Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவைby rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13
» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47
» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07
» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00
நீண்டகால யுத்த நிறுத்தம் அமுல்: மக்களின் வெற்றிக்கொண்டாட்டத்தோடு காசாவில் அமைதி
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
நீண்டகால யுத்த நிறுத்தம் அமுல்: மக்களின் வெற்றிக்கொண்டாட்டத்தோடு காசாவில் அமைதி
நீண்டகால யுத்த நிறுத்தம் அமுல்: மக்களின் வெற்றிக்கொண்டாட்டத்தோடு காசாவில் அமைதி
இஸ்ரேல் - பலஸ்தீனத்திற்கு இடையில் நீண்டகால யுத்த நிறுத்தம் ஒன்றுக்கான இணக்கம் ஏற்பட்டதை அடுத்து 50 நாட்கள் நீடித்த இந்த தசாப்தத்தின் மிக மோசமான வன்முறைக்கு பின் காசா வானம் நேற்று அமைதி நிலைக்கு திரும்பியதோடு இஸ்ரேலிலும் அமைதி நிலவியது.கடந்த செவ்வாய்க்கிழமை யுத்த நிறுத்தம் அறிவிக்கப்பட்டதை அடுத்து நீண்ட தாக்குதலுக்கு முகம்கொடுத்து வந்த காசா முனையில் இருக்கும் ஆயிரக்கணக்கான பலஸ்தீனர்கள் வீதிகளில் இறங்கி யுத்த நிறுத்தத்தை வரவேற்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
"யுத்த நிறுத்தம் அமுலுக்கு வந்தது தொடக்கம் காசாவில் இஸ்ரேல் பாதுகாப்பு படையினரின் எந்;த நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை என்ப தோடு இஸ்ரேல் மீது எந்த ரொக்கெட் தாக்கு தலும் இடம்பெறவில்லை" என்று இரு தரப்பும் அமைதிகாத்து 12 மணிநேரம் கழிந்த நிலையில் இஸ்ரேல் இராணுவ பேச்சாளர் ஒருவர் நேற்று தெரிவித்திருந்தார்.
யுத்த நிறுத்தத்தை அடுத்து காசா மக்களின் கொண்டாட்டம் நேற்றும் நீடித்திருந்தது. மக்கள் பட்டாசுகளை கொளுத்தியும் துப்பாக்கி வேட்டுகளை செலுத்தியும் தமது மகிழ்ச்சியை வெளியிட்டனர். யுத்த நிறுத்தத்தை, எதிர்ப்பு போராட்டத்தின் வெற்றியென ஹமாஸ் பிரகடனம் செய்தது. காசா மக்கள் வெற்றி சமிக்ஞைகளை காட்டீயே யுத்த நிறுத்தத்தை கொண்டாடினர்.
கடந்த ஜ{லை 8 ஆம் திகதி ஆரம்பமான மோதலை அடுத்து இஸ்ரேலின் காசா மீதான தரை, வான் மற்றும் கடல் வழித்தாக்குதல்களில் மொத்தம் 2,143 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். இதில் 70 வீதத்துக்கும் அதிகமானவர்கள் அப்பாவி பொதுமக்களாவர். அதிலும் சுமார் 500 சிறுவர்கள் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இஸ்ரேல் தரப்பில் 64 இராணுவத்தினர் உட்பட 70 பேர் பலியாகினர். யுத்த நிறுத்தத்திற்கு சற்று முன்னர் காசாவில் இருந்து நடத்தப்பட்ட மோட்டார் குண்டு தாக்குதலில் அஷ்கலோன் பகுதியில் இரு இஸ்ரேல் பொதுமக்கள் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
புதிய யுத்த நிறுத்தத்தை நிரந்தரமானது என்று பலஸ்தீன தரப்பு விபரித்திருப்பதோடு "நிபந்தனையற்ற மற்றும் காலவரையறையற்றது" என்று இஸ்ரேல் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
எகிப்து மத்தியஸ்தத்திலான இந்த யுத்த நிறுத்தத்திற்கு அமெரிக்கா தனது முழு ஆதரவை வெளியிட்டுள்ளது. இரு தரப்பும் நிபந்தனைகளுக்கு முழுமையாக கட்டுப்பட்டு செயற்படும்படி அமெரிக்க இராஜhங்கச் செயலாளர் ஜோன் கெர்ரி கோரியுள்ளார். இந்த யுத்த நிறுத்தத்தின் மூலம் இஸ்ரேல்-பலஸ்தீன இறுதி அமைதி உடன்பாடொன்றுக்கு வர முடியும் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன் வலியுறுத்தியுள்ளார். பிரிட்டனும் யுத்த நிறுத்தத்தை வரவேற்றுள்ளது.
செவ்வாய் இரவு காசா வீதிகள் எங்கும் குவிந்த ஆயிரக்கணக்கான மக்களுடன் ஆயுதமேந்திய ஹமாஸ் போராட்ட வீரர்களும் இணைந்திருந்த னர். கோ' மெழுப்பியும் கரகோசத்துடனும் வீதிக ளெங்கும் ஊர்வலம் சென்ற பலஸ்தீன மக்கள் வெற்றிப்பாடல்களை இசைத்ததோடு ஹமாஸ் அமைப்பின் பச்சை நிற கொடிகளையும் அசைத்தனர்.
"இறைவனுக்கு நன்றி யுத்த முடிந்துவிட்டது. எனது குழந்தைகளுடன் நான் இன்றும் உயிருடன் இருப்பதை என்னால் நம்ப முடியவில்லை" என்று 32 வயதான மஹா காலித் குறிப்பிட்டார். "இது ஒரு கொ^ரமான யுத்தமாக இருந்தது. இறுதியில் எம்மால் அமைதியை காண முடியும் என்று நான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை" என்றும் அவர் குறிப்பிட்டார்.
காசா வீதிகளில் கார்கள் தேங்கி நின்றன. வாகனத்தின் ஹோன்கள் ஒலித்தவாறு இருந்தன. வீதிகளில் இருந்த பெண்கள், சிறுவர்கள் என அனைவரும் வெற்றி சமிக்ஞை காட்டியவாறு சென்றனர். நள்ளிரவு தாண்டியும் கொண்டாட்டம்; நீடித்தது. "காசா மக்கள் இன்று தமது எதிர்ப்பு போராட்டத்தை உலகுக்கு காட்டியிருக்கிறார்கள். அது இஸ்ரேலை விடவும் பலமானதாகும்" என்று 23 வயது தமர் அல் மத்கா என்பவர் குறிப்பிட்டார்.
யுத்த நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பின் ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜpஹாத் அமைப்பின் பல சிரேஷ்ட தலைவர்களும் பொதுமக்கள் முன் தோன்றினர். இதில் ஹமாஸ் அரசியல் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர் மஹ்மூத் அல் சஹர், ஜpஹாத் அமைப்பின் சிரேஷ்ட அதிகாரி மொஹமத் அல் ஹின்தி மக்கள் முன் தோன்று வெற்றி உரை ஆற்றினர். "நாம் எமது விமானநிலையம், துறைமுகங்களை அமைக்கப் போகின்றோம்.
அவர்கள் துறைமுகத்திற்கு அடித்தால் அடிக்கட்டும். ஆனால் எவராவது விமானநிலையத்தை தாக்கினால் அவர்களது விமானநிலையத்தின் மீது நாம் தாக்குதல் நடத்துவோம்" என்று சஹர் குறிப்பிட்டார். கடந்த ஜ{லை நடுப்பகுதியில் ஹமாஸ் ரொக்கெட் தாக்குதல்களால் இஸ்ரேல் விமான நிலையத்திற்கான பயணங்களை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய விமானசேவைகள் இரு தினங்கள் நிறுத்தி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
உடன்பட்டிருக்கும் யுத்த நிறுத்தத்திற்கு அமைய காசாவுக்கான இஸ்ரேல் மற்றும் எகிப்து எல்லைக் கடவைகள் உடனடியாக திறக்கப்பட வேண்டும், காசாவின் மீன்பிடி பகுதி விரிவுபடுத்தப்பட வேண்டும் என்று பலஸ்தீன தரப்பு குறிப்பிட்டது. பின்னர் ஒரு மாதம் கழித்து இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன பிரதிநிதிகள் காசாவில் துறைமுகம்;, விமானநிலையம் அமைப்பது மற்றும் சுமார் 100 பலஸ்தீன கைதிகளை விடுவிப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படும்.
யுத்த நிறுத்தத்தை வரவேற்றிருக்கும் கட்டார் காசா பகுதியை வெகு விரைவில் மீண்டும் கட்டியெழுப்புவதற்கான பங்களிப்பை செய்ய தயாராக இருப்பதாக குறிப்பிட்டுள்ளது. யுத்த நிறுத்தத்தை வரவேற்றிருக்கும் துருக்கி அனைத்து எல்லை கட்டுப்பாடுகளையும் இஸ்ரேல் உடன் அகற்றிக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.
ஈரான் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் பலஸ்தீனர்கள் இஸ்ரேலை தமது காலடியில் பணியவைத்திருப்பதாக குறிப்பிட்டுள்ளது. "இந்த வெற்றி அனைத்து ஆக்கிரமிப்பில் இருந்தும் விடுதலை பெறுவதற்கு தயார்செய்கிறது" என்று ஈரான் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் சிரியாவில் இருந்து இஸ்ரேல் ஆக்கிரமிப்பு கோலன் ஹைட் பகுதிக்கு நேற்;று மூன்று ரொக்கெட் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்த தாக்குதலில் எவருக்கும் காயம் ஏற்படாத போதும் வாகனமொன்று சேதமடைந்திருப்பதாக இஸ்ரேல் செய்திகள் குறிப்பிடுகின்றன.
தினகரன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நீண்டகால யுத்த நிறுத்தம் அமுல்: மக்களின் வெற்றிக்கொண்டாட்டத்தோடு காசாவில் அமைதி
பாலஷ்தீன இளைஞர்களுக்கு ~/ ~/
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» காசாவில் இஸ்ரேல் வான் தாக்குதல்; பொலிஸார் பலி
» 72 மணிநேர யுத்த நிறுத்தம் ஒருசில மணிநேரங்களில் முறிவு
» ஐஸ்வாளி சவாலுக்கு பதில் காசாவில் கற்குவியல் சவால்
» நோக்கியா தனது நீண்டகால இடத்தினை இழந்தது : சந்தையில் காணாமல் போகும் பரிதாப நிலை..
» சிறைக் கைதிகளுக்கான வீட்டு விடுமுறை அடுத்த மாதம் அமுல்
» 72 மணிநேர யுத்த நிறுத்தம் ஒருசில மணிநேரங்களில் முறிவு
» ஐஸ்வாளி சவாலுக்கு பதில் காசாவில் கற்குவியல் சவால்
» நோக்கியா தனது நீண்டகால இடத்தினை இழந்தது : சந்தையில் காணாமல் போகும் பரிதாப நிலை..
» சிறைக் கைதிகளுக்கான வீட்டு விடுமுறை அடுத்த மாதம் அமுல்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|