இருக்கின்றனர். இதில் தற்போதைய மத்திய அமைச்சரான ஜி.கே.வாசனின் தந்தை ஜி.கே. மூப்பனாரின் பிரிவுதான் காங்கிரஸை கதிகலங்க வைத்தது. 1996-ம் ஆண்டு அதிமுக- காங்கிரஸ் இடையே சட்டசபை தேர்தலில் கூட்டணி வைத்ததை எதிர்த்து உதயமானது ஜி.கே. மூப்பனார் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ்.
1996-ல் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, திமுகவுடன் கூட்டணி வைத்து 39 இடங்களையும் கைப்பற்றி சட்டசபையில் எதிர்க்கட்சியானது. தொடர்ந்தும் திமுகவுடன் கூட்டணி வைத்தது. ஆனால் 2001-ல் அதிமுகவுடன் தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி வைத்து 23 இடங்களில் வென்றது. பின்னர் 2001- ல் மூப்பனார் மறை கட்சித் தலைவராக ஜி.கே.வாசன் பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்ற சிறிதுகாலத்திலேயே அப்படியே தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தாய்க் கட்சியான காங்கிரஸுடன் ஐக்கியமாகிவிட்டது. காலச் சக்கரம் இப்போது மீண்டும் சுழலத் தொடங்கியுள்ளது!
தற்போது மத்திய அமைச்சராக இருக்கும் ஜி.கே.வாசன் செயல்பாடுகள் மீது காங்கிரஸ் துணைத் தலைவராக இருக்கும் ராகுல் காந்தி கடுமையான அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதன் உச்சகட்டமாகத்தான் இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ஜி.கே.வாசனின் ஆதரவாளரான யுவராஜாவை நீக்கச் சொல்லியிருக்கிறார். ஆனால் ராகுலுடன் மல்லுக் கட்டிய ஜி.கே.வாசன், யுவராஜா மீது சொல்லப்படும் புகார்களுக்கு போதுமானா ஆதாரம் இல்லை.. அப்படி இருந்தால் நானே ராஜினாமா செய்ய சொல்வேன் என்று கூறியிருக்கிறார். இதில் ராகுல் கடுப்பாகிப் போய்த்தான் ஒற்றை வரி அறிக்கையில் யுவராஜா சஸ்பென்ட் என்று அறிவித்திருக்கின்றனர்.
ஒரு மத்திய அமைச்சராக இருக்கும் தாம் சொல்லியும் ராகுல் காந்தி கேட்கவில்லை என்ற கோபம் ஜி.கே.வாசனுக்கு இருந்து வந்தது. அத்துடன் மட்டுமின்றி மற்றவர்களைப் போல் தாம் தனிநபர் அல்ல... தனிக் கட்சியோடு காங்கிரஸுக்கு வந்தவன் என்றும் டெல்லியில் எகிறிய கையோடு சென்னை வந்தார் வாசன். இன்று காலை சென்னையில் உள்ள ஜி.கே. வாசனின் வீடு முன்பாக அவரது ஆதரவாளர்கள் ஒன்று திரண்டனர்.
அப்போது உருவாக்குவோம் உருவாக்குவோம்! தமிழ் மாநில காங்கிரஸை மீண்டும் உருவாக்குவோம்! என்று ஜி.கே. வாசனின் ஆதரவாளர்கள் முழக்கமிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினர். ஜி.கே.வாசனும் தமக்கு எதிராக நடக்கும் உட்கட்சி சதிகளைப் பற்றி தமது ஆதரவாளர்களிடம் விவரித்திருக்கிறார். மீண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை உருவாக்குவது பற்றி அவரது ஆதரவாளர்கள் பலரும் வலியுறுத்தி இருக்கின்றனர். ஆனால் ஜி.கே.வாசன் தமது கருத்து எதையும் தெரிவிக்காமல் பொறுமையாக இருக்குமாறு கூறியிருக்கிறார்.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி மீது கடுமையான அதிருப்தி அலை இருக்கிறது. ஆனால் ஜி.கே.வாசன் தொடர்ந்தும் இலங்கைத் தமிழருக்கு ஆதரவாகவும் மகிந்த ராஜபக்சேவுக்கு எதிராகவும் பேசி வருகிறார். மத்திய அமைச்சராக இருந்தும் கூட ராஜபக்சேவின் வருகை விஷயத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். தற்போது ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்த முடியாது என்று அறிவித்த தமிழக முதல்வரின் அறிவிப்பை வரவேற்றும் இருக்கிறார். இதைச் சுட்டிக்காட்டி பேசும் அவரது ஆதரவாளர்கள், காங்கிரஸ் கட்சியிலிருந்து தேர்தலுக்கு முன்பாகவே கழன்று கொண்டால் நல்லதாக இருக்கும்.. தனிக் கட்சி தொடங்கிவிடலாம் என்றும் வலியுறுத்தியிருக்கின்றனர். ஆனாலும் பொறுமையாக இருங்கள் என்று மட்டுமே ஜி.கே.வாசன் பதிலாகக் கூறி வருகிறார்.
ஏற்கெனவே காங்கிரஸ் கட்சியை திமுக கழற்றிவிட இருக்கும் நிலையில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியே இரண்டாக உடைந்துவிடும் நிலை இருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தட்ஸ்தமிழ்
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்து அரை நூற்றாண்டுகாலத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் திமுக அல்லது அதிமுகவுடன் கூட்டணி வைத்து அந்தக் கட்சி உயிர் பிழைத்துக் கொண்டிருக்கிறது. கணிசமான லோக்சபா தொகுதிகளை பெற்றுக் கொண்டு முக்கிய கட்சியாக வெளிப்படுத்தி வருகிறது.
இந்த அரை நூற்றாண்டு காலத்தில் காங்கிரஸ் கட்சி பலமுறை உடைந்தும் போய் இருக்கிறது. பின்னர் பிரிந்து போனவர்கள் இணைந்தும் இருக்கின்றனர். இதில் தற்போதைய மத்திய அமைச்சரான ஜி.கே.வாசனின் தந்தை ஜி.கே. மூப்பனாரின் பிரிவுதான் காங்கிரஸை கதிகலங்க வைத்தது. 1996-ம் ஆண்டு அதிமுக- காங்கிரஸ் இடையே சட்டசபை தேர்தலில் கூட்டணி வைத்ததை எதிர்த்து உதயமானது ஜி.கே. மூப்பனார் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ்.
1996-ல் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, திமுகவுடன் கூட்டணி வைத்து 39 இடங்களையும் கைப்பற்றி சட்டசபையில் எதிர்க்கட்சியானது. தொடர்ந்தும் திமுகவுடன் கூட்டணி வைத்தது. ஆனால் 2001-ல் அதிமுகவுடன் தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி வைத்து 23 இடங்களில் வென்றது. பின்னர் 2001- ல் மூப்பனார் மறை கட்சித் தலைவராக ஜி.கே.வாசன் பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்ற சிறிதுகாலத்திலேயே அப்படியே தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தாய்க் கட்சியான காங்கிரஸுடன் ஐக்கியமாகிவிட்டது. காலச் சக்கரம் இப்போது மீண்டும் சுழலத் தொடங்கியுள்ளது!
தற்போது மத்திய அமைச்சராக இருக்கும் ஜி.கே.வாசன் செயல்பாடுகள் மீது காங்கிரஸ் துணைத் தலைவராக இருக்கும் ராகுல் காந்தி கடுமையான அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதன் உச்சகட்டமாகத்தான் இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ஜி.கே.வாசனின் ஆதரவாளரான யுவராஜாவை நீக்கச் சொல்லியிருக்கிறார். ஆனால் ராகுலுடன் மல்லுக் கட்டிய ஜி.கே.வாசன், யுவராஜா மீது சொல்லப்படும் புகார்களுக்கு போதுமானா ஆதாரம் இல்லை.. அப்படி இருந்தால் நானே ராஜினாமா செய்ய சொல்வேன் என்று கூறியிருக்கிறார். இதில் ராகுல் கடுப்பாகிப் போய்த்தான் ஒற்றை வரி அறிக்கையில் யுவராஜா சஸ்பென்ட் என்று அறிவித்திருக்கின்றனர்.
ஒரு மத்திய அமைச்சராக இருக்கும் தாம் சொல்லியும் ராகுல் காந்தி கேட்கவில்லை என்ற கோபம் ஜி.கே.வாசனுக்கு இருந்து வந்தது. அத்துடன் மட்டுமின்றி மற்றவர்களைப் போல் தாம் தனிநபர் அல்ல... தனிக் கட்சியோடு காங்கிரஸுக்கு வந்தவன் என்றும் டெல்லியில் எகிறிய கையோடு சென்னை வந்தார் வாசன். இன்று காலை சென்னையில் உள்ள ஜி.கே. வாசனின் வீடு முன்பாக அவரது ஆதரவாளர்கள் ஒன்று திரண்டனர்.
அப்போது உருவாக்குவோம் உருவாக்குவோம்! தமிழ் மாநில காங்கிரஸை மீண்டும் உருவாக்குவோம்! என்று ஜி.கே. வாசனின் ஆதரவாளர்கள் முழக்கமிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினர். ஜி.கே.வாசனும் தமக்கு எதிராக நடக்கும் உட்கட்சி சதிகளைப் பற்றி தமது ஆதரவாளர்களிடம் விவரித்திருக்கிறார். மீண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை உருவாக்குவது பற்றி அவரது ஆதரவாளர்கள் பலரும் வலியுறுத்தி இருக்கின்றனர். ஆனால் ஜி.கே.வாசன் தமது கருத்து எதையும் தெரிவிக்காமல் பொறுமையாக இருக்குமாறு கூறியிருக்கிறார்.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி மீது கடுமையான அதிருப்தி அலை இருக்கிறது. ஆனால் ஜி.கே.வாசன் தொடர்ந்தும் இலங்கைத் தமிழருக்கு ஆதரவாகவும் மகிந்த ராஜபக்சேவுக்கு எதிராகவும் பேசி வருகிறார். மத்திய அமைச்சராக இருந்தும் கூட ராஜபக்சேவின் வருகை விஷயத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். தற்போது ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்த முடியாது என்று அறிவித்த தமிழக முதல்வரின் அறிவிப்பை வரவேற்றும் இருக்கிறார். இதைச் சுட்டிக்காட்டி பேசும் அவரது ஆதரவாளர்கள், காங்கிரஸ் கட்சியிலிருந்து தேர்தலுக்கு முன்பாகவே கழன்று கொண்டால் நல்லதாக இருக்கும்.. தனிக் கட்சி தொடங்கிவிடலாம் என்றும் வலியுறுத்தியிருக்கின்றனர். ஆனாலும் பொறுமையாக இருங்கள் என்று மட்டுமே ஜி.கே.வாசன் பதிலாகக் கூறி வருகிறார்.
ஏற்கெனவே காங்கிரஸ் கட்சியை திமுக கழற்றிவிட இருக்கும் நிலையில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியே இரண்டாக உடைந்துவிடும் நிலை இருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தட்ஸ்தமிழ்
Re: தமிழக காங்கிரஸ் மீண்டும் உடைகிறது? தமிழ் மாநில காங்கிரஸ் உதயம்?
உங்க இஷ்டம் போல செய்யுங்கடா பசங்களா! ஓட்டு போட நாங்க இருக்கோம் :)
தம்பி- புதுமுகம்
- பதிவுகள்:- : 268
மதிப்பீடுகள் : 35
Similar topics
» மாநில அதிகாரங்களில் காங்கிரஸ், பா.ஜ அணுகுமுறையில் மாற்றம் வருமா?
» மாநில நெடுஞ்சாலைத்துறை இணையதளத்தில் இருந்து பெரியார் ஈ.வெ.ரா. சாலை என்ற பெயரை கைவிட்ட தமிழக அரசு
» இந்திய, குஜராத் மாநில கொலை தொடர்பில் இலங்கை தமிழ் இளைஞர் கைது
» மக்கள் நலப் பணியாளர்கள் மீண்டும் பணி நீக்கம்: தமிழக அரசு அதிரடி
» பேரறிவாளன், முருகன், சாந்தனை காப்பாற்றுங்கள்: ஜெ.வுக்கு தமிழ் மாநில முஸ்லீம் லீக் கோரிக்கை !
» மாநில நெடுஞ்சாலைத்துறை இணையதளத்தில் இருந்து பெரியார் ஈ.வெ.ரா. சாலை என்ற பெயரை கைவிட்ட தமிழக அரசு
» இந்திய, குஜராத் மாநில கொலை தொடர்பில் இலங்கை தமிழ் இளைஞர் கைது
» மக்கள் நலப் பணியாளர்கள் மீண்டும் பணி நீக்கம்: தமிழக அரசு அதிரடி
» பேரறிவாளன், முருகன், சாந்தனை காப்பாற்றுங்கள்: ஜெ.வுக்கு தமிழ் மாநில முஸ்லீம் லீக் கோரிக்கை !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|