Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
குழந்தைகளுக்கும் வரலாம் கண்புரை நோய்!
Page 1 of 1
குழந்தைகளுக்கும் வரலாம் கண்புரை நோய்!
கண்புரை நோய் என்பது முதியவர்களை தாக்கும் பார்வைப் பிரச்னை என்பது எல்லோருக்கும் தெரியும். பார்வை மங்குதல், எல்லாம் இரண்டிரண்டாகத் தெரிவது, பகல் வெளிச்சத்திலேயே கண் கூசுவது என இதன் அறிகுறிகளை அனுபவித்த அனைவரும் அறிவர். முதுமையில் எட்டிப் பார்க்கிற இந்தப் பிரச்னை, பிறந்த குழந்தையை பாதிக்கும் என்றால் நம்ப முடிகிறதா? பாதிக்கிறது என்பதுதான் உண்மை!
பிறந்தவுடன் குழந்தைகளைப் பாதிக்கிற கண்புரை பிரச்னை பற்றியும், அதற்கான காரணங்கள், அறிகுறிகள், தீர்வுகள் பற்றியும் விரிவாகப் பேசுகிறார் குழந்தைகளுக்கான கண் மருத்துவர் பிரவீண் கிருஷ்ணா. ‘‘பிறக்கிற ஒவ்வொரு ஆயிரம் குழந்தைகள்லயும், 3 முதல் 6 குழந்தைகளுக்கு இந்தப் பிரச்னை வரும். இந்தியாவுல கொஞ்சம் அதிகம். சாதாரண லென்ஸோட பளிச் தன்மை மாறி, வெள்ளையாவதைத்தான் கேட்டராக்ட்னு சொல்றோம். பெரியவங்களுக்கு வரக்கூடிய இதே பிரச்னை குழந்தைங்களுக்கும் வரலாம். அது பிறந்த உடனேயோ அல்லது பிறந்த ஆறு வாரங்கள்லயோ தெரிய வரும்.
இப்படி பாதிக்கப்பட்ட குழந்தைகளோட கண்களுக்குள்ள ஒளி போகாது. பார்வை மற்றும் நரம்பு வளர்ச்சி இருக்கணும்னா, குழந்தையோட கண் பார்த்துக்கிட்டே இருக்கணும். ஒளி உள்ளே போனாதான், பார்க்க முடியும். இந்தப் பிரச்னை, குழந்தையோட ஒரு கண்ல மட்டுமோ, ரெண்டு கண்கள்லயுமோ வரலாம். ரெண்டு கண்கள்லயும் பாதிப்பு வந்தா, கண்டுபிடிக்கிறது சுலபம். ஒரு கண்ல மட்டும்னா, இன்னொரு கண்ணால குழந்தை பார்த்துக்கிட்டிருப்பதால, குறை அத்தனை சீக்கிரம் தெரியாது. குழந்தை பார்க்கிறதுல ஏதாவது அசாதாரணம் தெரிஞ்சா, உடனே டாக்டர் கிட்ட போகணும்.
குழந்தை வயித்துல இருக்கிறப்ப, அம்மாக்களுக்கு சரியான சாப்பாடும், ஊட்டச்சத்தும் இல்லாமப் போகறதுதான் முதல் காரணம். அடுத்ததா, கர்ப்ப காலத்துல அம்மாவுக்கு உண்டாகிற இன்ஃபெக்ஷன். எந்த ஒரு உடல் உபாதைக்கும் சுய மருத்துவம் பண்ணக் கூடாதுன்னு எச்சரிக்கிறது இதுக்காகத்தான். குழந்தை பிறந்த உடனே அதுக்கு சரியான ஊட்டச்சத்து கிடைக்காததும், பிறந்ததும் அடிபடறதும் மூணாவது காரணம்.
அறுவை சிகிச்சைதான் இதுக்கான ஒரே தீர்வு.
ஆனா, பெரியவங்களுக்கு செய்யற மாதிரி பச்சிளங்குழந்தைக்கு லென்ஸ் வைக்க முடியாது. கண் வளர வளர, லென்ஸ் அந்த வளர்ச்சிக்கு ஈடு கொடுத்து வளரப் போறதில்லை. அதனால் குழந்தைகளுக்கு முதல்ல கேட்டராக்டை மட்டும் நீக்கிட்டு, கண்ணாடி கொடுக்க வேண்டியிருக்கும். அவ்வளவு சின்ன குழந்தைக்கு கண்ணாடியான்னு கேட்கலாம். வேற வழியில்லை. குழந்தை எப்பவெல்லாம் முழிச்சிட்டிருக்கோ, அப்பவெல்லாம் கண்ணாடி மாட்டி விட வேண்டியது அவசியம்.
கண் வளர்ச்சியடைந்து, குழந்தை பள்ளிக்கூடம் போகிறதுக்கு முன்னாடி, அறுவை சிகிச்சை செய்து பார்வையை முழுசா வரவழைக்க முடியும். அம்மாவை தாக்கும் ரூபெல்லா இன்ஃபெக்ஷன், குழந்தைக்கும் போறது மூலமாவும் இப்படி வரலாம். கர்ப்பம் தரிக்கிறதுக்கு முன்னாடியே, மருத்துவரோட ஆலோசனையை கேட்டு, ரூபெல்லா தடுப்பூசி எடுத்துக்கிறது பாதுகாப்பானது...’’ எச்சரித்து முடிக்கிறார் டாக்டர் பிரவீண் கிருஷ்ணா.
http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=3024
Cataract is a disease that attacks the elderly, vision problems, everyone knows that. Blurring of vision
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Similar topics
» இப்படியும் புற்றுநோய் வரலாம்
» வெள்ளை நோய் என்றழைக்கப்படும் வெட்டை நோய்
» சிறுநீரகக் கற்கள் யாருக்கு வரலாம் ?
» குழந்தைகளுக்கும் நீரிழிவு வரலாம்!
» நகம் கடித்தால் புற்றுநோய் வரலாம்!
» வெள்ளை நோய் என்றழைக்கப்படும் வெட்டை நோய்
» சிறுநீரகக் கற்கள் யாருக்கு வரலாம் ?
» குழந்தைகளுக்கும் நீரிழிவு வரலாம்!
» நகம் கடித்தால் புற்றுநோய் வரலாம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|