சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

400 சிந்தனைகள் Khan11

400 சிந்தனைகள்

2 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

400 சிந்தனைகள் Empty 400 சிந்தனைகள்

Post by ahmad78 Wed 22 Oct 2014 - 14:25

1.வாழ்க்கையில் வெற்றியின் ரகசியம் என்பது சந்தர்ப்பத்திற்காகக்

காத்திருத்தலும், வந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்துவதுமே ஆகும்.

                                                        --- வால்டேர்.

2.மாற்றமுடியாததை ஏற்றுக்கொள்ளுங்கள்.

                                     ---காப்மேயர்

3.வெற்றியைக் காண்பதற்கு நம்பிக்கையும் முயற்சியுமே சிறந்த வழிகள்.

வேறு குறுக்கு வழிகள் இல்லை.
                                     ---எட்மண்ட் பர்க்.

4.உன் அன்பின் தன்மைக்கு ஏற்றபடி உன் செயல்கள் அமையும்;

உன் செயல்களுக்கு ஏற்றபடி உன் வாழ்க்கை அமையும்.

                                                     ----சாக்ரடீஸ்

5.உணர்ச்சிக்கு முதலிடம் கொடுக்காமல் உழைப்புக்கு முதலிடம்

கொடுத்தால், வாழ்க்கை உன்னதமாக இருக்கும்.
                                            ---எடிசன்

6.விடாமுயற்சியுடையவன் விரும்பிய அனைத்தையும்

பெற்றுவிடுகிறான்.
                                      ---ரூஸ்வெல்ட். 

7.இயற்கை, காலம், பொறுமை இவையே சிறந்த மருத்துவர்கள்.

                                       ---ஜார்ஜ் போஹன்

8. செயலை விதையுங்கள்; பழக்கம் உருவாகும்.

   பழக்கத்தை விதையுங்கள்; பண்பு உருவாகும்.

   பண்பை விதையுங்கள்; எதிர்காலம் உருவாகும்.

                                           ஜேம்ஸ் ஆலன் 

9. மனிதனை மனிதனாக்குபவை உதவிகளும் வசதிகளும் அல்ல.

  இடையூறுகளும் துன்பங்களுமே.
                                           ---மாத்பூன்     

10. நிதானமாகச் சிந்திக்கவேண்டும். விரைவாகச் செயல்படவேண்டும்.
                                            ---புட்ஸர்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

400 சிந்தனைகள் Empty Re: 400 சிந்தனைகள்

Post by ahmad78 Wed 22 Oct 2014 - 14:26

11. உன் விதியை வகுப்பவன் நீயே! உனக்குத் தேவையான எல்லா

    வலிமைகளும் உனக்குள்ளேயே குடிகொண்டு இருக்கின்றன.

                                                --- சுவாமி விவேகானந்தர் 

12. ஓர் இல்லத்தை இல்லமாக்க ஒரு பெண்ணால் மட்டுமே முடியும்.

                                                ---- கோல்ரிட்ஜ்

13. உயர்ந்த விஷயங்களை எளிமையாகக் கூறுவதே சான்றாண்மை.

                                                ----எமர்சன்

14. அகந்தையை வென்றுவிட்டால் அடக்கம் தானாகவே

    நம்மை வந்து சேரும்.
                                                 ----மகாவீர்

15. தீயுள்ள இடத்தில் சூடுண்டு; சூடுள்ள இடத்தில் தீயுண்டு.

   அறிவுள்ள இடத்தில் நினைப்புண்டு; நினைப்புள்ள இடத்தில் அறிவுண்டு

                                                  --- ஜேம்ஸ்ஆலன்

16. தோல்வியைக் கண்டு அஞ்சுபவர்களிடமிருந்து வெற்றி தானாகவே

     ஒதுங்கிக் கொள்கிறது.
                                                 --- எமர்சன்

17. ஆத்திரத்தில் சக்தி குறையும்; பொறுமையில் சக்தி கூடும்.

    உங்கள் சக்தியைச் சேகரித்துக் கொள்ளுங்கள்.

                                                --- இயேசுநாதர்

18. உங்கள் கௌரவம் உங்கள் நாக்கின் நுனியில்தான் இருக்கிறது.

                                                --- மில்டன்

19. தன்னம்பிக்கையே எல்லாவற்றிற்கும் முதல்படி.

                                               ---ப்ரெமர்

20. எளிமையும் மரியாதையும் உயர்ந்த பண்புகள்.

                                               ---நபிகள் நாயகம்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

400 சிந்தனைகள் Empty Re: 400 சிந்தனைகள்

Post by ahmad78 Wed 22 Oct 2014 - 14:26

21. வாழ்க்கையில் வெற்றி அடைய வேண்டுமானால் கஷ்டங்களை

    ஏற்றுக்கொள்ள வேண்டும்.
                                                 --- நெப்போலியன்

22. மனம் சொர்க்கத்தை நரகமாக்கும்/நரகத்தை சொர்க்கமாக்கும்
    தன்மையுடையது.
                                                --- மில்டன்


23. அனுபவம் ஒரு கடுமையான ஆசிரியர். காரணம் அது முதலில்

    பரிட்சை வைக்கிறது. பின்னர் பாடம் கற்பிக்கிறது.
                                                   ---- வெர்ணன்

24. வசந்தம் ஒரே நாளில் மலர்ந்து விடுவதில்லை.

    அதுபோலத்தான் வாழ்வில் உயர்வதும்.
                                             ---ரூசோ

25. காதல் அடிமேல் அடி வைத்து மெள்ள வருகிறது.

   போகும்போது கதவைப் பலமாகச் சாத்திவிட்டுப் போகிறது.

                                              ---லெம்ப்கே

26. நீங்கள் செயலாற்றப் பிறந்திருக்கிறீர்கள். உங்களுடைய

   செயல் இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும்

   தேவையாக இருக்கிறது.
                                               ---விவேகானந்தர்  


27. நாம் முதலில் தெரிந்துகொள்ளவேண்டியது மற்றவர்களை

   மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதைத்தான்.

                                                --- எமர்சன்

28. ஆனந்தமாக இரு; அடக்கமாக வாழ்;

    தைரியசாலியாகச் செயல் படு;

    நேர்மையாக இரு. இதுவே வெற்றியின் பாதை.

                                                 ---ஜான்விலி

29. பிரச்னையைத் தீர்க்க மௌனமொழியே சிறந்தது.

                                                 ---சாணக்கியன்


30. அடுத்தவரின் வாழ்க்கையுடன் ஒப்பிடாமல் தன் வாழ்க்கையை

   மகிழ்ச்சியாக நினைப்பவன் புத்திசாலி.
                                               --- சாணக்கியன்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

400 சிந்தனைகள் Empty Re: 400 சிந்தனைகள்

Post by ahmad78 Wed 22 Oct 2014 - 14:26

31.சந்தர்ப்பத்தை உருவாக்குபவர்கள் வெற்றியை ஈட்டுகின்றனர்.

                                                --- பெர்னாட்ஷா


32. வேலைக்காரனாக இருக்கக் கற்றுக்கொள்.

   பிறகு எஜமானனாகும் தகுதி தானாக வரும்.

                                             --- விவேகானந்தர்   

33. சுயமரியாதை, சுயபுத்தி, தன்னடக்கம் இம் மூன்று குனங்களே

    வாழ்க்கையை சிறப்பான வெற்றிக்கு வழி நடத்திச் செல்லும்.

                                              ---டென்னிசன்.
                                 
34. மனிதனின் கெட்ட குணங்களை வெறுத்துவிடு;

    மனிதனை வெறுக்காதே.
                                             --- ஷேக்ஸ்பியர்

35' பாராட்டுக்கு நாவின் ஈரம் மட்டும் போதாது;

   மனதின் ஈரமும் வேண்டும்.
                                        --- காண்டேகர்.

36. பேசப்படும் சொல்லைவிட எழுதப்படும் சொல்லே

    வலிமை வாய்ந்தது.
                                         --- ஹிட்லர்

37. உள்ளம் வசமானால் உலகம் வசமாகும்.
                                         --- பைரன்

38. பிடிவாதமுள்ளவன் நஷ்டத்திற்கு அதிபதி.
                                     --ஷேக்ஸ்பியர்

39.வாக்கு தவறாத மனிதன் மனிதருள் மாணிக்கம்.

                                      --- ரஸ்கின்

40. உலகில் தன்னம்பிக்கையே நிகரில்லா செல்வம்.

                                                        --- ஒளவையார்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

400 சிந்தனைகள் Empty Re: 400 சிந்தனைகள்

Post by ahmad78 Wed 22 Oct 2014 - 14:26

41. அறிவின் முதற்பாடம் செல்வத்தை வெறுப்பது;

   அன்பின் முதற்பாடம் அதை அனைவருக்கும் செய்வது.

                                                                 --- ரஸ்கின்

42. எதிர்காலத்தில் நாம் எப்படி இருப்போம் என்பது இப்போது

   நாம் செய்யும் செயல்களையும் எண்னும் எண்ணங்களையும்

   பொருத்தது.
                                          --- விவேகானந்தர்

43, வாழ்க்கையில் முன்னேற:

   1. குன்றாத உழைப்பு,

   2. குறையாத முயற்சி,

   3. வெற்றி பெறுவோம் என்ற தன்னம்பிக்கை

      இம் மூன்றும் இருந்தால் போதும்.

                                  --- தாமஸ் ஆல்வா எடிசன்.

44. பணம், ஆற்றல், திறமை இவையெல்லாம் வாழ்க்கைக்குரிய

    பொருள்களே அன்றி அவையே வாழ்க்கை ஆகா.

                                    --- ஜேம்ஸ் ஆலன்

45. தன்னைக் கட்டுப்படுத்தத் தெரிந்தவந்தான் வலிமையானவன்.

                                      --- சாணக்கியன்.

46. காதல் மயக்கத்தில் தோன்றினால் மங்கும்.

   அன்பில் தோன்றினால் பொங்கும்.
                                     --- கண்ணதாசன்

47. அறிவு மௌனத்தைக் கற்றுத்தரும்.

    அன்பு பேச்சைக் கற்றுத்தரும்.
                                    ---ரிக்டர்

48. உறுதியைப் போல உழைப்பும் இருந்தால் வெற்றி காண்பாய்.

                                                  --- ஷெல்லி

49. எல்லாத் தடைகளையும் தாண்டி, எடுத்த செயலை

    நன்னெறிப் பாதையில் முடிப்பவனே உண்மையான

    மனிதன்.
                                             --- துளசிதாசர்.

 50. நேரம் என்பது செலுத்தப்பட்ட அம்பைப் போன்றது;

   அது திரும்பிவராது.
                                             ---ஜேஷி


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

400 சிந்தனைகள் Empty Re: 400 சிந்தனைகள்

Post by ahmad78 Wed 22 Oct 2014 - 14:27

51. வெற்றியின் அடிப்படை எடுத்த செயலில் நிலையாக நிற்பதே.

                                                ----வால்டேர்



52. உங்களுடைய முயற்சிகளுக்கு நீங்கள் எந்தவிதமான எல்லையையும்

   ஏற்படுத்திக் கொள்ளாமல் இருந்தால் உங்களால் மிகப் பெரிய

    காரியங்களைச் சாதிக்க முடியும்.
                                        ----- நியூமேன்.


53. பெரிய பெரிய சாதனைகளெல்லாம் செய்து முடிக்கப்படுவது

    ஆழ்ந்த மௌனத்தால்தான்.
                                              --- எமர்சன்

54. பேச்சாற்றலைவிட செயலாற்றல் சிறந்தது.
                                             ---- லாங்பெல்லோ

55. காதல் என்பது ஒரு கண்ணாடிக் குவளை.
   அதை இறுகப் பற்றினாலோ இலேசாகப் பிடித்தாலோ
    உடைந்துவிடும்.
                                           ---- ராபர்ட்


56. மனிதனின் மன உறுதி மலைகளையும் தகர்த்தெறியும்.

                                             ---மார்க்ஸ்
                     
57. முதலாவது செல்வம் ஆரோக்கியமே.

                                           --- எமர்சன்


58. முன்னேறும் சந்தர்ப்பங்கள் தாமாக வருவதில்லை;

    அவை உருவாக்கப்படுகின்றன.

                                          --- ஆரிஸன் ஸ்வெட்மார்டன்.


59. பேச்சில் இனிமை, கொள்கையில் தெளிவு,
    செயலில் உறுதி ஆகிய மூன்றும் உள்ளவரால்
    எதையும் சாதிக்கமுடியும்.
                                          --- புல்லர்

60. காலத்தின் மதிப்பு தெரிந்தால்தான் வாழ்க்கையின்
  
   மதிப்பு தெரியும்.
                                          --- நெல்சன்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

400 சிந்தனைகள் Empty Re: 400 சிந்தனைகள்

Post by ahmad78 Wed 22 Oct 2014 - 14:27

61. உறுதியுடைய உத்தமர்க்கு உலகம் வளைந்து கொடுக்கிறது.

                                        ---- ஏராஸ்பீஸ்


62. எந்த ஒரு செயலிலும் உணர்ச்சிவசப்படாத

  சகிப்புத் தன்மையும் நிதானமும் சிறப்புக்குரியவை.

                                           --- நபிகள் நாயகம்.


63. நம்மைக் காப்பாற்றுபவை நீதி,தன்னடக்கம்,

  உண்மையான எண்ணம் ஆகியவைதான்.

                                           ---ரஸ்கின்


64. அமைதியிலும் அசையா உறுதியிலுமே

   நம் வலிமை உள்ளது.
                                      ----ஓஸாயா


65. வெல்ல முடியும் என்று நினைப்பவரே வெல்ல முடியும்.

                                       ---வேர்ஜில்


66. வருவதும் போவதும் :   செல்வம்,வறுமை, நோய்.

   வந்தால் போகாதது :    கல்வி,ஞானம்,புகழ்.

   போனால் வராதது :     உயிர், மானம், காலம்.

   கூடவே வருவது :     பாவம், புண்ணியம், நிழல்.

                                       --- வாரியார் 
 


67. இன்றே செயல்பட்டு, இன்றே சேமித்து,
   இன்றே நல்லது செய்தால் நாளைக்கு நன்றாக
   ஓய்வு எடுக்கலாம்.
                                         --- பிராங்ளின்



68. சோர்வும் கவலையும்தான் வெற்றிக்குத் தடைபோடும்
    கற்கள்.
                                          --- பிளாட்டோ


69. எங்கு அன்பு இருக்கிறதோ அங்கே வாழ்வு இருக்கிறது.

                                            --- காந்திஜி


70. அளவில்லாத ஆசை நம் நல்ல குணங்களை அழித்துவிடும்.

                                           --- வாரியார்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

400 சிந்தனைகள் Empty Re: 400 சிந்தனைகள்

Post by ahmad78 Wed 22 Oct 2014 - 14:27

71. அளவில்லாத சோதனைகளைத் தாங்கிக்கொண்டு சாதனை
    படைக்கின்றவன்தான் மேதை.
                                            --- ஹோம்கின்ஸ்



72. வெற்றியைவிட தோல்விதான் அதிகப் படிப்பினையை
   சொல்லித்தருகிறது.
                                             --- கார்ல்மெனிங்கர் 


73. நம்பிக்கையானது முயற்சியை வாழ்த்திப் புன்னகைக்கிறது.

                                             --- ப்ராண்டே


74. உயர்ந்த குறிக்கோளைக் கொண்ட வாழ்க்கையே
   பெருமையுள்ள வாழ்க்கை.
                                             --- அல்மெரான்


75.  நாளை என்பது சோம்பேறிகளின் கூற்று.
   இன்றைய நாளின் அருமையை உணர்ந்தோர்
   உயர்ந்து கொண்டிருக்கின்றனர்.
                                             --- வெயின்


76. ஆசை முடியும் கட்டத்தில்தான் அமைதி பிறக்கிறது.

                                             --- எட்வர்ட்யங்


77. உணர்ச்சி அரியணையில் அமர்ந்திருக்கும் போது
   அறிவு வெளியே போய்விடும்.

                                               --- எம். ஹென்றி


78. உலகிலேயே அனைவருக்கும் சமமாகவும் இலவசமாகவும்
   கிடைக்கும் அபூர்வமான மூலதனம் காலம்.
                                            --- விவேகானந்தர்

79. உழைப்பை விற்கலாம்; ஒரு நாளும் ஆன்மாவை விற்கக்கூடாது.

                                           --- ரஸ்கின்


80. எவரிடமும் எதையும் எதிர்பார்க்காதீர்கள்.
   அப்படி எதிர்பார்த்தால் இறுதிவரை எதையும்
   சாதிக்காமல் போய்விடுவீர்கள்.
                                           --- எட்பஸ்ட் பர்ஸி


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

400 சிந்தனைகள் Empty Re: 400 சிந்தனைகள்

Post by ahmad78 Wed 22 Oct 2014 - 14:27

81. அவசரப்படுவது வீண்செலவு உண்டாக்கும் என்பதை
   அறிந்தவன் புத்திசாலி.
                                         --- சாணக்கியன்

82. பிழை செய்வது மனிதர்க்கு இயற்கை. நமது பிழைகள்
   எல்லாம் நமது மேம்பாட்டுக்குப் படிக்கல்லே அல்லாது
   நமக்குத் தாழ்வைத் தருவதல்ல.
                                         --- ஜேம்ஸ் ஆலன்


83. உழைப்பின்றி வெற்றி எதுவும் தழைப்பதில்லை.

                                          ---  ஜேம்ஸ் ஆலன்


 84. வாக்கு தவறாத மனிதன் மனிதருள் மாணிக்கம்.

                                          ---ரஸ்கின்


85. சிக்கனமில்லாமல் வாழ்ந்தால் சிறு குடும்பமும் சீரழியும்.

                                           --- உட்வெல்


86. ஒருவரையும் நம்பாமல் இருப்பது ஆபத்து. எல்லோரையும்
   நம்புவது பேராபத்து.
                                          --- ஆபிரகாம்லிங்கன்


87. நேர்வழியே ஒழுக்கத்திற்குச் சுருக்குவழி.
                                          --- ரஹேஸ்


88. நம்பிக்கையும் அன்பும் ஆன்மாவின் தாய்ப்பால்.
   இவ்விரண்டையும் பெறாவிட்டால் ஆற்றல் முழுவதும்
   அழிந்துபோகும்.
                                          --- ரஸ்கின்


89. தன்னைக் கட்டுப்படுத்தத் தெரிந்தவன்தான் வலிமையானவன்.

                                        --- சாணக்கியன்


90. உழைப்பினால் கிடைத்த சொந்த பொருளுக்கு உள்ள
   சிறப்பு, கடன் வாங்கிய முதலுக்குக் கிடையாது.
  
                                          --- ஹென்றி ஃபோர்டு


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

400 சிந்தனைகள் Empty Re: 400 சிந்தனைகள்

Post by ahmad78 Wed 22 Oct 2014 - 14:27

91. அன்பைக் கடன் கொடு. அதிக வட்டியுடன் உன்னிடம்
    திரும்பி வரும்.

                                          --- கதே


92. மகிழ்ச்சியைத் தேடாதீர்கள். ஆனால் மகிழ்ச்சியாக
   இருக்க சதாகாலமும் தயாராக இருங்கள்.

                                          --- ரஸ்கின்


93. அகந்தையை வென்றுவிட்டால் அடக்கம் தானாகவே
   நம்மை வந்து சேரும்.
                                           --- மகாவீர்

94. ஆலோசனையோ , உப்போ வேண்டப்பட்டால் ஒழிய
    வழங்கப்படக்கூடாது.
                                           --- பேகன்


95. மன அமைதியோடு இருப்பவனுக்கு என்றும் ஆபத்து இல்லை.

                                             ---லாவோத்சு



96. களங்கமற்ற மனம் மிகச் சிறந்த அறிவாற்றலை விட மேலானது.

                                              --- சாகுல்


97. முடியாது என்பது முட்டாளின் தத்துவம்.
                            
                                            --- நெப்போலியன்


98. அடுத்தவரின் வாழ்க்கையுடன் ஒப்பிடாமல் தன் வாழ்க்கையை
   மகிழ்ச்சியாக நினைப்பவன் புத்திசாலி.
                                         ---- சாணக்கியன் 


99. உலகிற்கு நீ வழங்குவது அதிகமாகவும், உலகிடமிருந்து
   நீ ஏற்பது குறைவாகவும் இருக்கட்டும்.

                                           --- புருஸ்


100. காலத்தின் நிலையை அறிந்துகொள். அதை வீணாக்குவது
    உன்னையே கொலைசெய்தது போல ஆகும்.

                                          --- ஜேம்ஸ்ஆலன்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

400 சிந்தனைகள் Empty Re: 400 சிந்தனைகள்

Post by ahmad78 Wed 22 Oct 2014 - 14:28

101. தகுதிக்கு மேல் செலவு செய்வது உன் உயிரை
    முடித்துக் கொள்ள நீயே கயிறு திரிப்பது போன்றது.

                                               --- பரோஸ்

102. பெருந்தன்மையான குணம் எல்லா நற்குணங்களுக்கும்
    ஆபரணம் போன்றது.

                                              --- அரிஸ்டாட்டில்

103. உன் நல்ல செயல்களின் மூலம் பிறருக்கு
    வழி காட்டியாக இரு.

                                        --- இங்கர்சால்

104. மகிழ்ச்சியும் உழைப்பும் வாழ்நாளை வளர்ப்பவை.
                                         
                                                --- பிராங்க்ளின்

105. பணிவு என்பது தோரணங்களில் அல்ல.
    செயல்களில்தான் இருக்க வேண்டும்.

                                         --- ஆண்ட்ரூமேசன்

106. உற்சாகமும் முயற்சியும் உள்ளவனுக்கு எங்கும்
    வேலை கிடைக்கும்.
  
                                       --- இங்கர்சால்

107. கோபத்துடன் செயல்படுபவனும், புயலில் கப்பல் விடுபவனும்
    சரிசமமானவர்கள்.

                                       --- பீச்சர்

108. "எனது" என்ற எண்ணம் நீங்கினால் ஆசையே தோன்றாது.

                                        --- வாரியார்

108. ஒழுக்கமும், தன்னம்பிக்கையுடன் கூடிய ஆற்றலும்
    மதிப்புள்ள முதலீடுகள். 

                                        --- லிட்டீன்

109. எவன் ஒருவன் விடாமுயற்சி செய்கிறானோ அவனே
    வெற்றி என்ற புகழை அடைகிறான்.

110. வாழ்வது முக்கியமன்று; சிறப்பாக வாழ வேண்டும்
    என்பதே முக்கியம்.

                                         --- சாக்ரடீஸ்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

400 சிந்தனைகள் Empty Re: 400 சிந்தனைகள்

Post by ahmad78 Wed 22 Oct 2014 - 14:28

111. நம்பிகையுடன் இருக்கும்போது எந்தக் காரியமும்
    கடினமாகத் தெரிவதில்லை.

                                          --- ஜோன்ரேட்


112. அடக்கமுள்ளவன் மகிழ்ச்சி அடைகிறான்.
   அடக்கம் இல்லாதவன் துன்பத்தை அடைகிறான்.


113. பொறுமையாக இருப்பது கடினம்தான்.
    அதன் முடிவோ சமாதானம்.

                                    --- புல்லர்

114. நீங்களும் நன்றாக வாழுங்கள். மற்றவர்களையும்
    நன்கு வாழவிடுங்கள்.

                                  --- ஸ்சில்லர்

115. நம்பிக்கை என்பது புயல் காற்றில் துவண்டு விழும்
    மெல்லிய மலரல்ல; அது அடிபெயரா இமயம் போன்றது.
                                         
                                        --- காந்திஜி
                                        
116. அமைதியான மனம் மனிதன் அடையும் பெரும் பாக்கியம்.

                                         --- அகஸ்டின்
          
117. கோபம் அன்பை அழிக்கிறது.
    செருக்கு அடக்கத்தை அழிக்கிறது.
                     
                                    --- சாணக்கியர்
118. ஒருபோதும் துன்பமாக மாறாத பொருள் ஒன்று உண்டு;
    அது நாம் செய்யும் நற்செயலே.

                                         --- மேட்டர்லிங்க்



119. நாம் பிறரால் ஏமாற்றப்படுவதில்லை. நம்மை நாமே
    ஏமாற்றிக் கொள்கிறோம்.

                                       --- ப்யூலர்
120. உள்ளத்தில் உண்மையுடையவர்கள் ஒரு போதும்
    தோல்வி அடையமாட்டார்கள்.

                                      --- ஷிண்டே


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

400 சிந்தனைகள் Empty Re: 400 சிந்தனைகள்

Post by ahmad78 Wed 22 Oct 2014 - 14:28

121. பிறர் செய்த உபகாரம் உன் கையில் அதிகமாக
    தங்கிவிடாமல் பார்த்துக்கொள்.

                                   --- எமர்சன்


122. பிறரிடம் உள்ள நூறு குறைகளைச்
    சுட்டிக்காட்டுவதைவிட நம்மிடம் இருக்கும்
    ஒரு குறையையாவது போக்க வேண்டும்.

                                  --- புத்தர்

123. அதிருப்திக்கெல்லாம் வேர் சுயநலமே.

                                  --- கிளார்க்


124. முன்னேறும் சந்தர்ப்பங்கள் தாமாக வருவதில்லை;
    அவை உருவாக்கப்படுகின்றன.

                                          --- ஆரிஸன் ஸ்வெட்மார்டன்



125. நம் ஒவ்வொருவரிடமும் எல்லையற்ற சக்தியும்
    தூய்மையும் ஆற்றலும் உள்ளன.

                               --- விவேகானந்தர்


126. நீ புறக்கணிக்கும் ஒவ்வொரு கடமையும்
    நீ தெரிந்துகொள்ளத் தவறிய ஓர் உண்மையைப்
    புலப்படுத்தும்.

                                        --- வாஷிங்டன்


127. பிறரை அறிந்தவன் கெட்டிக்காரன்;
    தன்னை அறிந்தவன் ஞானி.

                               ---லோட்ஸே


128. தேவைக்கு அதிகமான செல்வம் சுமையாகும்.

                                       --- மார்ஸோ


129. பேராசை உள்ளவரை பேரலைச்சலும் உண்டு.

                                         --- பீட்டர்பெரோ


130. நாணயமாக நடப்பவர்கள் ஒளிக்கும் இருளுக்கும்
    அஞ்சுவதில்லை.

                                        --- கதே


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

400 சிந்தனைகள் Empty Re: 400 சிந்தனைகள்

Post by ahmad78 Wed 22 Oct 2014 - 14:28

131. வெறுப்பை வெறுப்பால் வெல்ல முடியாது;
     பாசத்தால்தான் வெல்ல முடியும்.

132. மனோதைரியம் இல்லையேல் வாய்மை இல்லை.
               
                                             --- மில்டன்


133. செல்வத்தை மட்டுமே நாடுபவன் வீழ்ச்சி அடைவான்.
    நற்பண்பு உடையவன் கிளைபோல் செழித்து இருப்பான்.

                                            --- மவுண்டர்


134. அதிர்ஷ்டத்தின் வலக்கை தொழில். இடக்கை சிக்கனம்.

                                         --- காண்டேகர்


135. எவன் பூரணமாக அகத்தூய்மை உள்ளவனோ அவனே
    உண்மையான பக்திமானாகிறான். மனத்தைப் பெருமளவுக்குத்
    தூய்மைப் படுத்துவதுதான் பக்தி ஏற்பட சிறந்த குணம்.

                                          --- சுவாமி விவேகானந்தர்

136. நட்பு நம் இன்பத்தைப் பெருக்கித் துன்பத்தைக் குறைக்கிறது.

                                         --- எடிசன்


137. நாளைய தினத்தைக் குறித்துக் கவலைப்படாதே;
    இன்றைய தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள உழை.

                                             --- மூர்


138. கோபம் முட்டாள்தனத்தில் துவங்கி வருத்தத்தில் முடிகிறது.

                                              ---பிதாகரஸ்

139. அழகற்ற மனதைவிட அழகற்ற முகம் மேலானது.

                                                --- எல்லீஸ்



140. மனிதகுல முன்னேற்றத்திற்காக மனிதன் உழைக்கிற
    இடமே உயர்ந்த கோயில்.

பொன்மொழிகள்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

400 சிந்தனைகள் Empty Re: 400 சிந்தனைகள்

Post by ahmad78 Wed 22 Oct 2014 - 14:29

141. தனது குற்றங்களை மறந்து பிறரின் குற்றத்தைக்
    கண்டுபிடிப்பது தவறு.

                                          --- ரூஸோ


142. விலை கொடுக்காமல் பெற இயலாத பொருள் அனுபவம்.

                                         --- பியேர்

143. சோகம் என்பது பறவையாகும். உங்கள் தலைக்குமேல்
     அதைத் தடுக்க இயலாது. ஆனால் அது உங்கள் தலையில்
     கூடுகட்டி வாழ்வதைத் தவிர்க்கலாம்.

                                           --- ஸ்டிலி

144. உண்மையாக நடந்துவரும் மனிதனுக்கு எந்த உபதேசமும்
    தேவையில்லை.

                                            --- வாரியார் 


145. முன்னேற்றம் என்பது நம் கைகளில்தான் இருக்கிறது.

                                           --- உட்வெல்


146. ஆசைகளைத் திருப்திசெய்வதில் அமைதி இல்லை;
     மட்டுப்படுத்துவதில்தான் அமைதி உள்ளது.

                                             --- ஹிபர்


147. அதர்மம் ஆதிக்கம் செய்வதைப்போல் தோன்றினாலும்
     தர்மமே வெல்லும்.

                                            --- ஜோசப்ரூக்ஸ்


148. எஜமானனாக இருந்தால் சில சமயம் குருடனாக இருங்கள்.
    வேலையாளனாக இருந்தால் சில சமயம் செவிடனாக
    இருங்கள்.

                                            --- புல்லர்


149. பேச்சு பெரியதே. ஆனால் மௌனம் அதனினும் பெரியதாகும்.

                                           --- வாரியார்


150. நேரம் என்பது செலுத்தப்பட்ட அம்பைப் போன்றது;
     அது திரும்பி வராது.

                                       --- ஜேஷி


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

400 சிந்தனைகள் Empty Re: 400 சிந்தனைகள்

Post by ahmad78 Wed 22 Oct 2014 - 14:29

151. உங்கள் உள்ளம் உறுதியாய் இருக்கும் வரை உங்கள்
    முயற்சி எதிலுமே தோல்வி அடையாது.

                                        --- பாஸ்டிசர்

152. ஆர்வமே எதிர்காலத்தை உருவாக்குகிறது.

                                      --- ஆர்னால்டு


153. தன்னை எதிரி வென்றுவிடுவானோ என்று அஞ்சுபவன்
    நிச்சயம் தோல்வி அடைவான்.

                                       --- நெப்போலியன்

154. நிலத்தை நம்பி வாழலாம்; ஆனால் நிழலை நம்பி
    வாழக்கூடாது.

                                      --- யங்

155. பொறுமை என்பது ஒருகசப்பான காய்.
    ஆனால் அது கனிந்தால் மிகவும்
    இனிமையானதொரு பழமாகும்.

156. தோல்வி வந்தால் அது உனக்கு மிகவும் பிரியமானது
    போல் காட்டிக்கொள். வெற்றி வந்தால் அது உனக்கு
    மிகவும் பழக்கப்பட்டதைப் போல் காட்டிக்கொள்.

                                        --- எமர்சன்

157. தெளிந்த உள்ளம், கடுமையான உடலுழைப்பு,
     பிறருக்காகப் பாடுபடும் பண்பு இவைதான்
     மகிழ்ச்சியின் உதயத்தில் நிலைக்களன்.

                                      --- ஹெலன் கெல்லர்

158. ஒழுக்கம் போர்க்களத்தைப் போன்றது;
    நாம் ஒழுக்கத்தோடு வாழவேண்டுமானால்
    ஒயாமல் மனத்தோடு போராட வேண்டும்.

                                     --- ரூசோ


159. வாழ்க்கை என்பது  சின்னஞ்சிறு தீபமன்று;
    அது அற்புதமான தீப்பந்தம்.
    வருங்கால சந்ததிகளிடம் அதை அளிப்பதற்கு
    முன்னால் முடிந்தவரை அதைப் பிரகாசமாக
    எரியச் செய்யவே ஆசைப்படுகிறேன்.

                                 --- பெர்னாட்ஷா


160. நெருக்கடியின்போது நினைத்ததைக் கடைப்பிடிப்பது
     மிகவும் பெரிய பலம்.

                                        --- ஐசக்நியூட்டன்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

400 சிந்தனைகள் Empty Re: 400 சிந்தனைகள்

Post by ahmad78 Wed 22 Oct 2014 - 14:29

161. கஞ்சத்தனம், தற்பெருமை, பேராசை ஆகிய மூன்றும்
    மனிதனை வீணாக்கிவிடும்.

                                       --- முகமதுநபி


162. நமக்கு எது தெரியுமோ அதைப் பற்றி மட்டும்
    பேசுவது நல்லது.

                                      --- பெர்னாட்ஷா

163. பெரிய வெற்றியோ தோல்வியோ கிட்டும்போது
    அமைதியுடன் செயல்பட வேண்டும்.

                                ---- பெர்ரண்ட ரஸ்ஸல்



164. இரக்கம் காட்டு; ஆனால் ஏமாறாதே.

                                    --- மாத்யூக்ரீன்

165. சினமே மனிதனுக்கு முதல் எதிரி.
       
                                --- ப்யூலர்

166. ஒரே குறிக்கோளுடன் உழைப்பவனுக்குத் தோல்வியே
    கிட்டாது.

                                   ---லிங்கன்


167. உங்கள் அதிர்ஷ்டத்தை உருவாக்கும் சிற்பி நீங்கள்தான்.

                                     --- பேகன்

168. நிறைகண்டால் மனிதனைப் போற்றுங்கள்;
    குறைகண்டால் ஒன்றுமே கூறாதீர்கள்.

                                  --- வால்டேர்.


169. எண்ணங்களை செயலாக்கும் ஆற்றலே வெற்றியாக உயர்கிறது.


170. எவரையும் எப்போதும் அவமதிக்கக்கூடாது.

                                   ---சாணக்கியன்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

400 சிந்தனைகள் Empty Re: 400 சிந்தனைகள்

Post by ahmad78 Wed 22 Oct 2014 - 14:30

171. நீங்கள் பிறருக்குத் தரும் பரிசுப் பொருளைவிட
    மேன்மையானது நீங்கள் பழகும்விதம்தான்.

                                   ---கார்லைல்



172. எதையும் ஒரே இடத்தில் வைத்தால்தான் உனக்குத்
    தேடும் நேரம் குறைவு.

                                   --- கதே
173. கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள்; தாமதப்படுத்துங்கள்.
     அதுவே உண்மையான வீரம்.

                                 --- செனேகா

174. அமைதியிலும் அசையா உறுதியிலுமே நம் வலிமை
    உள்ளது.

                                        ---ஓஸாயா

175. திருப்தியின்மை, ஏக்கம் ஆகிய இரண்டும் வளர்ச்சிக்கு
    அவசியமானவை.

                                    --- தாமஸ் ஆல்வா எடிசன்


176. அடக்கமுள்ளவன் மகிழ்ச்சி அடைகிறான்.
    அடக்கம் இல்லாதவன் துன்பத்தை அடைகிறான்.

177. தன்னை எதிரி வென்றுவிடுவானோ என்று அஞ்சுபவன்
    நிச்சயம் தோல்வி அடைவான்.

                                  --- நெப்போலியன்

178. தன்னுடைய சிந்தனையில் உயர்ந்த குறிக்கோள்களைக்
    கொண்ட மனிதன் வளருகிறான்.

179. எதிர்காலத்தை எண்ணி அஞ்சாதவனே
    நிகழ்காலத்துத் தூண்.

                             --- சைரஸ்

180. உலகில் வெற்றி பெற வேண்டுமானால் ஏற்கெனவே
    வெற்றி பெற்ற மாதிரி நீங்கள் தோற்றம் தரவேண்டும்.

                                  --- நெப்போலியன்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

400 சிந்தனைகள் Empty Re: 400 சிந்தனைகள்

Post by ahmad78 Wed 22 Oct 2014 - 14:30

181. பிறருக்கு நன்மை செய்பவன் தனக்கும் நன்மை
    தேடிக்கொள்கிறான்.

                                 --- ஜெனீக்கா


182. நம்பிக்கையே வாழ்க்கையின் சக்தி.
   கவலை வாழ்க்கையின் எதிரி.

                              --- ஷேக்ஸ்பியர்

183. ஒழுங்குதவறிய இடத்தில் பயன் இருந்தும்
    மதிப்புகிடையாது.

                          --- பிராங்க்ளின்


184. அவசரம் சூறாவளியைப் போன்றது. அவசரத்தைப்போல்
     மோசமானது எதுவும் கிடையாது.
 
                                    --- எமர்சன்

185. உறுதியுடைய உத்தமர்க்கு உலகம் வளைந்து கொடுக்கிறது.

                                           --- ஏராஸ்பீஸ்

186. அழகுணர்ச்சி, அன்புணர்ச்சி, நன்னடத்தை ஆகியவை
    மனித குலத்துக்குப் பெருமையைக் கொடுக்கும்.

                                     --- அங்கர் பில்டி

187. காலத்தைத் தவிர நமக்கு எதுவும் சொந்தமில்லை.

                                       --- கிரேஷியன்

188. துணிவு பிறக்க, அறிவு பெருக, மகிழ்ச்சி உருவாக,
    கவலை மறைய நல்ல நூல்களைப் படிக்கவேண்டும்.

                                      --- லாங்பெல்லோ

189. தேவைக்கு அதிகமாகவும் எதையும் பேசாதீர்கள்.

                                      --- ரிச்சர்ட் பிரின்ஸ்லே

190. தளராத இதயம் உள்ளவனுக்கு இவ்வுலகில்
    முடியாதது என்று எதுவுமே இல்லை.

                                     --- புக்கன்ஸ்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

400 சிந்தனைகள் Empty Re: 400 சிந்தனைகள்

Post by ahmad78 Wed 22 Oct 2014 - 14:30

191 வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து.   .....திருக்குறள் 


192. சிறந்த முடிவு எடுக்க ஆத்திரமும் அவசரமும் கூடாது.

                                     --- சாணக்கியன்

193. முதலாவது செல்வம் ஆரோக்கியமே.

                          --- எமர்சன்


194. தனது குற்றங்களை மறந்து பிறரின் குற்றத்தைக்
    கண்டுபிடிப்பது தவறு.

                                ---  ரூஸோ

195. எந்த ஒரு செயலிலும் உணர்ச்சிவசப்படாத சகிப்புத்                           
    தன்மையும் நிதானமும் சிறப்புக்குரியவை.

                                --- நபிகள் நாயகம்

196. மனத்தை வெல்லத் தெரிந்தவனே வாழ்க்கையை
    வெல்கிறான்.

                         --- சாணக்கியன்



197. அறிவு காட்டும் வழியில் மட்டும் செல்லாதே;
    ஆன்மா கூறும் வழியில் செல்.

                                 --- டால்ஸ்டாய்

198. எதற்கும் அஞ்சாதே; எதையும் வெறுக்காதே;
    யாரையும்  ஒதுக்காதே; உன் பணியை
    ஊக்கத்துடன் செய்.
                        --- அரவிந்தர்


199. தீவிர நம்பிக்கையிருந்தால் தேடும் பொருள்
    கிடைத்தே தீரும்.

                                        ஸ்ரீ ராமகிருஷ்ணர்


200. நிலத்தை நம்பி வாழலாம்;
   ஆனால் நிழலை நம்பி வாழக்கூடாது

                           --- யங்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

400 சிந்தனைகள் Empty Re: 400 சிந்தனைகள்

Post by ahmad78 Wed 22 Oct 2014 - 14:30

201. புகழ் என்பது நம் செயல்களின் எதிரொளி.

                                 --- புல்லர்


202. ஒரு மனிதனின் இயல்பை அறியவேண்டுமானால்
    அவனிடம் அதிகாரத்தைக் கொடு.

203. எல்லாம் தெரிந்தவனும் உலகில் இல்லை.
    எதுவுமே தெரியாதவர்களும் உலகில் இல்லை.

                                    --- வாரியார்



204. எங்கு அன்பு இருக்கிறதோ அங்கே வாழ்வு இருக்கிறது.

                                    --- காந்திஜி


205. அன்பு  அருளைத் தரும்; ஆற்றல் பொருளைத்தரும்.
    அன்புள்ள இடத்தில்தான் ஆண்டவன்  இருக்கிறார்.

                                   --- காந்திஜி


206. சிக்கல் எது என்று அறிந்தாலே பாதி சிக்கல் தீர்ந்துவிடும்.

                                    --- கிப்ளிங்


207. மணிக்கணக்கில் பேசுவதைக் காட்டிலும் குறைந்த
   அளவு காரியங்களைச் செய்வது மேலானது.

                                     ---விவேகானந்தர்


208. பொறுமை உள்ள மனிதன் நிச்சயம் வெற்றி பெறுவான்.

                                       ---  எபிடெட்ஸ்

209. வீண் சொற்கள் விஷயங்களைப் பழுதாக்குகின்றன.

                                         --- ஆண்ட்ரூஸ்


210. பாதையைச் சரியாகப் போட்டால் பயணம் சுலபமாக இருக்கும்.

                                          --- இங்கர்சால்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

400 சிந்தனைகள் Empty Re: 400 சிந்தனைகள்

Post by ahmad78 Wed 22 Oct 2014 - 14:30

211. வெல்ல முடியும் என்று நினைப்பவரே வெல்லமுடியும்.

                                          --- வேர்ஜில்

212. சிறுகடமைகளில் கூட கருத்தாக இருப்பதுதான்
    மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு மிகச் சிறந்தவழி.

213. முள்ளில்லாத ரோஜா இல்லை: செயல் இல்லாமல்
     வாழ்க்கை இல்லை.
                               ---இங்கர்சால்


214. பத்து வெற்றிகளைவிட ஒரு சமாதானம் மேலானது.

                                      --- மாண்டேகு


215. கடமை உணர்வே உன் நேர்மையான வாழ்க்கைக்கு ஆதாரம்.

                                     --- ஹென்றி


216. சிந்தனை செய்வது வளர்ச்சியைத்தரும்; கவலைப்படுவது
    அழிவைத்தரும்.

                                        ---என்வியெஷல்


217. மனவலிமை மட்டும் இருந்தால் போதாது;
    அதை நல்லவிதமாகப் பயன்படுத்தவும் வேண்டும்.

                                      ---டெங்கர்டெஸ்

218. கேட்டது கிடைக்கவில்லையே என்று கவலைப்படாதீர்கள்;
    கிடைப்பதை ஏற்றுக்கொள்ளுங்கள்.

                                     --- டிபோ


219. முறிந்துபோவதைவிட வளைந்துபோவது கெட்டிக்காரத்தனம்.

                                        ---  சாணக்கியன்

220. உழைத்து உண்பது நமது கடமை;
    உழைக்காமல் இருப்பது நமது மடமை.

                                     --- வால்டேர்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

400 சிந்தனைகள் Empty Re: 400 சிந்தனைகள்

Post by ahmad78 Wed 22 Oct 2014 - 14:31

221. பிறரை மாற்ற வேண்டும் என்று புத்திசொல்கின்றனர்.
    ஆனால் தன்னை மாற்றிக்கொள்ள யாருமே நினைப்பதில்லை.

                                   --- டால்ஸ்டாய்



222. மனத்திருப்தி நமக்கு இயற்கையாகக் கிடைத்த செல்வம்;
    ஆடம்பரம் நாம் செயற்கையாக உருவாக்கிக்கொண்ட பஞ்சம்.

                                   --- சாக்ரடீஸ்


223. நல்ல நூல்களைப் படிப்பது தலைசிறந்த மனிதருடன்
    உரையாடுவதைப் போன்றது.

                                     --- ரெனதெகார்த்

224. தவறை ஒப்புக்கொள்ளும் தைரியமும், அதைத்
    திருத்திக்கொள்வதற்கான பலமும்தான் வெற்றிக்கான
    வழிகள்.

                                    --- லெனின்

225. செயல் இல்லாத சிந்தனை அழிவைத் தரும்.
    சிந்திக்காது புரிகிற செயல் அர்த்தமற்றதாகப்
    போகும்.


226. நம் கருத்து சரி என்று தெரிந்திருந்தும், அது சரியோ, தப்போ
    என்று அச்சப்படுவது பெரும் பலவீனம்.

                                       --- ஹால்டேன்  


227. பேச இருப்பதை எல்லாம் நன்றாக யோசி.
    யோசிப்பதை எல்லாம் பேசிவிடாதே.

                                      --- டெலானி



228. எது நன்மை என்பது அதை இழந்தபிந்தான் தெரியும்.

                                   --- இங்கர்சால்


229. தீமைகள் உங்களை அணுகாதிருக்க உங்களது எண்ணங்களில்
    தீமைகள் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும்.

                                      --- சாக்ரடீஸ்


230. தன்னைத்தான் உயர்த்துகின்றவன் எவனும் தாழ்த்தப்படுவான்.
    தன்னைத்தான் தாழ்த்துகின்றவன் உயர்த்தப்படுவான்.

                                   லூக்கா 14:7-11 


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

400 சிந்தனைகள் Empty Re: 400 சிந்தனைகள்

Post by ahmad78 Wed 22 Oct 2014 - 14:31

231. சுறுசுறுப்பாய் உள்ள மனிதன் எப்போதும்
    மகிழ்ச்சியோடு இருப்பான்.

                                  --- ஹென்றி ஃபோர்டு



232. நெருப்பு தங்கத்தைப் புடமிடுகிறது. துன்பம் மனிதனைப்
     புடமிடுகிறது.

                                       --- செனேகா


233. அதிக அவசரம் அதிக அழிவை உண்டாக்கும்.

                                        --- சாணக்கியன்


234. உலகத்தில் சோதனைக்கு உட்படாமலும் அதனிடம்
    பாடம் படிக்காமலும் ஒருவன் நிறைவுற்ற மனிதனாக
    விளங்கமுடியாது! அனுபவம் ஊக்கமாக உழைப்பதிலிருந்து
    கிடைக்கிறது; காலத்தின் வேகம் அதைச் செம்மைப்படுத்துகிறது.

                                        --- ஷேக்ஸ்பியர்


235. நம் எண்ணங்களைப் போல வலிமை மிகுந்தது எதுவுமில்லை.

                                     --- நைட்டிங்கேல்

பொன்மொழிகள்

236. இலட்சியத்தில் கவனம் செலுத்தி அதை அடைவதற்கு
    முயல்கிறவன் தன்னை அறியாமலேயே மேதையாக
    உருவாகிறான்.

                                     --- நெப்போலியன் ஹில்  

237. சதுரங்க விளையாட்டைப்போல வாழ்விலும் முன்யோசனை
    வெற்றிபெறுகிறது. 

                                        ---  பாக்ஸ்டன்


238. பெருமையோ, இகழ்ச்சியோ தானே வருவதில்லை.
     உங்கள் கடமையை நன்றாகச் செய்யுங்கள்;
     எல்லாமே அதில்தான் அடங்குகின்றன.

                                          --- கீதாஉபதேசம்

239. நமக்கு எதையெல்லாம் பிறர் செய்யக்கூடாது என்று
    நினைக்கிறோமோ அதையெல்லாம் நாம் பிறருக்குச்
    செய்யக்கூடாது.

                                   --- கன்பூஷியஸ்

240. யாருமே உதவாக்கரை இல்லை- அவர்கள் நேரத்தை
    வீணாக்காமல் இருக்கும் வரை.

                                   --- மார்த்தா எச்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

400 சிந்தனைகள் Empty Re: 400 சிந்தனைகள்

Post by ahmad78 Wed 22 Oct 2014 - 14:31

241. விழிப்பதற்கே உறக்கம்; வெல்வதற்கே தோல்வி;
    எழுவதற்கே வீழ்ச்சி.

242. நமது வாழ்க்கை இன்பமயமாக அமைவதற்கு
    இருகாரணங்கள் உண்டு. அவற்றில் ஒன்று
    நம்மை நாம் சரிவரப் புரிந்துகொள்வது.

                                      ---ஜி.டி. போவாஸ் 


243. இவ்வுலகில் கடமையை விட கவலையே பலரைக்
    கொன்று விடுகிறது. ஏனெனில் அநேகர் கடமையைச்
    செய்வதை விட்டுவிட்டுக் கவலைப்பட்டுக் கொண்டேயிருக்கின்றனர்.

                                      --- இராபர்ட்


244. பகைவனின் புன்சிரிப்பைவிட நண்பனின் கோபம் மேலானது.

                                      ---ஜேம்ஹோபெல்

245. மனம் சாந்தமாகவும் சமாதானமாகவும் இருக்கவேண்டுமென்றால்
    அதை அறிவுள்ள உயர்ந்த எண்ணங்களைக் கொண்டு
    நிரப்பவேண்டும்.

                                       --- ஆவ்பரி 

247. பிறரது அன்புக்குப் பாத்திரமாவதைவிட பிறரது
    நம்பிக்கைக்குப் பாத்திரமாவது பன்மடங்கு மேல்.

                                     --- டொனால்டு



248. புகழுக்காக நேர்மையை மறக்காதே.

                              --- சாணக்கியன்


249. கடமை உணர்வே உன் நேர்மையான வாழ்க்கைக்கு ஆதாரம்.

                                         ---ஹென்றி


250. மனவலிமை மட்டும் இருந்தால் போதாது; அதை நல்ல விதமாகப்
    பயன்படுத்தவும் வேண்டும்.

                                          --- டெங்கர்டெஸ்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

400 சிந்தனைகள் Empty Re: 400 சிந்தனைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum