சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Yesterday at 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Yesterday at 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Yesterday at 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Yesterday at 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Yesterday at 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Yesterday at 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13

» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47

» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07

» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00

» வாழ்வில் உயர சில வழிமுறைகள்
by rammalar Tue 27 Aug 2024 - 18:59

» ரமண மகரிஷி மொழிகள்
by rammalar Tue 27 Aug 2024 - 18:57

» குடும்ப உறவு முறையும் இந்து மதமும்
by rammalar Tue 27 Aug 2024 - 18:56

» இவ்வளவு தான் வாழ்க்கையே! …
by rammalar Tue 27 Aug 2024 - 18:54

நாணும் அச்சமும் நாய்கட்டு வேண்டுமாம்! பாரதியார் சொன்னதென்ன? Khan11

நாணும் அச்சமும் நாய்கட்டு வேண்டுமாம்! பாரதியார் சொன்னதென்ன?

2 posters

Go down

நாணும் அச்சமும் நாய்கட்டு வேண்டுமாம்! பாரதியார் சொன்னதென்ன? Empty நாணும் அச்சமும் நாய்கட்டு வேண்டுமாம்! பாரதியார் சொன்னதென்ன?

Post by Nisha Thu 13 Nov 2014 - 4:30

பாரதி தன் பாடலில் நாணமும் அச்சமும் என்று சொல்லியிருக்கிறாரா அல்லது நாணும் அச்சமும் என்று சொல்லியிருக்கிறாரா?

அவர் சொன்னதென்ன?

அதற்கு முன் நாணம் என்பதும் வெட்கம் என்பதும் வேறு வேறான அர்த்தம் கொண்ட சொற்கள் என புரிந்திடுவோம்.

நாணும் அச்சமும்.
நாண் எனும் சொல் காப்பு, வில்லின் நாண், வெட்கம் என பல அர்த்தம் கொள்ளபடும்.. ஆனால் கீழே இருக்கும் குறளின் சொல்லப்படும் நாணும். ...எவ்விதத்தில் கருத்தாளபடுகிறது என்கண்டோமானால்

பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர்
நாணாக நாணுத் தரும்


திரு மு.வரதராசனார் உரை
கடமையை விரும்பாமல் மனைவியின் பெண்மையை விரும்புகின்றவனுடைய ஆக்கம், பெரியதொரு நாணத்தக்கச் செயலாக நாணத்தைக் கொடுக்கும்.

திரு மு.கருணாநிதி உரை
ஏற்றுக்கொண்ட கொள்கையினைப் பேணிக் காத்திடாமல் பெண்ணை நாடி அவள் பின்னால் திரிபவனுடைய நிலை வெட்கித் தலைகுனிய வேண்டியதாக ஆகிவிடும்.

நாணும் என்பது இங்கே மரியாதைகுரிய பாரட்டத்தக்க விதத்தில் சொல்லப்படாமல் தலைகுனிய வேண்டிய ஒரு சொல்லாக கணிக்கபடுவதைக்கவனித்தால் 

நாணும் அதாவது தலைகுனிந்து நிற்கத்தக்க செயலும் அச்சமும் மனிதர்களுக்கு வேண்டியதல்ல நாய்களுக்குரியதே என பாரதியார் சொன்னதாக கொள்ளலாம்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நாணும் அச்சமும் நாய்கட்டு வேண்டுமாம்! பாரதியார் சொன்னதென்ன? Empty Re: நாணும் அச்சமும் நாய்கட்டு வேண்டுமாம்! பாரதியார் சொன்னதென்ன?

Post by Nisha Thu 13 Nov 2014 - 4:34

நாணும் அச்சமும்

தேவையற்ற பயம், கூச்சம், தயக்கம் கொள்வது தீமையான காரியங்கள் பல உருவாக காரணமாகி விடுவதனால் தீமை செய்கிற ஒருவன் வெட்கி தலைகுனிந்து [*நாணுவதற்கு] பதில் ஒரு நல்லவன், நன்மை செய்பவன் தலைகுனிந்து நிற்கலாகாது எனுமர்த்தத்தில் நாணமும் அச்சமும் நாய்களுக்கு உரியதே என மிக கடுமையாக கூறி இருக்கலாம் என என்றோ படித்த நினைவு. 

ஆணோ பெண்ணோ தீய காரியங்களை எதிர்த்து நிற்க தயக்கமே கூச்சமோ,பயமோ படக்கூடாது. 

அதைத்தான் பாரதியார்... 

ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவி லோங்கி இவ் வையம் தழைக்குமாம் பூணு நல்லறத் தோடிங்குப் பெண்ணுருப் போந்து நிற்பது தாய்சிவ சக்தியாம்; நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்
; 

இப்படி சொல்லி விட்டு அவர் பெண்களுக்கு வேண்டிய குணங்களென பட்டியலிடுவதை பாரீர்.

ஞான நல்லறம் வீர சுதந்திரம் பேணு நற்குடிப் பெண்ணின் குணங்களாம்; 
பெண்மைத் தெய்வத்தின் பேச்சுகள் கேட்டீரோ!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நாணும் அச்சமும் நாய்கட்டு வேண்டுமாம்! பாரதியார் சொன்னதென்ன? Empty Re: நாணும் அச்சமும் நாய்கட்டு வேண்டுமாம்! பாரதியார் சொன்னதென்ன?

Post by Nisha Thu 13 Nov 2014 - 4:39

அன்றைய கால கட்டத்தில் அதாவது பாரதியார் வாழ்ந்த காலகட்டத்தில் பெண்கள் அடக்கியாளப்பட்டார்கள், அடிமைகளாக நடத்தபட்டார்கள். வீட்டுக்குள் அடக்கி வைக்கப்பட்டார்கள், உடன்கட்டை ஏற கட்டாயபடுத்தப்ட்டார்கள், பால்ய விவாகத்துக்குட்படுத்தபட்டார்கள், 

அப்படிபட்ட சூழலில் அவர்களை தட்டியெழுப்ப பாரதியார் பல பாடல்களை இயற்றியதோடன்றி அவர் மகள் தங்கம்மா தைரியமான வீரமகளாக வாழவேண்டும் என்றே விரும்பினார் ,அதையே தன் மனவெளிப்பாடாக அவர் வெளிப்படுத்தி இருப்பதினை கீழே வரும் பாடல்களை உணர்ந்து, கருத்தோடு படித்து பார்த்தால் புரிந்திடலாம் 

கூடவே..இன்றைய பெண்கள் அவர் விரும்பிய இலக்கினை அடைந்தோமா என தம்மைத்தாமே ஆராய்ந்திடலாம் 

ஆம்,நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்; 
ஞான நல்லறம் வீர சுதந்திரம் பேணு நற்குடிப் பெண்ணின் குணங்களாம்

**********************************
மாதர்க் குண்டு சுதந்திரம் என்று
நின் வண்ம லர்த்திரு வாயின் மொழிந்தசொல் 
நாதந் தானது நாரதர் வீணையோ? 
நம்பிரான் கண்ணன் வேய்ங்குழ லின்பமோ?
வேதம் பொன்னுருக் கன்னிகை யாகியே 
மேன்மை செய்தெமைக் காத்திடச் சொல்வதொ?
சாதல் மூத்தல் கெடுக்கும் அமிழ்தமொ? 
தையல் வாழ்கபல் லாண்டுபல் லாண்டிங்கே! 

அறிவு கொண்ட மனித வுயிர்களை 
அடிமையாக்க முயல்பவர் பித்தராம்; 
நெறிகள் யாவினும் மேம்பட்டு மானிடர் நேர்மை 
கொண்டுயர் தேவர்க ளாதற்கே, 
சிறிய தொண்டுகள் தீர்த்தடி மைச்சுருள் தீயிலிட்டுப் 
பொசுக்கிட வேண்டுமாம்;
நறிய பொன்மலர் மென்சிறு வாயினால்
 நங்கை கூறும் நவீனங்கள் கேட்டிரோ!

ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் 
அறிவி லோங்கிஇவ் வையம் தழைக்குமாம்
பூணு நல்லறத் தோடிங்குப் பெண்ணுருப் 
போந்து நிற்பது தாய்சிவ சக்தியாம்;
நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்; 
ஞான நல்லறம் வீர சுதந்திரம் 
பேணு நற்குடிப் பெண்ணின் குணங்களாம்; 
பெண்மைத் தெய்வத்தின் பேச்சுகள் கேட்டீரோ! 

நிலத்தின் தன்மை பயிர்க்குள தாகுமாம்; 
நீசத் தொண்டு மடமையும் கொண்டதாய் தலத்தில் 
மாண்புயர் மக்களைப் பெற்றிடல் சாலவே யரி 
தாவதொர் செய்தியாம்; 
குலத்து மாதர்குக் கற்பியல் பாகுமாம்; 
கொடுமை செய்தும் அறிவை யழித்துமந் நலத்தைக் 
காக்க விரும்புதல் தீமையாம்;
நங்கை கூறும் வியப்புகள் கேட்டீரோ! 

புதுமைப் பெண்ணிவள் சொற்களும் செய்கையும் 
பொய்ம்மை கொண்ட கலிக்குப் புதிதன்றிச் சதுமறைப்படி 
மாந்தர் இருந்தநாள் தன்னி லேபொது வான் வழக்கமாம்; 
மதுரத் தேமொழி மங்கையர் உண்மைதேர் 
மாத வப்பெரி யோருட னொப்புற்றே 
முதுமைக் காலத்தில் வேதங்கள் பேசிய முறைமை
 மாறிடக் கேடு விளைந்ததாம். 

நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும், 
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும், 
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால் 
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்

அமிழ்ந்து பேரிரு ளாமறி யாமையில் 
அவல மெய்திக் கலையின்றி வாழ்வதை 
உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம் 
உதய கன்னி உரைப்பது கேட்டீரோ!

உலக வாழ்க்கையின் நுட்பங்கள் தேரவும், 
ஓது பற்பல நூல்வகை கற்கவும், 
இலகு சீருடை நாற்றிசை நாடுகள் 
யாவுஞ் சென்று புதுமை கொணர்ந்திங்கே
திலக வாணுத லார்நங்கள் 
பாரத தேசமோங்க உழைத்திடல் வெண்டுமாம்; 
விலகி வீட்டிலோர் பொந்தில் வளர்வதை 
வீரப் பெண்கள் விரைவில் ஒழிப்பாராம்.
 

சாத்தி ரங்கள் பலபல கற்பாராம்; 
சவுரி யங்கள் பலபல செய்வராம்; 
மூத்த பொய்ம்மைகள் யாவும் அழிப்பராம்; 
மூடக் கட்டுக்கள் யாவுந் தகர்ப்பராம்; 
காத்து மானிடர் செய்கை யனைத்தையும் 
கடவு ளர்க்கினி தாகச் சமைப்பராம்; 
ஏத்தி ஆண்மக்கள் போற்றிட வாழ்வராம்; 
இளைய நங்கையின் எண்ணங்கள் கேட்டீரோ


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நாணும் அச்சமும் நாய்கட்டு வேண்டுமாம்! பாரதியார் சொன்னதென்ன? Empty Re: நாணும் அச்சமும் நாய்கட்டு வேண்டுமாம்! பாரதியார் சொன்னதென்ன?

Post by Nisha Thu 13 Nov 2014 - 4:56

முத்தமிழ் மன்றத்தில் நான் இட்டது மீள் பதிவாக இங்கே!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நாணும் அச்சமும் நாய்கட்டு வேண்டுமாம்! பாரதியார் சொன்னதென்ன? Empty Re: நாணும் அச்சமும் நாய்கட்டு வேண்டுமாம்! பாரதியார் சொன்னதென்ன?

Post by சுறா Thu 13 Nov 2014 - 6:08

மாதர்க் குண்டு என்பதை நான் பெண்கள் எல்லாம் குண்டாய் தான் இருந்தார்களோ என்று படித்துவிட்டேன் ஹஹி :)

பாரதியார் பாடிய பாடல்கள் அனைத்தும் புரட்சியானவை. அருமையான பதிவு.


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

நாணும் அச்சமும் நாய்கட்டு வேண்டுமாம்! பாரதியார் சொன்னதென்ன? Empty Re: நாணும் அச்சமும் நாய்கட்டு வேண்டுமாம்! பாரதியார் சொன்னதென்ன?

Post by Nisha Thu 13 Nov 2014 - 9:29

ஹாஹா!

அப்புறம் சரியாய் புரிந்து கொண்டீர்கள் தானே! 

மாதர்க்கு ண்டு சுதந்திரம் என்று வெண்பாவாய் எழுதும் போது பிரிந்து வரும்!  நான் தான் தவறாய் பதிந்து விட்டேன் போல!

அதை வைத்து என்னைக்கிண்டல் செய்யல்லைத்தானே..!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நாணும் அச்சமும் நாய்கட்டு வேண்டுமாம்! பாரதியார் சொன்னதென்ன? Empty Re: நாணும் அச்சமும் நாய்கட்டு வேண்டுமாம்! பாரதியார் சொன்னதென்ன?

Post by சுறா Thu 13 Nov 2014 - 11:38

Nisha wrote:ஹாஹா!

அப்புறம் சரியாய் புரிந்து கொண்டீர்கள் தானே! 

மாதர்க்கு ண்டு சுதந்திரம் என்று வெண்பாவாய் எழுதும் போது பிரிந்து வரும்!  நான் தான் தவறாய் பதிந்து விட்டேன் போல!

அதை வைத்து என்னைக்கிண்டல் செய்யல்லைத்தானே..!

ஓ திருத்திவிட்டீர்களா?

திருத்திவிட்டேன்


Last edited by சுறா on Thu 13 Nov 2014 - 11:55; edited 1 time in total


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

நாணும் அச்சமும் நாய்கட்டு வேண்டுமாம்! பாரதியார் சொன்னதென்ன? Empty Re: நாணும் அச்சமும் நாய்கட்டு வேண்டுமாம்! பாரதியார் சொன்னதென்ன?

Post by Nisha Thu 13 Nov 2014 - 11:43

அரட்டை தவிர்க்கபட வேண்டிய பதிவில் இலக்கியமும் ஒன்று! 

கவனிக்கவும்! படங்களை  அரட்டைக்குகந்த பதிவுகளில் இணைக்கவும்.

புரிதலுக்கு நன்றி!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நாணும் அச்சமும் நாய்கட்டு வேண்டுமாம்! பாரதியார் சொன்னதென்ன? Empty Re: நாணும் அச்சமும் நாய்கட்டு வேண்டுமாம்! பாரதியார் சொன்னதென்ன?

Post by சுறா Thu 13 Nov 2014 - 11:56

Nisha wrote:அரட்டை தவிர்க்கபட வேண்டிய பதிவில் இலக்கியமும் ஒன்று! 

கவனிக்கவும்! படங்களை  அரட்டைக்குகந்த பதிவுகளில் இணைக்கவும்.

புரிதலுக்கு நன்றி!

அப்படியே ஆகட்டும்


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

நாணும் அச்சமும் நாய்கட்டு வேண்டுமாம்! பாரதியார் சொன்னதென்ன? Empty Re: நாணும் அச்சமும் நாய்கட்டு வேண்டுமாம்! பாரதியார் சொன்னதென்ன?

Post by Nisha Fri 14 Nov 2014 - 1:30

சுறா wrote:
Nisha wrote:அரட்டை தவிர்க்கபட வேண்டிய பதிவில் இலக்கியமும் ஒன்று! 

கவனிக்கவும்! படங்களை  அரட்டைக்குகந்த பதிவுகளில் இணைக்கவும்.

புரிதலுக்கு நன்றி!

அப்படியே ஆகட்டும்

புரிதலுக்கு நன்றிப்பா!)(()((


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நாணும் அச்சமும் நாய்கட்டு வேண்டுமாம்! பாரதியார் சொன்னதென்ன? Empty Re: நாணும் அச்சமும் நாய்கட்டு வேண்டுமாம்! பாரதியார் சொன்னதென்ன?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum