சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Today at 15:22

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 4:43

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

தர்ம சங்கடம் தவிர்க்கலாமா? Khan11

தர்ம சங்கடம் தவிர்க்கலாமா?

2 posters

Go down

தர்ம சங்கடம் தவிர்க்கலாமா? Empty தர்ம சங்கடம் தவிர்க்கலாமா?

Post by ahmad78 Sat 18 Oct 2014 - 10:08

தர்ம சங்கடம் தவிர்க்கலாமா? Ht2947
பிரச்னைகள் பலவிதம்:  வாயுத் தொல்லை அதிகமா இருக்குமோ!

‘கொலை செஞ்சாக்கூட ஒத்துக்குடுவாய்ங்கெ. -- விட்டா ஒத்துக்கிட மாட்டாய்ங்கெ...’ - இது தென் தமிழக கிராமங்களில் பிரபலமான பழமொழி. 

வீட்டில் ஏதோ விசேஷம்... உறவினர்களும் நண்பர்களும் நிரம்பிய தருணம்... ‘அப்பா பாம் போட்டுட்டாரு!’ என்று ஏதோ ஒரு வாண்டு கிளப்பிவிட,  குறும்புச் சிரிப்பு அலையென அறையெங்கும் எழும்பும்... சம்பந்தப்பட்டவரோ குறுகி நிற்பார். 

தமிழ்த் திரைப்படங்களில் மட்டுமல்ல... பிரபல ஹாலிவுட் படங்களிலேயே கூட ‘வாயுத் தொல்லை’ கண்ணுக்குத் தெரியாத கதாபாத்திரமாக வலம்  வந்து கலகலப்பையோ முகச்சுளிப்பையோ ஏற்படுத்தியிருக்கிறது. 

ஏப்பமாக இருந்தாலும் சரி... யாருமற்ற தனி இடத்துக்குப் போய் பிரியச் செய்கிற வாயுவானாலும் சரி... எல்லோருக்கும் அது தர்மசங்கடத்தை  ஏற்படுத்தும் ஒரு பிரச்னையே! ‘‘ஏழு பேர் டாக்டர்கிட்ட ஏதோ ஒரு பிரச்னைக்குப் போறாங்கன்னா அவங்கள்ல 2 பேருக்கு வாயுத் தொல்லை  இருக்கும்’’ என்று சொல்லி அதிர வைக்கிறார் குடல் மருத்துவர் ஏ.ஆர்.வெங்கடேஸ்வரன். ஒருவருக்கு வாயுத் தொல்லை ஏன் ஏற்படுகிறது  என்பதையும் விளக்குகிறார் டாக்டர் வெங்கடேஸ்வரன்... ‘‘ரொம்ப எளிமையா இந்த விஷயத்தைச் சொல்ல லாம். நாம சாப்பிடுற உணவு உணவுக்  குழாய்க்குப் போய், அதுலருந்து வயிற்றுக்குப் போகுது. 

அதாவது, இரைப்பைக்குப் போய், அப்புறம் மெல்ல மெல்ல ஜீரணமாகுது. உணவுக் குழாய்க்கும் இரைப்பைக்கும் நடுவுல ஒரு வால்வு இருக்கும். அந்த  வால்வு எப்பவும் மூடியே இருக்கும். உணவு வரும்போது மட்டும் திறந்து உள்வாங்கிக்கும். இப்படி முறையா நடந்தா பிரச்னை இல்லை. அந்த வால்வு  திறந்திருக்கறதாலதான் வாயுத் தொல்லை ஏற்படுது...’’

வாயுத் தொல்லை வேறு என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும்? 

‘‘கீழே விழுந்து சின்னதா சிராய்ப்பு ஏற்படுது. கவனிக்காம விட்டுட்டா பெரிய புண்ணாகிடும் இல்லையா? அது மாதிரி தான் இந்தப் பிரச்னையும். தகுந்த  சிகிச்சை எடுக்கலைன்னா கஷ்டம். நாம சாப்பிடுற உணவு ஜீரணமாகுறதுக்கு வயிற்றுக்குள்ளேயே ஒரு ஆசிட் சுரக்கும். வால்வு திறந்திருந்தா ஆசிட்  வெளியில வந்து நெஞ்செரிச்சல் உண்டாகும். அதுவே கொஞ்சம் கொஞ்சமா அல்சரா மாறிடும். அப்புறம் ரணமா உருமாறும். இந்த சிக்கலான வாயுப்  பிரச்னையை ‘ஜெர்டு’ன்னு (GERD -Gastroesophageal reflex disease) மருத்துவத்துல குறிப்பிடுவோம். இந்தப் பிரச்னை உள்ளவங்க உடனே  சிகிச்சை எடுத்துக்கறது நல்லது.’’   

யார் யாருக்கெல்லாம் ஏற்படலாம்? 

‘‘இது ஒரு பொதுவான பிரச்னை. பருமன் பிரச்னை உள்ளவங்களுக்கு வரும். ஆஸ்துமா நோயாளிகள் அதற்கான மருந்து எடுத்துக்கறதால  அவங்களுக்கு ஏற்படும். தொடர்ந்து வேற வேற பிரச்னைகளுக்கு மாத்திரை சாப்பிடுறவங்களுக்கும் வரலாம். இதெல்லாம் இல்லாதவங்களுக்கும்  வரலாம். நம்ம வாழ்க்கை முறையும் முக்கியமான காரணம். இப்பல்லாம் நம்மள்ல நிறையபேர் அதிக தூரம் நடக்கறதில்லை... ஏ.சி.யில, கம்ப்யூட்டர்  முன்னாடி 12 மணி நேரம் உட்கார்ந்து வேலை பார்த்துட்டு பீட்சா, சமோசான்னு கண்டதை சாப்பிடுறோம்... இதெல்லாம்தான் இந்தப் பிரச்னைக்கு  முக்கியக் காரணங்கள்...’’ 

தவிர்ப்பது எப்படி? 

‘‘சாப்பிட்டதும் குறைந்தது ஒன்றரை மணி நேரம் கழிச்சுத்தான் படுக்கணும். அப்பத்தான் உணவு ஜீரணமாகறதுக்கு உடலுக்கு அவகாசம் கிடைக்கும்.  இரவில் எண்ணெய் உணவுகள், சாக்லெட், புரோட்டா, ஐஸ்க்ரீம் போன்றவற்றை தவிர்த்துடணும். அசைவ உணவுகளைக் குறைக்கணும். எண்ணெய்  அதிகம் சேர்க்காத இட்லி, தோசை, இடியாப்பம், ஆப்பம் போன்ற டிபன் வகைகளை காலையிலும் இரவிலும் சேர்த்துக் கொள்ளலாம். பருப்பு வகைகள்,  மொச்சை போன்றவற்றை  கொஞ்சம் தவிர்க்கலாம். 

ரெகுலரா வாக்கிங் போறது, உடலுக்கு வேலை கொடுப்பது, உடற்பயிற்சி செய்வது, உடலைப் பருமனாக்காத - அதே நேரம் நம் உடலுக்கு வலு  சேர்க்கும் சரிவிகித உணவு களை சாப்பிடுவது... இவையெல்லாம் இந்தப் பிரச்னை வராமல் தவிர்த்துவிடும். வாயுத் தொல்லை அதிகம் உள்ளவர்கள்  கண்டிப்பாக சிகிச்சை எடுத்துக்கணும். தொடர்ந்து மாத்திரை எடுத்துக் கொண்டால் குணம் பெறலாம். மாத்திரையால் குணப்படுத்த முடியாத அளவுக்கு  இந்தப் பிரச்னை பெரியதாகிட்டா அறுவை சிகிச்சை அளவுக்குப் போகவும் வாய்ப்பிருக்கு...’’ 

வாயுத் தொல்லை உள்ளவர்களின் வாரிசுகளுக்கும் இது ஏற்படுமா? 

‘‘நிச்சயமா இல்லை. அதற்கான வாய்ப்பு ரொம்ப ரொம்பக் குறைவு...’’ 

புளிச்ச ஏப்பத்திலிருந்து வாயுத் தொல்லை வரை சோடா குடித்தால் நிவாரணம் கிடைக்கும் என்கிறார்களே... உண்மையா?

‘‘தவறு... அப்படியெல்லாம் நடக்காது. சோடா வாயுப் பிரச்னையைத் தீர்க்கும் என்பது ஒரு மனப்பிரமையே தவிர வேறொன்றுமில்லை. வாயுத்  தொல்லையா? உடனே மருத்துவரை அணுகுங்கள்... அதுதான் உடம்புக்கு நல்லது!’’



http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=2957


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

தர்ம சங்கடம் தவிர்க்கலாமா? Empty Re: தர்ம சங்கடம் தவிர்க்கலாமா?

Post by சுறா Sat 18 Oct 2014 - 12:24

நல்ல பயனுள்ள தகவல்


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum