Latest topics
» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்by rammalar Today at 15:11
» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Today at 11:39
» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26
» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு
+6
பானுஷபானா
ahmad78
ராகவா
Nisha
*சம்ஸ்
rammalar
10 posters
Page 2 of 4
Page 2 of 4 • 1, 2, 3, 4
மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு
First topic message reminder :
பொறாமை
-
-
பொறாமையாக இருந்தது
அவள் மீது
பட்டுத் தெறித்த
மழைத் துளியைப்
பார்த்து..!
-
-------------------------
>அ.குணசேகரன் (குடும்ப மலர்)
பொறாமை
-
-
பொறாமையாக இருந்தது
அவள் மீது
பட்டுத் தெறித்த
மழைத் துளியைப்
பார்த்து..!
-
-------------------------
>அ.குணசேகரன் (குடும்ப மலர்)
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24188
மதிப்பீடுகள் : 1186
லாவகம்..
-
மெல்லிய
காற்றிற்கும்
உதிர்ந்து விடுகின்றன
வேப்பம் பூக்கள்
-
கிளைகளை அசைக்காமல்
பூக்களும் உதிராமல்
மரமேறும் லாவகம்
கற்றறியவேண்டும்
-
நத்தைகளைப்
பின் தொடர்ந்தேனும்
----------------------------------
>மு.முருகேஷ்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24188
மதிப்பீடுகள் : 1186
கூச்சம்
-
அவசரமாய்
கதவைத் தள்ளி
உள் நுழைகையில்
ஜாக்கெட்டோ, புடவையோ
மாற்றிக் கொண்டிருக்கும்
அம்மா, அக்காவைப்
பார்த்து விட்டால்
பதற்றமாகி
கூசிப் போகிற மனசு
-
நின்று ரசிக்கிறது -
ஆடைகளற்ற
நடிகையின் சுவரொட்டியை
நடுரோட்டில் நின்று.
-
-----------------------
>மு.முருகேஷ்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24188
மதிப்பீடுகள் : 1186
மினிபஸ் காலம்
-
'ரொம்பத்தான்
ஊரு கெட்டுப் போச்சு
-
ஏதாச்சும் ஒண்ணுன்னா
ஒடனே தூக்கிக்க்கிட்டு
டவுனுக்கு ஓடிடறானுங்க
-
முன்னெல்லாம்
கோவிலுக்கு கொண்டாந்து
கற்பூரங் கொளுத்தி
தட்டுல ஒண்ணே கால் ரூவா
தட்சணைப் போட்டு
விபூதி
பூசிக்கினு போவாங்கெ
-
ம்...ம்ஹூம்..
இப்பத்தான்
கலிகாலம் முத்திப் போச்சே...''
-
தனக்குள்ளேயே
மெல்ல முணுமுணுத்துக் கொள்கிறார்
கோவில பூசாரி.
-
-----------------------------------
>மு.முருகேஷ்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24188
மதிப்பீடுகள் : 1186
அடடே..!
-
அழகான பொய்
கவிதை..!
மிக மிக
அழகான பொய்
காதல் கவிதை..!
-
-----------------------
>செ.அ.ராகுல்
நன்றி: குடும்ப மலர்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24188
மதிப்பீடுகள் : 1186
கேள்வி
-
-
பெண்ணே!
உன்னையே மையமாக வைத்து
என் வாழ்க்கை
இருக்க வேண்டும் என
விரும்புகிறாய்
என் உணர்வுகளை எரித்து
என்னை இயந்திரப்படுத்துகிறாய்
உடலை எரிப்பதற்கு பெயர் சதி
என்றால் இதற்கு பெயர் என்ன?
-
-----------------------------
>போ வீனஸ் மனோஜ்
நன்றி: குடும்ப மலர்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24188
மதிப்பீடுகள் : 1186
மாற்றம்..
-
பயிரின் வாழ்விடம்
உயிரின் வாழிடமானது
விவசாய நிலத்தில்
குடியிருப்பு
-
---------------------------
>ஈ.கார்த்திகேயன்
நன்றி: குடும்ப மலர்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24188
மதிப்பீடுகள் : 1186
முரண் ...
-
ஆற்றில் தண்ணீர் ஓடியது
அந்தக் காலம்
ஆற்றில் மணல் லாரிகள்
ஓடுவது இந்தக் காலம்..!
-
______________________
>தென்கரை சி.சங்கர்
நன்றி: குடும்ப மலர்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24188
மதிப்பீடுகள் : 1186
பாவம்...
-
யானை கட்டி போர் அடித்த
விவசாயி
இன்று
மலிவு விலை அரிசி
இலவச அரிசி வாங்க
ரேசன்கடை வரிசையில்
-
------------------------
>அ.குணசேகரன்
நன்றி: குடும்ப மலர்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24188
மதிப்பீடுகள் : 1186
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
தவளை குதித்தது ,நீரின் ஒலி...
உறங்கவேயில்லை
நிலத்தை விற்ற அந்த இரவில்
தவளைகளின் அழைப்பு
-
-ஹொகுஷி
-
-------------------------------
பழைய குளம்
தவளை குதித்தது
நீரின் ஒலி
-
-பாஷோ
-
---------------------------------
-
ஒலி வரையும் காட்சி
பாம்பின் வாய்க்குள்
போகும் தவளை
-
--அறிவுமதி
--------------------------
-
அடைமழை
நச்சரிக்கும் தவளைகள்
குளம் விழுங்கிப்போகும் வெள்ளம்
-
--------------------------------
(படித்ததில் பிடித்தது)
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24188
மதிப்பீடுகள் : 1186
நினைவில் நீ..
விடிய விடிய மழை
மனம் வலிக்கப் பூக்கள்
தவளைகளின் பாடல்
-
-------------------------------
-
காத்திருந்து
அலுத்து காதுக்கு
தவளை சப்தங்கள் மட்டும்
-
-------------------------------
-
மழையைப் பாராட்டி
புதரிலிருந்து
தவளைகளின் பாடல்
-
--------------------------------
-
பட்டணத்தில் மழை
எதிர்பார்த்து ஏமாந்தேன்
தவளைகளின் பாடல்
-
------------------------------
-
சீனர் உணவகம்
மூடிய வாளிக்குள்
எட்டிப்பார்க்கும் தவளைகள்
-
---------------------------------
-
கொட்டும் மழை
கத்தும் தவளை
நினைவில் நீ...
-
-----------------------------
(படித்ததில் பிடித்தது)
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24188
மதிப்பீடுகள் : 1186
பிரிதல் என்பது நரகமடி
-
விலகி இருவர் தனித்து இருக்க
எத்தனை யெத்தனை துயரமடி
விழிகள் வெறிக்க வாழ்க்கை கசக்க
மனதில் எல்லாம் வெறுமையடி
-
உலகின் அழகு, ரசனை, கவிதை
எல்லாம் மாயை ஆனதடி
உள்ளம் ஒன்றிய காதலர் எவர்க்கும்
பிரிதல் என்பது நரகமடி
-
எந்தன் அருகே நீயும் இருந்தால்
எல்லாம் இங்கே இன்பமடி
என்றும் எனது கவிதைச் சிறகுகள்
உன்னை நினைத்தே விரியுமடி
-
எரியும் தீயை அணைக்கும் நதியே
விரைந்து நானும் வந்திடுவேன்
எந்தன் நிலைதான் உனக்கும் அங்கே
என்னை முழுதாய் தந்திடுவேன்
-
-----------------------------------
>ஜா.சம்பத்
கவிதை அலைகள்...
விலகி இருவர் தனித்து இருக்க
எத்தனை யெத்தனை துயரமடி
விழிகள் வெறிக்க வாழ்க்கை கசக்க
மனதில் எல்லாம் வெறுமையடி
-
உலகின் அழகு, ரசனை, கவிதை
எல்லாம் மாயை ஆனதடி
உள்ளம் ஒன்றிய காதலர் எவர்க்கும்
பிரிதல் என்பது நரகமடி
-
எந்தன் அருகே நீயும் இருந்தால்
எல்லாம் இங்கே இன்பமடி
என்றும் எனது கவிதைச் சிறகுகள்
உன்னை நினைத்தே விரியுமடி
-
எரியும் தீயை அணைக்கும் நதியே
விரைந்து நானும் வந்திடுவேன்
எந்தன் நிலைதான் உனக்கும் அங்கே
என்னை முழுதாய் தந்திடுவேன்
-
-----------------------------------
>ஜா.சம்பத்
கவிதை அலைகள்...
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24188
மதிப்பீடுகள் : 1186
குறிக்கோள்
-
பூக்கள் மலருமுன்னே
செடிகள் இளைக்காது
கனிகள் தோன்றுமுன்னே
மரங்களும் களைக்காது?
-
நோக்கம் ஜெயிக்கும் வரை - மனம்
ஓய்வை நாடாது
தேக்குமர நெஞ்சங்கள்
சோக கீதம் பாடாது
-
மண்ணுக்குள் நுழைந்திடத் தயங்கி
மரத்தடி வேர்களும் பயந்தால்
விண்ணுக்கு விளையாடச் செல்லும்
வியத்தகு மரங்களும் ஏது?
-
------------------------------
>ஜா.சம்பத்
கவிதை அலைகள்...
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24188
மதிப்பீடுகள் : 1186
காதல் என்பது...
-
இதயத்தை மென்மையாக்கும்...
வார்த்தையைத் தன்மையாக்கும்
ஆன்மாவைப் பண்படுத்தும்
ஓர் நீடித்த
பரவச உணர்வ
-
------------------------------
>ஜா.சம்பத்
கவிதை அலைகள்...
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24188
மதிப்பீடுகள் : 1186
கவிதை என்பது... -
-
சொல்லும் பொருளும்
சுவையாய் அமைந்து
உள்ளம் வருடும்
உணர்வை ஊட்டித்
தெள்ளிய அறிவு
இதமாய் வளர்க்கும்
எல்லாப் படைப்பும்
-
------------------------
>ஜா.சம்பத்
கவிதை அலைகள்...
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24188
மதிப்பீடுகள் : 1186
- மொழியா ! வாழ்வா ?
-
பசித்திருக்கும் வேளையிலே
மயங்கிக் கிடக்கும் நிலைதனிலே
மலர்களின் வாசம்
பரப்புகிறாய்
வாசனை உடலுக்கு நல்லதுதான்
-
ஆனால்
பசியைப் போக்கிடுமா..?
-
------------------
>ஜா.சம்பத்
கவிதை அலைகள்...
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24188
மதிப்பீடுகள் : 1186
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
விநோத ஏக்கங்கள்
-
எப்படி வளர்கிறது நீளமாய்!
வித விதமான ஸ்டைல்களில்
சுருள் சுருளாக...
வளைவுகளாக...
வளைவு நெளிவுகளாக...
நேராக!
சீராக!
-
எத்தனை விதமாய்
மாற்றிக் கொள்கிறார்கள்
அடடா
எப்படியெல்லாம்
வெட்டி வீணாக்குகிறார்கள்?
ஹூம்...!
-
வளரும் என்ற நம்பிக்கையுண்டு
வளர்ந்து கொண்டும் இருக்கிறது
அதிகமானதை வெட்டுகிறார்கள்
அலட்சியமாய் ஒதுக்குகிறார்கள்
ஏன்...
முற்றிலும் மழிக்கவும் செய்கிறார்கள்
இளமையின் ஆட்சி
-
நமக்கோ...
வளர வாய்ப்பில்லை
வளர என்ன...
இனி வரவே வாய்ப்பில்லை
வழுக்கை வழுக்கை தானே!
-
----------------------------------
>ஜா.சம்பத்
கவிதை அலைகள்...
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24188
மதிப்பீடுகள் : 1186
எப்போது?
வெறும் வார்த்தை திருக்குறளாவது எப்போது?
சிறு கால்வாய் பெருங்கடலாவதும் எப்போது?
வெறுங்குடையும் வெண்கொற்றமாவது எப்போது?
கரகர சப்தம் சங்கீதமாவது எப்போது?
-
கட்டுமரம் கப்பலாவது எப்போது?
காட்டுச் செடி பெரும் தேக்கு ஆவதும் எப்போது?
சிட்டுக்குருவி வல்லூறு ஆவதும் எப்போது?
சிறு கல் தூணும் அரண்மனையாவது எப்போது?
-
எல்லைத் தெய்வம் திருப்பதியாவது எப்போது?
தில்லை நகரும் தில்லியாவது எப்போது?
பள்ளிக்கூடம் பல்கலையாவது எப்போது? - /
முல்லைக்கொடி பிருந்தாவனமாவது எப்போது?
-
---------------------------------------------------
->ஜா.சம்பத்
கவிதை அலைகள்...
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24188
மதிப்பீடுகள் : 1186
நினைவில் நீ... -
விடிய விடிய மழை
மனம் வலிக்கப் பூக்கள்
தவளைகளின் பாடல்
-
-------------------------------
-
காத்திருந்து
அலுத்து காதுக்கு
தவளை சப்தங்கள் மட்டும்
-
-------------------------------
-
மழையைப் பாராட்டி
புதரிலிருந்து
தவளைகளின் பாடல்
-
--------------------------------
-
பட்டணத்தில் மழை
எதிர்பார்த்து ஏமாந்தேன்
தவளைகளின் பாடல்
-
------------------------------
-
சீனர் உணவகம்
மூடிய வாளிக்குள்
எட்டிப்பார்க்கும் தவளைகள்
-
---------------------------------
-
கொட்டும் மழை
கத்தும் தவளை
நினைவில் நீ...
-
-----------------------------
(படித்ததில் பிடித்தது)
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24188
மதிப்பீடுகள் : 1186
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24188
மதிப்பீடுகள் : 1186
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» மனதை தொட்ட வரிகள்
» மனதைத் தொட்ட வரிகள் !!!
» மனதைத் தொட்ட வரிகள்
» மனதை வருடிய வரிகள்
» சேனையில் இணைநடத்துனராக பொறுப்பேற்றிருக்கும் ராம்மலர் வாழ்த்தலாம் வாங்க
» மனதைத் தொட்ட வரிகள் !!!
» மனதைத் தொட்ட வரிகள்
» மனதை வருடிய வரிகள்
» சேனையில் இணைநடத்துனராக பொறுப்பேற்றிருக்கும் ராம்மலர் வாழ்த்தலாம் வாங்க
Page 2 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|