Latest topics
» ரசித்தவை...by rammalar Today at 13:49
» ஆரிய பவன்
by rammalar Today at 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Today at 10:54
» இதுதான் கலிகாலம்…
by rammalar Today at 9:34
» வாசமில்லா மலரிது
by rammalar Today at 9:21
» தேனில்லா மலர்...
by rammalar Today at 9:17
» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 7:36
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Today at 7:32
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Today at 7:23
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Today at 6:08
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Yesterday at 19:05
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Yesterday at 18:58
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Yesterday at 18:52
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Yesterday at 10:53
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Yesterday at 10:30
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Sun 12 May 2024 - 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Sun 12 May 2024 - 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
சென்னையில் ஜூலை முதல் வாரம் ஆட்டோ கட்டணம் அமல்: குறைந்த கட்டணம் 20 ரூபாய்
2 posters
Page 1 of 1
சென்னையில் ஜூலை முதல் வாரம் ஆட்டோ கட்டணம் அமல்: குறைந்த கட்டணம் 20 ரூபாய்
சென்னையில் ஜூலை முதல்வாரத்தில் ஆட்டோ கட்டணம் அமல்படுத்தப்படுகிறது. டெல்லி, பெங்களூர் போன்ற பெருநகரங்களில் ஆட்டோக்களுக்கு அரசு கட்டணம் நிர்ணயம் செய்துள்ளது. இதனால் மீட்டர் பொறுத்தப்பட்டு கிலோ மீட்டர் அடிப்படையில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
அதேபோல் சென்னை நகரத்திலும் ஆட்டோக்களுக்கு கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் முடிவில் ஜூலை முதல் வாரத்திற்குள் ஆட்டோ கட்டணம் நிர்ணயம் செய்து அமல்படுத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து சென்னையில் ஆட்டோக்களுக்கு கட்டணம் நிர்ணயம் செய்து அதை செயல்படுத்த அரசு தீவிரம் காட்டி வருகிறது. இது தொடர்பாக போக்குவரத்து உள்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். சென்னையில் சுமார் 70 ஆயிரம் ஆட்டோக்கள் ஓடுகின்றன. இவற்றை முறைப்படுத்தி கட்டணம் நிர்ணயம் செய்யும் பணி நடந்து வருகிறது.
பொதுமக்கள் பாதிக்காத வகையிலும், அதே நேரத்தில் ஆட்டோ தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களும் பாதிக்காத வகையில் கட்டணம் நிர்ணயம் செய்யப்படுகிறது. சென்னையில் குறைந்த பட்ச ஆட்டோ கட்டணம் இரண்டு கிலோ மீட்டருக்கு ரூ.20 நிர்ணயம் செய்வதாக கூறப்படுகிறது. கூடுதலாக வரும் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.10 வீதம் நிர்ணயம் செய்யலாம் எனவும் தெரிகிறது.
இதன்படி ஆட்டோவிற்கு குறைந்தது ரூ.20 கட்டணமும், அடுத்த ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.10 வீதமும் வசூலிக்கலாம் என போக்குவரத்து துறை நிர்ணயிக்கிறது. ஆட்டோக்களுக்கு அரசு கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் என்பதை வரவேற்கிறோம். ஆனால் தங்கள் கருத்தை கேட்டு அரசு முடிவு செய்ய வேண்டும் என்று சி.ஐ.டி.யு. தொழிற்சங்க பொதுச்செயலாளர் மனோகரன் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:-
ஆட்டோ தொழிலில் 10-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் உள்ளன. சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., விடுதலை சிறுத்தை, ஐ.என்.டி.யு.சி., எல்.பி.எப், அம்பேத்கர் தொழிற்சங்கம் உள்ளிட்ட சங்கங்களில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர். ஆட்டோ தொழிலாளர் நலன் பாதிக்காத வகையில் அரசு கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும். ஜூலை முதல்வாரத்தில் ஆட்டோ கட்டணத்தை அமல்படுத்தப்போவதாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கு முன்பு அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகளை அழைத்து பேசி முடிவு செய்ய வேண்டும்.
குறைந்தபட்சமாக கட்டணம் ரூ.30-ம் (2 கிலோமீட்டர்) அடுத்து வரும் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.15-ம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். அப்படி நிர்ணயம் செய்தால்தான் இத்தொழிலை செய்ய முடியும். இது தொடர்பாக போக்குவரத்து ஆணையரை சந்தித்து மனு கொடுத்துள்ளோம். மேலும் 25-ந்தேதி சேப்பாக் கத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
-- மாலைமலர்
அதேபோல் சென்னை நகரத்திலும் ஆட்டோக்களுக்கு கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் முடிவில் ஜூலை முதல் வாரத்திற்குள் ஆட்டோ கட்டணம் நிர்ணயம் செய்து அமல்படுத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து சென்னையில் ஆட்டோக்களுக்கு கட்டணம் நிர்ணயம் செய்து அதை செயல்படுத்த அரசு தீவிரம் காட்டி வருகிறது. இது தொடர்பாக போக்குவரத்து உள்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். சென்னையில் சுமார் 70 ஆயிரம் ஆட்டோக்கள் ஓடுகின்றன. இவற்றை முறைப்படுத்தி கட்டணம் நிர்ணயம் செய்யும் பணி நடந்து வருகிறது.
பொதுமக்கள் பாதிக்காத வகையிலும், அதே நேரத்தில் ஆட்டோ தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களும் பாதிக்காத வகையில் கட்டணம் நிர்ணயம் செய்யப்படுகிறது. சென்னையில் குறைந்த பட்ச ஆட்டோ கட்டணம் இரண்டு கிலோ மீட்டருக்கு ரூ.20 நிர்ணயம் செய்வதாக கூறப்படுகிறது. கூடுதலாக வரும் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.10 வீதம் நிர்ணயம் செய்யலாம் எனவும் தெரிகிறது.
இதன்படி ஆட்டோவிற்கு குறைந்தது ரூ.20 கட்டணமும், அடுத்த ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.10 வீதமும் வசூலிக்கலாம் என போக்குவரத்து துறை நிர்ணயிக்கிறது. ஆட்டோக்களுக்கு அரசு கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் என்பதை வரவேற்கிறோம். ஆனால் தங்கள் கருத்தை கேட்டு அரசு முடிவு செய்ய வேண்டும் என்று சி.ஐ.டி.யு. தொழிற்சங்க பொதுச்செயலாளர் மனோகரன் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:-
ஆட்டோ தொழிலில் 10-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் உள்ளன. சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., விடுதலை சிறுத்தை, ஐ.என்.டி.யு.சி., எல்.பி.எப், அம்பேத்கர் தொழிற்சங்கம் உள்ளிட்ட சங்கங்களில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர். ஆட்டோ தொழிலாளர் நலன் பாதிக்காத வகையில் அரசு கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும். ஜூலை முதல்வாரத்தில் ஆட்டோ கட்டணத்தை அமல்படுத்தப்போவதாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கு முன்பு அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகளை அழைத்து பேசி முடிவு செய்ய வேண்டும்.
குறைந்தபட்சமாக கட்டணம் ரூ.30-ம் (2 கிலோமீட்டர்) அடுத்து வரும் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.15-ம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். அப்படி நிர்ணயம் செய்தால்தான் இத்தொழிலை செய்ய முடியும். இது தொடர்பாக போக்குவரத்து ஆணையரை சந்தித்து மனு கொடுத்துள்ளோம். மேலும் 25-ந்தேதி சேப்பாக் கத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
-- மாலைமலர்
Re: சென்னையில் ஜூலை முதல் வாரம் ஆட்டோ கட்டணம் அமல்: குறைந்த கட்டணம் 20 ரூபாய்
கேக்குறவங்க கேனையா இருந்தா எல்லாம் தான் சுத்துவிங்க காதுல
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|