Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
இலங்கை கிரிக்கெட் வீரர்களை ஐ.பி.எல்.அணிகளில் இருந்து நீக்க வேண்டும்: மாணவர்கள் புதிய நிபந்தனை
2 posters
Page 1 of 1
இலங்கை கிரிக்கெட் வீரர்களை ஐ.பி.எல்.அணிகளில் இருந்து நீக்க வேண்டும்: மாணவர்கள் புதிய நிபந்தனை
சென்னை, மார்ச். 27-
6-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 3-ந்தேதி முதல் மே 26-ந்தேதி வரை சென்னை உள்பட இந்தியாவின் 12 நகரங்களில் நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட்ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் உள்பட 9 அணிகள் விளையாடுகின்றன. ஐ.பி.எல். போட்டியில் விளையாட இலங்கையைச் சேர்ந்த 13 வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை தவிர மற்ற 8 அணிகளிலும் இலங்கை வீரர்கள் இடம் பெற்று உள்ளனர். அவர்கள் விவரம் வருமாறு:-
குலசேகரா, அகிலா தனஞ்செயா (சென்னை சூப்பர் கிங்ஸ்), சங்ககரா, திசரா பெரேரா (சன்ரைசர்ஸ் ஐதராபாத்), ஜெயவர்த்தனே, ஜீவன் மென்டீஸ் (டெல்லி டேர்டெவில்ஸ்), மேத்யூஸ், மெண்டீஸ் (புனே வாரியர்ஸ்), தில்சான், முரளீதரன் (பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்), செனனாயகே (கொல்கத்தா நைட் டைரடர்ஸ்), மலிங்கா (மும்பை இந்தியன்ஸ்), குஷால் பெரைரா (ராஜஸ்தான் ராயல்ஸ்). ஐ.பி.எல். போட்டியில் மொத்தம் 76 ஆட்டம் நடக்கிறது. இதில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 8 லீக் ஆட்டம் மற்றும் பிளேஆப் சுற்றின் 2 ஆட்டம் ஆக மொத்தம் 10 ஆட்டங்கள் நடக்கிறது.
இனப்படுகொலையில் ஈடுபட்ட இலங்கைக்கு எதிராக தமிழ்நாட்டில் போராட்டம் தீவிரம் அடைந்து உள்ள நிலையில் சென்னையில் நடைபெறும் ஐ.பி.எல். போட்டிகளில் இலங்கை வீரர்கள் விளையாட எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இலங்கை வீரர்கள் சென்னையில் விளையாடினால் போட்டிகளுக்கு இடையூறு செய்வோம் என்று தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு கடும் எச்சரிக்கை விடுத்தது.
இந்த நிலையில் சென்னையில் நடைபெறும் ஐ.பி.எல். போட்டியில் இலங்கை வீரர்கள் விளையாட அனுமதிக்க கூடாது என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதினார். இதைத் தொடர்ந்து சென்னையில் நடைபெறும் ஐ.பி.எல். போட்டிகளில் இலங்கை வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள் என்று ஐ.பி.எல். அமைப்பு அதிகாரபூர்வமாக அறிவித்தது.
இதை ஐ.பி.எல். அமைப்பின் தலைவரும், பாராளுமன்ற விவகார துறை ராஜாங்க மந்திரி ராஜீவ் சுக்லா அறிவித்தார். இதற்கிடையே அனைத்து ஐ.பி.எல். அணிகளும், இலங்கை வீரர்களை நீக்க வேண்டும் என்று மாணவர் கூட்டமைப்பு புதிய நிபந்தனை விதித்து வலியுறுத்தி உள்ளது. இந்த சீசனில் இலங்கை வீரர்கள் இந்தியாவில் எந்த இடத்திலும் ஐ.பி.எல். போட்டியில் விளையாடக் கூடாது என்றும் எச்சரித்து உள்ளது. இது குறித்து தமிழீழ விடு தலைக்கான மாணவர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன் கூறியதாவது:-
சென்னையில் மட்டும் இலங்கை வீரர்கள் ஐ.பி.எல். போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் இலங்கை வீரர்களுக்கு தடை விதிக்க வேண்டும். இது தான் எங்களது முக்கியமான கோரிக்கையாகும். மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்கிய சம்பவத்தையொட்டி, பாகிஸ்தான் வீரர்கள் ஐ.பி.எல்.லில் விளையாட தடை செய்யப்பட்டது. அது போல தமிழக மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு இலங்கை வீரர்கள் இந்தியாவில் விளையாட தடை விதிக்க வேண்டும். ஐ.பி.எல்.லில் உள்ள சென்னை, ஐதராபாத் அணியின் உரிமையாளர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். இந்த 2 அணிகளிலும் உள்ள இலங்கை வீரர்களை உடனடியாக நீக்க வேண்டும். இது தொடர்பாக இ.மெயில் மூலம் தகவல் அனுப்பி இருக்கிறோம். நாளைக்குள் அவர்கள் இலங்கை வீரர்களை நீக்கா விட்டால் முற்றுகை போராட்டம் நடத்துவோம்.
9 அணிகளில் இருந்தும் இலங்கை வீரர்களை நீக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கும், மத்திய அரசுக்கும் கடிதம் அனுப்புகிறோம். அரசியல் வேறு, கிரிக்கெட் வேறு. இரண்டையும் பிரித்து பார்க்க வேண்டும் என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால் இரண்டிற்கும் தொடர்பு இருக்கிறது. இலங்கை விவகாரத்தை பொறுத்த வரை மறைமுகமாக ஒன்றுக்கு ஒன்று தொடர்பு உள்ளது. அதனால் அரசியலையும் கிரிக்கெட்டையும் பிரித்து பார்க்க முடியாது. மற்ற நகரங்களில் நடை பெறும் ஐ.பி.எல். போட்டியில் இலங்கை வீரர்கள் ஆடினால் அதனை எதிர்த்து மாணவர்கள் போராட்டம் நடத்துவார்கள். மும்பை, ஐதராபாத், டெல்லி, பெங்களூர் போன்ற நகரங்களில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழீழ விடுதலை போராட்டக்குழுவைச் சேர்ந்த மாணவி திவ்யா கூறியதாவது:-
இந்தியாவின் எந்த பகுதியிலும் சிங்கள கிரிக்கெட் வீரர்கள் விளையாட அனு மதிக்க கூடாது என்பதுதான் எங்களது வேண்டுகோள். ஐ.பி.எல். கிரிக்கெட் அணியில் சிங்கள வீரர்களை அனுமதிக்க கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
கைப்புள்ள- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135
Similar topics
» இலங்கை கிரிக்கெட் மைதானம்: ஐசிசி புதிய உத்தரவு
» வீரர்களை திரும்ப அழைக்க மாட்டோம்: இலங்கை கிரிக்கட் வாரியம்
» ஐ.பி.எல். போட்டியில் பாகிஸ்தான் வீரர்களை அனுமதிக்க வேண்டும்: அக்ரம் வேண்டுகோள்
» ஒலிம்பிக் போட்டியில் இருந்து மல்யுத்த போட்டியை நீக்க முடிவு
» வி.பி.எப். கட்டணத்தை நிரந்தரமாக நீக்க வேண்டும் - டி.ராஜேந்தர்
» வீரர்களை திரும்ப அழைக்க மாட்டோம்: இலங்கை கிரிக்கட் வாரியம்
» ஐ.பி.எல். போட்டியில் பாகிஸ்தான் வீரர்களை அனுமதிக்க வேண்டும்: அக்ரம் வேண்டுகோள்
» ஒலிம்பிக் போட்டியில் இருந்து மல்யுத்த போட்டியை நீக்க முடிவு
» வி.பி.எப். கட்டணத்தை நிரந்தரமாக நீக்க வேண்டும் - டி.ராஜேந்தர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|