Latest topics
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்by rammalar Yesterday at 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
காட்டுக்கிறுக்கி..!
5 posters
Page 1 of 1
காட்டுக்கிறுக்கி..!
கதிரறுத்துப் போறவதான் கண்ணால தூறவதான்
புதிரறுத்துப் போனாளே ஒரு புன்னகைத்துப் போனாளே
மறுதலிக்க மாட்டாமல் மடமைவந்து கொல்லுதடி
உதறிவிட்டு என்னுடம்போ உளுத்துத்தான் கொட்டுதடி
துறுதுறுண்ணு போறவளே எனைத் துவட்டாமப் போறவளே
நறு நண்ணு பல்லு ரெண்டு நடமாடிக் கத்துதடி
அறுக்காணி மக-இவளோ எனை நொறுக்காமப் போறவளோ
கிறுக்காகி நானலைய எனப் பொறுக்காமப் போறவளோ
சுறுக்காத்தான் போறாளே சுடு சுடுன்னு போறாளே
தெருக்காத்து உம்மேல திட்டுத்திட்டா படுறப்போ
அடகாத்த ஐயனுக்கு அங்கங்கே வேர்க்குதடி
மடக்காத்து பட்டாக்கா மனமாற்றம் வருமேண்ணு
மனதால தூது விட்டேன் மாங்கொழுந்தால் ஏவி விட்டன்
ஆட்டுக்கூட்டமெல்லாம் ஓட்டமிடுமுன் பின்னால
காட்டுக் குருவிகூடக் கண்ணடிக்குமே தன்னால
ஏட்டுல காணவில்ல என்னிலம என்ன சொல்ல
மேட்டில பயிர் போல மெலிந்துதான் நான் செல்ல
வீட்டில யாருமில்ல விளக்கெரிக்க ஆளுமில்ல
கூட்டில பூட்டிப்போட்ட குருவி நிண்ணு கத்துதடி
தன்பாட்டுல போறவளே பதமாகப் போறவளே
நாட்டுல என்ன நடப்பதுவோ நானறிய வில்லையடி
அந்தி மசங்குதடி ஆளரவம் அடங்குதடி
தூரமாப் போகவேணும் துணையாக நான் வரவா
கேளாமப் போறவளே கீழ் வரகு ஆனவளே
வாழாம நானிருந்து வதங்குவது யாரறிவார்
ஆட காத்தொதுக்கும் அங்கமெல்லாம் பாத்தொதுக்கும்
வாடக் காத்தடிதச்சு வரண்டு கன்னம் சேத்தொதுக்கும்
ஆட நீயாட அதிலேதான் நானாட
ஓடி விழையாட ஒரு நாளு நீயாக
தேடி வருவாயோ திருட்டு முத்தம் தருவாயோ
மொண்டு குடிக்கும் தண்ணி மூச்சு முட்டி நிக்குதடி
காணாமப் போனாக்கா காதல் உள்ளம் துடிக்குமடி
வண்டு இரையுமிங்க வானமே கரையுமங்க
என்று வருவாயோ இடுப்பொடிக்கத் தருவாயோ
வெள்ளாம காத்தடிக்கும் வெளஞ்ச பயிர் கூத்தடிக்கும்
தள்ளாடி நானிருக்க தரகு முத்தம் தாருவதெப்போ
துள்ளாமப் போறவளே துவண்டுதான் போறவளே
கொல்லாமப் போறதென்ன எனை கொன்று விட்டுப் போயேண்டி
பாம்பு குறுக்கறுக்கும் பறவைகளும் நெடுக்கறுக்கும்
வீம்பு கொண்டு போறவளே விதண்டமாப் போறவளே
தேம்பி அழும் என்னத் திரும்பி மெல்லப் பாரேண்டி
தீராத நோயள்ளித் திமிராகப் போறவளே உருமாறிக்கத்துதிங்க உடல் கூடாக முத்துதிங்க
கருமாறிப்பிறந்தவளோ கதைமாறித் திரிந்தவளோ
விதிமாற்றும் வித்தையெல்லாம் விரல் நுணியில் கொண்டவளோ
உதிக்காத சூரியன உடம்பெல்லாம் கொண்டவளோ
குதிக்காத ஆரல் மீனு குளம் விட்டுக் குதிச்சதடி
உன்னிடையில கிள்ளவேணும் இடைக்கிடையே அள்ளவேணும்
தடைகொடுக்கும் தாவணிய தூரமாகத் தள்ளவேணும்
கடையில நான்காணா மெழுகுபொம்ம நீதானே
மடையில திரண்டு வந்த அழகு வெண்ண நீதானே
வெள்ளசேல விரகமாகும் என் விரல் பட்டு சரசமாகும்
கள்ளச்சி உன்வாயும் கைபடக் கருவாயி போலாகும்
மெள்ளச்சிரிச்சாலே என் மேனியெல்லாம் பாலாகும்
பொள்ளாச்சி சந்தையிலே புதுப்பொருளு போலாகும்
தள்ளாடி நானிருக்கன் தறுதலையாப் போயிருக்கன்
என் உள்ளாட நனைவதெல்லாம் ஊருக்குள்ள யாரறியார்
வெள்ளாடு மேச்சவளே விடலையாக் காச்சவளே
குள்ளாடு போலானேன் குழப்பத்தில் நாலானேன்
மாட்டுக் கூட்டமெல்லாம் உன் மணம் பிடிக்க மூக்கு நீட்டும்
மனிசக் கூட்டமெல்லாம் உனக் கணம் பிடிக்கக் கைய நீட்டும்
பணம் படைச்ச மனமிருக்கு பார்த்திவிடத் தெம்பிருக்கு
உனப்படைச்ச இறைவனிப்போ ஒருதலையா கத்துவாரோ
அத்தமக நீயுமில்ல ஆத்தோரப் பூவுமில்ல
சுத்தமக நீதானே சுடர் பூவும் நீதானே
எத்தனையோ பாத்த கண்ணு உன மட்டும் தானா எண்ணும்
சுத்தமாக நானுமில்ல சுயநினைவு காணவில்ல
வித்தகனும் நானுமில்ல விசும்பாத ஆளுமில்ல
மத்தக்கத மத்தியில ஒத்தக்கத ஒத்தையில
செத்தக்கத ஆயிடிச்சே சேட்டு வட்டி கூடிடிச்சே
செருக்காடு ஒண்ணு இங்க-உன்னால் கிறுக்காடு ஆனதடி
புதிரறுத்துப் போனாளே ஒரு புன்னகைத்துப் போனாளே
மறுதலிக்க மாட்டாமல் மடமைவந்து கொல்லுதடி
உதறிவிட்டு என்னுடம்போ உளுத்துத்தான் கொட்டுதடி
துறுதுறுண்ணு போறவளே எனைத் துவட்டாமப் போறவளே
நறு நண்ணு பல்லு ரெண்டு நடமாடிக் கத்துதடி
அறுக்காணி மக-இவளோ எனை நொறுக்காமப் போறவளோ
கிறுக்காகி நானலைய எனப் பொறுக்காமப் போறவளோ
சுறுக்காத்தான் போறாளே சுடு சுடுன்னு போறாளே
தெருக்காத்து உம்மேல திட்டுத்திட்டா படுறப்போ
அடகாத்த ஐயனுக்கு அங்கங்கே வேர்க்குதடி
மடக்காத்து பட்டாக்கா மனமாற்றம் வருமேண்ணு
மனதால தூது விட்டேன் மாங்கொழுந்தால் ஏவி விட்டன்
ஆட்டுக்கூட்டமெல்லாம் ஓட்டமிடுமுன் பின்னால
காட்டுக் குருவிகூடக் கண்ணடிக்குமே தன்னால
ஏட்டுல காணவில்ல என்னிலம என்ன சொல்ல
மேட்டில பயிர் போல மெலிந்துதான் நான் செல்ல
வீட்டில யாருமில்ல விளக்கெரிக்க ஆளுமில்ல
கூட்டில பூட்டிப்போட்ட குருவி நிண்ணு கத்துதடி
தன்பாட்டுல போறவளே பதமாகப் போறவளே
நாட்டுல என்ன நடப்பதுவோ நானறிய வில்லையடி
அந்தி மசங்குதடி ஆளரவம் அடங்குதடி
தூரமாப் போகவேணும் துணையாக நான் வரவா
கேளாமப் போறவளே கீழ் வரகு ஆனவளே
வாழாம நானிருந்து வதங்குவது யாரறிவார்
ஆட காத்தொதுக்கும் அங்கமெல்லாம் பாத்தொதுக்கும்
வாடக் காத்தடிதச்சு வரண்டு கன்னம் சேத்தொதுக்கும்
ஆட நீயாட அதிலேதான் நானாட
ஓடி விழையாட ஒரு நாளு நீயாக
தேடி வருவாயோ திருட்டு முத்தம் தருவாயோ
மொண்டு குடிக்கும் தண்ணி மூச்சு முட்டி நிக்குதடி
காணாமப் போனாக்கா காதல் உள்ளம் துடிக்குமடி
வண்டு இரையுமிங்க வானமே கரையுமங்க
என்று வருவாயோ இடுப்பொடிக்கத் தருவாயோ
வெள்ளாம காத்தடிக்கும் வெளஞ்ச பயிர் கூத்தடிக்கும்
தள்ளாடி நானிருக்க தரகு முத்தம் தாருவதெப்போ
துள்ளாமப் போறவளே துவண்டுதான் போறவளே
கொல்லாமப் போறதென்ன எனை கொன்று விட்டுப் போயேண்டி
பாம்பு குறுக்கறுக்கும் பறவைகளும் நெடுக்கறுக்கும்
வீம்பு கொண்டு போறவளே விதண்டமாப் போறவளே
தேம்பி அழும் என்னத் திரும்பி மெல்லப் பாரேண்டி
தீராத நோயள்ளித் திமிராகப் போறவளே உருமாறிக்கத்துதிங்க உடல் கூடாக முத்துதிங்க
கருமாறிப்பிறந்தவளோ கதைமாறித் திரிந்தவளோ
விதிமாற்றும் வித்தையெல்லாம் விரல் நுணியில் கொண்டவளோ
உதிக்காத சூரியன உடம்பெல்லாம் கொண்டவளோ
குதிக்காத ஆரல் மீனு குளம் விட்டுக் குதிச்சதடி
உன்னிடையில கிள்ளவேணும் இடைக்கிடையே அள்ளவேணும்
தடைகொடுக்கும் தாவணிய தூரமாகத் தள்ளவேணும்
கடையில நான்காணா மெழுகுபொம்ம நீதானே
மடையில திரண்டு வந்த அழகு வெண்ண நீதானே
வெள்ளசேல விரகமாகும் என் விரல் பட்டு சரசமாகும்
கள்ளச்சி உன்வாயும் கைபடக் கருவாயி போலாகும்
மெள்ளச்சிரிச்சாலே என் மேனியெல்லாம் பாலாகும்
பொள்ளாச்சி சந்தையிலே புதுப்பொருளு போலாகும்
தள்ளாடி நானிருக்கன் தறுதலையாப் போயிருக்கன்
என் உள்ளாட நனைவதெல்லாம் ஊருக்குள்ள யாரறியார்
வெள்ளாடு மேச்சவளே விடலையாக் காச்சவளே
குள்ளாடு போலானேன் குழப்பத்தில் நாலானேன்
மாட்டுக் கூட்டமெல்லாம் உன் மணம் பிடிக்க மூக்கு நீட்டும்
மனிசக் கூட்டமெல்லாம் உனக் கணம் பிடிக்கக் கைய நீட்டும்
பணம் படைச்ச மனமிருக்கு பார்த்திவிடத் தெம்பிருக்கு
உனப்படைச்ச இறைவனிப்போ ஒருதலையா கத்துவாரோ
அத்தமக நீயுமில்ல ஆத்தோரப் பூவுமில்ல
சுத்தமக நீதானே சுடர் பூவும் நீதானே
எத்தனையோ பாத்த கண்ணு உன மட்டும் தானா எண்ணும்
சுத்தமாக நானுமில்ல சுயநினைவு காணவில்ல
வித்தகனும் நானுமில்ல விசும்பாத ஆளுமில்ல
மத்தக்கத மத்தியில ஒத்தக்கத ஒத்தையில
செத்தக்கத ஆயிடிச்சே சேட்டு வட்டி கூடிடிச்சே
செருக்காடு ஒண்ணு இங்க-உன்னால் கிறுக்காடு ஆனதடி
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: காட்டுக்கிறுக்கி..!
மிகவும் அருமையாக உள்ளது வைரமுத்துவின் கிராமத்துப்பாடல் ஒன்று கேட்ட பீலிங்க் அவ்வளவு அருமை வைரமுத்து அம்மாவுக்கு கவிதை எழுதிய அதே பாணியில் எழுதியுள்ளீர்கள் மிகவும் அருமை த்ரிஷ்டி பட்டாப்போல் ஒரு வரி என்னை வெறுக்கச்செய்து விட்டது மற்றும் படி அருமை அற்புதம் பிரமாதம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: காட்டுக்கிறுக்கி..!
சாரி தாத்தா நான் face bookலயும் இந்த கவித படிச்ச கமன்ட் போடல சாரிபா கிராமத்து கவிதை மிக மிக பிரமாதம் :flower:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: காட்டுக்கிறுக்கி..!
அங்கே என்ன பெயரில் இருக்கிறீர்கள் ???
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: காட்டுக்கிறுக்கி..!
அருமையான் கவி
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: காட்டுக்கிறுக்கி..!
meenugaமுfதாக் wrote:அங்கே என்ன பெயரில் இருக்கிறீர்கள் ???
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|