Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!by rammalar Yesterday at 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
சிறுவனும் ஆப்பிள் மரமும்
5 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
சிறுவனும் ஆப்பிள் மரமும்
முன்னொரு காலத்திலே, காட்டின் நடுவே ஒரு விசாலமான ஆப்பிள் மரம் இருந்தது.ஒவ்வொரு நாளும் ஒரு சிறுவன் அந்த மரத்தருகே வருவான்.அவனுக்கு அந்த ஆப்பிள் மரத்தில் ஏறி விளையாடுவதென்றால் கொள்ளை ஆசை.மரத்தில் உச்சிக்கு தாவிச் செல்வான்;ஆப்பிள்களைப் பறித்துச் சாப்பிடுவான்;சில வேளைகளில் மரநிழலில் உறங்கவும் செய்வான்.அவன் அந்த மரத்தை நிரம்ப நேசித்தான்;ஆப்பிள் மரமும் சிறுவனுடன் ஆழ்ந்த நேசம் கொண்டிருந்தது.காலம் கடந்தது.சிறுவன் வளர்ந்தான்.இப்போதெல்லாம் அவன் மரத்துடன் விளையாட வருவதில்லை.
ஒரு நாள் அந்த சிறுவன் மீண்டும் வந்தான்.அவன் மிகுந்த கவலையுடன் காணப்பட்டான். ‘வா, விளையாடுவோம்’ ஆப்பிள் மரம் ஆவலோடு கேட்டது.’நான் நான் சின்னப்பிள்ளை அல்ல;இப்போதெல்லாம் நான் மரங்களோடு விளையாடுவதில்லை’ அவன் பதிலளித்தான்.
‘எனக்கு சில விளையாட்டுச் சாதனங்கள் வாங்க வேண்டும்,பணம் தேவை’
‘என்னை மன்னித்து விடு,என்னிடம் பணம் கிடையாது,ஆனால் என்னிடமுள்ள ஆப்பிள்களையெல்லாம் பறித்து விற்கலாம்,அப்போது உனக்குத் தேவையான பணம் வந்து விடும்.’
சிறுவன் சந்தோசத்துடன் ஆப்பிள் பழங்களை ஒன்று விடாமல் பறித்துக் கொண்டு துள்ளலுடன் மரத்தை விட்டகன்றான்.திருப்பி அவன் வரவேயில்லை.மரம் மிகுந்த துக்கத்துடன் காத்திருந்தது.
ஒரு முற்பகல் பொழுதொன்றில் சிறுவன் மரத்தினருகே வந்தான்;இப்போதோ அவன் வளர்ந்த மனிதன் குதூகலமடைந்தது. ‘விளையாடுவோம் வா’ ஆப்பிள் மரம் கேட்டது.”எனக்கு உன்னோடு விளையாட நேரமில்லை;என் குடும்பத்திற்காக நான் உழைக்க வேண்டியுள்ளது.எனது குடும்பத்திற்கு ஒரு வீடு தேவை. நீ எனக்கு உதவி செய்ய மாட்டாயா?” அந்த மனிதன் நம்பிக்கையோடு கேட்டான்.
“மன்னித்து விடு, என்னிடம் வீடு எதுவும் இல்லை.ஆனால் என்னுடைய கிளைகளை வெட்டி எடுத்து உனக்கொரு வீடு அமைத்துக் கொள்” மரம் அமைதியாகச் சொன்னது. அந்த மனிதன் ,ஆப்பிள் மரத்தின் எல்லாக் கிளைகளையும் ஒடித்துக் கொண்டு சந்தோஷத்தோடு திரும்பினான்.மனிதனின் திருப்தியில் மரம் மகிழ்ச்சியடைந்தது.ஆனால் அவன் திரும்பி வரவேயில்லை.மரம் மீண்டும் தனியனாகியது.துக்கம் அதன் தொண்டையை அடைத்தது.
ஒரு வெப்பமான கோடை நாளில் அந்த மனிதன் திரும்ப வந்தான்;மரத்திற்கோ மகிழ்ச்சி எல்லை கடந்தது.”வா விளையாடுவோம்” மரம் ஆர்வத்தோடு அழைத்தது. “எனக்கு வயதாகிக் கொண்டு வருகிறது.நான் கொஞ்சம் ஓய்வெடுக்க வேண்டும். நான் ஒரு தோணியிலேறி பயணம் செய்தால் கொஞ்சம் என் உள்ளத்தை ஆறுதல் படுத்திக் கொள்ளலாம்.உன்னிடம் தோணி இருக்கிறதா? “ மனிதன் கேட்டான். எனது உடலை வெட்டிக் குடைந்து ஒரு தோணி செய்து கொள்;அதிலே நீ நீண்ட தூரம் மகிழ்ச்சியாகப் பயணிக்கலாம்.” மரம் பெருந்தன்மையோடு சொன்னது. மனிதன் மரத்தை வெட்டி தோணி செய்தான்; அதில் அவன் பயணம் போனான்;நீண்ட காலம் அவன் வரவேயில்லை.
இறுதியாக, மிக நீண்ட காலத்திற்குப் பிறகு அந்த மனிதன் திரும்பவும் மரத்திடம் வந்தான்.” என் மகனே,என்னை மன்னித்து விடு, உனக்குத் தருவதற்கு என்னிடம் ஒன்றுமேயில்லை; ஆப்பிள்களும் இல்லை….’என மரம் சொல்ல ஆரம்பித்தது.”ஆப்பிள் “ சாப்பிட என்னிடம் பற்கள் இல்லை’ மனிதன் சொன்னான். “நீ ஏறி விளையாட என் உடலும் இல்லை” மரம் சொல்ல “அதற்கான வலிமை என்னிடம் இல்லை,எனக்கு வயதாகி விட்டது.” மனிதன் சொன்னான். “உனக்குத் தர ஒன்றுமேயில்லை,இருப்பதொன்றோ செத்துக் கொண்டிருக்கும் என் வேர்கள் தான்” மரம் கண்ணீருடன் சொன்னது.
“நல்லது,பழைய வேர்கள் ஓய்வெடுப்பதற்கான சிறந்த இடம்” மனிதன் சொல்ல மரம்” வா வந்து என் வேர்களில் உட்கார்ந்து ஓய்வெடு” அழைத்தது.
மனிதன் உட்கார்ந்தான்.
மரம் கண்ணீரோடு புன்னகைத்தது….
இந்தக் கதை எங்களனைவருக்குமானது.
மரம் எங்களது பெற்றோர்களை ஒத்திருக்கிறது.
நாங்கள் சிறுவர்களாக இருந்த போது எங்கள் தாய் தந்தையருடன் விளையாடுவதை விரும்பினோம்.
நாங்கள் வளர்ந்து விட்ட போது அவர்களை நீங்கினோம்; எங்களது கஷ்டங்களின் போது மட்டும் அவர்களை அணுகினோம்.
என்ன ஆனாலும் எங்கள் பெற்றோர்கள் எங்களுக்காக இருந்தார்கள்;எங்களை மகிழ்ச்சிப் படுத்த முடிந்த எல்லாவற்றையும் செய்தார்கள்.
இந்த மனிதன் மரத்துடன் கடுமையாக நடந்து கொண்டதாக நீங்கள் நினைக்கலாம்;ஆனால் நாங்கள் இப்படித்தான் எங்கள் பெற்றோருடன் நடந்து கொள்கிறோம்.அவர்கள் எங்களுக்குச் செய்வதை நாங்கள் பாராட்டுவதுமில்லை.காலம் கடந்த பின்னர் தான் அவர்களின் பெறுமதியை உணர்கிறோம்.
அல்லாஹ் எங்கள் குறைபாடுகளை மன்னித்து வழிகாட்டுவானாக.
“என் இறைவனே சிறு வயதில் எவ்வாறு என்னை இவர்கள் கருணையுடனும், பாசத்துடனும் வளர்த்தார்களோ அவ்வாறே இவர்கள் மீது நீ கருணை புரிவாயாக
ஒரு நாள் அந்த சிறுவன் மீண்டும் வந்தான்.அவன் மிகுந்த கவலையுடன் காணப்பட்டான். ‘வா, விளையாடுவோம்’ ஆப்பிள் மரம் ஆவலோடு கேட்டது.’நான் நான் சின்னப்பிள்ளை அல்ல;இப்போதெல்லாம் நான் மரங்களோடு விளையாடுவதில்லை’ அவன் பதிலளித்தான்.
‘எனக்கு சில விளையாட்டுச் சாதனங்கள் வாங்க வேண்டும்,பணம் தேவை’
‘என்னை மன்னித்து விடு,என்னிடம் பணம் கிடையாது,ஆனால் என்னிடமுள்ள ஆப்பிள்களையெல்லாம் பறித்து விற்கலாம்,அப்போது உனக்குத் தேவையான பணம் வந்து விடும்.’
சிறுவன் சந்தோசத்துடன் ஆப்பிள் பழங்களை ஒன்று விடாமல் பறித்துக் கொண்டு துள்ளலுடன் மரத்தை விட்டகன்றான்.திருப்பி அவன் வரவேயில்லை.மரம் மிகுந்த துக்கத்துடன் காத்திருந்தது.
ஒரு முற்பகல் பொழுதொன்றில் சிறுவன் மரத்தினருகே வந்தான்;இப்போதோ அவன் வளர்ந்த மனிதன் குதூகலமடைந்தது. ‘விளையாடுவோம் வா’ ஆப்பிள் மரம் கேட்டது.”எனக்கு உன்னோடு விளையாட நேரமில்லை;என் குடும்பத்திற்காக நான் உழைக்க வேண்டியுள்ளது.எனது குடும்பத்திற்கு ஒரு வீடு தேவை. நீ எனக்கு உதவி செய்ய மாட்டாயா?” அந்த மனிதன் நம்பிக்கையோடு கேட்டான்.
“மன்னித்து விடு, என்னிடம் வீடு எதுவும் இல்லை.ஆனால் என்னுடைய கிளைகளை வெட்டி எடுத்து உனக்கொரு வீடு அமைத்துக் கொள்” மரம் அமைதியாகச் சொன்னது. அந்த மனிதன் ,ஆப்பிள் மரத்தின் எல்லாக் கிளைகளையும் ஒடித்துக் கொண்டு சந்தோஷத்தோடு திரும்பினான்.மனிதனின் திருப்தியில் மரம் மகிழ்ச்சியடைந்தது.ஆனால் அவன் திரும்பி வரவேயில்லை.மரம் மீண்டும் தனியனாகியது.துக்கம் அதன் தொண்டையை அடைத்தது.
ஒரு வெப்பமான கோடை நாளில் அந்த மனிதன் திரும்ப வந்தான்;மரத்திற்கோ மகிழ்ச்சி எல்லை கடந்தது.”வா விளையாடுவோம்” மரம் ஆர்வத்தோடு அழைத்தது. “எனக்கு வயதாகிக் கொண்டு வருகிறது.நான் கொஞ்சம் ஓய்வெடுக்க வேண்டும். நான் ஒரு தோணியிலேறி பயணம் செய்தால் கொஞ்சம் என் உள்ளத்தை ஆறுதல் படுத்திக் கொள்ளலாம்.உன்னிடம் தோணி இருக்கிறதா? “ மனிதன் கேட்டான். எனது உடலை வெட்டிக் குடைந்து ஒரு தோணி செய்து கொள்;அதிலே நீ நீண்ட தூரம் மகிழ்ச்சியாகப் பயணிக்கலாம்.” மரம் பெருந்தன்மையோடு சொன்னது. மனிதன் மரத்தை வெட்டி தோணி செய்தான்; அதில் அவன் பயணம் போனான்;நீண்ட காலம் அவன் வரவேயில்லை.
இறுதியாக, மிக நீண்ட காலத்திற்குப் பிறகு அந்த மனிதன் திரும்பவும் மரத்திடம் வந்தான்.” என் மகனே,என்னை மன்னித்து விடு, உனக்குத் தருவதற்கு என்னிடம் ஒன்றுமேயில்லை; ஆப்பிள்களும் இல்லை….’என மரம் சொல்ல ஆரம்பித்தது.”ஆப்பிள் “ சாப்பிட என்னிடம் பற்கள் இல்லை’ மனிதன் சொன்னான். “நீ ஏறி விளையாட என் உடலும் இல்லை” மரம் சொல்ல “அதற்கான வலிமை என்னிடம் இல்லை,எனக்கு வயதாகி விட்டது.” மனிதன் சொன்னான். “உனக்குத் தர ஒன்றுமேயில்லை,இருப்பதொன்றோ செத்துக் கொண்டிருக்கும் என் வேர்கள் தான்” மரம் கண்ணீருடன் சொன்னது.
“நல்லது,பழைய வேர்கள் ஓய்வெடுப்பதற்கான சிறந்த இடம்” மனிதன் சொல்ல மரம்” வா வந்து என் வேர்களில் உட்கார்ந்து ஓய்வெடு” அழைத்தது.
மனிதன் உட்கார்ந்தான்.
மரம் கண்ணீரோடு புன்னகைத்தது….
இந்தக் கதை எங்களனைவருக்குமானது.
மரம் எங்களது பெற்றோர்களை ஒத்திருக்கிறது.
நாங்கள் சிறுவர்களாக இருந்த போது எங்கள் தாய் தந்தையருடன் விளையாடுவதை விரும்பினோம்.
நாங்கள் வளர்ந்து விட்ட போது அவர்களை நீங்கினோம்; எங்களது கஷ்டங்களின் போது மட்டும் அவர்களை அணுகினோம்.
என்ன ஆனாலும் எங்கள் பெற்றோர்கள் எங்களுக்காக இருந்தார்கள்;எங்களை மகிழ்ச்சிப் படுத்த முடிந்த எல்லாவற்றையும் செய்தார்கள்.
இந்த மனிதன் மரத்துடன் கடுமையாக நடந்து கொண்டதாக நீங்கள் நினைக்கலாம்;ஆனால் நாங்கள் இப்படித்தான் எங்கள் பெற்றோருடன் நடந்து கொள்கிறோம்.அவர்கள் எங்களுக்குச் செய்வதை நாங்கள் பாராட்டுவதுமில்லை.காலம் கடந்த பின்னர் தான் அவர்களின் பெறுமதியை உணர்கிறோம்.
அல்லாஹ் எங்கள் குறைபாடுகளை மன்னித்து வழிகாட்டுவானாக.
“என் இறைவனே சிறு வயதில் எவ்வாறு என்னை இவர்கள் கருணையுடனும், பாசத்துடனும் வளர்த்தார்களோ அவ்வாறே இவர்கள் மீது நீ கருணை புரிவாயாக
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: சிறுவனும் ஆப்பிள் மரமும்
கதையுடன் கூடிய விளக்கம் மிக :/
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சிறுவனும் ஆப்பிள் மரமும்
அருமையான பகிர்வு நன்றீ
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சிறுவனும் ஆப்பிள் மரமும்
மிக மிக அருமையாக உள்ளது :/
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|