சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30

» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07

» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38

» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38

சிலந்தி வலையில் பொறியியல் கலை  Khan11

சிலந்தி வலையில் பொறியியல் கலை

2 posters

Go down

சிலந்தி வலையில் பொறியியல் கலை  Empty சிலந்தி வலையில் பொறியியல் கலை

Post by *சம்ஸ் Thu 14 Mar 2013 - 10:28

சிலந்தி வலையில் பொறியியல் கலை  313367_553810657974443_346785550_n
நீங்கள் எப்போதாவது சிலந்தி வலையின் வடிவமைப்பை கவனித்திருக்கிறீர்களா?
சிலந்திகள் தமது வலைகளை பின்னுவதற்குரிய நூலை தாங்களே உருவாக்குகின்றன
என்பதையும், அவைகள் உருவாக்கும் இந்த நூல்கள் வியக்கத்தக்க பல தன்மைகளை
கொண்டிருக்கின்றன என்பதும் உங்களுக்குத் தெரியுமா? அல்லது சிலந்திகள் தங்களது
வலைகளை பின்னுவதற்கு பயன்படுத்தும் தொழில் நுட்பமும், இன்றைய கட்டிடக் கலை
பொறியாளர்கள் பயன்படுத்தும் தொழிற் நுட்பமும் ஒன்றுதான் என்பதையாவது
கேள்விபட்டிருக்கிறீர்களா?

சிலந்தி, தனது வலையை பின்னுவதற்கு இரண்டு எதிரெதிர் முனைகள்
தேவைப்படுகின்றன. பொதுவாக இரண்டு சுவர்கள் சந்திக்கும் மூலையிலோ, அல்லது
இரண்டு மரக்கிளைகளுக்கு இடையிலோ சிலந்தி தனது வலையை உருவாக்குகிறது.
இருப்பினும், சில வகை சிலந்திகள் ஒரு தனிப்பட்ட மரக்கிளையை மாத்திரம் பயன்படுத்தி
தங்களது வலையை அமைத்துக் கொள்ளும் திறன் படைத்தவை. சிலந்திகள் எப்படி
இத்தனை நேர்த்தியான வலைகளை உருவாக்குகின்றன? இப்போது நாம் இங்கு
அளிக்கப் போகும் விளக்கத்தை நன்றாக கவனியுங்கள்.

சிலந்தி முதலில் வளையக்கூடிய விதத்தில் உள்ள ஒரு மரக்கிளையை
தேர்ந்தெடுக்கிறது. தான் தேர்ந்தெடுத்த மரக்கிளையின் முனையில் தனது உடலிருந்து
உற்பத்திசெய்யும் நூலின் ஒரு முனையை கெட்டியாக கட்டுகிறது. தொடர்ந்து தனது
உடலிலிருந்து நூலை உற்பத்தி செய்யும் சிலந்தி, மரக்கிளையின் அடிப்பகுதி நோக்கி
ஊர்ந்து செல்கிறது. ஒரு குறிப்பிட்ட தூரம் வந்ததும், தனது உடலிலிருந்து
உற்பத்தியாகும் நூலை நிறுத்துகிறது. மரக்கிளையில் கட்டியிருக்கும் நூலை, மரக்கிளை
வளையும் வரை இழுத்து அரை வட்ட வடிவத்திற்கு கொண்டு வருகிறது. நூலின்
மறுமுனையை வளைய வடிவத்தில் கட்டுகிறது. உருவாக்கப்பட்ட இந்த
வளையத்திற்குள் சிலந்தி தனது வலையை பின்ன ஆரம்பிக்கிறது.

இரண்டு மீட்டர் நீளமுள்ள நூலை, இரண்டு மீட்டர் இடைவெளிகளில் அமைந்துள்ள
இரண்டு சுவர்களுக்கு மத்தியில் கட்டவேண்டும் எனில் நீங்கள் என்ன செய்வீர்கள்
என்பதை சிந்தித்துப் பாருங்கள். இதை எவ்வாறு செய்து முடிப்பீர்கள் என்பதை நீங்கள்
சிந்திக்கும்போதே, சிலந்தி பூச்சி இந்த பிரச்னையை எப்படி முடிக்கிறது என்பதை
அறிந்து கொள்வோம்.

சிலவேளைகளில் அதிக இடைவெளியுள்ள இரண்டு மரக்கிளைகளுக்கு மத்தியில் சிலந்தி
தனது வலையை பின்ன ஆரம்பிக்கிறது. சிலந்தி பின்னப்போகும் வலை பெரியதாகவும்,
அது உணவாக உட்கொள்ளும் பூச்சிகளை பிடிக்கும் வண்ணம் வலுவானதாகவும்
இருக்கும். வலை பெரியதாக இருந்து, வலுவானதாக இல்லையெனில், வலையில்
இறுகும் தன்மை குறைவாகவே இருக்கும். இதன் காரணமாக சிலந்திகள் தங்களது
இறையைப் பிடிக்க முடியாமல் போகலாம். இந்த பிரச்னைக்கு சிலந்திகளுக்கு ஒரு தீர்வு
தேவை. தாங்கள் பின்னிய வலையின் இறுகும் தன்மை குறைவாகவே இருக்கும்
எனும்போது, சிலந்திகள் வேறொரு வலை பின்னும் என நீங்கள் எண்ணியிருக்கக் கூடும்.
ஆனால் அவைகள் வேறொரு வலை பின்னுவதற்கு பதிலாக, நாமெல்லாம் அதிசயிக்கும்
வகையில் மாற்றுவழி ஒன்றை நடைமுறை படுத்துகின்றன. அவைகளின் உடலிருந்து
உருவாகும் நூலின் ஒருமுனையை பின்னப்பட்ட வலையின் மத்தியில் கட்டுகிறது.

மற்றொரு முனையை தரையில் உள்ள ஒரு சிறிய கல்லில் கட்டி வைக்கிறது. மீண்டும்
வலைக்கு வரும் சிலந்தி, வலையின் மத்தியில் கட்டியிருக்கும் நூலை இழுத்து, தரையில்
உள்ள கல்லை மேல் நோக்கி உயர்த்துகிறது. மேல்நோக்கி உயர்த்தப்பட்ட கல்
வலையின் மத்தியில் தொங்கிக் கொண்டிருக்கும் வகையில் நூலை உயர்த்தி, வலையின்
மற்றொரு பகுதியில் இழுக்கப்பட்ட நூலை கட்டிவைக்கிறது. தொங்கிக் கொண்டிருக்கும்
கல்லின் கனத்தால், சிலந்தி வலை கீழ்நோக்கி இழுபடுவதோடு, வலையின் வலிமையும்,
இறுகும் தன்மையும் தேவையான அளவு அதிகரிக்கிறது.

சிலந்தியின் இந்த பிரச்னைக்கு நீங்களே கூட மேற்கண்ட தீர்வை சிந்தித்திருக்க
மாட்டீர்கள். கட்டிடக்கலை அறிவு இல்லாத மற்றவர்களும் கூட சிலந்தியின் பிரச்னைக்கு
மேலே குறிப்பிடப்பட்டதை தீர்வாக சிந்தித்திருக்க மாட்டார்கள். இருப்பினும் ஐந்தறிவு
கொண்ட சிலந்தி மேற்குறிப்பிட்ட தொழிற்நுட்பத்தை பயன்படுத்துகிறது. ஐந்தறிவு
கொண்ட சிலந்தி எப்படி இந்த வியக்கத்தக்கத் தொழிற் நுட்பம் அறிந்தது? தான் அறிந்த
தொழிற்நுட்பத்தை தனக்காக பயன்படுத்தும் ஆற்றலை எப்படி பெற்றது? அது
மட்டுமில்லாமல் இவ்வுலகில் வாழும் ஒவ்வொரு சிலந்தியும் பல்லாயிரம் வருடங்களாக
தனது வலையை பின்னுவதோடு, இந்த தொழிற்நுட்பத்தையும் பயன்படுத்துகிறதே: இது
எப்படி?

தொழிற்நுட்பங்களை பயன்படுத்தும் திறன் சிலந்திகளுக்கு இல்லை என்பதால்,
தொழிற்நுட்பங்களை பயன்படுத்துங்கள் என சிலந்திகளுக்கு உணர்வூட்ட 'சர்வ
வல்லமை படைத்த ஒரு சக்தி' ஒன்று அவசியமாகிறது. 'சர்வ வல்லமை படைத்த அந்த
சக்தியே' அல்லாஹ். உலகில் வாழும் உயிரினங்களை அனைத்தையும் படைத்த
அல்லாஹ்வே, சிலந்திகளுக்கு சிறந்த தொழிற்நுட்பங்களை பயன்படுத்தும் அறிவை
வழங்கினான். அவனே அனைத்தும் அறிந்தவன். ஏனைய படைப்புகளைப் போன்று,
சிலந்தி பூச்சிகளும் வல்ல அல்லாஹ்வின் படைப்பாற்றலை உலகிற்கு எடுத்துக்
காட்டுகின்றன.

அல்லாஹ் அருள்மறை குர்ஆனில் குறிப்பிடுகிறான்:
'..இறைவன் (தன்) ஞானத்தால் எல்லாப் பொருட்களையும் சூழ்ந்திருக்கின்றான்; இதை நீங்கள் சிந்திக்க வேண்டாமா?'.. (அத்தியாயம் 6 ஸூரத்துல் அன்ஆம் - 80வது வசனம்)


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சிலந்தி வலையில் பொறியியல் கலை  Empty Re: சிலந்தி வலையில் பொறியியல் கலை

Post by ansar hayath Thu 14 Mar 2013 - 15:53

'..இறைவன் (தன்) ஞானத்தால் எல்லாப் பொருட்களையும் சூழ்ந்திருக்கின்றான்; இதை நீங்கள் சிந்திக்க வேண்டாமா?'.. @.
பகிர்வுக்கு நன்றி நன்றி :!+:

ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum