சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30

» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07

» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38

» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38

ஹைக்கூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான் - Page 3 Khan11

ஹைக்கூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான்

+7
கவியருவி ம. ரமேஷ்
நண்பன்
பாயிஸ்
நேசமுடன் ஹாசிம்
ந.க.துறைவன்
Nisha
ராகவா
11 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

ஹைக்கூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான் - Page 3 Empty ஹைக்கூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed 26 Mar 2014 - 16:41

First topic message reminder :

ஹைக்கூ இலக்கணம்

‘ஹை’  என்பதற்கு  ஜப்பானிய  அடிச்  சொல்லுக்கு  அணுத்தூசி,  கரு,  முழுமையான  கரு  என்ற  பொருள்  உண்டு.  ‘கூ’  என்பது  சொற்றொடர்,  வெளிப்பாடு,  வாக்கியம்,  பகுதி,  ஒரு  வரி,  ஓர்  அடி,  ஒரு  செய்யுள்,  ஒரு  கவிதை  என்றும்  பொருள்  தருகிறது.

இவற்றை  இணைத்துப்  பார்க்கையில்  ஹைக்கூ  என்பது  கரு  போன்றும்,  உயிரணு  போன்றும்  உருவானதொரு  கவிதை  என்னும்  முழுப்பொருளைத்  தரும்.  மேலும்  வளர்ச்சிக்கும்  விரிவுக்கும்,  ஒரு  கருவுக்கு  உள்ளிருக்கும்  இன்னொரு  கவிதைக்  கருவைக்  காண்பதற்கும்  ஹைக்கூ  என்ற  சொல்  சிறப்பாக  அமைந்திருப்பதைக்  காணலாம்.

‘ஹைக்கூ’  ஜப்பானிய  மொழிக் கவிதை.  3  அடிகள்  கொண்டது. மூன்று  அடிகள்  கொண்ட  ஜப்பானிய  ஹைக்கூ  ஐந்து,  ஏழு,  ஐந்து  சீர்களைக்  கொண்டு  17  சீர்களில்  ஹைக்கூ படைக்கப்படும் (தமிழுக்கு  இந்த  சீர்  எண்ணிக்கை  தேவையில்லை). ஜென்  தத்துவத்தோடு  இயற்கை  மற்றும்  மெய்யியலோடு  தொடர்பு  கொண்டது. கவித்துவம்  கொண்டது.  இந்தியாவின்  (தமிழ்நாடு  உள்பட)  சூழலுக்கு  ஜப்பானிய  ஹைக்கூவின்  உள்ளடக்கக்  கோட்பாடு  பொருந்தி  வராது  என்ற  போதிலும்  எப்படியோ  இந்தியாவில்  (தமிழ்நாடு  உள்பட)  ஓர்  இலக்கிய  வடிவமாக  /  கவிதையாக   இடம்  பிடித்துவிட்டது.  பெரும்பான்மையாக  தமிழ்நாட்டு ஹைக்கூ  3  அடிகள்  கொண்டு  எழுதப்படுகிறது.  அவ்வாறு  3  அடிகள்  கொண்டு  எழுதப்படுவதை  தமிழ்  அறிஞர்களால்  ஏற்றுக்கொள்ளப்பட்டதோடு    ‘ஹைக்கூ’  வடிவமாகவும்  அங்கீகரித்துள்ளார்கள்.  

இந்தியாவின்  (தமிழ்நாடு  உள்பட)  சூழலுக்கு  ஜப்பானிய  ஹைக்கூவின்  உள்ளடக்கக்  கோட்பாடு  பொருந்தி  வராது  என்ற  போதிலும்  தமிழ்  ‘ஹைக்கூ’ இயற்கை, மெய்யியல்  மற்றும்  கவித்துவம், குறியீடு,  படிமம்,  தொன்மம்  ஆகியவற்றையும்  அவற்றின்  வகைகளையும்  கருத்துச்  செறிவையும் கொண்டதாக  இருப்பது  சிறப்பு.  இன்று  எழுதப்படுவதெல்லாம்  ‘புதுக்கவிதை’  என்பது  போல  ‘ஹைக்கூ’  பற்றிய  சரியான  புரிதல்  இல்லாமல்  3  அடிகள்கொண்டு  எழுதப்படுவது  எல்லாம்  ‘ஹைக்கூ’  என்பதால்  ஹைக்கூவின்  உள்ளடக்கம்  தாழ்ந்துபோய்  உள்ளது.   ஜப்பானிய  ஹைக்கூவின்  தமிழ்  மொழிபெயர்ப்பை  தவிர்த்து  விட்டால்  1974ல்  கவிக்கோ  அப்துல்  ரகுமான்  தமிழில்  முதன்முதலாக  ஹைக்கூ  படைத்துள்ளார்.  இன்று  பல  ஆயிரம்  பேர்  தமிழில்  ஹைக்கூ  எழுதி  வருகிறார்கள்.  தமிழில் ‘ஹைக்கூ’விற்கென்றே  சில  தனி  சிற்றிதழ்கள்  வெளிவந்து  கொண்டுள்ளன.

இன்றைய  ஹைக்கூக்  கவிஞர்கள்  பெரும்பான்மையினர்  தங்களை  ஹைக்கூக்  கவிஞர்கள்  என்று  கூறிக்  கொள்ள  வேண்டும்  அல்லது  தொடர்ந்து  ¨ஹைக்கூவிற்குள்  இயங்கிக்  கொண்டிருப்பதாகக்  காட்டிக்  கொள்ள  வேண்டும்  என்ற  தன்முனைப்புக்காகச்  சென்ரியு  வகைக்  கவிதைகளை  நிறைய  படைத்து  அதனை  ஹைக்கூ  என்று  பெயரிட்டு  வெளியிட்டு  வருகிறார்கள்  என்பது  உண்மை.  இதன்  காரணமாகச்  சென்ரியு  என்ற  ஒரு  வடிவம்  இருப்பதை  அவர்களால்  வெளிக்காட்டாமல்  இருட்டடிப்பும்  செய்யப்படுகிறது.  இந்த  நிலை  இன்னும்  ஓராண்டுவரை  நீடித்தால்  கூட  சென்ரியு  கவிதைகள்  தான்  தமிழின்  ஹைக்கூக்  கவிதைகள்  என்று  வாசகர்கள்  மனத்தில்  பதிந்துபோய்விடும்.  

ஜப்பானிய  மொழியில்  இன்னும் - இன்றும்  ஹைக்கூ,  ஹைக்கூவாகவேதான்  இருக்கிறது.  ஹைக்கூவை எழுத முடியாதவர்கள் சென்ரியு வகையை நாடிச் சென்றுவிடுகிறார்கள். ஹைக்கூவின்  பிறிதோரு  வகையான  நகைச்சுவை,  வேடிக்கை,  சமூக  கேலி  கிண்டல்களை  உள்ளடக்கமாகக்  கொண்டதுதான்  சென்ரியு.  

இந்தியாவில்  குறிப்பாகத்  தமிழ்நாட்டில்  ஹைக்கூ  கவிஞர்கள்  என்று  குறிப்பிட்டுக்  கொள்ளும்  பலரும்  தங்களை  முன்னிலைப்படுத்திக்  கொள்ளவேண்டும்.  ஆயிரக்கணக்கான  ஹைக்கூக்கள்  படைத்துள்ளதாகக்  காட்டிக்கொள்ளவேண்டும்  என்ற  போலியான  /  தன்முனைப்பால்(Ego) சென்ரியு  வகை  கவிதைகளைப்  படைத்து  ஹைக்கூ  என்ற  தலைப்பில்  கவிதைத்  தொகுதியாக  வெளியிட்டுக்  கொண்டிருக்கிறார்கள்.  ஹைக்கூவின்  உள்ளடக்கம்  வேறு.  சென்ரியுவின்  உள்ளடக்கம்  வேறு  என்று  ஹைக்கூ  பற்றி  அவர்களுக்குத்  தெரிந்திருந்தும்,  உண்மையான  ஹைக்கூவை  எழுத  (நிறைய  எழுத)  முடியாதக்  காரணத்தால்  சென்ரியு  வகைக்  கவிதைகளை  எழுதிக்  குவித்துவிட்டு  ஹைக்கூ  என்று  சொல்லிக்  கொள்கிறார்கள்.  தவறான  வழிகாட்டியாவும்  திகழ்ந்து  கொண்டிருக்கிறார்கள்.  

தமிழ்நாட்டில்  ஒருவர்  எழுதிய  ஹைக்கூக்  கவிதைகளின்  எண்ணிக்கையைக்  கணக்கிட்டுதான்  ‘ஹைக்கூக்  கவிஞர்’  என்று  அழைக்கின்றனர்  அல்லது   பட்டம்  கொடுக்கப்படுகிறது.  இது  தவறு.  ஒருவர்   ஓரிரு  ஹைக்கூவைச்  சிறப்பாகப்  படைத்தாலும்  அவர்  ஹைக்கூக்  கவிஞர்தான்  என்று  ஏற்றுக்  கொள்ளும்  ஜப்பானியர்களின்  மனநிலை  தமிழ்நாட்டிலும்  பரவலாக்கப்பட  வேண்டும்.

ஹைக்கூ  மரபுகள்

1.  ஹைக்கூ மூன்று  வரியாக  இருக்க  வேண்டும். (ஒரு  வாக்கியத்தையே  பிரித்து  மூன்று  அடியாக்கி  ஹைக்கூ  எழுதக்  கூடாது.  ஹைக்கூவில்  ஒவ்வொரு  அடியும்  ஒரு  வாக்கியம் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.)
2.  ஹைக்கூவுக்குத்  தலைப்பிட்டு  எழுதக்  கூடாது.  ஒரு  ஹைக்கூவிற்கு  இரண்டுக்கு  மேற்பட்ட  அல்லது  குறைந்த  பட்சம்  இரண்டு  உட்கருத்தாவது  (குறியீடு  போல;  உட்பொருள்)  இருக்க  வேண்டும். (ஹைக்கூவுக்குத்  தலைப்பிடக்கூடாது  என்பதற்கானக்  காரணம்  இதுதான்.  தலைப்பைத்  தாண்டிச்  சிந்திப்பதைத்  தடை  செய்கிறது.  ஒரு  ஹைக்கூவின்  உட்பொருள் (குறியீடு போல்)  விரிந்து செல்வதாக  இருக்க  வேண்டும்.  தமிழ்நாட்டு ஹைக்கூக்கள்  பெரும்பான்மையும்  ஒற்றைப்  பரிமாணத்தில்தான்  வருகின்றன.  ஒரு  உண்மையான  ஹைக்கூ  குறைந்தபட்சம்  இரண்டு  உட்பொருளையாவதுத்  தாங்கி  இருப்பது  சிறப்பு.)

கவிக்கோ  அப்துல்  ரகுமான்  கூற்று:
ஹைக்கூவில்  நாம்  கடைபிடிக்க  வேண்டிய  மூன்று  முக்கிய  மரபுகள்  உண்டு.
1.ஹைக்கூவில்  முதல்  அடி  ஒரு  கூறு.  ஈற்றடி  ஒரு  கூறு. ஹைக்கூவின்  அழகும்  ஆற்றலும்  ஈற்றடியில்தான்  உள்ளது.  ஈற்றடி  ஒரு  திடீர்  வெளிப்பாட்டை,  உணர்வு  அதிர்ச்சியை  ஏற்படுத்தி  முழுக்  கவிதையையும்  வெளிச்சப்படுத்த  வேண்டும்.
2.மற்றொரு  மரபு  ஹைக்கூவின்  மொழி  அமைப்பு.  ஹைக்கூவின்  மொழி  ஊழல்  சதையற்ற  மொழி.  தந்தி  மொழியைப்  போல்,  அவசியமற்ற  இணைப்புச்  சொற்களை  விட்டு  விட  வேண்டும். (ஹைக்கூ  எளிய  சொற்கள்  கொண்டும்  குறைந்த  வார்த்தைகளைக்  கொண்டும்  இருப்பது  சிறப்பு.  படைப்பாளர்  எல்லாவற்றையும்  விவரித்துக்கொண்டு  இருக்கக்கூடாது.  விவரிப்பது  வசனம்  அல்லது  புதுக்கவிதையின்  வேலை.)
3.உயிர்  நாடியான  ஈற்றடியில்  ஆற்றல்  மிக்க  வெளிப்பாட்டிற்காகப்  பெயர்ச்  சொல்லையே  பயன்படுத்த  வேண்டும்.

மேற்கண்டவற்றை  ஹைக்கூப்  படைப்பாளர்கள்  கடைபிடிக்க  வேண்டும்.  ஏனென்றால்  ஹைக்கூவின்  அடையாளமும்,  அழகும்,  ஆற்றலும்  இவற்றில்தான்  இருக்கின்றன.

ஹைக்கூ  வாசிப்பு  முறை
ஹைக்கூவை  முறையாக  எப்படி  வாசிக்க  வேண்டும்  என்ற  புரிதல்  ஹைக்கூ  எழுதுபவர்களுக்குக்  கூட  தெரியாமல்  இருப்பது  வினோதமானது.  3  அடிகள்  கொண்ட ஹைக்கூவை  முதல்  இரண்டு  அடிகளை  தொடர்ந்து  படித்து  நிறுத்த  வேண்டும்(மூன்றாவது  அடியைப்  படிக்கக்  கூடாது).  மீண்டும்  முதல்  இரண்டு  அடிகளை  படித்து  நிறுத்தி  மூன்றாவது  அடியைப்  படிக்க  வேண்டும்.  அப்படிப்  படிக்கும்  போது  அந்த  இறுதி  அடி  எதிர்பாராதத்  திருப்பம்  கொண்டதாக  இருக்க  வேண்டும்.  இப்போது ஹைக்கூ  எழுதுபவர்கள்  இந்த  எளிமையான  முறையை  மட்டுமே  கடைபிடித்தால்  கூட  அவர்கள்  எழுதும் ஹைக்கூவை  மேலும்  சிறப்பாகப்  படைக்க  முடியும்.


Last edited by கவியருவி ம. ரமேஷ் on Thu 27 Mar 2014 - 18:09; edited 2 times in total
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down


ஹைக்கூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான் - Page 3 Empty Re: ஹைக்கூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான்

Post by கவியருவி ம. ரமேஷ் Tue 17 Jun 2014 - 4:24

ஹைக்கூ எழுதலாம் வாங்க – 15

மரக்கிளையிலிருந்து
விழுவதாய் பயப்படும் குஞ்சுகள்
தாவி விளையாடும் குரங்குகள்
 
மரக்கிளையிலிருந்து
விழுவதாய் பயப்படும் குஞ்சுகள்
 
மரக்கிளையில் ஏதோ ஒரு பறவை கூடுகட்டி குஞ்சு பொறித்துள்ளது. குஞ்சுகள் மரக்கிளையிலிருந்து விழுவதாய் அச்சப்படுகின்றனவே ஏன்? பலத்தக் காற்றா? யாராவது மரத்தை வெட்டுகிறார்களா? பயப்படும்படி குஞ்சுகளை விட்டுவிட்டு தாய்ப் பறவை எங்கே சென்றது? ஏன் இன்னும் கூடு திரும்பவில்லை? என்று நீள்கிறது முதல் இரண்டு அடிகள். மூன்றாவது அடியில் “தாவி விளையாடும் குரங்குகள்” என்று படிக்கும்போது மனது நிம்மதியாகிறது. அப்படியானால் குஞ்சுகள் விழ வில்லை. குரங்குகள்தான் அவை பயப்படும்படி விளையாடுகின்றன. குரங்குகளுக்கு விளையாட்டு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. குஞ்சுகளுக்கு அச்சத்தைக் கொடுத்துள்ளது. தாய்ப் பறவைக்கு குரங்குகளின் விளையாட்டு வாடிக்கையாகிவிட்டிருக்கும். குஞ்சுகள்தான் பழக்கிக்கொள்ள வேண்டும்.
 
மரக்கிளையிலிருந்து
விழுவதாய் பயப்படும் குஞ்சுகள்
தாவி விளையாடும் குரங்குகள்
©    -கவியருவி ம.ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

ஹைக்கூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான் - Page 3 Empty Re: ஹைக்கூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான்

Post by கவியருவி ம. ரமேஷ் Mon 23 Jun 2014 - 4:08

ஹைக்கூ எழுதலாம் வாங்க – 16
 
கையெடுத்து கும்பிடும்
கிராமத்துப் பாட்டி
 
கிராமத்துப் பாட்டி என்று எப்படிக் கண்டுபிடிக்க முடிந்தது? சரி… ஏன் அந்தப் பாட்டி கை எடுத்து கும்பிடுகிறார்? எங்கு நின்று கும்பிடுகிறார்? யாரைப் பார்த்துக் கும்பிடுகிறார்? விலாசம் எதாவது தவறியிருக்குமோ? கையெடுத்துக் கும்பிட்டு பிச்சைகிச்சை எடுத்துக்கொண்டு இருக்குமோ? பெற்ற பிள்ளைகளிடமே எதற்காகவாவது கெஞ்சிக்கொண்டு இருக்குமோ? என்று எவ்வளவோ பொருள் இருக்கலாம் அந்தப் பாட்டியின் கை எடுத்து கும்பிடுதலுக்கு. எல்லாரும் ஏதோ ஒரு இடத்தில் இந்த நிகழ்ச்சியைக் கண்டிருக்கலாம். பாட்டி எதற்காகவோ இரந்து நின்றால் அது சென்ரியூ. எந்த உதவியும் கேட்காமலிருந்தால் அது ஹைக்கூ. சரி மூன்றாவது அடிக்கு வருவோம்.
 
கையெடுத்து கும்பிடும்
கிராமத்துப் பாட்டி
மங்கிய சூரிய ஒளி
 
அப்பாடா… மங்கிய சூரிய ஒளி தானா? ஓகோ… அந்தப் பாட்டி சூரியனை வணங்கி இருக்கிறார். மங்கிய சூரிய ஒளி என்ற மூன்றாவது அடிக்கு வருவோம். ஏன் மங்கலாகத் தெரிகிறது. பாட்டி வயதாகிவிட்டதன் காரணமா? கண் குறைபாட்டின் காரணமா? அல்லது சூரியனே மங்கலாகத் தெரிந்தானா?
 
சரி… ஹைக்கூவை இன்னும் சுருக்கலாம் இப்படி:
 
இரண்டாவது அடியில் கிராமத்துப் பாட்டி என்று இருப்பதை பாட்டி என்று சுருக்கிக்கொள்கிறேன். காரணம் கிராமம் என்ற சொல் இடம் பெற்றதால் அது நகரத்துப் பாட்டிகளை தவிர்த்துவிடுகிறது. முதல் அடியில் இருக்கும் கும்பிடும் என்பதை இரண்டாவது அடிக்கு மாற்றிக் கொள்கிறேன்.
 
கையெடுத்து
கும்பிடும் பாட்டி
மங்கிய சூரிய ஒளி
©    -கவியருவி ம.ரமேஷ்

(என் பாட்டி இறக்கும் வரையில் சூரியனை வணங்கியதைக் காலைப் பொழுதில் கண்டிருக்கிறேன். அதை நினைத்து எழுதிய கவிதை இது. நீங்களும் உங்கள் பாட்டியை நினைத்து ஒரு ஹைக்கூ அல்லது சென்ரியூ எழுதி பகிருங்களேன்.)
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

ஹைக்கூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான் - Page 3 Empty Re: ஹைக்கூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான்

Post by rammalar Mon 23 Jun 2014 - 5:42

ஹைகூ விளக்கம் அருமை...
-
ஹைக்கூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான் - Page 3 Mundasupatti%20Movie%20Stills%20%2823%29
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23938
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

ஹைக்கூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான் - Page 3 Empty Re: ஹைக்கூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான்

Post by jaleelge Mon 23 Jun 2014 - 15:14

rammalar wrote:ஹைகூ விளக்கம் அருமை...
-
ஹைக்கூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான் - Page 3 Mundasupatti%20Movie%20Stills%20%2823%29

மிக அருமையாகவும்...

மிக எழிமையாகவும்...

விளக்கம் தரும் பணி...

என்றும்...இளம் சமூகத்தின் திறனை மட்டுமல்ல.....

எமது புலமையையும் பட்டை தீட்டினோம் என்றால் மிகையாகாது....
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

ஹைக்கூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான் - Page 3 Empty Re: ஹைக்கூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான்

Post by கவிப்புயல் இனியவன் Mon 23 Jun 2014 - 15:53

ஆகா அருமையான ஒன்று கூடல் 
மற்றும் பயிற்சி பட்டறை 
சிறப்பான விளக்கத்துடன் 
ஹைக்கூ 
பாராட்டுக்கள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

ஹைக்கூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான் - Page 3 Empty Re: ஹைக்கூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான்

Post by jasmin Mon 23 Jun 2014 - 16:01

ஹைக்கூவும் அருமை கை காட்டும் கன்னியும் அருமை .....
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

ஹைக்கூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான் - Page 3 Empty Re: ஹைக்கூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான்

Post by jaleelge Mon 23 Jun 2014 - 18:45

jasmin wrote:ஹைக்கூவும் அருமை கை காட்டும் கன்னியும் அருமை .....

ஜெஸ்மின் உங்களுக்கு ஏன் ...

கை காட்டும் கன்னியும் வர்ணிக்கத் தேவையில்லை....

அதனை வர்ணிக்கும் உரிமை எமக்கே !!!!

அதனை  மறந்திடாதீங்க....
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

ஹைக்கூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான் - Page 3 Empty Re: ஹைக்கூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான்

Post by கவியருவி ம. ரமேஷ் Mon 23 Jun 2014 - 19:08

கருத்துரைகளுக்கு நன்றியும் மகிழ்ச்சியும்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

ஹைக்கூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான் - Page 3 Empty Re: ஹைக்கூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான்

Post by jaleelge Mon 23 Jun 2014 - 19:10

கவியருவி ம. ரமேஷ் wrote:கருத்துரைகளுக்கு நன்றியும் மகிழ்ச்சியும்...

உங்களுக்கு....

மனம் நிறைந்த வாழ்த்துக்கள்...
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

ஹைக்கூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான் - Page 3 Empty Re: ஹைக்கூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான்

Post by கவியருவி ம. ரமேஷ் Mon 21 Jul 2014 - 5:13

ஹைக்கூ எழுதலாம் வாங்க – 17
 
குளத்தில் முகம் அளம்பி
மொட்டுக்களைப் பார்த்தேன்
மலரத் துவங்கியது
-       கவியருவி ம.ரமேஷ்

நேரடியாக 3 வது அடிக்குச் செல்கிறேன்: மலரத் துவங்கியது எது?  மனசா? தாமரையா? என்ற கேள்வி எழலாம். மனசு சரியில்லை என்று கோயிலுக்குச் சென்றிருந்திருக்கலாம். அந்த மனசு மலர்ந்திருக்கலாம். அவருக்குப் புதிய சிந்தனைகூட  மலர்ந்திருக்கலாம். ஏன் தாமரையே கூட மலர்ந்திருந்திருக்கலாம். அவர் சென்றது காலை நேரமாக இருந்திருக்கலாம் அப்போது சூரியன் வர தாமரை மலரத் துவங்கி இருக்கலாம். 2,3 ஆம் அடிகளைச் சேர்த்துப் பார்த்தால் (மொட்டு) – காதலியின் நினைவோ  – காம நினைவுவோ கூட  மலரத் துவங்க வாய்ப்பிருந்திருக்கும்… எனக்கு இப்படியான சிந்தனைகள்… உங்களுக்குள் என்னென்னவோ… முடிந்தால் சொல்லுங்கள் – ஒரு ஹைக்கூ எழுதுங்கள். மகிழ்வேன்.
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

ஹைக்கூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான் - Page 3 Empty Re: ஹைக்கூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed 30 Jul 2014 - 4:26

ஹைக்கூ எழுதலாம் வாங்க – 18

வயல்வெளி
பசுமையாய் தெரிகிறது
உயர்ந்து நிற்கும் காடு
- கவியருவி ம.ரமேஷ்

வயல்வெளியின் பசுமை கண்களை கவ்விக்கொள்ளும்… அத்துணை அழகு… மழையின்றி வயல்வெளிகள் வறண்டு போயிருப்பதை காண்கிறோம். மனம் வருந்துகிறோம். ஹைக்கூவில் வயல்வெளி பசுமையாக இருக்கிறது (முதலிரண்டு அடிகளில்). ஒரு சமயம் மழைக் காலமாக இருக்கலாம் போல. பசுடையாக என்ன தெரிகிறது என்றுதான் நமக்குத் தெரியவில்லை – எந்தப் பயிர் வகை என்பதும் புரியவில்லை… நெல், கம்பு, சோளம், கரும்பு, வாழை என்று எதாவது இருக்கும்போல… எது இருந்தால் என்ன? பசுமையாக இருக்கிறது என்றால் அந்த நிலப்பரப்பின் விவசாயியும் வருமானம் பார்ப்பான் அவன் மனசும் பசுமையாக இருக்கும் என்று நம்புவோம். 

ஆனால், 3 அடியில் உயர்ந்து நிற்கும் காடு என்று இருக்கிறதே!. அப்போது வயல்வெளி (இரண்டு மூன்றாம் அடிகள்)? மேற்கண்ட பயிர் வகைகள் எதுவும் இல்லையா? காடுதான் பசுமையாக இருக்கிறதா? வயல்வெளி தரிசாக இருக்குமோ? அல்லது வயல்வெளி வீட்டு மனைகளாக்கப்பட்டு இருக்குமோ? காடுகளை அழித்து  வீட்டு மனைகள் போடுவதை கண்டிருக்கிறோமே… தெரியவில்லை. உங்களுக்குத் தெரிந்தபடி ஒரு ஹைக்கூ எழுதுங்கள்.  

வயல்வெளி
பசுமையாய் தெரிகிறது
உயர்ந்து நிற்கும் காடு
- கவியருவி ம.ரமேஷ்

கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

ஹைக்கூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான் - Page 3 Empty Re: ஹைக்கூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான்

Post by கவியருவி ம. ரமேஷ் Thu 4 Sep 2014 - 12:00

ஹைக்கூ எழுதலாம் வாங்க – 19

சுடுமணல்; மரமேதும் இல்லை
குயிலின் மெல்லிசை!
புல்லாங்குழல் விற்பவன்.
 

முதல் இரண்டு அடிகளில் சுடுமணல், மரம் இல்லை, குயிலின் மெல்லிசையை படிக்கிறோம். சுடுமணல் என்பதால் ஆறு நினைவுக்கு வருகிறது. மரம் ஏதும் இல்லை என்பதால் நிழல் இல்லை அதனால் மணல் சூடாக இருக்கும் என்ற முடிவுக்கும் வந்துவிடுகிறோம். மரம் இல்லை என்றால் குயிலின் மெல்லிசை எங்கிருந்து வந்திருக்கும்? அப்போது குயில் எங்கு அமர்ந்து பாடியிருக்கும் என்று மனம் சிந்திக்கும்போது மூன்றாவது அடியைப் படிக்கிறோம்.  ‘புல்லாங்குழல் விற்பவன்’ என்றிருக்கிறது. அப்படியென்றால் அவன் கடற்கரையில் புல்லாங்குழலில் குயிலின் இசையை எழுப்பி பாடுகிறான். புல்லாங்குழலின் இசையும் குயிலின் இசையும் ஒன்றாகிவிடுமா என்ன? ஆகாதுதானே? இப்படிச் சிந்தித்து ஒரு ஹைக்கூ எழுதுங்கள் பார்ப்போம். (முதல் அடியில் ‘சுடுமணல்’ வலிந்துதான் சேர்க்கப்பட்டுள்ளது. மூன்றாவது அடியின் பொருள் சிறக்க. சுடுமணலில் – நண்பகல் வேலையிலும் அவன் கடற்கரையில் உழைப்பதை எடுத்துக்காட்ட.)
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

ஹைக்கூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான் - Page 3 Empty Re: ஹைக்கூ எழுதலாம் - நீங்களும் கவிஞர்தான்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum