சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17

» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28

» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25

» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24

» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23

» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19

» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18

» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16

» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12

» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06

» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59

» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57

» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58

» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54

» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35

» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32

» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50

» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42

» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14

» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36

» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

இலங்கையில் மனித உரிமை மீறல் பற்றி சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் Khan11

இலங்கையில் மனித உரிமை மீறல் பற்றி சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும்

Go down

இலங்கையில் மனித உரிமை மீறல் பற்றி சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் Empty இலங்கையில் மனித உரிமை மீறல் பற்றி சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும்

Post by *சம்ஸ் Wed 20 Mar 2013 - 10:17

இலங்கையில் மனித உரிமை மீறல் பற்றி சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் C5d324c0-870c-4e1d-89e9-d1da8ddd261b_S_secvpf
இலங்கையில் மனித உரிமை மீறல் பற்றி சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும்: காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டத்தில் சோனியா பேச்சு


புதுடெல்லி, மார்ச் 20-

இலங்கை பிரச்சினையில், மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதோடு, கூட்டணியிலிருந்தும் விலகுவதாக தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று சென்னையில் அறிவிப்பு வெளியிட்டார்.

இதைத்தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் நிருபர்கள் கருத்து கேட்டபோது அவர், 'இதுபற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை' என கூறினார்.

அதைத்தொடர்ந்து டெல்லியில் பாராளுமன்ற காங்கிரஸ் கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் எம்.பி.க்கள் மத்தியில், சோனியா காந்தி பேசினார்.

அப்போது அவர் இலங்கை பிரச்சினை பற்றி கூறியதாவது:-

இலங்கையில் தமிழர்கள் அனுபவித்து வருகிற துயரங்கள், நமது இதயத்தை தொடுகின்றன. இலங்கை தமிழர்கள் (சிங்கள மக்களுக்கு நிகராக) அனைத்து உரிமைகளையும், சம அளவிலான சட்ட பாதுகாப்பையும் பெற வேண்டும் என்பதற்கு நாம் அளித்து வந்த ஆதரவில் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி காலத்திலிருந்து எந்த தடுமாற்றமும் இல்லை. அவர்களுக்கு சட்டப்பூர்வமான அரசியல் உரிமைகள் மறுக்கப்படுவது தொடர்கதையாகி வரும்விதம் நம்மை மிகுந்த வேதனைக்கு ஆளாக்கி இருக்கிறது.

அப்பாவி மக்கள் மீதும், குழந்தைகள் மீதும் சொல்ல இயலாதபடிக்கு வன்கொடுமைகள் இழைக்கப்பட்டுள்ளதாக, குறிப்பாக 2009-ல் உள்நாட்டுப்போர் உச்சக்கட்டம் அடைந்தபோது இழைக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல்கள் நம்மை வருத்தம் அடையச் செய்துள்ளன. அதனால்தான், இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக சுதந்திரமான, நம்பத்தகுந்த விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோருகிறோம்.

இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்துச்செல்வதும், சுடுவதும் மிகுந்த கவலை அளிக்கிறது. தினந்தோறும் நடந்து வருகிற இந்த வன்முறைக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என்பது தவிர்க்க இயலாதது.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து நாட்டின் பல்வேறு பிரச்சினைகள் பற்றி சோனியா காந்தி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கற்பழிப்பு தடுப்பு சட்டம் தொடர்பாக ஒருமித்த கருத்து எட்டப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பான திருத்தங்கள் பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் வரும் 22-ந்தேதிக்குள் நிறைவேற நாம் தேவையான முயற்சிகளை எடுக்க வேண்டும்.

இந்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டசபை தேர்தல்களை, அடுத்த ஆண்டு நடக்கவுள்ள பாராளுமன்ற தேர்தலை கட்சி நம்பிக்கையுடனும், ஆற்றலுடனும், ஊக்கமுடனும் எதிர்கொள்ள வேண்டும். பிரதான எதிர்க்கட்சியான பாரதீய ஜனதாவின் கட்டுக்கடங்காததும், அவதூறுமான வார்த்தைகளுக்கு, தவறான பிரசாரங்களுக்கு தொண்டர்கள் தக்க பதிலடி கொடுக்க வேண்டும்.

பாராளுமன்றத்தில் இடையூறு ஏற்படுத்துகிற பாரதீய ஜனதாவின் தந்திரங்கள், அவதூறு பிரசாரங்களை மக்கள் பார்த்து வருகிறார்கள். அதே நேரத்தில் நாம் நமது கண்ணியத்தை காக்க வேண்டும்.

ஊழலால் ஏற்பட்டுள்ள மன உளைச்சலை எதிர்த்து காங்கிரஸ் தொடர்ந்து போராடும். லோக்பால் மசோதாவை விரைவில் நிறைவேற்றவும் உறுதி கொண்டுள்ளோம். இதில் பல்வேறு கட்சிகளின் யோசனைகளை நாம் ஏற்றுக்கொண்டுள்ளோம். அது விரைவில் சட்டமாக அழுத்தம் கொடுப்போம்.

அதே நேரத்தில், சாமானிய மக்களின் அன்றாட வாழ்க்கையில் லோக்பால் சட்டம் மட்டுமே ஊழலை ஒழித்து விட முடியாது என நம்புகிறோம். நாம் மக்களுக்கு செய்து வருகிற சேவையை, அவர்களுக்கு அளிக்கிற பலன்களை மாற்றி அமைக்காததுவரையில் ஊழலை ஒழித்து விட முடியாது. அந்த வகையில், கல்வி உதவித்தொகை, ஓய்வூதியம், ஊக்கத்தொகைகள், கூலிகள், சில மானியங்கள் ஆகியவற்றை நேரடியாக மக்களுக்கு வழங்க வகை செய்கிற நேரடி ரொக்க மாற்று திட்டம் நல்ல பலன் அளிக்கும். இந்தத் திட்டத்தின் மூலம் வழியில் லஞ்சமாகப் பணம் செல்வது ஒழிக்கப்படும். மத்திய அரசும், மாநில அரசுகளும் இந்த திட்டத்தில் பங்கேற்கும். இந்த திட்டம் ஆக்கப்பூர்வமாக நடைபெற நாம் முக்கிய பங்காற்ற வேண்டும்.

காங்கிரஸ் சிந்தனை அமர்வு மாநாடு, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டம், நமது கட்சியின் எதிர்காலத்திட்டத்துக்கு நல்ல வழிகாட்டி உள்ளன. ஜெய்ப்பூர் பிரகடனம் அமல்படுத்தப்படுவதற்கு கட்சி எம்.பி.க்கள் முக்கிய பங்களிப்பு செய்ய வேண்டும்.

இவ்வாறு சோனியா காந்தி கூறினார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல் குறித்து ஐ.நா. சிறப்பு குழு ஆய்வு செய்ய வேண்டும்.
» சிரியாவில் சர்வதேச குழு விசாரணை நடத்த ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு முடிவு
» ஐ.பி.எல். சூதாட்டப் புகாரில் விசாரணை நடத்த டிராவிட்-ஷில்பா ஷெட்டிக்கு சம்மனா?
» புலிகளை ஆதரித்துவிட்டு மனித உரிமை பற்றி பேசுவதா?- மேற்கு நாடுகள் மீது ராஜபக்சே தாக்கு
» இலங்கை அரசாங்கம் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்: பிரித்தானியா _

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum