Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!by rammalar Today at 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
இலைகளை உதிர்க்கும் மரம்..
2 posters
Page 1 of 1
இலைகளை உதிர்க்கும் மரம்..
மேற்கிலிருந்து வீசுவதால்
கிழக்கில் திரள்கின்றன
உதிர்ந்த இலைகள்
>பாஷோ
-
இலைகள் மரத்திலிருந்து உதிர்வது
இயல்பாக நடக்கும்போது
அது அழகு.
பிறப்பும் அப்படித்தான்
இறப்பும் அப்படித்தான்
இயல்பாக பூக்கிறபோது
புன்னகையும் பூவாகி விடுகிறது
இறப்பு நிறைவாக வேண்டுமானால்
இலைக்கும் மரத்திற்குமான ரத்த
சம்பந்தம் முடிந்து போகும்போது
தான்
அது சருகாக முடியும்…
-
அப்போது உதிர்கையில் அது
கலகலத்துக் கொண்டே
சங்கீத இசையுடன் விழுகிறது.
-
இலையாக இருக்கும்போது
எழாத சப்தம்
சறுகாக மாறுகையில் நடப்பது
வாழ்ந்து முடிந்த அனுபவத்தின்
அடிப்படையில்தான்
-
இலையாக இருக்கும்போது
எடையுடன் இருப்பது –
சருகாகும்போது கனமிழந்து
விடுகிறது-
இலை இளமை – சருகு முதுமை
முதுமைக்கென்று ஓர் அழகு உண்டு
-
அது இளமையைக் காட்டிலும்
மகத்தானது.
முதுமையில் நெற்றிச்சுருக்கங்கள்
கூடி
வாழ்க்கை எழுதிய வரிகளாய்
கண்களில் கருணை ஊறி
காலம் எழுதிய கவிதையாய்
அழகைக் கூட்டுகிறது
-
கோவைக்காயாய் இருக்கும் இளமை
கோவைப்பழமாய் மாறுகையில்
அழகு மிளிர்கிறது...
காற்று வந்து கழுத்தை
நெரிக்கும்போது
சருகுகள் மட்டுமல்ல -
இலைகளும் உதிர்ந்து விடுகின்றன...
-
---------------------------
>இறையன்பு,
கிழக்கில் திரள்கின்றன
உதிர்ந்த இலைகள்
>பாஷோ
-
இலைகள் மரத்திலிருந்து உதிர்வது
இயல்பாக நடக்கும்போது
அது அழகு.
பிறப்பும் அப்படித்தான்
இறப்பும் அப்படித்தான்
இயல்பாக பூக்கிறபோது
புன்னகையும் பூவாகி விடுகிறது
இறப்பு நிறைவாக வேண்டுமானால்
இலைக்கும் மரத்திற்குமான ரத்த
சம்பந்தம் முடிந்து போகும்போது
தான்
அது சருகாக முடியும்…
-
அப்போது உதிர்கையில் அது
கலகலத்துக் கொண்டே
சங்கீத இசையுடன் விழுகிறது.
-
இலையாக இருக்கும்போது
எழாத சப்தம்
சறுகாக மாறுகையில் நடப்பது
வாழ்ந்து முடிந்த அனுபவத்தின்
அடிப்படையில்தான்
-
இலையாக இருக்கும்போது
எடையுடன் இருப்பது –
சருகாகும்போது கனமிழந்து
விடுகிறது-
இலை இளமை – சருகு முதுமை
முதுமைக்கென்று ஓர் அழகு உண்டு
-
அது இளமையைக் காட்டிலும்
மகத்தானது.
முதுமையில் நெற்றிச்சுருக்கங்கள்
கூடி
வாழ்க்கை எழுதிய வரிகளாய்
கண்களில் கருணை ஊறி
காலம் எழுதிய கவிதையாய்
அழகைக் கூட்டுகிறது
-
கோவைக்காயாய் இருக்கும் இளமை
கோவைப்பழமாய் மாறுகையில்
அழகு மிளிர்கிறது...
காற்று வந்து கழுத்தை
நெரிக்கும்போது
சருகுகள் மட்டுமல்ல -
இலைகளும் உதிர்ந்து விடுகின்றன...
-
---------------------------
>இறையன்பு,
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25138
மதிப்பீடுகள் : 1186
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|