சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Yesterday at 19:17

» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28

» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25

» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24

» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23

» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19

» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18

» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16

» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12

» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06

» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59

» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57

» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58

» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54

» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35

» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32

» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50

» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42

» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14

» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36

» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

தனிமனிதர்களும் பலநாடுகளும் இன்று பொருளாதாரப் பிரச்சனையில் சிக்கித் தவிக்கின்றனர். Khan11

தனிமனிதர்களும் பலநாடுகளும் இன்று பொருளாதாரப் பிரச்சனையில் சிக்கித் தவிக்கின்றனர்.

Go down

தனிமனிதர்களும் பலநாடுகளும் இன்று பொருளாதாரப் பிரச்சனையில் சிக்கித் தவிக்கின்றனர். Empty தனிமனிதர்களும் பலநாடுகளும் இன்று பொருளாதாரப் பிரச்சனையில் சிக்கித் தவிக்கின்றனர்.

Post by Muthumohamed Sat 13 Apr 2013 - 21:17

தனிமனிதர்களும்
பலநாடுகளும்
இன்று பொருளாதாரப்
பிரச்சனையில் சிக்கித்
தவிக்கின்றனர் என்றால்
நிச்சயமாக அது வட்டியின்
அடிப்படையிலான
பொருளாதாரத்
திட்டங்களினால்தான்.
வட்டியை அடைக்க
முடியாமல்
திண்டாடுகின்றனர்.
பொருளாதாரத்தில்
பின்தங்கி வளமிக்க
நாடுகளில் இடம்பெற
முடியாதநிலை. வட்டியின்
காரணத்தால்
எத்தனையோ பெரும்
தொழிற்சாலைகளும்
நிறுவனங்களும்
இழுத்து மூடப்படுகின்றன.
உழைப்பாளிகளின்
வேர்வைகளால்,
முடிவடையாத
வட்டியை நிறைக்கவே முடியாதநிலை.
இதனால் பொருளாதாரம்
குறிப்பிட்ட சிலரிடம்
மட்டுமே சுற்றிக்
கொண்டிருக்கின்றது. பலர்
வறுமையில்
சுழன்று கொண்டிருக்கிறனர்.
வட்டியில்
ஈடுபடுபவர்களுடன்
அல்லாஹ் போர்
தொடுக்கின்றான் என்ற
எச்சரிக்கை இவ்விளைவுகளாகக்கூட
இருக்கலாம்.

வட்டித் தொழிலின்
உரிமையாளர், அதன்
பங்குதாரர்,
அதற்கு உதவுபவர்,
அதற்கு சாட்சி சொல்பவர்
ஆகிய அனைவரும்
நபி(ஸல்)அவர்களால்
சபிக்கப்பட்டவர்களே!

வட்டி உண்பவன், அதனை உண்ணக்
கொடுப்பவன்,
அதனை எழுதுபவன், அதன்
இரு சாட்சியாளர்கள் ஆகிய
அனைவரையும்
நபி(ஸல்)அவர்கள்
சபித்தார்கள். மேலும்
இவர்கள் அவனைவரும் -
தண்டனையால்-
சமமானவர்களே! என்றும்
கூறினார்கள்.
(அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி)
நூல்: முஸ்லிம்)

இந்த ஹதீஸின் அடிப்படையில்
வட்டி கணக்கு எழுதுவது,
அதை சரிபார்ப்பது,
வாங்கிக் கொடுப்பது,
பெற்றுக் கொள்வது,
அனுப்புவது,
பாதுகாப்பது.. இது போன்ற
வட்டியுடன் தொடர்புடைய
அனைத்துச் செயல்களும்
ஹராம் ஆகும்.

வட்டி பணக்காரன், ஏழை என்ற
வித்தியாசமின்றி அனைவருக்கும்
அனைத்துச்
சூழ்நிலையிலும்
ஹராமாகும்.
எத்தனையோ பணக்காரர்கள்
வட்டியின் காரணத்தினால்
அனைத்தையும் இழந்து -
ஓட்டாண்டி- பரதேசி-
ஆயினர். நம்
முன்னே நடைபெறும்
எத்தனையோ நிகழ்ச்சிகள்
இதற்கு சாட்சிகளாக
உள்ளன. வட்டியின் குறைந்த
பட்ச விபரீதம் யாதெனில்
பொருளாதரத்தின் பரகத் -
அபிவிருத்தி-
அழிக்கப்பட்டுவிடும்.
அதிக பொருள் இருந்தாலும்
சரியே!

நபி(ஸல்)அவர்கள்
கூறுகிறார்கள்:
வட்டியினால் ஈட்டப்பட்ட
பொருளாதாரம் -
அது அதிகமாக
இருந்தாலும் சரியே-
நிச்சயமாக அதன்
முடிவு மிகவும்
கஷ்டத்திலேயே முடியும்.
(அறிவிப்பவர்:
இப்னு மஸ்வூத்(ரலி) நூல்:
அஹமத்)

வட்டியில் குறைந்த
தொகை அதிக என்றெல்லாம்
வித்தியாசம் கிடையாது.
அனைத்தும் ஹராமானவையே!
வட்டியை உண்டு வாழ்ந்தவன்
மறுமை நாளில்
கப்ரிலிருந்து எழுப்பப்படும்போது ஷைத்தானால்
தீண்டப்பட்டவன்
எழுந்திருப்பதைப்
போன்றே எழுந்திருப்பான்.

இது மிகப்பெருங்குற்றமாக
இருந்தாலும்
இதிலிருந்து விடுபட
அதற்குரிய
பாவமன்னிப்பு முறையை அல்லாஹ்
விவரித்துக் கூறுகிறான்:

மேலும் நீங்கள் (தவ்பாச்
செய்து) மீண்டுவிட்டால்
உங்கள் செல்வங்களின் அசல்
தொகை உங்களுக்கு உண்டு.
நீங்கள் (அதிகமாக
வாங்கி கடன் பட்டோருக்கு)
அநீதி செய்யாதீர்கள்.
(அவ்வாரே) நீங்களும் (மூலத்
தொகையைப் பெற்றுக்
கொள்வதிலிருந்து)
அநீதி செய்யப்பட
மாட்டீர்கள். (அல்குர்ஆன் 2:279)

இதுவே நீதமான
தீர்ப்பாகும்.
இப்பெரும்பாவத்திலிருந்து தன்னைக்
காப்பாற்றிக் கொள்வதும்,
இதன்
கோரநிலைகளை உணர்வதும்
ஒவ்வொரு முஸ்லிமின் மீதும்
கட்டாயக் கடமையாகும்.

நிர்ப்பந்தமாகவோ, பொருள்
வீணாகிவிடும்
அல்லது திருடப்பட்டுவிடும்
என்ற பயத்திலோ வட்டியின்
தொடர்பில் இயங்கும்
பேங்கில்
பணத்தை சேமிப்பவர்கள்
உண்மையிலேயே நிர்ப்பந்தத்தில்தான்
உள்ளார்களா?
என்பதை உறுதி செய்து கொள்ள
வேண்டும்.
இறந்தவற்றை சாப்பிடும்
நிர்ப்பந்தத்தைவிட
இது மிகவும் கடுமையான
நிர்ப்பந்தமாக
இருக்கின்றதா?
என்று கவனிக்கவேண்டும்.
முடிந்தவரை மாற்று ஏற்பாட்டிற்கு முயற்சிக்க
வேண்டும்.
அதுவரை தனது இச்செயலுக்காக
அல்லாஹ்விடம்
பாவமன்னிப்பு தேடிக்
கொண்டிருக்க வேண்டும்.

மேலும் அவர்
எந்தநிலையிலும்
பேங்கிலிருந்து வட்டியை பெற்று பயன்படுத்தக்
கூடாது. அவர்களுடைய
கணக்கில் வட்டித்
தொகை வருமானால்
அதனை மார்க்கம்
அனுமதிக்கும் ஏதேனும்
செயலுக்காக
கொடுத்துவிட வேண்டும்.
ஏனெனில் அந்தப்
பொருளை அவர்
அனுபவிப்பது ஹராமாகும்.
மேலும்
பிறருக்கு கொடுப்பதினால்
அது தர்மமாகவும் ஆகாது.
தர்மத்தின் நன்மையும்
கிடைக்காது. ஏனெனில்
நிச்சயமாக அல்லாஹ்
தூய்மையானவன்.
தூய்மையானதை மட்டுமே அவன்
ஏற்றுக் கொள்வான். மேலும்
எந்தவிதத்திலும் அந்தப்
பொருளை தனக்காகப்
பயன்படுத்தக் கூடாது.
அந்தப் பணத்தில் உண்பது,
பருகுவது, அணிவது,
வாகனிப்பது, வசிப்பது,
தாய், தந்தை, மனைவி,
பிள்ளைகளுக்காக
செலவு செய்வது,
ஜகாத்தாகக் கொடுப்பது,
தம்மீதுள்ள கடமையான
வரிகளைச் செலுத்துவது,
இவைபோன்ற எதற்கும்
பயன்படுத்த
அனுமதியில்லை.
அல்லாஹ்வின்
தண்டணைக்கு பயந்து வட்டியை விட்டு முற்றும்
தவிர்ந்து வாழ முயற்சிக்க
வேண்டும்.

முகநூல்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum