Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவைby rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13
» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47
» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07
» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00
நல்லவர்களோடு பழகினால்...
3 posters
Page 1 of 1
நல்லவர்களோடு பழகினால்...
-
'எவருடைய மனமும், வாக்கும் நீதி நெறி
முறைகளிலிருந்து வழுவாமல் இருக்கிறதோ,
அவரே நல்லவர் என்று அடையாளப்படுத்தப்
படுகிறார்...' என்கிறார் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்.
-
அத்தகைய நல்லோரின் சேர்க்கை, நம்
மனதை மட்டும் அல்ல, வாழ்க்கை யையும்
செம்மைப்படுத்தும். அதனால் தான்,
'நல்லோரை காண்பதும் நன்று; அவரோடு
இணங்கி இருப்பது அதனினும் நன்று...'
என்கிறார் அவ்வையார்.
-
ஒரு சமயம், விஸ்வாமித்திரர் காட்டில் யாகம்
செய்தார். அப்போது தன்னிடம் இருந்த
அனைத்தையும் தானம் செய்தார். நாட்டின்
அனைத்து பகுதிகளிலிருந்தும் முனிவர்கள்
வந்து தானம் பெற்றுச் சென்றனர்; வசிஷ்டரும்
தானம் பெற்றார்.
-
சிறிது காலத்திற்கு பின், வசிஷ்டர் தானம்
செய்த போது, அத்தகவல் அறிந்த விஸ்வாமித்திரர்
தானம் வாங்க வந்தார்.
-
அவர் வருவதற்குள், தன்னிடம் இருந்த அனைத்து
பொருட்களையும் தானம் கொடுத்து விட்டார்
வசிஷ்டர். ஆனாலும், விஸ்வாமித்திரரை வெறுங்
கையோடு அனுப்ப மனம் இல்லாமல், 'என்னிடம்,
ஒரு நாழிகை (24 நிமிடங்கள்) நேரத்திற்குரிய,
சத்சங்க சாவகாசப் பலன் இருக்கிறது; அதில் கால்
பங்கை, உங்களுக்கு தருகிறேன்...' என்றார்.
-
அதைக் கேட்டதும் கோபத்தில், 'நீர் என்னை
அவமானப்படுத்தி விட்டீர்...' என்றார் விஸ்வாமித்திரர்.
-
அவரை அமைதிப்படுத்திய வசிஷ்டர், 'கோபப்
படாதீர்கள்... நான் கூப்பிட்டதாகச் சொல்லி,
ஆதிசேஷனையும், சூரியனையும் அழைத்து
வாருங்கள்...' என்றார்.
-
'ஏதோ விஷயம் இருக்கும் போலிருக்கிறது; என்ன
தான் நடக்கிறது பார்க்கலாம்...' என நினைத்து,
சூரியனையும், ஆதிசேஷனையும் அழைத்தார்
விஸ்வாமித்திரர்.
-
'நான் உங்களுடன் வந்து விட்டால், எனக்குப்
பதிலாக யார் ஒளி வீசுவது?' என சூரியனும்,
'பூமியைத் தாங்கும் வேலையைச் செய்து
கொண்டிருக்கிறேன்; நான் வந்து விட்டால்,
என் வேலையை யார் செய்வது?' என,
ஆதிசேஷனும் கேட்டனர்.
-
விஸ்வாமித்திரர் இதை, வசிஷ்டரிடம் கூறினார்.
அப்போது வசிஷ்டர், 'சரி... என்னிடம் உள்ள
சத்சங்க சாவகாசப் பலனில், கால்பங்கை
சூரியனுக்கும், கால்பங்கை, ஆதிசேஷனுக்கும்
அளிப்பதாக கூறுங்கள்...' என்றார்.
-
அவர் அளித்த சத்சங்க சாவகாசப்பலன்கள்,
சூரியனின் வேலையையும், ஆதிசேஷனின்
வேலையையும் செய்தது. அதனால்,
விஸ்வாமித்திரர் கூப்பிட்டதும் சூரியனும்,
ஆதிசேஷனும் வந்து விட்டனர்.
-
விஸ்வாமித்திரருக்கு, சத்சங்க சாவகாசப்
பலனின் பெருமை புரிந்தது. மிகுந்த பணிவோடு,
வசிஷ்டரிடம் இருந்து, கால் பங்கு சத்சங்க
சாவகாசப் பலனைப் பெற்றுத் திரும்பினார்.
-
அவர் தன் ஆசிரமத்தை நெருங்கும் போது,
தெய்வீக புருஷன் ஒருவன் தோன்றி, 'முனிவரே...
வைகுண்ட வாசன், ராமராக அவதரிக்கப்
போகிறார். அவருக்கும், அவர் சகோதரர்களுக்கும்
திருமணம் செய்து வைக்கும் பாக்கியம்,
உங்களுக்கு கிடைக்கவிருக்கிறது...' என்று
கூறினார்.
-
'நல்லவரான வசிஷ்டரின் தொடர்பால் கிடைத்த
சத்சங்க பலனால் தான், இந்த பாக்கியம் நமக்கு
கிடைக்கப் போகிறது...' என, உணர்ந்தார்
விஸ்வாமித்திரர்.
-
நல்லவர்களின் நட்பையே வேண்டுவோம்;
நல்லவைகள் நம்மைத்தேடி வரும்!
-
-----------------------------
பி.என்.பரசுராமன்
நன்றி: வாரமலர்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25129
மதிப்பீடுகள் : 1186
Re: நல்லவர்களோடு பழகினால்...
நல்லவர்களின் நட்பு கிடைப்பது மிகவும் அரிதுதான் ..தேடனும் ....
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: நல்லவர்களோடு பழகினால்...
அப்ப இவ்வளவுநாள் கிடைக்கலையா..jasmin wrote:நல்லவர்களின் நட்பு கிடைப்பது மிகவும் அரிதுதான் ..தேடனும் ....
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|