சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Today at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Today at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 4:43

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

பருவ மழை மாற்றங்கள்… சமாளிப்பது எப்படி? Khan11

பருவ மழை மாற்றங்கள்… சமாளிப்பது எப்படி?

3 posters

Go down

பருவ மழை மாற்றங்கள்… சமாளிப்பது எப்படி? Empty பருவ மழை மாற்றங்கள்… சமாளிப்பது எப்படி?

Post by ராகவா Thu 26 Sep 2013 - 14:46

மாதம் மும்மாரி பொழிந்தது; நாடு செழித்தது; மக்கள் இன்பமுற இருந்தார்கள் என்று பழைய ராஜ கதைகளில் படித்து இருக்கிறோம்.
தற்போதைய ஆட்சி காலத்தில் மும்மாரி பொழியாவிட்டாலும், குறைந்தது தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த பலன் கொடுக்குமா? இல்லை, வடகிழக்கு பருவமழை கொஞ்சம் அதிகமாக பெய்து தென்மேற்கு பருவமழை ஏமாற்றியதை ஈடுகொடுக்குமா? என்று பாரி ஆராய்ச்சி நிலையத்தை ஆட்சியாளர்களும் கேட்க வேண்டிய சூழ்நிலைக்கு என்ன காரணம்?
ஒரு நாட்டின் மொத்த பொருளாதார வளர்ச்சியில் விவசாயம் சார்ந்த தொழில்கள் குறைந்த அளவு பங்களிப்பு, பருவமழை பொய்த்துவிட்டால் உணவுப்பொருட்கள் உற்பத்திக் குறைவு, விவசாயம் சார்ந்த தொழில்களில் ஏற்படும் பின்னடைவு, இவைகள் மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் பொருளாதார பின்னடைவை ஏற்படுத்தும்.
உணவு உற்பத்தி குறைய நேர்ந்தால் விலைவாசி உயர்வு அடையும், கிடைக்கின்ற குறைந்த அளவு நீர் மற்ற மாநிலங்கள் நீரை மற்ற மாநிலங்கள் பற்றாக்குறை காலங்களில் தர மறுப்பதனால் அண்டை மாநிலங்களுடனான நல்லுறவு பாதிக்கப்படுவது போன்றபிரச்சனைகள் தலைதூக்க ஆரம்பித்துவிடும்.
பருவமழை ஏன் சீராக பெய்வதில்லை? எதனால் இப்படி நேர்கிறது? என்று கேட்டால் உலகத்தின் பல பகுதிகளில் பருவமழை மாற்றம் அடைந்துகொண்டு தான் இருக்கின்றது.
ஆப்பிரிக்க நாடுகளில் பெரும் பஞ்சம், பருவமழை பெய்யாத காரணத்தால் பல விவசாயிகள் தங்கள் நிலங்களை விட்டு வேறு இடத்திற்கு இடம் பெயரும் சூழ்நிலை போன்றவற்றை பல வருடங்களாக ஊடகங்களில் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். இதேநிலை நமக்கும் வராது என்பதற்கான உத்திரவாதம் என்ன உள்ளது?
இந்த பருவமழை ஏமாற்றங்கள் பல வருடங்களாக நடந்துகொண்டு வரும் நிகழ்வுகள் தான். இப்போது நாம் பார்க்கும் வறட்சியான ஆப்பிரிக்க நாடுகள் ஒரு காலத்தில் மழை பெய்து செல்வ பூமியாக இருந்ததுதான். பருவமழை மாற்றத்தின் காரணமாக தற்போது வறண்ட பாலைவனமாக காட்சி அளிக்கிறது.
ஏன் தமிழகத்தில் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு சற்று முன்னோக்கிப்பார்த்தால், கோயம்புத்தூரில் சுற்றி உள்ள வீட்டுமனை நிலங்கள் ஒரு காலத்தில் நல்ல விளைநிலங்களாக பருத்தி, சோளம் போன்ற பயிர்களை விளைவிக்கும் விவசாய நிலங்களாகத் தான் இருந்தது. ஆனால் தற்போது கோவை குடிநீருக்கு அத்திகடவு திட்டம், பவானி ஆற்று நீர், கேரளாவில் மழை பெய்தால் தான் சிறுவாணி அணை நிரம்பும் என்று அனைவரும் குடிநீருக்கு எதிர்பார்த்து இருக்கும் நிலையில் உள்ளோம்.
கிணறுகள் எவற்றிலும் நீர் இல்லாமல், அவை குப்பைகளைக் கொட்டும் கிணறுகளாகத் தான் காணப்படுகின்றன. நிலத்தடி நீர்மட்டத்திற்கு 1000 அடி வரை ஆழ்குழாய் கிணறு போட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த மாற்றங்கள், மக்கள் நகரத்தை நோக்கி இடம்பெயர்ந்ததாலும், இருப்பிடத் தேவைக்காக ரியல் எஸ்டேட்களின் ஆக்கிரமிப்பாகவும் விளைநிலங்கள் உருமாறிவிட்டது. உண்மையான காரணம் பருவமழை குறைவை அறிந்த போதும், நிலத்தடி நீரைச் சேமிக்க தவறவிட்டோம். அதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைய ஆரம்பித்து இப்போது குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயகரமான நிலை உள்ளது.
உலக வெப்பமடைதல் காரணமாக, புவியில் வெப்பமான பகுதிகள் அதிக வெப்பமடைவதும், குளிர் நிறைந்த பகுதிகள் மேலும் குளிரடைவதையும் கடந்த ஐம்பது ஆண்டுகளில் காணமுடிகிறது. இது இன்னும் மோசமடைய வாய்ப்புகள் அதிகம் உள்ளது என புவியியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். உலக வெப்படைதலுக்கு உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளும் பொறுப்பேற்க வேண்டியுள்ளது. இதில் வளர்ச்சி அடைந்த நாடுகள் அதிக இயற்கை சேதங்களைச் செய்ததால் அவர்கள் பொறுப்பேற்க வேண்டும் என்று வளர்ச்சியடையாத நாடுகளும், மக்கள்தொகை அதிகம் உள்ள வளர்ச்சி அடையாத நாடுகள் இதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்று வளர்ந்த நாடுகளும் குறைகூறி வருகின்றன.எப்படி குறைகூறினாலும் பாதிக்கப்படுவதில் நாமும் உள்ளோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
பருவமழை மாற்றம் விவசாயத்தை பெரும் அளவில் பாதிக்கச் செய்கிறது. பல ஆயிரக்கணக்கில் விதை, ஈடுபொருட்கள் செலவு செய்து பயிரிடும் விவசாயிகள் பருவ மழையை நம்பி தங்கள் விதைகளை மண்ணில் பயிரிட்டு வானத்தை எதிர்பார்த்து காத்திருக்கும்போது பருவமழை கைகொடுக்காவிட்டால் ஒவ்வொரு விவசாயிக்கும் ஏற்படும் பாதிப்பு உயிரை கொடுக்கும் அளவிற்குச் சென்றுவிடுகிறது.
நம்மிடம் உள்ள நீர் ஆதாரங்களைப் பாதுகாக்க அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பருவமழை காலங்களில் கிடைக்கும் அனைத்து நீரையும் வீணாக்காமல் குளம், ஏரி ஆகியவற்றில் சேமிக்கும்போது நிலத்தடி நீர் பெருக அதிக வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் உள்ள விவசாயிகள் நீரின் முக்கியத்துவத்தை நன்கு அறிவார்கள். நீர் ஆதாரங்களைப் பாதுகாப்பது மட்டுமே இன்றைய பருவநிலை மாற்றத்தை சமாளிக்கக் கூடிய ஒரே தீர்வு!

நன்றி:தன்நம்பிக்கை
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

பருவ மழை மாற்றங்கள்… சமாளிப்பது எப்படி? Empty Re: பருவ மழை மாற்றங்கள்… சமாளிப்பது எப்படி?

Post by ahmad78 Fri 27 Sep 2013 - 9:28

நல்ல தகவல்கள்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

பருவ மழை மாற்றங்கள்… சமாளிப்பது எப்படி? Empty Re: பருவ மழை மாற்றங்கள்… சமாளிப்பது எப்படி?

Post by rammalar Fri 27 Sep 2013 - 9:55

அம்மா பத்து ரூபாய்க்கு ஒரு பாட்டில் குடிதண்ணீர்
வழங்குகிறார்கள்...
-
அடுத்து இலவசமாக அந்த தண்ணீர் பாட்டிலை
தருவதாக சொல்லும் கட்சிக்கு ஓட்டு போடுவோம்...!!!
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24046
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

பருவ மழை மாற்றங்கள்… சமாளிப்பது எப்படி? Empty Re: பருவ மழை மாற்றங்கள்… சமாளிப்பது எப்படி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum