சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Today at 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

மறதி வேண்டும் மானிடா.......!! Khan11

மறதி வேண்டும் மானிடா.......!!

+3
பாயிஸ்
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மறதி வேண்டும் மானிடா.......!! Empty மறதி வேண்டும் மானிடா.......!!

Post by நேசமுடன் ஹாசிம் Thu 4 Dec 2014 - 12:17

இறைவனின் கொடையிது 
அற்புதக் கணமிது 
மறதிக்கு மருந்து தேடி 
மாந்தர்கள் அலைவதுண்டு 

மறக்கத் தெரிந்த மனிதன் 
மகிழ்வோடிருக்கிறான் 
மனதின் காயங்களெல்லாம் 
மறப்பதாலன்றி வடு மாறுவதில்லை 

கடந்து வந்த பாதைகளில் 
கசப்புணர்வுகள் பலகோடி
நாளைய நிம்மதிக்காய் 
அவைகளை மறந்திடலே மருந்தாகிடுமே

எதிர்காலம் நோக்கிய பயணத்தில் 
திரும்பிப் பார்த்து நடந்திட முடிவதில்லை 
பாதிவழியில் தடுமாறிட 
சந்தோசவாழ்வில் தடுக்கிவீழ்வதாகிடும் 

மனிதனின் ஆற்றலறிந்த இறைவன் 
மறதி தந்து மகிழச்செய்திருக்கிறான் 
மனதின் ஆழுமையில் - மனிதர்களால்  
மறப்பதின்றி மகிழ்ந்திட முடிவதில்லை

மறப்பதுவும் மன்னிப்பதுவும் 
மகிழ்வுக்கு வித்திடும் - இன்றே 
மன்னித்து மறந்துவிடு - உன் 
வாழ்நாள்கள் உயிர்பெற்றுவிடும்  


மறதி வேண்டும் மானிடா.......!! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

மறதி வேண்டும் மானிடா.......!! Empty Re: மறதி வேண்டும் மானிடா.......!!

Post by நண்பன் Thu 4 Dec 2014 - 13:16

அருமையான ஒரு கவிதை
இதை நான் கவிதையாக எடுக்க வில்லை
எனக்கான அறிவுரையாகவே எடுக்கிறேன்

மறப்பதுவும் மன்னிப்பதுவும்
மகிழ்வுக்கு வித்திடும் - இன்றே
மன்னித்து மறந்துவிடு - உன்
வாழ்நாள்கள் உயிர்பெற்றுவிடும்

மறப்போம் மன்னிப்போம்
மாறா அன்புடன் நண்பன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மறதி வேண்டும் மானிடா.......!! Empty Re: மறதி வேண்டும் மானிடா.......!!

Post by பாயிஸ் Thu 4 Dec 2014 - 13:28

கவிதையில் எதார்த்தமே அதிகமாகவுள்ளது 
கடந்து வந்த பாதையை திரும்பிப்பார்த்துக்கொண்டே மீதியுள்ள தூரத்தை கடந்திட முடியாது.

காலவேகத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் ஆகையால் மறப்போம் மன்னிப்போம்
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

மறதி வேண்டும் மானிடா.......!! Empty Re: மறதி வேண்டும் மானிடா.......!!

Post by நண்பன் Thu 4 Dec 2014 - 13:31

பாயிஸ் wrote:கவிதையில் எதார்த்தமே அதிகமாகவுள்ளது 
கடந்து வந்த பாதையை திரும்பிப்பார்த்துக்கொண்டே மீதியுள்ள தூரத்தை கடந்திட முடியாது.

காலவேகத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் ஆகையால் மறப்போம் மன்னிப்போம்
சியர்ஸ் சியர்ஸ்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மறதி வேண்டும் மானிடா.......!! Empty Re: மறதி வேண்டும் மானிடா.......!!

Post by நேசமுடன் ஹாசிம் Thu 4 Dec 2014 - 14:35

நண்பன் wrote:அருமையான ஒரு கவிதை
இதை நான் கவிதையாக எடுக்க வில்லை
எனக்கான அறிவுரையாகவே எடுக்கிறேன்

மறப்பதுவும் மன்னிப்பதுவும்
மகிழ்வுக்கு வித்திடும் - இன்றே
மன்னித்து மறந்துவிடு - உன்
வாழ்நாள்கள் உயிர்பெற்றுவிடும்  

மறப்போம் மன்னிப்போம்
மாறா அன்புடன் நண்பன்
நன்றி நண்பா இக்கவிதை எனக்கே நான் சொல்லிக்கொண்டது என்பதையும் தாங்கள் நன்றாக அறிவீர்கள்


மறதி வேண்டும் மானிடா.......!! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

மறதி வேண்டும் மானிடா.......!! Empty Re: மறதி வேண்டும் மானிடா.......!!

Post by Nisha Thu 4 Dec 2014 - 14:51

மன்னித்தும் மறவாதது மனிதன்  குணமாம்
மன்னித்து மறப்பது இறைவன் செயலாம். 

மன்னித்தேன், மறந்தேன் என சொல்லி 
மறுபடியும் மனசொடிவதை விட 
மன்னித்து மறவாது தலை நிமிர்ந்து நிற்பதா?
மன்னித்து மறந்து  வலி தொடரச்செய்வதும் அவரவர்  விருப்பம். 

நான் மன்னிப்பேன்.. மறக்க மாட்டேன்.. ஏன் எனில் இன்னொரு முறை அதே சூழல் என்னுள் வர விடாதபடி முந்தைய தவறுகள் எனக்குள் பாடமாய், வழி காட்டியாய் இருக்குமே தவிர...  மன்னித்தேன், மறந்தேன் என சொல்லி மீண்டும் மீண்டும் என் தலையில் மண்ணை அள்ளி போட நான் விரும்புவதில்லை. 

ஏழேழு முறை அல்ல ஏழெழுபது முறை மன்னிக்கலாம். ஆனால் மன்னிப்பு என்பது மன்னிப்பை யாசிப்போருக்கு மட்டும் கொடுக்கணும். தன் தவறை உணர்ந்து இனிமேல் அத்தவறை செய்ய மாட்டோம் என  உளமாற முடிவெடுப்பவர்களுக்கு கொடுக்கணும். 

சேற்றில்  செந்தாமரை மலரும் என்பதற்காக சேற்றோடு செந்தாமரையை முகர்ந்து பார்க்க முடியுமா..? அதை நல்ல நீரில் கழுவித்தானே  கையில் தொட முடிகின்றது. அப்படித்தான் மன்னிப்பும். அதை வேண்டுவோர் தம்மை உணர்ந்து  தன் தவறை கழுவிடும் நேரம்.. கொடுக்கணும். 

சும்மா சும்மா மன்னித்தேன் என சொல்லி... நாம்  அவர்கள் செய்யும் தவறுக்கு துணை போனால் இறைவன் கூட நம்மை மன்னிக்க மாட்டான். 

 ஒரு தவறு செய்தால், அதை தெரிந்து செய்தால்
அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்!
உடல் உழைக்க சொல்வேன்!
அதில் பிழைக்க சொல்வேன்!
அவர் உரிமை பொருள்களை தொட மாட்டேன்!

சிலர் ஆசைக்கும், தேவைக்கும், வாழ்வுக்கும், வசதிக்கும்
ஊரார் கால் பிடிப்பார்.
ஒரு மானம் இல்லை!
அதில் ஈனம் இல்லை!
அவர் எப்போதும் வால் பிடிப்பார்!


எதிர்காலம் வரும்!
என் கடமை வரும் !
இந்த கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன்!
பொது நீதியிலே, புது பாதையிலே
வரும் நல்லோர் முகத்திலே நான் விழிப்பேன்.


இங்கு ஊமைகள் ஏங்கவும்,
உண்மைகள் தூங்கவும்
நானா பார்த்திருப்பேன் ?
ஒரு கடவுள் உண்டு!
அவன் கொள்கை உண்டு!
அதை எப்போதும் காத்திருப்பேன்.

முன்பு ஏசு வந்தார்!
பின்பு காந்தி வந்தார்!
இந்த மானிடர் திருந்திடப் பிறந்தார்.
இவர் திருந்தவில்லை!
மனம் வருந்தவில்லை!
அந்த மேலோர் சொன்னதை மறந்தார்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மறதி வேண்டும் மானிடா.......!! Empty Re: மறதி வேண்டும் மானிடா.......!!

Post by நேசமுடன் ஹாசிம் Thu 4 Dec 2014 - 15:14

மன்னிப்பும் மறப்பதும் எமது நிம்மதிக்காகத்தானே ஒளிய மற்றவர்களுக்காக இல்லை அவரவர் செய்கின்ற தீயதோ நன்மையோ அவரவர் வினையாகும் நாம் செய்வது நமக்கென்றாகின்றபோது மற்றவர்களின் குறையில் நிறைகாண்பது எமது பெருந்தன்மையாகாதா 
ஒரு மனிதன் தனது வாழ்நாளில் சந்தித்தவைகளை மறவாமல் ஞாபகத்துடன் வாழவே முடியாத ஒன்றாகிவிடும் மறப்பதில் இருக்கிறது ஒரு மனிதனின் எதிர்காலம்


மறதி வேண்டும் மானிடா.......!! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

மறதி வேண்டும் மானிடா.......!! Empty Re: மறதி வேண்டும் மானிடா.......!!

Post by பானுஷபானா Thu 4 Dec 2014 - 15:22

கவிதை அருமை ஹாசிம்

சாதாரணமான விசயத்தை  மறக்கலாம். சதா ரணம் உண்டாக்கிய விசயத்தை எப்படி மறக்க முடியும்.

நிஷா சொல்வது போல மன்னிக்கலாம். ஆனால் மன்னிப்பு வாங்கிய்யவர்கள் செய்த தவறை மறக்க முடியுமா.

அந்த மன்னிப்பு கூட தகுதியானவர்களுக்குத் தான் குடுக்க முடியும்.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

மறதி வேண்டும் மானிடா.......!! Empty Re: மறதி வேண்டும் மானிடா.......!!

Post by Nisha Thu 4 Dec 2014 - 15:28

மன்னிச்சிட்டோம் மறந்திட்டோம் என ஏட்டில் எழுதிச்சொல்ல ரெம்ப இலகுவாய் இருக்கும் ஹாசிம்.  ஆனா’ நிஜத்தில் அதற்கான வாய்ப்பு ரெம்ப ரெம்ப கம்மி. 

அதிலும் அடுத்தவருக்கு ஆலோசனை எனும் போது அள்ளி வீசும் நாம் நமக்கே நமக்கு அந்த நிலை என வரும் போது தடம் மாறத்தான் செய்வோம். 

மன்னிச்சிட்டு மறந்திட்டோம் என  ஏதோ துணியில் பட்ட கறைபோல்  கழுவி காயவைத்தால் நீங்கி போயிரும் என்பதெல்லாம்  நிஜத்தில் சாத்தியமில்லாத ஒன்று! 

என்னை பொறுத்தவரை ஏட்டளவில், கன்வில் வாழாமல் நிதர்சனம் புரிந்து வாழணும் எனத்தான் சொல்வேன். 

மன்னிச்சிட்டோம் மறந்திட்டோம் என சொல்லும் பலர் மனசில் அடி ஆழத்தில் வன்மம் கொழுந்து விட்டெரிவதும். மன்னிக்கவே முடியாது என  சண்டியன் வேஷம் போடும் பலர் இளகிய சுபாவமுடையோரார் இருப்பதும் தான் நிதர்சனம். 

கடவுள் கடவுள் என கடவுளை தேடி  கோயில் கோயிலாய்  விரதமிருக்கும் பலர் தம் சக மனிதணை அவனும் தம்மைபோல்ல் ஊனூம் இரத்தமும் கொண்ட மனிதன் என உணராமல் தூக்கி அடிக்கும் காலம் இது. 

அதனால் நாம் நாமாக  இருப்போம்.  உண்பதும் உடுப்பதும், தூங்குவதும், சிரிப்பதும் , எப்படியோ அப்படித்தான் கோபமும், தாபமும், ஆத்திரமும் நம்மோடு உடன் பிறந்ததென  புரிந்து நமக்கென நாம் வாழ ஆரம்பிச்சிட்டால் போதும். 

மன்னிச்சோம் என சொல்லி வேஷம் போடவும் வேண்டாம்.மறந்தோம் என சொல்லி மனதை அடக்கவும் வேண்டாம்.  நாம் நாமாக இருப்பது  தான் அனைத்துக்கும் நல்லது. 

நல்லவர்களுக்கு சாட்சிகள் இரண்டே இரண்டு தான். 
ஒன்று அவர்கள் மனட்சாட்சி, இன்னொன்று தெய்வத்தின் சாட்சி.  இந்த இரண்டுக்குமிடையில் வேறெந்த சாட்சியும் தேவையில்லையே!

நாம் தெய்வமாக முடியாது ! ஆனால் மனிதனாய் வாழ முடியும். மன்னித்து மறக்காது மனிதனாய் வாழலாம்.  

 மன்னித்தால்  மீண்டும் அதைக்குறித்து சிந்திக்க மாட்டேன், பேச மாட்டேன் நினைக்க மாட்டேன் என்பவர்கள் யார்?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மறதி வேண்டும் மானிடா.......!! Empty Re: மறதி வேண்டும் மானிடா.......!!

Post by Nisha Thu 4 Dec 2014 - 15:31

பானுஷபானா wrote:கவிதை அருமை ஹாசிம்

சாதாரணமான விசயத்தை  மறக்கலாம். சதா ரணம் உண்டாக்கிய விசயத்தை எப்படி மறக்க முடியும்.

நிஷா சொல்வது போல மன்னிக்கலாம். ஆனால் மன்னிப்பு வாங்கிய்யவர்கள் செய்த தவறை மறக்க முடியுமா.

அந்த மன்னிப்பு கூட தகுதியானவர்களுக்குத் தான் குடுக்க முடியும்.

ஆமாம்! இதைத்தான் நானும் சொல்லிட்டிருக்கேன்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மறதி வேண்டும் மானிடா.......!! Empty Re: மறதி வேண்டும் மானிடா.......!!

Post by பானுஷபானா Thu 4 Dec 2014 - 15:39

பின்னூட்டம் சூப்பர் நிஷா...

பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

மறதி வேண்டும் மானிடா.......!! Empty Re: மறதி வேண்டும் மானிடா.......!!

Post by நண்பன் Thu 4 Dec 2014 - 15:56

சிறிது நேரம் இந்த ஏரியாவுக்கு நான் வர வில்லை இந்த ஏரியாவை நான் மறந்து விடடேன் நீங்கள் என்னை மன்னித்து விடுங்கள் ஹாசிம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மறதி வேண்டும் மானிடா.......!! Empty Re: மறதி வேண்டும் மானிடா.......!!

Post by நேசமுடன் ஹாசிம் Thu 4 Dec 2014 - 15:58

Nisha wrote:மன்னிச்சிட்டோம் மறந்திட்டோம் என ஏட்டில் எழுதிச்சொல்ல ரெம்ப இலகுவாய் இருக்கும் ஹாசிம்.  ஆனா’ நிஜத்தில் அதற்கான வாய்ப்பு ரெம்ப ரெம்ப கம்மி. 

இது அவரவர் மனதைப்பொறுத்தது அக்கா அந்த மனநிலையினை உருவாக்குவதுதான் முக்கியமானது ஒரு சந்தர்ப்பத்தில் ஏற்படுகின்ற பிரச்சினைக்கு அதன் வழியின் கவலையில் தொடர்ந்தாலும் காலப்போக்கில் அதை மாற்றுவதற்கு தங்களது மனதினை உருவாக்கிக்கொள்வதுதான் நிஜமாகும் 

அதிலும் அடுத்தவருக்கு ஆலோசனை எனும் போது அள்ளி வீசும் நாம் நமக்கே நமக்கு அந்த நிலை என வரும் போது தடம் மாறத்தான் செய்வோம். 

நிச்சயமாக இல்லை அடுத்தவருக்காக சொல்லுகின்ற ஆலோசனைகளில் தங்களுக்குள்ளும் சிக்கல்கள் இருந்தால் அதனை களைவதற்குத்தான் மனம் சொல்லும் அவ்வாறு பேசாத மனதில் குறையிருக்கிறது என்பதுதான் நிதர்சனம் 

மன்னிச்சிட்டு மறந்திட்டோம் என  ஏதோ துணியில் பட்ட கறைபோல்  கழுவி காயவைத்தால் நீங்கி போயிரும் என்பதெல்லாம்  நிஜத்தில் சாத்தியமில்லாத ஒன்று! 

ஏன் சாத்தியமில்லை மன்னித்து மறந்து சேர்ந்து வாழ்ந்த சமுகத்தை காணவில்லையா அந்த நிலைக்கு வராத பாட்சத்தில் அதுவே ஆழமான கோபத்தினையும் வெறுப்பினையும் ஏற்படுத்தாதா 

என்னை பொறுத்தவரை ஏட்டளவில், கன்வில் வாழாமல் நிதர்சனம் புரிந்து வாழணும் எனத்தான் சொல்வேன். 

நீங்கள் சொல்கின்ற நிதர்சனம் உங்களை மாத்திரம் சுற்றிய ஒரு வட்டம் அதை உடைக்க உங்களால் முடியவில்லை என்பதுதான் சிக்கல் நாம் எதார்த்ததினை மறுத்து அப்படி இருக்குமோ என்று கற்பனையில் புரிந்து கொள்கின்ற பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் எட்டப்படுவதில்லை அக்கா 


மன்னிச்சிட்டோம் மறந்திட்டோம் என சொல்லும் பலர் மனசில் அடி ஆழத்தில் வன்மம் கொழுந்து விட்டெரிவதும். மன்னிக்கவே முடியாது என  சண்டியன் வேஷம் போடும் பலர் இளகிய சுபாவமுடையோரார் இருப்பதும் தான் நிதர்சனம். 

இதை ஏற்றுக்கொள்ள முடியாது  மன்னிக்க மாட்டோம் என்று சொல்கின்றவர்கள் ஒரு விதத்தில் எதிர்பார்த்து ஏமாந்தவர்களாகத்தான் இருக்க முடியும்(அது பாசமாகவும் இருக்கலாம்) அந்த ஏமாற்றத்தின் விளைவுதான் அவர்களைத் தடுக்கிறது என்பது நிதர்சனமில்லையா மன்னிச்சிட்டோம் என்பவர்கள் உன்னதமானவர்களாக பார்க்கப்படுவதில்லையா 

கடவுள் கடவுள் என கடவுளை தேடி  கோயில் கோயிலாய்  விரதமிருக்கும் பலர் தம் சக மனிதணை அவனும் தம்மைபோல்ல் ஊனூம் இரத்தமும் கொண்ட மனிதன் என உணராமல் தூக்கி அடிக்கும் காலம் இது. 

இப்படியானவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் அதற்காக நாம் நல்லவர்களாய் இருந்தாலென்ன 


அதனால் நாம் நாமாக  இருப்போம்.  உண்பதும் உடுப்பதும், தூங்குவதும், சிரிப்பதும் , எப்படியோ அப்படித்தான் கோபமும், தாபமும், ஆத்திரமும் நம்மோடு உடன் பிறந்ததென  புரிந்து நமக்கென நாம் வாழ ஆரம்பிச்சிட்டால் போதும். 

எமக்காகவே வாழந்து நாமாகவே மடிந்தால் எம் வாழ்வில் அர்த்தம் இல்லையென்றாகாதா எமக்குக்கிடைத்த வாய்ப்புகளை மற்றவர்களுக்காகவும் வாழ்வதில் திருப்தி காணமுடியாதா மற்றவர்களின் நிலை நாம் நோக்காது எமக்காக நாம் மற்றவர்களை அரவணைத்து வாழந்தால்தான் என்ன 

மன்னிச்சோம் என சொல்லி வேஷம் போடவும் வேண்டாம்.மறந்தோம் என சொல்லி மனதை அடக்கவும் வேண்டாம்.  நாம் நாமாக இருப்பது  தான் அனைத்துக்கும் நல்லது. 

இது வேசம் என்று நீங்கள் சொல்வதையே வேடிக்கையாக பார்க்கிறேன் காரணம் மன்னிப்பின் அவசியமும் மறதியின் முக்கியமும் உலக வழமையில் அர்த்தமற்றதாகிடும் நிச்சயமாக இது வேசமில்லை நீங்கள் உங்கள் நிலை கடந்து மறந்தும் மன்னித்தும் பாருங்கள் அதன் முக்கியம் புரியும் 

நல்லவர்களுக்கு சாட்சிகள் இரண்டே இரண்டு தான். 
ஒன்று அவர்கள் மனட்சாட்சி, இன்னொன்று தெய்வத்தின் சாட்சி.  இந்த இரண்டுக்குமிடையில் வேறெந்த சாட்சியும் தேவையில்லையே!

மனசாட்சியானது மனிதனின் மனநிலையில் வெளிப்படுகின்ற சாட்சி அதனைத்தாண்டி எதிர்த்தரப்பின் சாட்சிகளையும் ஆராய்ந்து மனசாட்சியுடன் ஒப்பிட்டுப்பார்ப்பதுதான் தீர்வாகும் 

நாம் தெய்வமாக முடியாது ! ஆனால் மனிதனாய் வாழ முடியும். மன்னித்து மறக்காது மனிதனாய் வாழலாம்.  

முடியாது மன்னிக்காமல் மறக்காமல் மனிதனாக வாழவே முடியாது உங்கள் வாழ்நாளில் அவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தினை சந்திக்கவே இல்லை என்று சொல்லுங்கள் நான் ஏற்றுக்கொள்கிறேன் மன்னிப்பும் மறதியும் மனத வாழ்வுடன் ஒன்றிப்பிணைந்த ஒன்று என்பதை உலகமே ஏற்றுக்கொண்ட உண்மை 

 மன்னித்தால்  மீண்டும் அதைக்குறித்து சிந்திக்க மாட்டேன், பேச மாட்டேன் நினைக்க மாட்டேன் என்பவர்கள் யார்?

அதன் பின்னேதான் பயணிப்பேன் என்று நினைத்தாலே ஏற்படுத்தப்பட்ட மன்னிப்புக்கு அர்த்தமே இல்லை மன்னிப்பு என்பது ஒரு தீர்வு அல்லது முடிவு ஒரு விடயத்துக்கான மன்னிப்பு வழங்கப்பட்டுவிட்டால் அதை மீட்டிப்பார்க்க கூடாது என்னைப்பொறுத்தவரை நான் மன்னித்தால் மகிழ்வோடிருப்பேன் நன்றி 

உங்கள் கருத்திற்கான எதிர்க்கருத்தினை வாதமாக வைத்திருக்கிறேன் உங்களுக்கானதாக எடுத்துக்கொள்ளவேண்டாம்


மறதி வேண்டும் மானிடா.......!! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

மறதி வேண்டும் மானிடா.......!! Empty Re: மறதி வேண்டும் மானிடா.......!!

Post by நேசமுடன் ஹாசிம் Thu 4 Dec 2014 - 16:00

Nisha wrote:மன்னிச்சிட்டோம் மறந்திட்டோம் என ஏட்டில் எழுதிச்சொல்ல ரெம்ப இலகுவாய் இருக்கும் ஹாசிம்.  ஆனா’ நிஜத்தில் அதற்கான வாய்ப்பு ரெம்ப ரெம்ப கம்மி. 

இது அவரவர் மனதைப்பொறுத்தது அக்கா அந்த மனநிலையினை உருவாக்குவதுதான் முக்கியமானது ஒரு சந்தர்ப்பத்தில் ஏற்படுகின்ற பிரச்சினைக்கு அதன் வழியின் கவலையில் தொடர்ந்தாலும் காலப்போக்கில் அதை மாற்றுவதற்கு தங்களது மனதினை உருவாக்கிக்கொள்வதுதான் நிஜமாகும் 

அதிலும் அடுத்தவருக்கு ஆலோசனை எனும் போது அள்ளி வீசும் நாம் நமக்கே நமக்கு அந்த நிலை என வரும் போது தடம் மாறத்தான் செய்வோம். 

நிச்சயமாக இல்லை அடுத்தவருக்காக சொல்லுகின்ற ஆலோசனைகளில் தங்களுக்குள்ளும் சிக்கல்கள் இருந்தால் அதனை கழைவதற்குத்தான் மனம் சொல்லும் அவ்வாறு பேசாத மனதில் குறையிருக்கிறது என்பதுதான் நிதர்சனம் 

மன்னிச்சிட்டு மறந்திட்டோம் என  ஏதோ துணியில் பட்ட கறைபோல்  கழுவி காயவைத்தால் நீங்கி போயிரும் என்பதெல்லாம்  நிஜத்தில் சாத்தியமில்லாத ஒன்று! 

ஏன் சாத்தியமில்லை மன்னித்து மறந்து சேர்ந்து வாழ்ந்த சமுகத்தை காணவில்லையா அந்த நிலைக்கு வராத பாட்சத்தில் அதுவே ஆழமான கோபத்தினையும் வெறுப்பினையும் ஏற்படுத்தாதா 

என்னை பொறுத்தவரை ஏட்டளவில், கன்வில் வாழாமல் நிதர்சனம் புரிந்து வாழணும் எனத்தான் சொல்வேன். 

நீங்கள் சொல்கின்ற நிதர்சனம் உங்களை மாத்திரம் சுற்றிய ஒரு வட்டம் அதை உடைக்க உங்களால் முடியவில்லை என்பதுதான் சிக்கல் நாம் எதார்த்ததினை மறுத்து அப்படி இருக்குமோ என்று கற்பனையில் புரிந்து கொள்கின்ற பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் எட்டப்படுவதில்லை அக்கா 


மன்னிச்சிட்டோம் மறந்திட்டோம் என சொல்லும் பலர் மனசில் அடி ஆழத்தில் வன்மம் கொழுந்து விட்டெரிவதும். மன்னிக்கவே முடியாது என  சண்டியன் வேஷம் போடும் பலர் இளகிய சுபாவமுடையோரார் இருப்பதும் தான் நிதர்சனம். 

இதை ஏற்றுக்கொள்ள முடியாது  மன்னிக்க மாட்டோம் என்று சொல்கின்றவர்கள் ஒரு விதத்தில் எதிர்பார்த்து ஏமாந்தவர்களாகத்தான் இருக்க முடியும்(அது பாசமாகவும் இருக்கலாம்) அந்த ஏமாற்றத்தின் விளைவுதான் அவர்களைத் தடுக்கிறது என்பது நிதர்சனமில்லையா மன்னிச்சிட்டோம் என்பவர்கள் உன்னதமானவர்களாக பார்க்கப்படுவதில்லையா 

கடவுள் கடவுள் என கடவுளை தேடி  கோயில் கோயிலாய்  விரதமிருக்கும் பலர் தம் சக மனிதணை அவனும் தம்மைபோல்ல் ஊனூம் இரத்தமும் கொண்ட மனிதன் என உணராமல் தூக்கி அடிக்கும் காலம் இது. 

இப்படியானவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் அதற்காக நாம் நல்லவர்களாய் இருந்தாலென்ன 


அதனால் நாம் நாமாக  இருப்போம்.  உண்பதும் உடுப்பதும், தூங்குவதும், சிரிப்பதும் , எப்படியோ அப்படித்தான் கோபமும், தாபமும், ஆத்திரமும் நம்மோடு உடன் பிறந்ததென  புரிந்து நமக்கென நாம் வாழ ஆரம்பிச்சிட்டால் போதும். 

எமக்காகவே வாழந்து நாமாகவே மடிந்தால் எம் வாழ்வில் அர்த்தம் இல்லையென்றாகாதா எமக்குக்கிடைத்த வாய்ப்புகளை மற்றவர்களுக்காகவும் வாழ்வதில் திருப்தி காணமுடியாதா மற்றவர்களின் நிலை நாம் நோக்காது எமக்காக நாம் மற்றவர்களை அரவணைத்து வாழந்தால்தான் என்ன 

மன்னிச்சோம் என சொல்லி வேஷம் போடவும் வேண்டாம்.மறந்தோம் என சொல்லி மனதை அடக்கவும் வேண்டாம்.  நாம் நாமாக இருப்பது  தான் அனைத்துக்கும் நல்லது. 

இது வேசம் என்று நீங்கள் சொல்வதையே வேடிக்கையாக பார்க்கிறேன் காரணம் மன்னிப்பின் அவசியமும் மறதியின் முக்கியமும் உலக வழமையில் அர்த்தமற்றதாகிடும் நிச்சயமாக இது வேசமில்லை நீங்கள் உங்கள் நிலை கடந்து மறந்தும் மன்னித்தும் பாருங்கள் அதன் முக்கியம் புரியும் 

நல்லவர்களுக்கு சாட்சிகள் இரண்டே இரண்டு தான். 
ஒன்று அவர்கள் மனட்சாட்சி, இன்னொன்று தெய்வத்தின் சாட்சி.  இந்த இரண்டுக்குமிடையில் வேறெந்த சாட்சியும் தேவையில்லையே!

மனசாட்சியானது மனிதனின் மனநிலையில் வெளிப்படுகின்ற சாட்சி அதனைத்தாண்டி எதிர்த்தரப்பின் சாட்சிகளையும் ஆராய்ந்து மனசாட்சியுடன் ஒப்பிட்டுப்பார்ப்பதுதான் தீர்வாகும் 

நாம் தெய்வமாக முடியாது ! ஆனால் மனிதனாய் வாழ முடியும். மன்னித்து மறக்காது மனிதனாய் வாழலாம்.  

முடியாது மன்னிக்காமல் மறக்காமல் மனிதனாக வாழவே முடியாது உங்கள் வாழ்நாளில் அவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தினை சந்திக்கவே இல்லை என்று சொல்லுங்கள் நான் ஏற்றுக்கொள்கிறேன் மன்னிப்பும் மறதியும் மனத வாழ்வுடன் ஒன்றிப்பிணைந்த ஒன்று என்பதை உலகமே ஏற்றுக்கொண்ட உண்மை 

 மன்னித்தால்  மீண்டும் அதைக்குறித்து சிந்திக்க மாட்டேன், பேச மாட்டேன் நினைக்க மாட்டேன் என்பவர்கள் யார்?

அதன் பின்னேதான் பயணிப்பேன் என்று நினைத்தாலே ஏற்படுத்தப்பட்ட மன்னிப்புக்கு அர்த்தமே இல்லை மன்னிப்பு என்பது ஒரு தீர்வு அல்லது முடிவு ஒரு விடயத்துக்கான மன்னிப்பு வழங்கப்பட்டுவிட்டால் அதை மீட்டிப்பார்க்க கூடாது என்னைப்பொறுத்தவரை நான் மன்னித்தால் மகிழ்வோடிருப்பேன் நன்றி 

உங்கள் கருத்திற்கான எதிர்க்கருத்தினை வாதமாக வைத்திருக்கிறேன் உங்களுக்கானதாக எடுத்துக்கொள்ளவேண்டாம்


மறதி வேண்டும் மானிடா.......!! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

மறதி வேண்டும் மானிடா.......!! Empty Re: மறதி வேண்டும் மானிடா.......!!

Post by நண்பன் Thu 4 Dec 2014 - 16:05

நேசமுடன் ஹாசிம் wrote:
Nisha wrote:மன்னிச்சிட்டோம் மறந்திட்டோம் என ஏட்டில் எழுதிச்சொல்ல ரெம்ப இலகுவாய் இருக்கும் ஹாசிம்.  ஆனா’ நிஜத்தில் அதற்கான வாய்ப்பு ரெம்ப ரெம்ப கம்மி. 

இது அவரவர் மனதைப்பொறுத்தது அக்கா அந்த மனநிலையினை உருவாக்குவதுதான் முக்கியமானது ஒரு சந்தர்ப்பத்தில் ஏற்படுகின்ற பிரச்சினைக்கு அதன் வழியின் கவலையில் தொடர்ந்தாலும் காலப்போக்கில் அதை மாற்றுவதற்கு தங்களது மனதினை உருவாக்கிக்கொள்வதுதான் நிஜமாகும் 

அதிலும் அடுத்தவருக்கு ஆலோசனை எனும் போது அள்ளி வீசும் நாம் நமக்கே நமக்கு அந்த நிலை என வரும் போது தடம் மாறத்தான் செய்வோம். 

நிச்சயமாக இல்லை அடுத்தவருக்காக சொல்லுகின்ற ஆலோசனைகளில் தங்களுக்குள்ளும் சிக்கல்கள் இருந்தால் அதனை கழைவதற்குத்தான் மனம் சொல்லும் அவ்வாறு பேசாத மனதில் குறையிருக்கிறது என்பதுதான் நிதர்சனம் 

மன்னிச்சிட்டு மறந்திட்டோம் என  ஏதோ துணியில் பட்ட கறைபோல்  கழுவி காயவைத்தால் நீங்கி போயிரும் என்பதெல்லாம்  நிஜத்தில் சாத்தியமில்லாத ஒன்று! 

ஏன் சாத்தியமில்லை மன்னித்து மறந்து சேர்ந்து வாழ்ந்த சமுகத்தை காணவில்லையா அந்த நிலைக்கு வராத பாட்சத்தில் அதுவே ஆழமான கோபத்தினையும் வெறுப்பினையும் ஏற்படுத்தாதா 

என்னை பொறுத்தவரை ஏட்டளவில், கன்வில் வாழாமல் நிதர்சனம் புரிந்து வாழணும் எனத்தான் சொல்வேன். 

நீங்கள் சொல்கின்ற நிதர்சனம் உங்களை மாத்திரம் சுற்றிய ஒரு வட்டம் அதை உடைக்க உங்களால் முடியவில்லை என்பதுதான் சிக்கல் நாம் எதார்த்ததினை மறுத்து அப்படி இருக்குமோ என்று கற்பனையில் புரிந்து கொள்கின்ற பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் எட்டப்படுவதில்லை அக்கா 


மன்னிச்சிட்டோம் மறந்திட்டோம் என சொல்லும் பலர் மனசில் அடி ஆழத்தில் வன்மம் கொழுந்து விட்டெரிவதும். மன்னிக்கவே முடியாது என  சண்டியன் வேஷம் போடும் பலர் இளகிய சுபாவமுடையோரார் இருப்பதும் தான் நிதர்சனம். 

இதை ஏற்றுக்கொள்ள முடியாது  மன்னிக்க மாட்டோம் என்று சொல்கின்றவர்கள் ஒரு விதத்தில் எதிர்பார்த்து ஏமாந்தவர்களாகத்தான் இருக்க முடியும்(அது பாசமாகவும் இருக்கலாம்) அந்த ஏமாற்றத்தின் விளைவுதான் அவர்களைத் தடுக்கிறது என்பது நிதர்சனமில்லையா மன்னிச்சிட்டோம் என்பவர்கள் உன்னதமானவர்களாக பார்க்கப்படுவதில்லையா 

கடவுள் கடவுள் என கடவுளை தேடி  கோயில் கோயிலாய்  விரதமிருக்கும் பலர் தம் சக மனிதணை அவனும் தம்மைபோல்ல் ஊனூம் இரத்தமும் கொண்ட மனிதன் என உணராமல் தூக்கி அடிக்கும் காலம் இது. 

இப்படியானவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் அதற்காக நாம் நல்லவர்களாய் இருந்தாலென்ன 


அதனால் நாம் நாமாக  இருப்போம்.  உண்பதும் உடுப்பதும், தூங்குவதும், சிரிப்பதும் , எப்படியோ அப்படித்தான் கோபமும், தாபமும், ஆத்திரமும் நம்மோடு உடன் பிறந்ததென  புரிந்து நமக்கென நாம் வாழ ஆரம்பிச்சிட்டால் போதும். 

எமக்காகவே வாழந்து நாமாகவே மடிந்தால் எம் வாழ்வில் அர்த்தம் இல்லையென்றாகாதா எமக்குக்கிடைத்த வாய்ப்புகளை மற்றவர்களுக்காகவும் வாழ்வதில் திருப்தி காணமுடியாதா மற்றவர்களின் நிலை நாம் நோக்காது எமக்காக நாம் மற்றவர்களை அரவணைத்து வாழந்தால்தான் என்ன 

மன்னிச்சோம் என சொல்லி வேஷம் போடவும் வேண்டாம்.மறந்தோம் என சொல்லி மனதை அடக்கவும் வேண்டாம்.  நாம் நாமாக இருப்பது  தான் அனைத்துக்கும் நல்லது. 

இது வேசம் என்று நீங்கள் சொல்வதையே வேடிக்கையாக பார்க்கிறேன் காரணம் மன்னிப்பின் அவசியமும் மறதியின் முக்கியமும் உலக வழமையில் அர்த்தமற்றதாகிடும் நிச்சயமாக இது வேசமில்லை நீங்கள் உங்கள் நிலை கடந்து மறந்தும் மன்னித்தும் பாருங்கள் அதன் முக்கியம் புரியும் 

நல்லவர்களுக்கு சாட்சிகள் இரண்டே இரண்டு தான். 
ஒன்று அவர்கள் மனட்சாட்சி, இன்னொன்று தெய்வத்தின் சாட்சி.  இந்த இரண்டுக்குமிடையில் வேறெந்த சாட்சியும் தேவையில்லையே!

மனசாட்சியானது மனிதனின் மனநிலையில் வெளிப்படுகின்ற சாட்சி அதனைத்தாண்டி எதிர்த்தரப்பின் சாட்சிகளையும் ஆராய்ந்து மனசாட்சியுடன் ஒப்பிட்டுப்பார்ப்பதுதான் தீர்வாகும் 

நாம் தெய்வமாக முடியாது ! ஆனால் மனிதனாய் வாழ முடியும். மன்னித்து மறக்காது மனிதனாய் வாழலாம்.  

முடியாது மன்னிக்காமல் மறக்காமல் மனிதனாக வாழவே முடியாது உங்கள் வாழ்நாளில் அவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தினை சந்திக்கவே இல்லை என்று சொல்லுங்கள் நான் ஏற்றுக்கொள்கிறேன் மன்னிப்பும் மறதியும் மனத வாழ்வுடன் ஒன்றிப்பிணைந்த ஒன்று என்பதை உலகமே ஏற்றுக்கொண்ட உண்மை 

 மன்னித்தால்  மீண்டும் அதைக்குறித்து சிந்திக்க மாட்டேன், பேச மாட்டேன் நினைக்க மாட்டேன் என்பவர்கள் யார்?

அதன் பின்னேதான் பயணிப்பேன் என்று நினைத்தாலே ஏற்படுத்தப்பட்ட மன்னிப்புக்கு அர்த்தமே இல்லை மன்னிப்பு என்பது ஒரு தீர்வு அல்லது முடிவு ஒரு விடயத்துக்கான மன்னிப்பு வழங்கப்பட்டுவிட்டால் அதை மீட்டிப்பார்க்க கூடாது என்னைப்பொறுத்தவரை நான் மன்னித்தால் மகிழ்வோடிருப்பேன் நன்றி 

உங்கள் கருத்திற்கான எதிர்க்கருத்தினை வாதமாக வைத்திருக்கிறேன் உங்களுக்கானதாக எடுத்துக்கொள்ளவேண்டாம்
இந்த வாதம் விவாதம் ரொம் அருமையாக உள்ளது
இப்படிக்கு வழிப்போக்கன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மறதி வேண்டும் மானிடா.......!! Empty Re: மறதி வேண்டும் மானிடா.......!!

Post by நேசமுடன் ஹாசிம் Thu 4 Dec 2014 - 16:09

பானுஷபானா wrote:கவிதை அருமை ஹாசிம்

சாதாரணமான விசயத்தை  மறக்கலாம். சதா ரணம் உண்டாக்கிய விசயத்தை எப்படி மறக்க முடியும்.

நிஷா சொல்வது போல மன்னிக்கலாம். ஆனால் மன்னிப்பு வாங்கிய்யவர்கள் செய்த தவறை மறக்க முடியுமா.

அந்த மன்னிப்பு கூட தகுதியானவர்களுக்குத் தான் குடுக்க முடியும்.
நீங்கள் சொல்கின்ற தகுதியானவர்கள் என்று எப்படி அடையாளங்கண்டு கொள்வீர்கள் 

மார்க்கம் தெரிந்த நீங்களா இப்படி சொல்கிறீர்கள் 

ஒருவன் அனியாயமாக ஒருவரை கொலை செய்கிறான் கொலையானவர் எந்தப்பிழையும் செய்திருக்கவில்லை ஆதலால் கொலைக்கு கொலை செய்யச்சொல்கிறது இஸ்லாமிம் அதில் இன்னொரு மேன்மையை இஸ்லாம் கற்றுத்தந்திருக்கிறதே கொலையானவரின் உறவினர்கள் கொலை செய்தவரை மன்னித்தால் கொலைக் குற்றப்பரிகாரம் செய்துவிட்டு அவரை மன்னிக்கும் படி வலியுறுத்துகிறதே இதில் அவன் கொலை செய்துவிட்டான் அவனை கொலைதான் செய்யவேண்டும் அடம்பிடிப்பிங்களா மன்னிப்பிங்களா உங்களின் மன்னிப்பால் இன்னொரு உயிர்வாழ்கிறதே எந்தவொரு தவறுக்கும் பிரச்சினைக்கும் மறதி மன்னிப்பு என்று ஆராய்ந்து சென்று பாருங்கள் இறுதி முடிவு உங்களுக்கு மன்னித்துவிடு என்றுதான் வரும்


மறதி வேண்டும் மானிடா.......!! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

மறதி வேண்டும் மானிடா.......!! Empty Re: மறதி வேண்டும் மானிடா.......!!

Post by பாயிஸ் Thu 4 Dec 2014 - 16:12

நேசமுடன் ஹாசிம் wrote:
பானுஷபானா wrote:கவிதை அருமை ஹாசிம்

சாதாரணமான விசயத்தை  மறக்கலாம். சதா ரணம் உண்டாக்கிய விசயத்தை எப்படி மறக்க முடியும்.

நிஷா சொல்வது போல மன்னிக்கலாம். ஆனால் மன்னிப்பு வாங்கிய்யவர்கள் செய்த தவறை மறக்க முடியுமா.

அந்த மன்னிப்பு கூட தகுதியானவர்களுக்குத் தான் குடுக்க முடியும்.
நீங்கள் சொல்கின்ற தகுதியானவர்கள் என்று எப்படி அடையாளங்கண்டு கொள்வீர்கள் 

மார்க்கம் தெரிந்த நீங்களா இப்படி சொல்கிறீர்கள் 

ஒருவன் அனியாயமாக ஒருவரை கொலை செய்கிறான் கொலையானவர் எந்தப்பிழையும் செய்திருக்கவில்லை ஆதலால் கொலைக்கு கொலை செய்யச்சொல்கிறது இஸ்லாமிம் அதில் இன்னொரு மேன்மையை இஸ்லாம் கற்றுத்தந்திருக்கிறதே கொலையானவரின் உறவினர்கள் கொலை செய்தவரை மன்னித்தால் கொலைக் குற்றப்பரிகாரம் செய்துவிட்டு அவரை மன்னிக்கும் படி வலியுறுத்துகிறதே இதில் அவன் கொலை செய்துவிட்டான் அவனை கொலைதான் செய்யவேண்டும் அடம்பிடிப்பிங்களா மன்னிப்பிங்களா உங்களின் மன்னிப்பால் இன்னொரு உயிர்வாழ்கிறதே எந்தவொரு தவறுக்கும் பிரச்சினைக்கும் மறதி மன்னிப்பு என்று ஆராய்ந்து சென்று பாருங்கள் இறுதி முடிவு உங்களுக்கு மன்னித்துவிடு என்றுதான் வரும்
ஆமோதிக்கிறேன் ஆமோதிக்கிறேன்
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

மறதி வேண்டும் மானிடா.......!! Empty Re: மறதி வேண்டும் மானிடா.......!!

Post by பாயிஸ் Thu 4 Dec 2014 - 16:14

நேசமுடன் ஹாசிம் wrote:
Nisha wrote:மன்னிச்சிட்டோம் மறந்திட்டோம் என ஏட்டில் எழுதிச்சொல்ல ரெம்ப இலகுவாய் இருக்கும் ஹாசிம்.  ஆனா’ நிஜத்தில் அதற்கான வாய்ப்பு ரெம்ப ரெம்ப கம்மி. 

இது அவரவர் மனதைப்பொறுத்தது அக்கா அந்த மனநிலையினை உருவாக்குவதுதான் முக்கியமானது ஒரு சந்தர்ப்பத்தில் ஏற்படுகின்ற பிரச்சினைக்கு அதன் வழியின் கவலையில் தொடர்ந்தாலும் காலப்போக்கில் அதை மாற்றுவதற்கு தங்களது மனதினை உருவாக்கிக்கொள்வதுதான் நிஜமாகும் 

அதிலும் அடுத்தவருக்கு ஆலோசனை எனும் போது அள்ளி வீசும் நாம் நமக்கே நமக்கு அந்த நிலை என வரும் போது தடம் மாறத்தான் செய்வோம். 

நிச்சயமாக இல்லை அடுத்தவருக்காக சொல்லுகின்ற ஆலோசனைகளில் தங்களுக்குள்ளும் சிக்கல்கள் இருந்தால் அதனை கழைவதற்குத்தான் மனம் சொல்லும் அவ்வாறு பேசாத மனதில் குறையிருக்கிறது என்பதுதான் நிதர்சனம் 

மன்னிச்சிட்டு மறந்திட்டோம் என  ஏதோ துணியில் பட்ட கறைபோல்  கழுவி காயவைத்தால் நீங்கி போயிரும் என்பதெல்லாம்  நிஜத்தில் சாத்தியமில்லாத ஒன்று! 

ஏன் சாத்தியமில்லை மன்னித்து மறந்து சேர்ந்து வாழ்ந்த சமுகத்தை காணவில்லையா அந்த நிலைக்கு வராத பாட்சத்தில் அதுவே ஆழமான கோபத்தினையும் வெறுப்பினையும் ஏற்படுத்தாதா 

என்னை பொறுத்தவரை ஏட்டளவில், கன்வில் வாழாமல் நிதர்சனம் புரிந்து வாழணும் எனத்தான் சொல்வேன். 

நீங்கள் சொல்கின்ற நிதர்சனம் உங்களை மாத்திரம் சுற்றிய ஒரு வட்டம் அதை உடைக்க உங்களால் முடியவில்லை என்பதுதான் சிக்கல் நாம் எதார்த்ததினை மறுத்து அப்படி இருக்குமோ என்று கற்பனையில் புரிந்து கொள்கின்ற பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் எட்டப்படுவதில்லை அக்கா 


மன்னிச்சிட்டோம் மறந்திட்டோம் என சொல்லும் பலர் மனசில் அடி ஆழத்தில் வன்மம் கொழுந்து விட்டெரிவதும். மன்னிக்கவே முடியாது என  சண்டியன் வேஷம் போடும் பலர் இளகிய சுபாவமுடையோரார் இருப்பதும் தான் நிதர்சனம். 

இதை ஏற்றுக்கொள்ள முடியாது  மன்னிக்க மாட்டோம் என்று சொல்கின்றவர்கள் ஒரு விதத்தில் எதிர்பார்த்து ஏமாந்தவர்களாகத்தான் இருக்க முடியும்(அது பாசமாகவும் இருக்கலாம்) அந்த ஏமாற்றத்தின் விளைவுதான் அவர்களைத் தடுக்கிறது என்பது நிதர்சனமில்லையா மன்னிச்சிட்டோம் என்பவர்கள் உன்னதமானவர்களாக பார்க்கப்படுவதில்லையா 

கடவுள் கடவுள் என கடவுளை தேடி  கோயில் கோயிலாய்  விரதமிருக்கும் பலர் தம் சக மனிதணை அவனும் தம்மைபோல்ல் ஊனூம் இரத்தமும் கொண்ட மனிதன் என உணராமல் தூக்கி அடிக்கும் காலம் இது. 

இப்படியானவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் அதற்காக நாம் நல்லவர்களாய் இருந்தாலென்ன 


அதனால் நாம் நாமாக  இருப்போம்.  உண்பதும் உடுப்பதும், தூங்குவதும், சிரிப்பதும் , எப்படியோ அப்படித்தான் கோபமும், தாபமும், ஆத்திரமும் நம்மோடு உடன் பிறந்ததென  புரிந்து நமக்கென நாம் வாழ ஆரம்பிச்சிட்டால் போதும். 

எமக்காகவே வாழந்து நாமாகவே மடிந்தால் எம் வாழ்வில் அர்த்தம் இல்லையென்றாகாதா எமக்குக்கிடைத்த வாய்ப்புகளை மற்றவர்களுக்காகவும் வாழ்வதில் திருப்தி காணமுடியாதா மற்றவர்களின் நிலை நாம் நோக்காது எமக்காக நாம் மற்றவர்களை அரவணைத்து வாழந்தால்தான் என்ன 

மன்னிச்சோம் என சொல்லி வேஷம் போடவும் வேண்டாம்.மறந்தோம் என சொல்லி மனதை அடக்கவும் வேண்டாம்.  நாம் நாமாக இருப்பது  தான் அனைத்துக்கும் நல்லது. 

இது வேசம் என்று நீங்கள் சொல்வதையே வேடிக்கையாக பார்க்கிறேன் காரணம் மன்னிப்பின் அவசியமும் மறதியின் முக்கியமும் உலக வழமையில் அர்த்தமற்றதாகிடும் நிச்சயமாக இது வேசமில்லை நீங்கள் உங்கள் நிலை கடந்து மறந்தும் மன்னித்தும் பாருங்கள் அதன் முக்கியம் புரியும் 

நல்லவர்களுக்கு சாட்சிகள் இரண்டே இரண்டு தான். 
ஒன்று அவர்கள் மனட்சாட்சி, இன்னொன்று தெய்வத்தின் சாட்சி.  இந்த இரண்டுக்குமிடையில் வேறெந்த சாட்சியும் தேவையில்லையே!

மனசாட்சியானது மனிதனின் மனநிலையில் வெளிப்படுகின்ற சாட்சி அதனைத்தாண்டி எதிர்த்தரப்பின் சாட்சிகளையும் ஆராய்ந்து மனசாட்சியுடன் ஒப்பிட்டுப்பார்ப்பதுதான் தீர்வாகும் 

நாம் தெய்வமாக முடியாது ! ஆனால் மனிதனாய் வாழ முடியும். மன்னித்து மறக்காது மனிதனாய் வாழலாம்.  

முடியாது மன்னிக்காமல் மறக்காமல் மனிதனாக வாழவே முடியாது உங்கள் வாழ்நாளில் அவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தினை சந்திக்கவே இல்லை என்று சொல்லுங்கள் நான் ஏற்றுக்கொள்கிறேன் மன்னிப்பும் மறதியும் மனத வாழ்வுடன் ஒன்றிப்பிணைந்த ஒன்று என்பதை உலகமே ஏற்றுக்கொண்ட உண்மை 

 மன்னித்தால்  மீண்டும் அதைக்குறித்து சிந்திக்க மாட்டேன், பேச மாட்டேன் நினைக்க மாட்டேன் என்பவர்கள் யார்?

அதன் பின்னேதான் பயணிப்பேன் என்று நினைத்தாலே ஏற்படுத்தப்பட்ட மன்னிப்புக்கு அர்த்தமே இல்லை மன்னிப்பு என்பது ஒரு தீர்வு அல்லது முடிவு ஒரு விடயத்துக்கான மன்னிப்பு வழங்கப்பட்டுவிட்டால் அதை மீட்டிப்பார்க்க கூடாது என்னைப்பொறுத்தவரை நான் மன்னித்தால் மகிழ்வோடிருப்பேன் நன்றி 

உங்கள் கருத்திற்கான எதிர்க்கருத்தினை வாதமாக வைத்திருக்கிறேன் உங்களுக்கானதாக எடுத்துக்கொள்ளவேண்டாம்
ஆமோதிக்கிறேன் ஆமோதிக்கிறேன் ஆமோதிக்கிறேன்
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

மறதி வேண்டும் மானிடா.......!! Empty Re: மறதி வேண்டும் மானிடா.......!!

Post by நண்பன் Thu 4 Dec 2014 - 16:18

பொம்மைப் படம் தொடர வேண்டாம் அடி விழும் நீங்களும் உங்கள் கருத்தினை எழுதுங்கள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மறதி வேண்டும் மானிடா.......!! Empty Re: மறதி வேண்டும் மானிடா.......!!

Post by Nisha Thu 4 Dec 2014 - 16:23

இந்த விவாதம் தேவையா என தோன்றுகின்றது! 

கொலை செய்த கொலைக்குற்றவாளியை  கொல்லப்ட்டவனின் உறவினர்  மன்னித்தால் அவன் செய்த கொலை இல்லை என்றாகும் என்பதும்,  மன்னிப்பாய் நஷ்ட ஈடுகள்  கொடுப்பனவுகள்  ஈடுகட்டப்டலும் பணமுள்ளவர்களுக்கும் அதிகார வர்க்கத்திற்குமானது. 

கொலைக்கு கொலை.  கண்ணுக்கு கண், ஏழைகளுக்கானது. 

பாதிக்க்ப்படுவதும் பலியாகுவது, பழிவாங்கப்படுவதும் ஏழைகளும்  பாமரரும் தான். இவ்வுலகில் பணமிருந்தால் எதையும் வெல்லலாம் என்பது தான் நியதி. 

பொதுவான விவாதத்தில் மதம், மார்க்கத்தினை கொண்டு வருவது  சரியா எனும் கேள்வி  ஒரு புறமிருக்க...    இஸ்லாம் மார்க்கத்தினை விட கிறிஸ்தவ மதக்கோட்பாடு மன்னிப்பை குறித்து இன்னும் மேன்மையான சட்டங்களை தான் தந்துள்ளது. 

பல்லுக்கு பல், கண்ணுக்கு கண் எனும் காலம் இல்லை.  கொலையாளிக்கு கொலைசெய்த குடும்பத்தவர் மன்னிப்பு வழங்க சொல்லவில்லை.. 

ஒருவன் உன் கன்னத்தில் அறைந்தால் அவனுக்கு மறு கன்னத்தினை காட்டு எனத்தான் சொல்கின்றது.  இங்கே மன்னிப்பை விட அவன் ஆத்திரம் தீர நீ யே வழியாகு எனத்தான் சொல்கின்றது. கொலை செய்தாலும் கொள்ளை இட்டாலும் நீ அவனுக்கு தண்டனை வழங்க முன் நீ நிரபராதியா என உன்னை நீ ஆராய்ந்து பார் என சொல்கின்றது. 

ஒருவன் செய்த தப்புக்கு தண்டனை வழங்கு முன் தீர்ப்பு வழங்குபவர்கள் அத்தப்பை செய்யாதவர்களாய் இருக்கணும்.  ஒருவரை குற்றவாளி என தீர்க்க முன் நாம் குற்றவாளிகளாய் இல்லாதிருக்கணும்.  இது தான் இறைவன் கட்டளை. ஆனால் இதை எத்தனை பேர் கடைப்பிடிக்கின்றோம். 

ஒரு முறை அல்ல ஏழேழுபது தடவை மன்னிக்கலாம் என்பது  கடவுள் கட்டளை.  ஏழுஎழுபது தட்வை மன்னித்து விட்டு நீ  அடிமையாய் வாழ் என  சொல்லவில்லை. தலை நிமிர்ந்து வாழ் எனத்த்தான் சொல்கின்றது.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மறதி வேண்டும் மானிடா.......!! Empty Re: மறதி வேண்டும் மானிடா.......!!

Post by நேசமுடன் ஹாசிம் Thu 4 Dec 2014 - 16:52

விவாதமாக கருத்தினைக்கண்டதால்தான் விவதாமகியது 

விவாதத்திற்காக பதிவினை நான் ஏற்படுத்தவில்லை 

மார்க்கம் தழுவியதுதான் எமது வாழ்க்கை மார்க்கத்தினையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பது எனது கருத்து 
முக்கியமாக பானுவின் பதிலுக்காத்தான் அவருக்கான விளக்கமாக எழுதினேன் காரணம் அவர் நன்றாக அறிந்திருக்கின்ற விடயம் 

நிச்சயமாக மார்க்க தீர்ப்பாளிகள் மார்க்கத்தில் வாழ்கின்றவர்கள்தான் செய்கிறார்கள் அவ்வாறில்லாமல் தீர்ப்பும் தண்டனையும் நிறைவேற்றினால் நாளை மறுமையில் இறைவனின் பிடி பயங்கரமானதென அவர்களறிவார்கள் 

மன்னிப்பாளர்களெல்லாம் மகிழ்வோடிருக்கிறார்கள் என்பதும் மன்னிக்க மறுப்பவர்கள் அவர்களின் மனசாட்சியுடனேயே போர்செய்கிறார்கள் என்பதும் எதார்த்தமான விடயம் அடிமையாக ஒரு போதும் மாறமாட்டார்கள் அவ்வாறு மாறினாலும் அடுத்தவரின் அன்புக்கு அடிமையாவார்கள் அதில் தவறில்லை


மறதி வேண்டும் மானிடா.......!! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

மறதி வேண்டும் மானிடா.......!! Empty Re: மறதி வேண்டும் மானிடா.......!!

Post by Nisha Thu 4 Dec 2014 - 17:11

பாயிஸ் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
Nisha wrote:மன்னிச்சிட்டோம் மறந்திட்டோம் என ஏட்டில் எழுதிச்சொல்ல ரெம்ப இலகுவாய் இருக்கும் ஹாசிம்.  ஆனா’ நிஜத்தில் அதற்கான வாய்ப்பு ரெம்ப ரெம்ப கம்மி. 

இது அவரவர் மனதைப்பொறுத்தது அக்கா அந்த மனநிலையினை உருவாக்குவதுதான் முக்கியமானது ஒரு சந்தர்ப்பத்தில் ஏற்படுகின்ற பிரச்சினைக்கு அதன் வழியின் கவலையில் தொடர்ந்தாலும் காலப்போக்கில் அதை மாற்றுவதற்கு தங்களது மனதினை உருவாக்கிக்கொள்வதுதான் நிஜமாகும் 

கவலைப்படணும் என என்ன அவசியம்? மாற்றங்கள் அவசியம். இதுவும் கடந்து போகும் , இதுவும் இறைவன் சித்தம் என எடுத்து கொண்டால் எல்லாம் சாத்தியம் தான்.  மாற்றங்கள் என்பது அடுத்தவர் சொல்லி வருவதல்ல.. அவரவர் உணர்ந்து வருவது... வரவேண்டியது.  ஒரு பொழுதில் நாம் சொன்னதை வைத்து இது இப்படித்தான் என நாம் முடிவெடுத்தால்  அது மிகவும் தவறானது என்பது என் கருத்து. 

அதிலும் அடுத்தவருக்கு ஆலோசனை எனும் போது அள்ளி வீசும் நாம் நமக்கே நமக்கு அந்த நிலை என வரும் போது தடம் மாறத்தான் செய்வோம். 

நிச்சயமாக இல்லை அடுத்தவருக்காக சொல்லுகின்ற ஆலோசனைகளில் தங்களுக்குள்ளும் சிக்கல்கள் இருந்தால் அதனை களைவதற்குத்தான் மனம் சொல்லும் அவ்வாறு பேசாத மனதில் குறையிருக்கிறது என்பதுதான் நிதர்சனம் 

 நான் அடுத்தவருக்கு ஆலோசனை வழங்கும் போது அதை நான் கடைப்பிடித்தால் மட்டும் தான்  ஆலோசனை சொல்வேன். அல்லது நானே இதை கடைப்பிடிப்பதில்லை உனக்கு எப்படி  புத்தி சொல்வேன் என நேரடியாகவே என் குறையை அவ்விடம் ஒப்புக்கொள்வேன்.  எனை அறிந்தோர் என் இக்குணமும் அறிவர். 

ஆலோசனை என்பது அவரவர் மனவியல்பு தற்கால,கடந்த கால சூழல் குறித்து தெளிவாக அறிந்த பின்  சொல்லப்பட வேண்டியது.  ஆலோசனை சொல்பவர் அதற்கு தகுதியானவராய் இருந்தால் கேட்பவர் நிச்சயம் கேட்பார்கள். 



ஆலோசனையை கேட்டு அதன் படி நடப்பவன் புத்தி சாலி தான். ஆனால் நாம் எச்சூழலில் ஆலோசனை சொல்கின்றோம் என்பதை பொறுத்திருக்கின்றது. 


மன்னிச்சிட்டு மறந்திட்டோம் என  ஏதோ துணியில் பட்ட கறைபோல்  கழுவி காயவைத்தால் நீங்கி போயிரும் என்பதெல்லாம்  நிஜத்தில் சாத்தியமில்லாத ஒன்று! 

ஏன் சாத்தியமில்லை மன்னித்து மறந்து சேர்ந்து வாழ்ந்த சமுகத்தை காணவில்லையா அந்த நிலைக்கு வராத பாட்சத்தில் அதுவே ஆழமான கோபத்தினையும் வெறுப்பினையும் ஏற்படுத்தாதா?

அப்படி யாரப்பா வாழ்ந்தார்கள். எந்த சமூகம் வாழ்ந்தது?  நம்ம நாட்டில் தமிழனும் முஸ்லிமே கூட இன்னும் அப்படி வாழ முடியலலயேப்பா.. மொழியால் ஒன்று என சொல்லிட்டு   எதை மன்னித்தோம்?

எவரோ எங்கோ என சொல்வதை விட நீங்கள் வாழ்ந்தீர்களா என சொல்லுங்களேன்? 


என்னை பொறுத்தவரை ஏட்டளவில், கன்வில் வாழாமல் நிதர்சனம் புரிந்து வாழணும் எனத்தான் சொல்வேன். 

நீங்கள் சொல்கின்ற நிதர்சனம் உங்களை மாத்திரம் சுற்றிய ஒரு வட்டம் அதை உடைக்க உங்களால் முடியவில்லை என்பதுதான் சிக்கல் நாம் எதார்த்ததினை மறுத்து அப்படி இருக்குமோ என்று கற்பனையில் புரிந்து கொள்கின்ற பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் எட்டப்படுவதில்லை அக்கா 

மிகமிக தப்பான் ஒரு புரிதல். உங்களுக்கு என்னை  என் சுற்றளவை, எனை சுற்றி இருப்பதை ஏன் உள்ள ஆழத்தினை புரியாததால் வந்த  பதில் இது. 

என்னை சுற்றிய வட்டம் என்பது  நீங்கள் உங்களை சுற்றி போட்டிருக்கும் வட்டத்தினை விட பெரியது.  உங்களில் பலர்  உங்கள் குடும்பம் ஊர் சமூகம் என போட்டிருக்கும் வட்டத்தினை விட நான் எனை சுற்றி இட்டிருக்கும் வட்டம்  உலகம் முழுதும் பரந்தது. எனை நேரில் கண்டோர்.. எனை  என் அன்பை உபசரிப்பை உணர்ந்தோர் நிச்சயம்  இப்படி சொல்ல முடியாதே! 


மன்னிச்சிட்டோம் மறந்திட்டோம் என சொல்லும் பலர் மனசில் அடி ஆழத்தில் வன்மம் கொழுந்து விட்டெரிவதும். மன்னிக்கவே முடியாது என  சண்டியன் வேஷம் போடும் பலர் இளகிய சுபாவமுடையோரார் இருப்பதும் தான் நிதர்சனம். 

இதை ஏற்றுக்கொள்ள முடியாது  மன்னிக்க மாட்டோம் என்று சொல்கின்றவர்கள் ஒரு விதத்தில் எதிர்பார்த்து ஏமாந்தவர்களாகத்தான் இருக்க முடியும்(அது பாசமாகவும் இருக்கலாம்) அந்த ஏமாற்றத்தின் விளைவுதான் அவர்களைத் தடுக்கிறது என்பது நிதர்சனமில்லையா மன்னிச்சிட்டோம் என்பவர்கள் உன்னதமானவர்களாக பார்க்கப்படுவதில்லையா?

உங்களால் உங்கள் பத்து வயதில் நடந்த சம்பவம் மறக்க முடியிதா? இன்றைக்க்கு இருபது வருடம் முன்னால் நடந்த நல்லது கெட்டதை மறக்க முடியுமா? அப்படி முடியும் என நீங்கள் சொன்னால் அது  நம்ம நண்பன் அடிக்கடி சொல்வது போல் அம்னீஷியாவாக இருக்கும். நம்மில் பலருக்கு இன்னும் அம்னீஷியாவை நிரந்தரமாக கடவுள் தரவில்லை என நினைக்கின்றேன். 

எதிர்பார்ப்புக்கள் ஏமாற்றமாகும் போது தானே பிரச்சனைகளே வருகின்றது. எதிர்பாராமல்  கடவுளே நமக்கு எதையும் செய்யல்லையே.. நான் உனக்கு இதையெல்லாம் தந்தேன் நல் வாழ்வு தந்தேன்.. பணம் தந்தேன் ஆரோக்கியம் தந்தேன். நீ என்னை வணங்கு, எனக்கு கீழ்ப்படி. என் சொல் கேட்டு நட என கட்டளை யிட்டுத்தான் அந்த எதிர்பார்ப்பு நிறைவேறும் என சொல்லித்தானே கடவுளே நமக்கு பல நல்லது செய்கின்றான். அதை மீறி ஏதேனும் தவறு துன்பம் நேரும் போது நாம் செய்த தப்புக்கு தண்டனை என மனதை தேற்ற வைப்பதும் இந்த எதிர்பார்ப்புத்தான்.

எதிர்பார்ப்பில் தான் முழு உலகமே இயங்குகின்றது.  ஒன்றைக்கொடுத்து ஒன்றை பெறும் சங்கிலித்தொடன் வாழ்க்கை  நம்மோடது. 

கருவில் சுமந்து பெற்றதற்காய் கடைசி காலத்தில் தாயை பார்க்கணும் என்பதும் இந்த எதிர்பார்ப்பில் தானே அடங்கும். 

அப்படி இருக்கும் போது மனிதர்கள் நாம் எதிர்பார்ப்பில்லாமல் செய்தோம் என சொன்னால் அதுவும் வேசம்தான். பிச்சைக்கரானுக்கு ஒரு ரூபாய் தானம் செய்திட்டு  அவன் நன்றி சொல்லாவிட்டால் இவனுக்கான் திமிரைப்பார் என  நம் மனசுக்குள்ளாவது திட்டாமலா இருக்கோம். 


கடவுள் கடவுள் என கடவுளை தேடி  கோயில் கோயிலாய்  விரதமிருக்கும் பலர் தம் சக மனிதணை அவனும் தம்மைபோல்ல் ஊனூம் இரத்தமும் கொண்ட மனிதன் என உணராமல் தூக்கி அடிக்கும் காலம் இது. 

இப்படியானவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் அதற்காக நாம் நல்லவர்களாய் இருந்தாலென்ன?

நல்லவராய் இருப்பது எனில் எப்படி? இந்த நல்லவர் என்பதற்கான வரை யறை என்ன?

குட்ட்க்குட்ட குனிவதும் ஏமாளியாய், இளிச்சவாய் தனமாய்,, ஏமாறுகின்றோம் என தெரிந்தும் அடுத்தவர் நம்மை சக்கையாய் உறிஞ்சி  எடுத்த பின்னும்  நம்மை நமக்கானதை உணராமல் நடைப்பிணமாய் வாழ்வதோ? நல்லா நாம்ம் போட்ட பின்னும் போட்டது நாமம் இல்லை திருனூறு பூசினேன் என  சொன்னால்  அப்படியா என கேட்டு தலையாட்டி பொம்மையாய் இருந்தால் தான் நல்லவர்கள் பட்டம் கிடைக்குமோ?


அதனால் நாம் நாமாக  இருப்போம்.  உண்பதும் உடுப்பதும், தூங்குவதும், சிரிப்பதும் , எப்படியோ அப்படித்தான் கோபமும், தாபமும், ஆத்திரமும் நம்மோடு உடன் பிறந்ததென  புரிந்து நமக்கென நாம் வாழ ஆரம்பிச்சிட்டால் போதும். 

எமக்காகவே வாழந்து நாமாகவே மடிந்தால் எம் வாழ்வில் அர்த்தம் இல்லையென்றாகாதா எமக்குக்கிடைத்த வாய்ப்புகளை மற்றவர்களுக்காகவும் வாழ்வதில் திருப்தி காணமுடியாதா மற்றவர்களின் நிலை நாம் நோக்காது எமக்காக நாம் மற்றவர்களை அரவணைத்து வாழந்தால்தான் என்ன?

மற்றவர்களுக்காக வாழ்வது என்பது.. நம்மை தூக்கி அடிப்பவர்களுக்காக.. நம்மை வேண்டாமென துரத்தி  அடிப்பவர்களுக்காக வாழ்தலல் என்பது என்  புரிதல்.. இந்த உலகில் என் அன்பை என் ஆதரவை என் தேவையை  வேண்டியோராய் ஆயிரக்கணக்கானோர் உண்டு.  

மற்ற்வர்களுக்காக வாழ்வதில் திருப்தி என்பது அவ்வகையில் நான் மற்றவர்களுக்காக எத்தனை தூரம் வாழ்ந்தேன், அலைந்தேன்,  , என்பது என் மரணத்தின் பின் தெரியும். 

வாழும் காலத்தில் நான் எப்படி வாழ்ந்தேனோ பரிபூரணமய்ய் நிறைவாய் அடுத்தவருக்கான வாழ்ந்தேன் வாழ்கிகின்றேன் என்பது எல்லோருக்கும் நோட்டிஸ் அடித்து சொல்லி வாழ முடியாது. 

ஒருவருக்கு ஒருவன் முன்னேற்றத்துக்கு எதிரி அவன் வீட்டாரே தான் என எங்கள் பைபிள்” சொல்லி இருக்குப்பா.. என்னளவில் என் வீட்டாருக்கு செய்ய வேண்டியதை  என் அப்பா கேட்டதை விட அதிகமாய் கோடிக்கணக்கில் கொட்டி செய்தாச்சு.இனி அவர்களுக்காக வாழ வேண்டிய அவசியம் இல்லை. 



மன்னிச்சோம் என சொல்லி வேஷம் போடவும் வேண்டாம்.மறந்தோம் என சொல்லி மனதை அடக்கவும் வேண்டாம்.  நாம் நாமாக இருப்பது  தான் அனைத்துக்கும் நல்லது. 

இது வேசம் என்று நீங்கள் சொல்வதையே வேடிக்கையாக பார்க்கிறேன் காரணம் மன்னிப்பின் அவசியமும் மறதியின் முக்கியமும் உலக வழமையில் அர்த்தமற்றதாகிடும் நிச்சயமாக இது வேசமில்லை நீங்கள் உங்கள் நிலை கடந்து மறந்தும் மன்னித்தும் பாருங்கள் அதன் முக்கியம் புரியும் 

நிச்சயமாக வேசம் தான் ஹாசிம். என்னால் உங்களையே உதாரணமாக் சேனைப்பதிவுகளை வைத்து காட்ட முடியும்.  ஆனால் வேண்டாம். நீங்கள் கேட்டாலும் சொல்ல மாட்டேன்.   

நான் மறக்கவில்லை, மன்னிக்கவில்லை என்பது உங்களுக்கு நிச்சயமாய் தெரியுமா?  தெரியாத ஒன்றை எப்படி  நாம் பேச முடியும். 


நல்லவர்களுக்கு சாட்சிகள் இரண்டே இரண்டு தான். 
ஒன்று அவர்கள் மனட்சாட்சி, இன்னொன்று தெய்வத்தின் சாட்சி.  இந்த இரண்டுக்குமிடையில் வேறெந்த சாட்சியும் தேவையில்லையே!

மனசாட்சியானது மனிதனின் மனநிலையில் வெளிப்படுகின்ற சாட்சி அதனைத்தாண்டி எதிர்த்தரப்பின் சாட்சிகளையும் ஆராய்ந்து மனசாட்சியுடன் ஒப்பிட்டுப்பார்ப்பதுதான் தீர்வாகும். 

எதிர்த்தரப்பில் சாட்சியை ஆராய வில்லை என்பது  நிச்சயம் உங்களுக்கு தெரியுமா? 


நாம் தெய்வமாக முடியாது ! ஆனால் மனிதனாய் வாழ முடியும். மன்னித்து மறக்காது மனிதனாய் வாழலாம்.  

முடியாது மன்னிக்காமல் மறக்காமல் மனிதனாக வாழவே முடியாது உங்கள் வாழ்நாளில் அவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தினை சந்திக்கவே இல்லை என்று சொல்லுங்கள் நான் ஏற்றுக்கொள்கிறேன் மன்னிப்பும் மறதியும் மனத வாழ்வுடன் ஒன்றிப்பிணைந்த ஒன்று என்பதை உலகமே ஏற்றுக்கொண்ட உண்மை. 

இதை என்னிடம் சொல்ல முன் உங்களையும் நீங்கள் நிதானித்து பாருங்கள்”. மறந்தோமா? மன்னித்தோமா என புரியும்.!

 மன்னித்தால்  மீண்டும் அதைக்குறித்து சிந்திக்க மாட்டேன், பேச மாட்டேன் நினைக்க மாட்டேன் என்பவர்கள் யார்?

அதன் பின்னேதான் பயணிப்பேன் என்று நினைத்தாலே ஏற்படுத்தப்பட்ட மன்னிப்புக்கு அர்த்தமே இல்லை மன்னிப்பு என்பது ஒரு தீர்வு அல்லது முடிவு ஒரு விடயத்துக்கான மன்னிப்பு வழங்கப்பட்டுவிட்டால் அதை மீட்டிப்பார்க்க கூடாது என்னைப்பொறுத்தவரை நான் மன்னித்தால் மகிழ்வோடிருப்பேன் நன்றி 

உங்கள் கருத்திற்கான எதிர்க்கருத்தினை வாதமாக வைத்திருக்கிறேன் உங்களுக்கானதாக எடுத்துக்கொள்ளவேண்டாம்
ஆமோதிக்கிறேன் ஆமோதிக்கிறேன் ஆமோதிக்கிறேன்

எனக்கானதாய் எடுத்துக்கொண்டாலும் அதை குறித்து எனக்கு பிரச்சனை இல்லை ஹாசிம்.  என்னை  என் மன ஆழம் புரிந்தவர்கள் என் மன்னிப்பும், பொறுமையும், விட்டுக்கொடுப்பும், புரிதலும் எத்தகையது என புரிந்து கொள்வார்கள். 

என்னை மேலோட்டமாய் புரிந்து  வெளியரங்கமாய் என்னை குறித்து தீர்ப்பளிப்பதை குறித்து நான் எச்சூழலிலும் கலங்குவதில்லை. 

நாம் எத்தனை இலகுவாய் முடிவுகளை எடுத்து தீர்மானிக்கின்றோம். 

நான்  ஒரு முடிவெடுத்தால் அதை இறைவன் எனக்கிட்ட கட்டளைகளோடு பொருத்தி அது சரியா தவறா என எனை நின்று நிதானித்து பார்த்து  தான் முடிவெடுப்பேன்.  முடிவெடுத்த பின் வலமோ இடமோ  திரும்புவதில்லை. 

என் வாழ்க்கையில் நிரம்ப தடைகள் சங்கடங்கள் வந்தாலும் நான் மகிழ்ச்சியோடு தான் இருக்கின்றேன் , போய் படுக்கையில் விழுந்தால் என்னைபோல் நிம்மதியாய் தூங்குபவர் யாரும் இருக்க மாட்டார்கள். அத்த்னை  தெளிவு என்னுள் இருக்கும்.


Last edited by Nisha on Thu 4 Dec 2014 - 17:47; edited 1 time in total


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மறதி வேண்டும் மானிடா.......!! Empty Re: மறதி வேண்டும் மானிடா.......!!

Post by Nisha Thu 4 Dec 2014 - 17:17

நேசமுடன் ஹாசிம் wrote:விவாதமாக கருத்தினைக்கண்டதால்தான் விவதாமகியது 

விவாதத்திற்காக பதிவினை நான் ஏற்படுத்தவில்லை 

மார்க்கம் தழுவியதுதான் எமது வாழ்க்கை மார்க்கத்தினையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பது எனது கருத்து 
முக்கியமாக பானுவின் பதிலுக்காத்தான் அவருக்கான விளக்கமாக எழுதினேன் காரணம் அவர் நன்றாக அறிந்திருக்கின்ற விடயம் 

நிச்சயமாக மார்க்க தீர்ப்பாளிகள் மார்க்கத்தில் வாழ்கின்றவர்கள்தான் செய்கிறார்கள் அவ்வாறில்லாமல் தீர்ப்பும் தண்டனையும் நிறைவேற்றினால் நாளை மறுமையில் இறைவனின் பிடி பயங்கரமானதென அவர்களறிவார்கள் 

மன்னிப்பாளர்களெல்லாம் மகிழ்வோடிருக்கிறார்கள் என்பதும் மன்னிக்க மறுப்பவர்கள் அவர்களின் மனசாட்சியுடனேயே போர்செய்கிறார்கள் என்பதும் எதார்த்தமான விடயம் அடிமையாக ஒரு போதும் மாறமாட்டார்கள் அவ்வாறு மாறினாலும் அடுத்தவரின் அன்புக்கு அடிமையாவார்கள் அதில் தவறில்லை

மன்னிக்கவும் ஹாசிம்! உங்களுக்கு இருக்கும் அதே மார்க்க நம்பிக்கை தான் எனையோருக்கும் இருக்கும். அவர்களும் தம் மதம் சார்ந்த  மார்க்க அறிஞர்கள் பரிசுத்த வான்கள் தான். தீர்ப்பு வ்ழங்கும் அவர்கள் சுத்தவாளிகள் தான் எனத்தான் சொல்வார்கள். 

ஆனால் இவ்வுலகில் தாயின் கர்ப்பத்தில் பிறந்த எவருமே குற்றமற்றவராய் இல்லை என்பது தான் நிஜ்ம். 

மனசால் கூட தவறிழைக்காது வாழ்ந்தார்கள் என சொன்னால்... நம்மை நம ஏமாற்றிக்கொள்கின்றோம் என்பது மட்டும்  தான் உண்மை. 

 நாம் இதை இத்தோடு நிறுத்திக்கலாம். வ்டுங்கள்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மறதி வேண்டும் மானிடா.......!! Empty Re: மறதி வேண்டும் மானிடா.......!!

Post by Nisha Thu 4 Dec 2014 - 17:18

பாயிஸ் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
பானுஷபானா wrote:கவிதை அருமை ஹாசிம்

சாதாரணமான விசயத்தை  மறக்கலாம். சதா ரணம் உண்டாக்கிய விசயத்தை எப்படி மறக்க முடியும்.

நிஷா சொல்வது போல மன்னிக்கலாம். ஆனால் மன்னிப்பு வாங்கிய்யவர்கள் செய்த தவறை மறக்க முடியுமா.

அந்த மன்னிப்பு கூட தகுதியானவர்களுக்குத் தான் குடுக்க முடியும்.
நீங்கள் சொல்கின்ற தகுதியானவர்கள் என்று எப்படி அடையாளங்கண்டு கொள்வீர்கள் 

மார்க்கம் தெரிந்த நீங்களா இப்படி சொல்கிறீர்கள் 

ஒருவன் அனியாயமாக ஒருவரை கொலை செய்கிறான் கொலையானவர் எந்தப்பிழையும் செய்திருக்கவில்லை ஆதலால் கொலைக்கு கொலை செய்யச்சொல்கிறது இஸ்லாமிம் அதில் இன்னொரு மேன்மையை இஸ்லாம் கற்றுத்தந்திருக்கிறதே கொலையானவரின் உறவினர்கள் கொலை செய்தவரை மன்னித்தால் கொலைக் குற்றப்பரிகாரம் செய்துவிட்டு அவரை மன்னிக்கும் படி வலியுறுத்துகிறதே இதில் அவன் கொலை செய்துவிட்டான் அவனை கொலைதான் செய்யவேண்டும் அடம்பிடிப்பிங்களா மன்னிப்பிங்களா உங்களின் மன்னிப்பால் இன்னொரு உயிர்வாழ்கிறதே எந்தவொரு தவறுக்கும் பிரச்சினைக்கும் மறதி மன்னிப்பு என்று ஆராய்ந்து சென்று பாருங்கள் இறுதி முடிவு உங்களுக்கு மன்னித்துவிடு என்றுதான் வரும்
ஆமோதிக்கிறேன் ஆமோதிக்கிறேன்

இப்படி தலையாட்ட முன்  நீங்கள் சொன்ன ஒரு பதிவுக்கு   நான்  இட்ட பின்னூட்டத்துக்கு பதில் தரவில்லை என கருத்தில் வையுங்கள் பாயிஸ்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மறதி வேண்டும் மானிடா.......!! Empty Re: மறதி வேண்டும் மானிடா.......!!

Post by Muthumohamed Thu 4 Dec 2014 - 19:11

அருமையான பதிவு சில வேளைகளில் மறதி நல்லது தான்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

மறதி வேண்டும் மானிடா.......!! Empty Re: மறதி வேண்டும் மானிடா.......!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum