சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13

» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47

» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07

» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00

நல்லவர்களோடு பழகினால்... Khan11

நல்லவர்களோடு பழகினால்...

3 posters

Go down

நல்லவர்களோடு பழகினால்... Empty நல்லவர்களோடு பழகினால்...

Post by rammalar Mon 30 Jun 2014 - 9:43

நல்லவர்களோடு பழகினால்... E_1403860968
-
'எவருடைய மனமும், வாக்கும் நீதி நெறி
முறைகளிலிருந்து வழுவாமல் இருக்கிறதோ,
அவரே நல்லவர் என்று அடையாளப்படுத்தப்
படுகிறார்...' என்கிறார் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்.

-
அத்தகைய நல்லோரின் சேர்க்கை, நம்
மனதை மட்டும் அல்ல, வாழ்க்கை யையும்
செம்மைப்படுத்தும். அதனால் தான்,
 'நல்லோரை காண்பதும் நன்று; அவரோடு
இணங்கி இருப்பது அதனினும் நன்று...'
என்கிறார் அவ்வையார்.
-
ஒரு சமயம், விஸ்வாமித்திரர் காட்டில் யாகம்
செய்தார். அப்போது தன்னிடம் இருந்த
அனைத்தையும் தானம் செய்தார். நாட்டின்
அனைத்து பகுதிகளிலிருந்தும் முனிவர்கள்
வந்து தானம் பெற்றுச் சென்றனர்; வசிஷ்டரும்
தானம் பெற்றார்.

-
சிறிது காலத்திற்கு பின், வசிஷ்டர் தானம்
செய்த போது, அத்தகவல் அறிந்த விஸ்வாமித்திரர்
தானம் வாங்க வந்தார்.
-
அவர் வருவதற்குள், தன்னிடம் இருந்த அனைத்து
 பொருட்களையும் தானம் கொடுத்து விட்டார்
வசிஷ்டர். ஆனாலும், விஸ்வாமித்திரரை வெறுங்
கையோடு அனுப்ப மனம் இல்லாமல், 'என்னிடம்,
ஒரு நாழிகை (24 நிமிடங்கள்) நேரத்திற்குரிய,
சத்சங்க சாவகாசப் பலன் இருக்கிறது; அதில் கால்
பங்கை, உங்களுக்கு தருகிறேன்...' என்றார்.
-

அதைக் கேட்டதும் கோபத்தில், 'நீர் என்னை
அவமானப்படுத்தி விட்டீர்...' என்றார் விஸ்வாமித்திரர்.
-
அவரை அமைதிப்படுத்திய வசிஷ்டர், 'கோபப்
படாதீர்கள்... நான் கூப்பிட்டதாகச் சொல்லி,
ஆதிசேஷனையும், சூரியனையும் அழைத்து
வாருங்கள்...' என்றார்.

-
'ஏதோ விஷயம் இருக்கும் போலிருக்கிறது; என்ன
தான் நடக்கிறது பார்க்கலாம்...' என நினைத்து,
சூரியனையும், ஆதிசேஷனையும் அழைத்தார்
விஸ்வாமித்திரர்.
-
'நான் உங்களுடன் வந்து விட்டால், எனக்குப்
பதிலாக யார் ஒளி வீசுவது?' என சூரியனும்,
'பூமியைத் தாங்கும் வேலையைச் செய்து
கொண்டிருக்கிறேன்; நான் வந்து விட்டால்,
என் வேலையை யார் செய்வது?' என,
ஆதிசேஷனும் கேட்டனர்.

-
விஸ்வாமித்திரர் இதை, வசிஷ்டரிடம் கூறினார்.
அப்போது வசிஷ்டர், 'சரி... என்னிடம் உள்ள
சத்சங்க சாவகாசப் பலனில், கால்பங்கை
சூரியனுக்கும், கால்பங்கை, ஆதிசேஷனுக்கும்
அளிப்பதாக கூறுங்கள்...' என்றார்.
-
அவர் அளித்த சத்சங்க சாவகாசப்பலன்கள்,
சூரியனின் வேலையையும், ஆதிசேஷனின்
வேலையையும் செய்தது. அதனால்,
விஸ்வாமித்திரர் கூப்பிட்டதும் சூரியனும்,
ஆதிசேஷனும் வந்து விட்டனர்.

-
விஸ்வாமித்திரருக்கு, சத்சங்க சாவகாசப்
பலனின் பெருமை புரிந்தது. மிகுந்த பணிவோடு,
வசிஷ்டரிடம் இருந்து, கால் பங்கு சத்சங்க
சாவகாசப் பலனைப் பெற்றுத் திரும்பினார்.
-
அவர் தன் ஆசிரமத்தை நெருங்கும் போது,
தெய்வீக புருஷன் ஒருவன் தோன்றி, 'முனிவரே...
 வைகுண்ட வாசன், ராமராக அவதரிக்கப்
போகிறார். அவருக்கும், அவர் சகோதரர்களுக்கும்
 திருமணம் செய்து வைக்கும் பாக்கியம்,
உங்களுக்கு கிடைக்கவிருக்கிறது...' என்று
கூறினார்.

-
'நல்லவரான வசிஷ்டரின் தொடர்பால் கிடைத்த
சத்சங்க பலனால் தான், இந்த பாக்கியம் நமக்கு
கிடைக்கப் போகிறது...' என, உணர்ந்தார்
விஸ்வாமித்திரர்.
-
நல்லவர்களின் நட்பையே வேண்டுவோம்;
நல்லவைகள் நம்மைத்தேடி வரும்!

-
-----------------------------
பி.என்.பரசுராமன்

நன்றி: வாரமலர்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25129
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

நல்லவர்களோடு பழகினால்... Empty Re: நல்லவர்களோடு பழகினால்...

Post by jasmin Mon 30 Jun 2014 - 11:18

நல்லவர்களின் நட்பு கிடைப்பது மிகவும் அரிதுதான் ..தேடனும் ....
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

நல்லவர்களோடு பழகினால்... Empty Re: நல்லவர்களோடு பழகினால்...

Post by ராகவா Mon 30 Jun 2014 - 16:05

jasmin wrote:நல்லவர்களின் நட்பு கிடைப்பது மிகவும் அரிதுதான் ..தேடனும் ....
அப்ப இவ்வளவுநாள் கிடைக்கலையா..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

நல்லவர்களோடு பழகினால்... Empty Re: நல்லவர்களோடு பழகினால்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum