சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

கிளிநொச்சி உருத்திரபுரம் உருத்திரபுரீஸ்வரர் சிவனாலய கும்பாபிசேகம் Khan11

கிளிநொச்சி உருத்திரபுரம் உருத்திரபுரீஸ்வரர் சிவனாலய கும்பாபிசேகம்

Go down

கிளிநொச்சி உருத்திரபுரம் உருத்திரபுரீஸ்வரர் சிவனாலய கும்பாபிசேகம் Empty கிளிநொச்சி உருத்திரபுரம் உருத்திரபுரீஸ்வரர் சிவனாலய கும்பாபிசேகம்

Post by *சம்ஸ் Thu 3 Feb 2011 - 14:01

கிளிநொச்சி உருத்திரபுரம் உருத்திரபுரீஸ்வரர் சிவனாலய கும்பாபிசேகம் Kilinochi_2
கி.மு 2000 ஆம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்றுப் பெருமையைக் கொண்ட உருத்திரபுரீஸ்வர ஆலய மகா கும்பாபிசேகம் 2011 ஆம் ஆண்டு தை மாதம் 20 ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெறுகின்றது. இச் சிவாலயம் நீண்ட வரலாற்றைக் கொண்டது.

இலங்கையின் தொல்பொருட்காட்சி சாலையில் நீண்ட காலமாகக் காணப்பட்ட "நடராஜர்' சிலையும், மட்பாண்டச் சிதைவுகளும், கி.மு. 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்ற குறிப்புடனேயே காணப்பட்டன. ஆனால் இப்பொழுது அவை அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளன.

உருத்திரபுரத்தில் கண்டெடுக்கப்பட்ட ஆவுடையார், சற்சதுச வடிவுடைய ஆவுடையார் ஆகும். இச் சற்சதுர வடிவுடைய ஆவுடையாரானது ராஜராஜ சோழன் காலத்திற்கு முற்பட்ட சிவவழிபாட்டுடன் தொடர்புபட்டது என வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.

1952 ஆம் ஆண்டுகளைத் தொடர்ந்து உருத்திரபுர குடியேற்றத்திட்டம் உருவாக்கப்பட்டதன் பிற்பாடு இச் சிவாலயம் தவத்திரு. வடிவேல் சுவாமிஜி அவர்களின் "கனவின்' அடிப்படையில், கிலசமடைந்துகிடந்த ஆலய இடிபாடுகளுடன் கண்டுபிடிக்கப்பட்டது. ஈழத்துச் சித்தர் "யோகர்' சுவாமிகளின் ஆலோசனைகளுடன் கோவில் மீண்டும் புனருத்தாரணம் செய்யப்பட்டது. இக்கோவிலின் நன்மைகருதி அக்காலத்தில் யாழ். அரசாங்க அதிபராக இருந்த அமரர். ம. ஸ்ரீகாந்தாவும், அப்போதைய உதவி அரசாங்க அதிபராகவும் காணி அலுவலராகவும் பதவி வகித்த அமரர். முருகேசம்பிள்ளையும், 250 ஏக்கர் வயல் காணியை கோவிலின் வருமானத்திற்காக கோவிலுக்கு எழுதிக் கொடுத்தனர்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கிளிநொச்சி உருத்திரபுரம் உருத்திரபுரீஸ்வரர் சிவனாலய கும்பாபிசேகம் Empty Re: கிளிநொச்சி உருத்திரபுரம் உருத்திரபுரீஸ்வரர் சிவனாலய கும்பாபிசேகம்

Post by *சம்ஸ் Thu 3 Feb 2011 - 14:01

இந்தவயல் நிலங்களை எல்லாம், அக்காலத்தில் தன்னுடைய சொத்துக்களையும், பணத்தையும் செலவு செய்து துப்பரவு செய்து சீராக்கிய செயல்வீரர் இன்றைய மகாதேவ ஆச்சிரம முதல்வர் தவத்திரு. கனேசானந்த சுவாமி ஆவார்.. யாழ்ப்பாணப் பெரியார்களும், உருத்திரபுரப் பெரியார்களும் ஒன்றுசேர்ந்து வரலாற்றுப் பெருமை கொண்ட உருத்திரபுரீஸ்வர சிவாலயத்தை சீராக்க அயராது முயற்சி செய்தனர்.. இலங்கையின் சப்த ஈஸ்வரங்களில் ஒன்றாகவும் மூர்த்தி, தலம், தீர்த்தம், விருச்சம் ஆகியன ஒருங்கே அமையப்பெற்ற சிறப்பும் இச் சிவாலயத்திற்கு உண்டு.

வன்னியில் ஆதித் திராவிடர்கள் சிறப்புடன் விளங்கினார்கள் என்பதற்கு நீண்ட வரலாற்று ஆதாரமாக இச்சிவாலயம் காணப்படுகின்றது. இச் சிவாலயத்தின் வரலாற்றுப் பெருமைகளை உள்ளடக்கிய மலரொன்றும் இன்று வெளியிடப்படுகின்றது. அம் மலரில் கிளிநொச்சி மாவட்டத்தின் முன்னாள் அரசாங்க அதிபர் தி. இராசநாயகமும், உருத்திரபுரம் மகாவித்தியாலய முன்னாள் அதிபர் கா. நாகலிங்கமும், மகாதேவா ஆச்சிரம முதல்வர் தவத்திரு. கணேசானந்த சுவாமிகளும் எழுதியுள்ள கட்டுரைகள் உருத்திரபுரீஸ்வரரின் வரலாற்றுப் பெருமைகளை எடுத்தியம்புவனவாக உள்ளன.

உருத்திரபுரம் பல்வேறு சைவ அமைப்புக்களை தன்னகத்தே கொண்டிருக்கின்றது. மகாதேவா ஆச்சிரமம், காந்தி நிலையம், குருகுலம், மாதாஜி இல்லம் போன்றவை தொண்டு நிறுவனங்களாக உருத்திரபுரீஸ்வரரின் ஆசியுடன் இப்பிரதேசத்தை ஆத்மீக பலத்துக்கு உள்ளாக்கி நிற்கின்றன. பல்வேறு அழிப்புக்களுக்குப் பின்னர் வெவ்வேறு காலங்களில் ஆலயத்தை புனருத்தாரணம் செய்தார்கள்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கிளிநொச்சி உருத்திரபுரம் உருத்திரபுரீஸ்வரர் சிவனாலய கும்பாபிசேகம் Empty Re: கிளிநொச்சி உருத்திரபுரம் உருத்திரபுரீஸ்வரர் சிவனாலய கும்பாபிசேகம்

Post by *சம்ஸ் Thu 3 Feb 2011 - 14:02

இன்றைய கும்பாபிசேகம் நீண்ட இடம்பெயர்வுகளுக்கும், பாரிய யுத்தத்திற்கும் பின் நடைபெறுகின்றதொன்றாகும். கிளிநொச்சி மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபர் தி. இராசநாயகம் அவர்களின் அயராத முயற்சியாலும், வழிகாட்டலினாலும் இன்றைய அறங்காவலர் சபையால் கும்பாபிசேக நிகழ்வு முன்னெடுக்கப்படுகின்றது.

தமிழர்களுக்கென்றொரு இருப்பு, அவர்கள் பண்பாட்டோடு வாழ்ந்திருந்தனர் என்பதற்கான சான்றுகள் இத்தகைய ஆலயங்களினாலேயே முன்னெடுத்துக் காட்டப்படுகின்றது. இங்கு கண்டெடுக்கப்பட்டிருக்கும் இடிபாட்டிற்குள்ளான தூண்களும், எச்சங்களும், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தமிழர்கள் மிகச்சிறந்த கட்டடக்கலை நிபுணத்துவத்துடன் ஆலயங்கள் அமைத்து வாழ்ந்தனர் என்பதற்கு சான்றாக அமைகின்றன. யாழ்ப்பாண மன்னர்களும், வன்னி மன்னர்களும் இத்தகைய ஆலயங்களை முறைப்படி பரிபாலித்து வந்ததற்கான சான்றாதாரங்கள் உண்டு.

அந்நிய ஆட்சியாளர்களினால் அழிக்கப்பட்டும், உள்ளுர் முரண்பாடுகளினாலும், போட்டி பொறாமைகளாலும் சிதைக்கப்பட்டும் கிலசமடைந்தபொழுதும் காலத்திற்கு காலம் இவ்வாலயம் உயிர்புப் பெற்று தலைநிமிர்ந்து நின்றது. கிளிநொச்சி நிலப்பரப்பில் உள்ள மாபெரும் சிவாலயமாகிய உருத்திரபுரீஸ்வரி சமக உருத்திரபுரீஸ்வரர் இன்று கும்பாபிசேகம் காண்கின்றார் என்ற செய்தி, எம்மவர்களால் "தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி' என்று அன்றாடம் வழிபட்ட புராதன சிவாலயம் மீண்டும் புத்துருப் பெறுகின்றது என்ற புளகாங்கிதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச் சிவாலயத்தில் ஆவுடையாரோடு இருந்த லிங்கம் அந்நியர் ஆட்சிக்காலத்தில் பாதுகாப்புக்கருதி பொறிக்கடவை அம்மன் ஆலயத்தில் வைக்கப்பட்டது எனவும், அது பின்னர் காணாமல் போனதாகவும் இங்குள்ள பெரியார்கள் கூறுகின்றார்கள். அந்த லிங்கம் கண்டுபிடிக்கப்படல் வேண்டும். இக்கோயிலின் வரலாறு ஆய்வு நூலாக வெளிக்கொண்டுவரப்படல் வேண்டும். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறை இக்கோவில் பற்றிய வரலாற்றை முறையாக ஆராய வேண்டும். எமது மூத்தபரம்பரை வாழ்ந்த வாழ்க்கை முறையை செவ்வையுற ஆவணப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்க விரும்புகின்றோம்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கிளிநொச்சி உருத்திரபுரம் உருத்திரபுரீஸ்வரர் சிவனாலய கும்பாபிசேகம் Empty Re: கிளிநொச்சி உருத்திரபுரம் உருத்திரபுரீஸ்வரர் சிவனாலய கும்பாபிசேகம்

Post by *சம்ஸ் Thu 3 Feb 2011 - 14:02

"கோயிலில்லா ஊரிற் குடியிருக்க வேண்டாம்' என்ற பொன்மொழிக்கேற்ப இப்பிரதேசத்தில் எத்தனையோ இன்னல்களுக்கு மத்தியிலும், மக்கள் இன்னும் ஒழுங்காக மீளக்குடியமராத போதும் இவ்வாலயம் சீராக்கப்பட்டு குடமுழுக்கு ஏற்பாடுகளைச் செய்திருக்கும் அறங்காவலர் குழுவினரை வாழ்த்துகின்றோம். இப்பணி இவ்வாலயம் உள்ளளவும் பேசப்படும்.

இக்கோயிலும், அதனோடு சேர்ந்த மக்களும் இப்பிராந்தியத்தின் பண்பாட்டு விழுமியங்களை எடுத்துக்காட்டும் பிரதிவிம்பங்கள். ஒழுக்கமும், உயரிய வாழ்வும், பண்பாட்டு நெறிகளும், கலாசாரமும் இத்தகைய சிறப்பு வழிபாட்டுத்தலங்களினூடாகவே முன்னெடுக்கப்பட்டன.

அதனை மனத்திடைக் கொண்டு வரலாற்றுப் புகழ் மிக்க இச்சிவாலயத்தை கும்பாபிசேகம் காணச்செய்யும் தங்களது முயற்சிகள் "அவனருளாலே அவன் தாள் வணங்கி' வெற்றியும் பெருமையுறுமாறும் பிரார்த்திக்கின்றோம்.

மா. கணபதிப்பிள்ளை
கிளிநொச்சி. _

நன்றி வீரகேசரி


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கிளிநொச்சி உருத்திரபுரம் உருத்திரபுரீஸ்வரர் சிவனாலய கும்பாபிசேகம் Empty Re: கிளிநொச்சி உருத்திரபுரம் உருத்திரபுரீஸ்வரர் சிவனாலய கும்பாபிசேகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அடிப்படை வசதிகள் இல்லாமல் திண்டாடும் கிளிநொச்சி மீன் வியாபாரிகள்! (பட இணைப்பு)
» கிளிநொச்சி குளங்களின் நீர்மட்டம் உயர்வடைந்து உடைப்பெடுக்கும் அபாயக்கட்டத்தில்..
» கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள ஊர்களின் பட்டியல்
» கிளிநொச்சி, முல்லை நீதிமன்ற கட்டுமான பணிகளை துரிதப்படுத்த பணிப்பு
» கிளிநொச்சி: தெருவுக்கு ராஜபக்சே பெயர்: மேலும் பல தெருக்களுக்கு சிங்கள பெயர்கள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum