Latest topics
» மருந்துby rammalar Today at 6:50
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07
மறைந்துவரும் மனித உறவுகள்
4 posters
Page 1 of 1
மறைந்துவரும் மனித உறவுகள்
பொருளாதாரத் தேவை, ஆன்மிகத் தேடல்,
மன நிம்மதி காண வழிகள், சமுதாயத்தில் பாதுகாப்பு,
சமுதாயத்தில் அங்கீகாரம் என பல தளங்களில்
மனிதர்கள் வேகமாக இயங்க வேண்டியது காலத்தின்
கட்டாயமாகிவிட்டது.
இந்த வேகத்தில் மனித உறவுகள் மறைந்து அல்லது
மறந்துவருவது குறித்து அனைவரும் உணர்ந்திருந்தாலும்,
அதனை வெளிகாட்டிக் கொள்வதில் தயக்கம் உள்ளது.
முன்பு சில கிராமங்களில் உள்ள வீடுகளுககுச் சென்றால்,
வரவேற்பு அறையில் பல கருப்பு வெள்ளை புகைப்படங்கள்
இருக்கும். " புகைப்படத்தில் இருப்பது எனது அண்ணன்
குடும்பம், தம்பி குடும்பம், மாமா, சித்தி, அத்தை" என
வீட்டில் எல்லோரும் பெருமையுடன் கூறுவார்கள்.
இப்போது தலைமுறை இடைவெளி காரணமாக
பெரும்பாலான கிராமத்து வீடுகளிலும், தங்களது பிள்ளைகள்,
மருமகன் மருமகள், பேரன், பேத்தி புகைப்படங்கள் மட்டுமே
காட்சிக்கு வைத்துக் கொண்டு உறவுகளைச் சுருக்கிக் விட்டனர்.
மற்றவர்கள் ஆல்பங்களுக்குள் மறந்து விட்டனர்.
நகரங்களில் கேட்கவே வேண்டாம், உடன் பிறந்தவர்களின்
புகைப்படங்கலேயே வீட்டில் மாட்டி வைத்திருப்பதில்லை.
ஏன் இந்த மாற்றம்? கல்யாணம், சடங்கு, காதுகுத்துதல்
போன்ற விழாக்களை நமது முன்னோர்கள் ஏன் அமைத்தனர்?
அந்த விழாக்களில் உறவினர்கள் கூடி, பேசி தங்களது
அனுபவங்களையும், பழக்கவழக்கங்களையும், வெற்றிகளையும்,
மகிழ்ச்சியையும் பிறருடன் பகிர்ந்து கொள்ளத்தான்.
எந்த ஒரு நிகழ்வையும் பிறருடன் பகிர்ந்து கொள்வதில் உள்ள
மகிழ்ச்சியே தனிதான்.
முன்பு திருமண விழா என்றால் இரண்டு அல்லது மூன்று
நாளைக்கு முன்பே உறவினர்கள் கூடி விடுவார்கள்.
கோலமிடுவது, இட்லிக்கு மாவு ஆட்டுவது, பொருட்கள்
வாங்க செல்வது என பல வேலைகளை மகிழ்ச்சியுடன்
பகிர்ந்து செய்து வந்தனர்.
இப்போது திருமணம் காலை 9 மணி முதல் 10 மணிக்குள்
என இருந்தால் 9.30 மணிக்கு வந்து, திருமணம் முடிந்ததும்,
உணவு அருந்தினாலும், அருந்தாவிட்டாலும் மறு வினாடியே "
வேலை உள்ளது செல்கிறேன்" என கூறி, சென்று
விடுகிறார்கள். தற்போது உள்ள திருமண வீட்டில் திருமண
நாள் மலையில் உடன் பிறந்தவர்கள் கூட தங்குவதில்லை.
அந்த அளவுக்கு வேகமாக மக்கள் இயங்க தொடக்கி
விட்டனர்.
மனித உறவுகள் என்பது மகிழ்ச்சியாக பேசி
கொண்டாடுவதற்காகத்தான் என்பதை மனிதர்கள் மறந்து
வருவது வருத்தத்துக்கு உரியது.
எவ்வளவு வேலைகள் இருந்தாலும், கும்பத்திற்கு என
நேரம் ஒதுக்குங்கள். மனைவி, குழந்தைகளுடன் அந்த
நேரத்தில் இருந்து சிரித்துப் பேசி மகிழுங்கள் என
உளவியல் நிபுனர்னர்கள் கூறி வருகிறார்கள். அதே போல,
உறவினர்களுடனும் விழாக்களில் பார்க்கும் போது சிறிது
நேரத்தை செலவிடுங்கள். அதில் உங்களுக்கு மன நிம்மதி
கிடைக்கும்.
"சந்தோசம் பனித்துளி போன்றது. சிரிக்கும் போதே உலர்ந்து
விடுகிறது"என்று அறிஞர் ஒருவர் கூறியுள்ளார்.
விழாக் காலங்களில் உறவினர்களைப் பார்த்து சந்தோசப்
புன்னகையை புரியக்கூட நாம் நேரம் ஒதுக்குவதில்லை.
வாழ்க்கையில் நிறைய ஏற்ற இறக்கங்கள் இருக்கும்.
அதையும் மீறி நாம் செயல்பட்டு வெற்றி பெற வேண்டும்.
அதுபோலதான் மனித உறவுகளும், சண்டை சச்சரவுகள்
இருக்கும், அதை ஒதுக்கி வைத்து விட்டு, மகிழ்ச்சிக்கு
மரியாதை கொடுப்போம்.
-
---------------------------------------
நன்றி
எஸ். பாலசுந்தரம் (தினமணி)
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23942
மதிப்பீடுகள் : 1186
Re: மறைந்துவரும் மனித உறவுகள்
நல்ல பதிவு, உணரத்தான் யாருமில்லை.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மறைந்துவரும் மனித உறவுகள்
பகிர்வுக்கு நன்றி
நாங்களெல்லாம் கல்யாணத்ஹ்டிற்கு போனால் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளூம் வரை பேசிகொண்டிருப்போம் i*
நாங்களெல்லாம் கல்யாணத்ஹ்டிற்கு போனால் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளூம் வரை பேசிகொண்டிருப்போம் i*
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: மறைந்துவரும் மனித உறவுகள்
உண்மைதான்.
இதற்குக்காரணம்
மனத்தேடலை விட்டுவிட்டு பணத்தேடலில் விழுந்துவிட்டோம்.
இதற்குக்காரணம்
மனத்தேடலை விட்டுவிட்டு பணத்தேடலில் விழுந்துவிட்டோம்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|