சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Today at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Today at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Today at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Today at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Today at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Today at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Yesterday at 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Yesterday at 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Yesterday at 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30

» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07

» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38

» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38

முன்னோர் வழங்கிய மூலிகை: நுணவு Khan11

முன்னோர் வழங்கிய மூலிகை: நுணவு

2 posters

Go down

முன்னோர் வழங்கிய மூலிகை: நுணவு Empty முன்னோர் வழங்கிய மூலிகை: நுணவு

Post by ahmad78 Mon 16 Mar 2015 - 14:48

முன்னோர் வழங்கிய மூலிகை: நுணவு Ht3360


மூலிகை என்பது காடுகளிலும் மலைகளிலும் மட்டுமே கிடைக்க கூடியது என நினைக்கின்றனர். சாதாரணமாக நமது வீட்டு தோட்டத்திலும் வேலி ஓரங்களிலும் வளர்ந்து கிடக்கும் எண்ணற்ற தாவரங்கள் மூலிகையாக இருந்து நமது உடலை நோயில்லாமல் காத்து வருவது நம்மில் பலருக்கு தெரிவதில்லை. நுணவு எங்கும் நாம் பார்க்கூடிய ஒரு மூலிகை வகை தாவரம். செடியாகவும் மரமாகவும் பல்வேறு நிலப்பகுதியில் வளரக்கூடியது. எதிரடுக்கில் அமைந்த இலைகள். நாற்கோணத்தில் அமைந்துள்ள சிறு கிளைகளில் வெள்ளை நிற பூக்கள் கருப்பு நிற பழத்தையும் கொண்டது. சில இடங்களில் வெண்மை நிற பழங்கள் கொண்ட மரங்களும் உண்டு. மரத்தின் உட்புறம் மஞ்சள் நிறத்தில் இருப்பதால் மஞ்சணத்தி எனப்பெயர் பெற்றது.
இதன் துளிர் இலை, பகுப்பு, காய், பட்டை, வேர் ஆகியவை மருத்துவ பயன் கொண்டவையாகும்.

நமது உள்ளுறுப்புகளில் மிகவும் முக்கியமான கல்லீரல், மண்ணீரல் பாதிக்கப்பட்டால் அதை தீர்க்க தனிப்பட்ட சிறப்பு மருத்துவம் உண்டு. காவி அணிந்து விரதம் இருந்தால் சரியாகி விடும் என்பார்கள். அந்த காவியுடைக்கு தயாரிக்க மஞ்சணத்தியின் பட்டையை சுடு நீரில் போட்டு அதில் வெள்ளை பருத்தி ஆடையை துவைத்து எடுத்தால் காவியுடை தயாராகி விடும். இந்த ஆடையை அணிந்திருக்கும் போது அவர்களது மூச்சு குழல் வழியாக மருத்துவ காற்று சென்று இந்த நோய்களை குணப்படுத்தும். இதன் பழத்தை எந்த வயதுடையவர்களும் உண்ணலாம். வாயுத்தொல்லையால் அவதிபடுவார்கள் தொடர்ந்து இந்த பழத்தை உண்டால் மாற்றம் ஏற்படும்.

கைக்குழந்தைகளுக்கு தலை குளித்தவுடன் நொச்சி, வெற்றிலை, ஆடாதொடை ஆகியவற்றுடன் இதன் கொழுந்தை மசிய அரைத்து வெந்நீரில் கொடுப்பது இன்றும் வழக்கத்தில் உள்ளது. இதனால் குழந்தைகளுக்கு சுக பேதி உண்டாகி மலக்கட்டு, வாயு இல்லாமல் குழந்தைகள் ஆரோக்கியமாக வளருவார்கள். சளி தொல்லையும் இருக்காது. இது சிறிது உஷ்ணத்தை ஏற்படுத்தக்கூடியது. எனவே அளவோடு பயன்படுத்த வேண்டும். இடுப்பு வலியை போக்க நுணவு இலையை மைய அரைத்து பற்றுபோட்டால் குணமாகும். இதை அடிக்கடி சிரங்கு பிடிக்கும் சிறுவர்களுக்கு சிரங்கில் தடவிவர சிரங்கு ஆறும்.

நுணவு இலைச்சாறு ஒரு பங்கும், உத்தாமணி, நொச்சி, பொடுதலை ஆகியவற்றின் சாறு சமமாக எடுத்து கலந்து அதில் ஒரு பங்கும் கலந்து ஆறு மாத குழந்தைக்கு 50 சொட்டும், 1 முதல் 2 வரை வயதுடைய குழந்தைகளுக்கு 15 மிலி அளவும், 3 வயதுக்கு மேல் 30 மில்லியும் மூன்று வேளை கொடுத்து வந்தால் அனைத்து மாந்தமும் தீரும். நுணவு இலை, நல்லெண்ணெய் ஒரே எடை எடுத்து அதை நன்கு காய்ச்சி அந்த கற்கத்தை உள்ளுக்குள் கொடுத்து, எண்ணெய்யை வெளியிலும் பூசி வர வெண்புள்ளி நீங்கும்.

நுணவுக்காய், உப்பு சம அளவு எடுத்து ஒரு குடுவைக்குள் வைத்து சீலை மண் செய்து 1 வரட்டியில் புடம் போட்டு கிடைக்கும் சாம்பலில் பல் துலக்கி வர சொத்தை பல், பல்லரணை நீங்கும். நுணவு தயிர் இலைகள், பழுப்பு இலை சம அளவு எடுத்து அதில் 35 கிராம் காட்டு சீரகத்தை கலந்து உரித்த தேங்காய் அளவு தயார் செய்து அந்த கலவையை ஒரு லிட்டர் நல்லெண்ணெயில் கலந்து சிறு தீயில் காய்ச்சி மெழுகு பதம் வந்தவுடன் எண்ணெய்யை பிழிந்து எடுத்து விட்டு மெழுகை சுண்டக்காய் அளவு உருட்டி வைத்து கொண்டு காலை மாலை பாலுடன் சாப்பிட்டு வந்தால் வயிற்று கோளாறுகள் அனைத்தும் நீங்கும்.


வயிற்று கோளாறு, மாந்தம், மேகம், சளித்தொல்லையால் ஏற்படும் கபசுரம் ஆகியவற்றுக்கு இதன் இலை சாற்றை உள்ளுக்கு கொடுப்பார்கள். கழலை, அரையாப்பு கட்டிகளை கரைத்தல். அடிப்பட்ட வீக்கம், வாதத்தால் ஏற்படும் வீக்கங்களை போக்குவதற்கு பற்று போடுவார்கள். இத்தகையை சிறப்பு குணங்களை கொண்டதாக விளங்க கூடிய மூலிகையான நுணவு எதுதெரியுமா? வேலியெங்கும் காட்சியளிக்கும் நுணாதான். இதில் கருப்பு மற்றும் வெள்ளை என்று இரண்டு வகைகள் உண்டு. பதப்படுத்தப்பட்ட வெள்ளை நுணா சாற்றைதான் நோனி என்ற பெயரில் ஆயிரக்கணக்கான பணத்தை கொடுத்து வாங்குகிறோம். கடவுள் கொடுத்தது கண் முன் இருக்க பணத்தை வீணாக்கி கண்டதை தேடி ஓடுகின்றோம். அதை விடுத்து முன்னோர்கள் நமக்கு காட்டிய வழியில் நுணாவை பயன்படுத்தி வாழ்வில் நலம் பெறுவோம்.

http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=3370


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

முன்னோர் வழங்கிய மூலிகை: நுணவு Empty Re: முன்னோர் வழங்கிய மூலிகை: நுணவு

Post by நண்பன் Mon 16 Mar 2015 - 16:39

பல ஆண்டுகளாக காணக்கிடைக்கும் ஒரு தாவரம் இது இன்றுதான் இதன் பயன்கள் பற்றி அறிய முடிந்தது நாங்கள் இந்த தாவரத்திற்கு மஞ்சணா மரம் என்றுதான் சொல்லுவோம் 


இதன் அருமை பெருமை அறியத்தந்த தோழருக்கு நன்றிகள் பல


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum