Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவைby rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07
» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38
» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38
மனசின் பக்கம் : கொஞ்சமாய் பேசி... நிறைய வாழ்த்துவோம்
2 posters
Page 1 of 1
மனசின் பக்கம் : கொஞ்சமாய் பேசி... நிறைய வாழ்த்துவோம்
வணக்கம் உறவுகளே...!
ஆரம்பத்திலேயே சொல்லிக் கொள்கிறேன்... அலுவலகத்தில் கொஞ்சம் வேலை அதிகம்... அதனால் உங்கள் பதிவுகளை எல்லாம் இன்றில்லாவிட்டாலும் நாளை என்ற நிலையில் வாசித்து விடுகிறேன். ஆனால் கருத்து இடுவது ரொம்ப குறைந்து விட்டது. காரணம் அலுவலகத்தில் இருந்து வந்து சமைத்துச் சாப்பிட்டு பெரும்பாலும் இரவு பத்து மணிக்கு மேல் படுத்துக் கொண்டே வாசிப்பதாலும் மற்றவர்கள் உறங்கும் காரணத்தால் லைட் ஆப் செய்து விடுவதால் கருத்து இடுவதில் சிரமமாகி விடுகிறது. மற்றபடி உங்கள் பதிவுகளை எல்லாம் தொடர்ந்து வாசித்துக் கொண்டுதான் இருக்கிறேன். வார விடுமுறையில் கண்டிப்பாக வாசிக்கும் பதிவுகளுக்கு கருத்து இட்டுவிடுவேன். கொஞ்ச நாள்தான்... பின்னர் எல்லாம் சரியாகும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
நகைச்சுவையில் வைகைப்புயல் வடிவேலு களத்தில் இல்லாததால் விஜயகாந்தை வைத்து பெரிய காமெடி தர்பாரே முகநூலில் நடக்கிறது. இது அம்மாவுக்காக சிலர் செய்யும் செயல் என்று கூட என் நண்பர் என்னிடம் வாதிட்டார். விஜயகாந்த் நின்றால்... உக்கார்ந்தால்... சிரித்தால்... முறைத்தால்... என எல்லாமே நகைச்சுவையாகிறது. ஒரு மனிதரை கேலி பண்ணும் சுதந்திரம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் இதே ஜெயலலிதாவை எதிர்த்து சட்டசபைக்குள் குரல் கொடுத்த ஒரே ஆம்பளை விஜயகாந்த்தான்.... தன்னால் முடிந்த நல்ல செயல்களை செய்பவரும் விஜயகாந்த்தான்... தான் செய்ததை வெளியில் சொல்லாதவரும் அவர்தான்... ஆனால் சமீபகாலமாக தனது கட்சிக்கான முகநூல் பக்கத்தில் அவருக்காக தமிழில் டைப் செய்யும் நபர், விஜயகாந்த் செய்த செயல்களைப் பதியும் போது நான் இன்று இவருக்கு இவ்வளவு கொடுத்தேன் என்று எழுதி வைக்கிறார். இங்கே நான் என்பது விஜயகாந்தைக் குறிக்கும்... ஒரு கை செய்வது மற்றொரு கைக்கு தெரியக் கூடாதுன்னு சொல்லுவாங்க.... ஆனால் இங்கு 'நான்...' 'நான்...' என்ற பெருமையே தலை தூக்கி நிற்கிறது. அதை மாற்றினால் நல்லது. சரி விஷயத்துக்கு வருவோம். விஜயகாந்த் அரசியலில் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். தனி மனிதராப் பாருங்கள்.... எதற்காக அவர் மீது அப்படி ஒரு வன்மம்... விஜயகாந்த் பிறந்தநாள் அன்று ஒரு பெரிய கட்டுரை எழுதலாம் என்று நினைத்து வேலைச் சோர்வினால் முடியாமல் போக இங்கு ஒரு பாராவிற்குள் சுருக்கியிருக்கிறேன். என்னடா இவன் விஜயகாந்துக்கு சொம்பு தூக்குறானேன்னு நினைக்காதீங்க... அரசியல்வாதியாய் நான் விஜயகாந்தைப் பார்க்கவில்லை... காரணம் இக்கரைக்கு அக்கரைப் பச்சை என்று நினைத்தாலும் அங்கும் மாமன் மச்சான்தானே இருக்கானுங்க.... சரி விடுங்க... கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்த ஒரு நடிகனாய்... நல்ல மனிதனாய்... எனக்குப் பிடிக்கும்... அவருக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
ஆரஞ்சு மிட்டாய் படம் பார்த்தேன்.... ஒரு நல்ல நடிகராய் விஜய் சேதுபதியைப் பிடிக்கும். குறைந்த செலவில் தானே படத்தை எடுத்து பாடல்களும் பாடி வெளியிட்டிருக்கிறார். ஆனால் அழுத்தமில்லாத கதையோட்டமும்.... உப்புச்சப்பில்லாத பாத்திரப் படைப்புக்களும் படத்தை பார்க்கும் போது நமக்கு ஒரு அயற்சியை ஏற்படுத்துவதைத் தவிர்க்க முடியவில்லை. மேலும் வளர்ந்து வரும் போது நல்ல பாத்திரங்களை எடுத்து செய்ய நினைப்போர் மத்தியில் இரண்டு கதாநாயகர்கள் கதை... இது போன்ற வீணாப்போன கதைகளை எடுத்து நடிப்பதைவிட அவரது திறமையை வெளிப்படுத்தும் விதமான கதாபாத்திரங்களில் நடித்தால் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்த இடத்தை தக்கவைத்துக் கொள்ளலாம். இல்லையேல் அடுத்த சூப்பர் ஸ்டார் நாங்கள்தான் என சிவகார்த்திகேயர்கள் அவரைப் பின்னுக்குத் தள்ளிவிடுவார்கள் என்பது சர்வ நிச்சயம். மாற்றங்கள் செய்து மீண்டும் மலர்வாரா பார்ப்போம்.
அம்மா அம்மான்னு நம்ம டவுசர் ராஜன் மதுரையில கூவியிருக்காரு கூவு எப்பா நம்மளாலே பாக்க முடியலை... எல்லாருக்கும் ஒரு அம்மா... ஆனா தமிழகத்துல இருக்க ஆறுகோடி மக்களுக்கும் அம்மாவாம் மக்கள் முதல்வர்.... அப்துல்கலாம் அவர்களின் இறுதி அஞ்சலிக்குக் கூட போகாத அம்மா ஒருவாரம் அரசு அலுவல்களை எல்லாம் அஞ்சலிக்காக நிறுத்திவைத்தாராம்... சசிபெருமாள் ஐயா, டிராபிக் இராமசாமி ஐயா, இளங்கோவன், விஜயகாந்த், குஷ்பு என எல்லாரையும் கேவலமாகப் பேசுகிறார். கொடுத்த காசுக்கு நல்லா கூவியிருக்காரு.. ஆனா சினிமாவில் அம்மாவுக்கு நல்ல பிள்ளையாக... அம்மாவுக்காக ஒரு தனிப் பாடல் என நடித்தவர் இன்று கேடுகெட்ட அரசியலுக்காக அம்மாவைப் புகழ்கிறார். ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் வெள்ளிவிழா நாயகன்... பல அம்மாக்களின் மனம் கவர்ந்த நாயகன்... இவ்வளவு கேவலமாக... எல்லாம் அரசியல்... இதை வேற அம்மா புகழ் பாடும் தினமலர் 'மதுரையில் ராமராஜன் டமால் டுமீல்' அப்படின்னு போட்டு விடியோ பதிவேற்றம் செய்து வைத்திருக்கிறார்கள். என்ன டமால் டூமீலு.... இவனுக கலாம் ஐயா செத்தப்பவே 'காலமானார் கலாம்' அப்படின்னு போட்டவனுங்கதானே.... என்ன இருந்தாலும் எனக்கு கிராமத்து ராஜாவான ராமராஜனை ரொம்பப் பிடிக்கும். இப்ப இல்லைங்க நாயகனாய் ஜொலித்த காலத்தில்.... அதே மாதிரி அம்மாவையும் ரொம்பப் பிடிக்கும்... ஆமா என்னைப் பெற்ற அம்மாவையும்... என்னை மகனாகப் பார்த்த அம்மாக்களையும்...
வேரும் விழுதுகளும் தொடர்கதையை 33 அத்தியாயங்களோடு முடித்து விட்டேன். இன்னும் இழுக்கலாம்... கலையாத கனவுகள் போல் நீண்டு கொண்டே போய்விடுமோ என்பதால் சரியான சமயத்தில் முடித்தேன். முதல் தொடருக்கு இந்தளவுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இந்தக் கதையை பேராசியர்களும். பெருந்தகைகளும், அம்மாக்களும் அக்காள் தங்கைகளும், அண்ணன் தம்பிகளும், தோழர் தோழிகளும் வாசித்து கருத்துச் சொல்லியிருந்தது எனக்கு மிகுந்த சந்தோஷத்தைக் கொடுத்தது. இந்தக் கதையை புத்தகமாக கொண்டு வரும் எண்ணம் இருக்கிறது. எனது நலம் விரும்பும் அண்ணன் ஒருவர் வாசித்துச் சொல்கிறேன் என்று சொல்லியிருக்கிறார். பார்க்கலாம்... அவரின் மனதை எனது கதை கவர்ந்தால் புத்தகம் ஆக்கும் எண்ணத்தை பூர்த்தி செய்யலாம். பார்ப்போம்... சகோதரி மேனகா அவர்கள் க்ரைம் தொடர் எழுதுங்கள் என வற்புறுத்திக் கொண்டே இருக்கிறார். சரி ஒரு குறுநாவல் எழுதலாம் என்று யோசித்தால் கொலை செய்யவே வரமாட்டேங்குது... :( எப்படி சஸ்பென்ஸாக் கதை எழுதுறது... ரொம்பக் கஷ்டம்... இப்போதைக்கு தொடர் ஆரம்பிக்கும் எண்ணம் இல்லை... பார்க்கலாம். சொல்ல மறந்துட்டேனே... என்னை ஊக்கப்படுத்தி உற்சாகமூட்டிய அனைவருக்கும் நன்றி.
கல்கி சிறுகதைப் போட்டிக்கு குறுநாவல் எழுத எண்ணம்.... ஆனால் இன்னும் ஒன்றும் தோன்றவில்லை... எதாவது வித்தியாசமான கரு தோன்றினால் நானும் போட்டியில் கலந்து கொள்வேன். நீங்களும் எழுதுங்கள் நண்பர்களே...
என்னைச் சகோதரனாகப் பாவிக்கும் சகோதரிகளில் 'தம்பி எப்படியிருக்கே?' என்று விசாரித்துக் கொண்டே இருக்கும் காயத்ரி அக்காவைப் போல் சேனைத் தமிழ் உலா என்ற இணையப் பக்கத்தின் மூலமாக எனக்கு அறிமுகமாகி... (அவருக்கு என்னை அதற்கு முன்னே எனது எழுத்துக்கள் மூலமாகத் தெரியும் என்பதை பின்னர்தான் சொன்னார்) இன்று இரவு பத்து, பதினோரு மணிக்கெல்லாம் முகநூலில் இருந்தால் 'தம்பி என்ன பண்ணுறே...? மருமக்கள் நலமா?' என இலங்கைத் தமிழில் டைப்பும் அன்பு அக்கா நிஷா அவர்களுக்கு இரண்டு தினங்களுக்கு முன் திருமண நாள்... திருமண நாளுக்கு முன்னர் அக்காவுக்கு கையில் சிறிய காயம்... காயம் குணமாகியிருக்கும் என்று நினைக்கிறேன். அக்காவின் திருமண நாளுக்கு... இந்தச் சந்தோஷம் என்றும் தொடரட்டும் என வாழ்த்துவோம்
நண்பர் ஆவியின் தலைவாரி பூச்சூடி என்ற குறும்படத்தைப் பற்றி தில்லையகத்து துளசி சார் தனது பதிவில் சொல்லியிருந்தார். உடனே அதிகாலை முதல் வேலையாக படத்தைப் பார்த்தேன். அஞ்சரை நிமிடங்கள் ஓடும் படம். இருவரை வைத்து எடுத்திருக்கிறார். மிக நல்லதொரு கருத்து அதுக்கு ஆவிக்கு ஒரு சபாஷ். அம்மாவாக வரும் சகோதரி அனன்யா மகாதேவன் சிறப்பா செய்திருக்கிறார்கள். பேசுவதற்கு முன்னரே வரும் ஆங்கில சப்டைட்டில்... மொபைலை கையில் எடுத்த பின்னரே ரிங்க் ஆவது... பின்னணி இசையும் இன்னும் சரிபார்த்திருக்கலாம்.... என்ற எண்ணங்களை எனக்குள் விதைத்தது. என்னடா இவன் குறை சொல்றானேன்னு நினைக்காதீங்க... குறை அல்ல... ஒரு நல்ல கரு... அழகான படப்படிப்பு... எல்லாம் இருந்தும் இதுபோன்ற சின்ன விஷயங்கள் கொஞ்சமாய் சொதப்பிவிடுகின்றன... எனக்குப் பிடிச்சிருக்கு... நீங்களும் பாருங்கள்.
கொஞ்சம் ரிலாக்ஸாக ஒரு பாட்டுக் கேட்கலாம்... எவ்வளவு அருமையா இருக்கு பாருங்க...
மனசின் பக்கம் மீண்டும் மலரும்...
-'பரிவை' சே.குமார்.
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: மனசின் பக்கம் : கொஞ்சமாய் பேசி... நிறைய வாழ்த்துவோம்
அம்மாடியோவ்! ஒரு வார நினைப்பும் வெளிவந்து விட்டது போல!
வேலைப்பழு... நல்லதே நடக்கணும்.
விஜயகாந்த்.. நானும் அவரின் நல்ல மனதும் செய்கைகளும், அஞ்சாத குணம் குறித்தும் அறிந்திருக்கின்றேன். விஜயகாந்த் என்றாலே சின்னக்கவுண்டர் போலவும் தட்டிக்கேட்கும் போலிஸ் அதிகாரி போலவும் தான் நினைவுக்கு வருவார்கள். அது அந்தக்காலம். இப்ப அவரையே நகைச்சுவை நாயகனாக்கி சிவந்த கண்ணும் நாக்கை நீட்டி பல்லை கடித்து விரலாய் எச்சரிப்பதும் தான் நினைவுக்கு வருகின்றது. ஒரு மனிதனை அரசியல் எத்தனை சாக்கடையாக்கும் என்பதற்கு விஜயகாந்த் நல்ல உதாரணம்.
வேரும் விழுதுகளும் படித்து விட்ட்டேன். பின்னூட்டம் இடல்ல. இடணும். கொஞ்சம் நீண்ட பின்னூட்டமாய் இடணும் பார்ப்போம் கை சரியாகட்டும்.
சினிமாப்படம் குறித்து நோகாமெட்ன்ஸ்.
அம்மா ... அம்மம்மா தாங்க முடியல்லம்மா! ராமராஜனுக்கு வேற வேலை இல்லை. என்ன இருந்தாலும் அப்துல்கலாம் மறைவுக்கு செல்லாதது ஜெ .ஜெ வுக்கு ஒரு கறுப்பு முத்திரை தான்.
சிறுகதை போட்டிக்கு எழுதுங்க.. எழுதுங்க வெல்லுங்க வெல்லுங்க..
கிரைம் கதை எனில் கொலையாய் இருக்கணுமா. கொள்ளையாயும் இருக்கலாமே.. கிராமியச்சூழலில் ஒரு கோயில் கொள்ளை. அட அதான் நம்மூரில் கோயில் அம்மன் சிலையை வெளினாட்டுக்கு கடத்த திட்டம். அதை நம்ம குமாரு சார் டிகெக்டிவ் போட்டு கண்டு பிடிக்கின்றார். அதுக்கு உதவியாளர் நிஷாக்கா.. ஹாஹா! என்னப்பா எல்லா கிரைம் எழுத்தாளரகளும் டிகெட்டிவ்வில் வேலை செய்யும் அசிஸ்டென்னை சின்ன பெண்ணா அவனுக்கு தோழியா, அல்லது காதலியா தான் போடுகின்றார்கள். நீங்க தான் கிராமிய ரசிகராச்சே!கொஞ்சூண்டு மாத்திருங்க!.... ஹேஹே! நம்ம குமாருக்கு அசிஸ்டெண்ட அவங்க அக்கா ... அதும் சுவிஸ் சிட்டிசன் இருந்தால் அது பெருமை தானே.. இது எப்பூடி இருக்கு?
வேலைப்பழு... நல்லதே நடக்கணும்.
விஜயகாந்த்.. நானும் அவரின் நல்ல மனதும் செய்கைகளும், அஞ்சாத குணம் குறித்தும் அறிந்திருக்கின்றேன். விஜயகாந்த் என்றாலே சின்னக்கவுண்டர் போலவும் தட்டிக்கேட்கும் போலிஸ் அதிகாரி போலவும் தான் நினைவுக்கு வருவார்கள். அது அந்தக்காலம். இப்ப அவரையே நகைச்சுவை நாயகனாக்கி சிவந்த கண்ணும் நாக்கை நீட்டி பல்லை கடித்து விரலாய் எச்சரிப்பதும் தான் நினைவுக்கு வருகின்றது. ஒரு மனிதனை அரசியல் எத்தனை சாக்கடையாக்கும் என்பதற்கு விஜயகாந்த் நல்ல உதாரணம்.
வேரும் விழுதுகளும் படித்து விட்ட்டேன். பின்னூட்டம் இடல்ல. இடணும். கொஞ்சம் நீண்ட பின்னூட்டமாய் இடணும் பார்ப்போம் கை சரியாகட்டும்.
சினிமாப்படம் குறித்து நோகாமெட்ன்ஸ்.
அம்மா ... அம்மம்மா தாங்க முடியல்லம்மா! ராமராஜனுக்கு வேற வேலை இல்லை. என்ன இருந்தாலும் அப்துல்கலாம் மறைவுக்கு செல்லாதது ஜெ .ஜெ வுக்கு ஒரு கறுப்பு முத்திரை தான்.
சிறுகதை போட்டிக்கு எழுதுங்க.. எழுதுங்க வெல்லுங்க வெல்லுங்க..
கிரைம் கதை எனில் கொலையாய் இருக்கணுமா. கொள்ளையாயும் இருக்கலாமே.. கிராமியச்சூழலில் ஒரு கோயில் கொள்ளை. அட அதான் நம்மூரில் கோயில் அம்மன் சிலையை வெளினாட்டுக்கு கடத்த திட்டம். அதை நம்ம குமாரு சார் டிகெக்டிவ் போட்டு கண்டு பிடிக்கின்றார். அதுக்கு உதவியாளர் நிஷாக்கா.. ஹாஹா! என்னப்பா எல்லா கிரைம் எழுத்தாளரகளும் டிகெட்டிவ்வில் வேலை செய்யும் அசிஸ்டென்னை சின்ன பெண்ணா அவனுக்கு தோழியா, அல்லது காதலியா தான் போடுகின்றார்கள். நீங்க தான் கிராமிய ரசிகராச்சே!கொஞ்சூண்டு மாத்திருங்க!.... ஹேஹே! நம்ம குமாருக்கு அசிஸ்டெண்ட அவங்க அக்கா ... அதும் சுவிஸ் சிட்டிசன் இருந்தால் அது பெருமை தானே.. இது எப்பூடி இருக்கு?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மனசின் பக்கம் : கொஞ்சமாய் பேசி... நிறைய வாழ்த்துவோம்
என்னைச் சகோதரனாகப் பாவிக்கும் சகோதரிகளில் 'தம்பி எப்படியிருக்கே?' என்று விசாரித்துக் கொண்டே இருக்கும் காயத்ரி அக்காவைப் போல் சேனைத் தமிழ் உலா என்ற இணையப் பக்கத்தின் மூலமாக எனக்கு அறிமுகமாகி... (அவருக்கு என்னை அதற்கு முன்னே எனது எழுத்துக்கள் மூலமாகத் தெரியும் என்பதை பின்னர்தான் சொன்னார்) இன்று இரவு பத்து, பதினோரு மணிக்கெல்லாம் முகநூலில் இருந்தால் 'தம்பி என்ன பண்ணுறே...? மருமக்கள் நலமா?' என இலங்கைத் தமிழில் டைப்பும் அன்பு அக்கா நிஷா அவர்களுக்கு இரண்டு தினங்களுக்கு முன் திருமண நாள்... திருமண நாளுக்கு முன்னர் அக்காவுக்கு கையில் சிறிய காயம்... காயம் குணமாகியிருக்கும் என்று நினைக்கிறேன். அக்காவின் திருமண நாளுக்கு... இந்தச் சந்தோஷம் என்றும் தொடரட்டும் என வாழ்த்துவோம்
இது தான் நிறைந்த வாழ்த்து!
ம்ம்ம் அடுத்த வருடம் இருபதாவது திருமண வருடம். என்னவருக்கு ஐம்பதாவது வயதும், மகனுக்கு 18ம், மகளுக்கும் 15 மாக ஒரே வருடத்தில் சேர்ந்து வருவதால் யூன் முதல் சனிக்கிழமை சின்னதாக கொண்டாடலாமான்னு முடிவு.
வரக்கூடிய சூழல் இருந்தால் அனைவரும் வருக!
கை இன்னும் குணமாகல்ல.. இன்னும் ஒரு வாரம் அப்புறம் தையல் பிரித்ததும் தான் தெரியும். கொஞ்சூண்டு சிரமப்பட்டுத்தான் தட்டிச்சினேன்.
அதென்னமோப்பா.. என்னை நீங்கள் இலங்கைதமிழ் பேசுறேன்னு சொல்றிங்க.. இலங்கையை சேர்ந்தவங்க இந்தியத்தமிழ் பேசுறேன்னு சொல்கின்றார்கள். மொத்தத்தில் நான் எந்த ஊர் தமிழை பேசுறேன் என்பது ஆராய்ந்து கண்டு பிடிக்கும் படி இருக்கு!@ ஏதோ தமிழில் பேசுகின்றேனே.. அதுவே போதும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மனசின் பக்கம் : கொஞ்சமாய் பேசி... நிறைய வாழ்த்துவோம்
Nisha wrote:என்னைச் சகோதரனாகப் பாவிக்கும் சகோதரிகளில் 'தம்பி எப்படியிருக்கே?' என்று விசாரித்துக் கொண்டே இருக்கும் காயத்ரி அக்காவைப் போல் சேனைத் தமிழ் உலா என்ற இணையப் பக்கத்தின் மூலமாக எனக்கு அறிமுகமாகி... (அவருக்கு என்னை அதற்கு முன்னே எனது எழுத்துக்கள் மூலமாகத் தெரியும் என்பதை பின்னர்தான் சொன்னார்) இன்று இரவு பத்து, பதினோரு மணிக்கெல்லாம் முகநூலில் இருந்தால் 'தம்பி என்ன பண்ணுறே...? மருமக்கள் நலமா?' என இலங்கைத் தமிழில் டைப்பும் அன்பு அக்கா நிஷா அவர்களுக்கு இரண்டு தினங்களுக்கு முன் திருமண நாள்... திருமண நாளுக்கு முன்னர் அக்காவுக்கு கையில் சிறிய காயம்... காயம் குணமாகியிருக்கும் என்று நினைக்கிறேன். அக்காவின் திருமண நாளுக்கு... இந்தச் சந்தோஷம் என்றும் தொடரட்டும் என வாழ்த்துவோம்
இது தான் நிறைந்த வாழ்த்து!
ம்ம்ம் அடுத்த வருடம் இருபதாவது திருமண வருடம். என்னவருக்கு ஐம்பதாவது வயதும், மகனுக்கு 18ம், மகளுக்கும் 15 மாக ஒரே வருடத்தில் சேர்ந்து வருவதால் யூன் முதல் சனிக்கிழமை சின்னதாக கொண்டாடலாமான்னு முடிவு.
வரக்கூடிய சூழல் இருந்தால் அனைவரும் வருக!
கை இன்னும் குணமாகல்ல.. இன்னும் ஒரு வாரம் அப்புறம் தையல் பிரித்ததும் தான் தெரியும். கொஞ்சூண்டு சிரமப்பட்டுத்தான் தட்டிச்சினேன்.
அதென்னமோப்பா.. என்னை நீங்கள் இலங்கைதமிழ் பேசுறேன்னு சொல்றிங்க.. இலங்கையை சேர்ந்தவங்க இந்தியத்தமிழ் பேசுறேன்னு சொல்கின்றார்கள். மொத்தத்தில் நான் எந்த ஊர் தமிழை பேசுறேன் என்பது ஆராய்ந்து கண்டு பிடிக்கும் படி இருக்கு!@ ஏதோ தமிழில் பேசுகின்றேனே.. அதுவே போதும்.
கருத்துக்கு நன்றி அக்கா...
கையைப் பார்த்துக் கொள்ளுங்கள்...
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: மனசின் பக்கம் : கொஞ்சமாய் பேசி... நிறைய வாழ்த்துவோம்
எப்போதும் கடைசியில் இருக்கும் பின்னூட்டத்தினை மட்டும் படித்து நன்றி சொல்லாமல் உங்கள் பதிவின் தொடர்ச்சியாய் வரும் அனைத்து பின்னூட்டங்களையும் ஒரு முறை கவனியுங்கள் குமார்.
உங்கள் வேலைப்பழுவில் கடினம் தான் எனினும் மேலிருந்து கீழே நன்றி சொல்லி வருவது எந்த பின்னூட்டமும் விடுபடாமல் நன்றி சொல்ல வசதி என்பதோடு.. இன்னாருக்கு நன்றி சொல்லி விட்டு என்னுடைய பின்னூட்டம் கண்டுக்கல்ல எனும் சங்கடம் வராமலும் காப்பாத்தும்.
ஏற்கனவே சில பதிவில் இம்மாதிரி விடுபட்டிருக்கின்றது. நன்றி சொல்லாமல் விட்டாலும் பரவாயில்லை. ஒரு பதிவின் மேலிருப்பதை தவிர்த்து கடைசி பின்னூட்டத்திற்கு மட்டும் நன்றி சொன்னால் சரியா?
உங்கள் வேலைப்பழுவில் கடினம் தான் எனினும் மேலிருந்து கீழே நன்றி சொல்லி வருவது எந்த பின்னூட்டமும் விடுபடாமல் நன்றி சொல்ல வசதி என்பதோடு.. இன்னாருக்கு நன்றி சொல்லி விட்டு என்னுடைய பின்னூட்டம் கண்டுக்கல்ல எனும் சங்கடம் வராமலும் காப்பாத்தும்.
ஏற்கனவே சில பதிவில் இம்மாதிரி விடுபட்டிருக்கின்றது. நன்றி சொல்லாமல் விட்டாலும் பரவாயில்லை. ஒரு பதிவின் மேலிருப்பதை தவிர்த்து கடைசி பின்னூட்டத்திற்கு மட்டும் நன்றி சொன்னால் சரியா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மனசின் பக்கம் : கொஞ்சமாய் பேசி... நிறைய வாழ்த்துவோம்
சரி அக்கா...
இனி கவனிக்கிறேன். பெரும்பாலும் சொல்லிவிடுவேன். சில பதிவுகளில் மொத்தமாக.
இங்கு தங்கள் முதல் கருத்து மனசு தளத்திலும் இருப்பதால் அங்கு சொல்லிக் கொள்ளலாம் எனத்தான் விட்டேன்.... ஆனால் படித்துவிட்டேன்.
இனி கவனிக்கிறேன். பெரும்பாலும் சொல்லிவிடுவேன். சில பதிவுகளில் மொத்தமாக.
இங்கு தங்கள் முதல் கருத்து மனசு தளத்திலும் இருப்பதால் அங்கு சொல்லிக் கொள்ளலாம் எனத்தான் விட்டேன்.... ஆனால் படித்துவிட்டேன்.
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: மனசின் பக்கம் : கொஞ்சமாய் பேசி... நிறைய வாழ்த்துவோம்
நல்லது குமார். நன்றி
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Similar topics
» மனசின் பக்கம் : ஊரையெல்லாம்...
» மனசின் பக்கம் : கொஞ்சமே கொஞ்சமாய்...
» மனசின் பக்கம் : கொஞ்சமல்ல நிறைய பிஸி...
» மனசின் பக்கம் : படைப்புக்கள்
» மனசின் பக்கம் : இனியவை சில...
» மனசின் பக்கம் : கொஞ்சமே கொஞ்சமாய்...
» மனசின் பக்கம் : கொஞ்சமல்ல நிறைய பிஸி...
» மனசின் பக்கம் : படைப்புக்கள்
» மனசின் பக்கம் : இனியவை சில...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|