Latest topics
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!by rammalar Today at 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:56
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42
» தீக்குளியல் & சந்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32
» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35
» nisc
by rammalar Yesterday at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09
» மருந்து
by rammalar Yesterday at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
சுற்றுபுறசுழல்- பல தளங்களின் தொகுப்பு
Page 1 of 1
சுற்றுபுறசுழல்- பல தளங்களின் தொகுப்பு
அழகான போன்சாய் மரங்கள் பராமரிப்பது சுலபம்!
போன்சாய் என்பது இயற்கையான மரத்தைப் போலவே சிறியதாக உள்ள மரம். இதனை வீட்டில் அழகிற்காக வளர்க்கலாம். இதனை பராமரிப்பது என்பது மிகவும் கடினமான விஷயமல்ல. நீர் ஊற்றுவது, உரமிடுவது, தொட்டி மாற்றுவது போன்ற ஒரு சில விஷயங்கள் மட்டும் தெரிந்து கொண்டால் போதுமானது அழகான, ஆரோக்கியமான போன்சாய் மரங்களை வளர்க்கலாம்.
கோடை காலத்திலும், வசந்த காலத்திலும் போன்சாய் மரங்களை பால்கனி போன்ற இடங்களில் வளர்க்கலாம். அப்பொழுது சூரிய ஒளி செடிகளுக்கு நன்றாக கிடைக்கும். அதேசமயம் குளிர்காலத்தில் வீட்டிற்குள் தெற்குப் பகுதியில் வைத்து வளர்க்கவேண்டும். இல்லையெனில் கிழக்கு அல்லது மேற்குப் பகுதிகளில் வைக்கலாம். வடக்குப் பகுதி ஏற்றதல்ல என்கின்றனர் தோட்டக்கலை நிபுணர்கள். தினசரி போன்சாய் மரங்களுக்கு நான்கு முதல் 6 மணிநேரம் சூரிய ஒளி கிடைக்குமாறு வைக்கவேண்டும்.
நீர் ஊற்றுதல்
முதலில் நீர் ஊற்றுவது. நீர் ஊற்றுவது என்பது மரத்தில் வகையைப் பொறுத்து மாறுபடும். தினமும் குறிப்பிட்ட நேரத்தில் நீரூற்ற வேண்டியது இல்லை. நாம் விரலை மண்ணில் விட்டுப் பார்த்தால், ஒரு அரை இன்ச் ஆழம் வரை காய்ந்து போய் இருந்தால் நீர் ஊற்ற வேண்டும். தண்ணீர் ஊற்ற மதிய நேரம் ஏற்றதல்ல. காலையிலோ அல்லது மாலை நேரத்திலோ தண்ணீர் ஊற்ற வேண்டும்.
தண்ணீரை அப்படியே தொட்டியினுள் கொட்டக்கூடாது லேசாக தெளிப்பது போல சிறிது சிறிதாக ஊற்ற வேண்டும். இல்லாவிட்டால், நீரின் வேகத்தில் மண் அடித்து செல்லப்பட்டு விடும். அதே சமயம், நீரானது, எல்லா வேர்களும் நனையும் வகையில், அதிகப்படி நீர் வெளியேறும் ஓட்டை வழியாக வெளியேறும் வரை ஊற்ற வேண்டும். மழை நீரை சேகரித்து வைத்து ஊற்றினால் நல்லது.
உரமிடுதல்
இயற்கையாக வளரும் மரங்களில் வேர்கள் அதற்கான சத்து கிடைக்கும் இடம் நோக்கி வளர்ந்து கொள்ளும். ஆனால் போன்சாயானது, நாம் சிறு தொட்டியில் வளார்ப்பதால், உரமிடுவது மிக அவசியம். நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம் என மூவகை உரங்கள் மரத்துக்கு முக்கியம். நைட்ரஜன் இலை, கிளை வளர்ச்சிக்கும், பாஸ்பரஸ் வேர்களின் ஆரோக்கியத்துக்கும், பொட்டாசியம் பூக்கள் காய்களின் காய்ப்புக்கும் மிக அவசியமானது. நாம் வருடத்தின் எக்காலத்தில் உரமிடுகிறோமோ, அதைப் பொறுத்து, நாம் உரமிடும் கலவை மாறுபடும்.
இலையுதிர் காலத்தில் நைட்ரஜன் அளவு குறைவாகவும், வசந்த காலத்தில் நைட்ரஜன் அளவு கூடுதலாகவும் இட வேண்டும். வெயில் காலத்தில் சரிவிகிதமாக உரமிட வேண்டும். மரம் சற்று முதிர்ந்து விட்டால், வளர்ச்சிக்கான நைட்ரஜன் விகிதத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். அதே சமயம் பூப்பூக்கும் பருவத்தில் பொட்டாசியம் அளவைக் கூட்டிக் கொள்ளவேண்டும்.
தொட்டி மாற்றுதல்
போன்சாய் மரத்திற்கு ஒரு வருடத்திற்கு ஒருமுறை தொட்டி மாற்றுவது அவசியம். தொட்டி மாற்றுவதால், நம் போன்சாய் மரம் சிறியதாகாது, மாறாக, அது புது சத்துக்கள் கிடைக்க உதவுகிறது. ஆரம்பத்தில் வேகமாக வளரும் மரமாக இருந்தால், இரு வருடம், இன்னும் சொல்லப்போனால் ஒரு வருடத்துக்கொரு முறை தொட்டி மாற்ற வேண்டும். வசந்த காலம் ஆரம்பிக்கும் முன் தொட்டி மாற்றிவிட வேண்டும். அப்போ தான் அதனால் ஏதும் சேதம் ஏற்பட்டால் கூட விரைவில் வளர்ந்து விடும். மரத்திற்கு வயதாகி விட்டால் 3 அல்லது 5 வருடத்துக்கொரு முறை மாற்றினால் போதும்.
தொட்டி மாற்றும் போது, வேர்களில் இருக்கும் மண்ணை லேசாக உதிர்த்து விடவேண்டும். பின்னர் வேறொரு தொட்டியில் மக்கிய உரம், மணல், மற்றும் செம்மண் கலவையில் அதை ஊன்ற வேண்டும். மண் கலவை நீரை நன்கு உறிஞ்சும் தன்மையதாக இருக்க வேண்டும். சிறிது மண்ணை தொட்டியில் போட்டு, பின் அதில் மரத்தை வைத்து, அதன் மேல் மீதி மண்ணைப் போட வேண்டும். மண்ணில் ஊன்றும் முன், அதன் வேர்களை வெட்டிவிட வேண்டும். மிக நீளமான வேர்கள் மற்றும் அழுகிப் போன வேர்களை லேசாக நறுக்கிவிட வேண்டும். தொட்டி மாற்றிய பிறகு, இரு மாதங்களுக்கு, அம்மரத்தை கடுமையான காற்று மற்றும் கடுமையான வெப்பத்திலிருந்து பாதுகாக்க வேண்டும்.
மரங்களை அதிக அளவில் பெரியதாக விடக்கூடாது. அவ்வப்போது நறுக்கிவிடவேண்டும். அப்பொழுதுதான் கண்ணுக்கு அழகான மரம் கிடைக்கும். போன்சாய் மரங்களை பூச்சித்தாக்குதலில் இருந்தும் நோய் தாக்குதலில் இருந்து ம் பாதுகாத்து வளர்க்கவேண்டும். இம்முறைகளை பின்பற்றி நாம் பராமரித்தால், எவ்வகை மரத்தை வேண்டுமானால் போன்சாயாக வீடுகளில் வளர்க்கலாம்
போன்சாய் என்பது இயற்கையான மரத்தைப் போலவே சிறியதாக உள்ள மரம். இதனை வீட்டில் அழகிற்காக வளர்க்கலாம். இதனை பராமரிப்பது என்பது மிகவும் கடினமான விஷயமல்ல. நீர் ஊற்றுவது, உரமிடுவது, தொட்டி மாற்றுவது போன்ற ஒரு சில விஷயங்கள் மட்டும் தெரிந்து கொண்டால் போதுமானது அழகான, ஆரோக்கியமான போன்சாய் மரங்களை வளர்க்கலாம்.
கோடை காலத்திலும், வசந்த காலத்திலும் போன்சாய் மரங்களை பால்கனி போன்ற இடங்களில் வளர்க்கலாம். அப்பொழுது சூரிய ஒளி செடிகளுக்கு நன்றாக கிடைக்கும். அதேசமயம் குளிர்காலத்தில் வீட்டிற்குள் தெற்குப் பகுதியில் வைத்து வளர்க்கவேண்டும். இல்லையெனில் கிழக்கு அல்லது மேற்குப் பகுதிகளில் வைக்கலாம். வடக்குப் பகுதி ஏற்றதல்ல என்கின்றனர் தோட்டக்கலை நிபுணர்கள். தினசரி போன்சாய் மரங்களுக்கு நான்கு முதல் 6 மணிநேரம் சூரிய ஒளி கிடைக்குமாறு வைக்கவேண்டும்.
நீர் ஊற்றுதல்
முதலில் நீர் ஊற்றுவது. நீர் ஊற்றுவது என்பது மரத்தில் வகையைப் பொறுத்து மாறுபடும். தினமும் குறிப்பிட்ட நேரத்தில் நீரூற்ற வேண்டியது இல்லை. நாம் விரலை மண்ணில் விட்டுப் பார்த்தால், ஒரு அரை இன்ச் ஆழம் வரை காய்ந்து போய் இருந்தால் நீர் ஊற்ற வேண்டும். தண்ணீர் ஊற்ற மதிய நேரம் ஏற்றதல்ல. காலையிலோ அல்லது மாலை நேரத்திலோ தண்ணீர் ஊற்ற வேண்டும்.
தண்ணீரை அப்படியே தொட்டியினுள் கொட்டக்கூடாது லேசாக தெளிப்பது போல சிறிது சிறிதாக ஊற்ற வேண்டும். இல்லாவிட்டால், நீரின் வேகத்தில் மண் அடித்து செல்லப்பட்டு விடும். அதே சமயம், நீரானது, எல்லா வேர்களும் நனையும் வகையில், அதிகப்படி நீர் வெளியேறும் ஓட்டை வழியாக வெளியேறும் வரை ஊற்ற வேண்டும். மழை நீரை சேகரித்து வைத்து ஊற்றினால் நல்லது.
உரமிடுதல்
இயற்கையாக வளரும் மரங்களில் வேர்கள் அதற்கான சத்து கிடைக்கும் இடம் நோக்கி வளர்ந்து கொள்ளும். ஆனால் போன்சாயானது, நாம் சிறு தொட்டியில் வளார்ப்பதால், உரமிடுவது மிக அவசியம். நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம் என மூவகை உரங்கள் மரத்துக்கு முக்கியம். நைட்ரஜன் இலை, கிளை வளர்ச்சிக்கும், பாஸ்பரஸ் வேர்களின் ஆரோக்கியத்துக்கும், பொட்டாசியம் பூக்கள் காய்களின் காய்ப்புக்கும் மிக அவசியமானது. நாம் வருடத்தின் எக்காலத்தில் உரமிடுகிறோமோ, அதைப் பொறுத்து, நாம் உரமிடும் கலவை மாறுபடும்.
இலையுதிர் காலத்தில் நைட்ரஜன் அளவு குறைவாகவும், வசந்த காலத்தில் நைட்ரஜன் அளவு கூடுதலாகவும் இட வேண்டும். வெயில் காலத்தில் சரிவிகிதமாக உரமிட வேண்டும். மரம் சற்று முதிர்ந்து விட்டால், வளர்ச்சிக்கான நைட்ரஜன் விகிதத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். அதே சமயம் பூப்பூக்கும் பருவத்தில் பொட்டாசியம் அளவைக் கூட்டிக் கொள்ளவேண்டும்.
தொட்டி மாற்றுதல்
போன்சாய் மரத்திற்கு ஒரு வருடத்திற்கு ஒருமுறை தொட்டி மாற்றுவது அவசியம். தொட்டி மாற்றுவதால், நம் போன்சாய் மரம் சிறியதாகாது, மாறாக, அது புது சத்துக்கள் கிடைக்க உதவுகிறது. ஆரம்பத்தில் வேகமாக வளரும் மரமாக இருந்தால், இரு வருடம், இன்னும் சொல்லப்போனால் ஒரு வருடத்துக்கொரு முறை தொட்டி மாற்ற வேண்டும். வசந்த காலம் ஆரம்பிக்கும் முன் தொட்டி மாற்றிவிட வேண்டும். அப்போ தான் அதனால் ஏதும் சேதம் ஏற்பட்டால் கூட விரைவில் வளர்ந்து விடும். மரத்திற்கு வயதாகி விட்டால் 3 அல்லது 5 வருடத்துக்கொரு முறை மாற்றினால் போதும்.
தொட்டி மாற்றும் போது, வேர்களில் இருக்கும் மண்ணை லேசாக உதிர்த்து விடவேண்டும். பின்னர் வேறொரு தொட்டியில் மக்கிய உரம், மணல், மற்றும் செம்மண் கலவையில் அதை ஊன்ற வேண்டும். மண் கலவை நீரை நன்கு உறிஞ்சும் தன்மையதாக இருக்க வேண்டும். சிறிது மண்ணை தொட்டியில் போட்டு, பின் அதில் மரத்தை வைத்து, அதன் மேல் மீதி மண்ணைப் போட வேண்டும். மண்ணில் ஊன்றும் முன், அதன் வேர்களை வெட்டிவிட வேண்டும். மிக நீளமான வேர்கள் மற்றும் அழுகிப் போன வேர்களை லேசாக நறுக்கிவிட வேண்டும். தொட்டி மாற்றிய பிறகு, இரு மாதங்களுக்கு, அம்மரத்தை கடுமையான காற்று மற்றும் கடுமையான வெப்பத்திலிருந்து பாதுகாக்க வேண்டும்.
மரங்களை அதிக அளவில் பெரியதாக விடக்கூடாது. அவ்வப்போது நறுக்கிவிடவேண்டும். அப்பொழுதுதான் கண்ணுக்கு அழகான மரம் கிடைக்கும். போன்சாய் மரங்களை பூச்சித்தாக்குதலில் இருந்தும் நோய் தாக்குதலில் இருந்து ம் பாதுகாத்து வளர்க்கவேண்டும். இம்முறைகளை பின்பற்றி நாம் பராமரித்தால், எவ்வகை மரத்தை வேண்டுமானால் போன்சாயாக வீடுகளில் வளர்க்கலாம்
Re: சுற்றுபுறசுழல்- பல தளங்களின் தொகுப்பு
பூமித்தாயின் அணிகலன்களை சேதமின்றி காப்போம்!
இந்த உலகம் அழகானது. அழகான இந்த உலகில் படைக்கப்பட்ட உயிர்கள் அனைத்தும் வாழ வழி இருக்கிறது. எல்லா உயிர்களுக்கும் மகிழ்ச்சியை அளிக்கக்கூடியது இந்த பூமி. அதனால்தான் பூமியை தாய் என்கிறோம். தாயாக இருப்பதால்தான் உயிர்கள் அனைத்திற்கும் பாகுபாடின்றி உணவளிக்கிறது, இந்த பூமி. உயிர்களுக்கு உறைவிடமாகவும், பாதுகாப்பு அரணாகவும் இயற்கை அமைந்துள்ளது.
இயற்கையை புரிந்து கொண்டு உயிரினங்கள் வாழ்கின்றன. அதனால் அவை இயற்கையை அழிக்க முற்படுவதில்லை. ஆனால் அந்த அறிவும், உணர்வும் மனிதனிடம் மிக குறைவாகவே இருக்கிறது. ஆறறிவு கொண்ட மனிதன் வாரி வழங்கும் இயற்கையை வறண்டு போகச்செய்கிறான். இதை ஒரு அழிவின் தொடக்கம் என்று சொல்லலாம்.
மாசுபட்ட இயற்கை மனிதனுக்கு உதவாது. காசுக்காக அழிக்கப்படும் இயற்கை, காசு கொடுத்தாலும் மீண்டும் திரும்பவராது. மனித மனங்களுக்குள் தேவைகள் திணிக்கப்படும்போது அவை ஆசைகளாக உருவாகி, விரைவாகவே பேராசையாகிவிடுகிறது. அந்த பேராசை தீயில் மெல்ல மெல்ல இயற்கை அழிக்கப்படுகிறது. அதை உணரும் நேரத்தில் நம்மை சுற்றி பேரிழப்புகள் பல நிகழ்ந்திருக்கும்.
கடலோர பகுதிகளில் இருக்கும் சவுக்கு காடுகளை கண்மண் தெரியாமல் அழித்ததன் விளைவு, சுனாமியால் நாம் பேரழிவை சந்தித்தோம். இயற்கைக்கு மனிதன்மேல் எந்த கோபமும் இல்லை. மனிதனின் இயற்கை மீதான முரட்டுத்தனம்தான் அவனுக்கு வினையாக முடிகிறது. விலங்குகளின் இருப்பிடமான காடுகளை அழிப்பதால் அது இருக்க இடமின்றி ஊருக்குள் புகுந்து விடுகிறது. மனிதன் காடுகளை அழிப்பது, அவனுக்கே அழிவாக மாறுகிறது.
நம்மை சுற்றி இருக்கும் இயற்கை நமக்கு சொந்தம். அதை நாம் சவுகரியங்களுக்காகவும், பணத்திற்காகவும் அழிப்பது, நம் வீட்டுக்கூரையில் நாமே தீ வைத்துக்கொள்வது போன்றதாகும். தற்போது நமது வீட்டுக்கு தீவைத்துக்கொண்டு நாமே குளிர் காய்வதுபோல் இயற்கையை அழித்துக்கொண்டிருக்கிறோம்.
அறிவியல் வளர்ச்சியும் இயற்கையை அழிக்கிறது. நவீன கண்டுபிடிப்பான பூச்சிக்கொல்லி மருந்துகள், இருதலைக்கொள்ளியாக இயற்கையையும் அழிக்கிறது. மனிதனையும் அழிக்கிறது. அறிவியலின் அசுர வளர்ச்சி பூமியின் மேற்பரப்பில் உள்ள ஓசோன் மண்டலத்தில் துளைகளை ஏற்படுத்தி புற ஊதாக்கதிர்களை பூமிக்கு அனுப்பி, பூமியை வெப்ப மண்டலமாக மாற்றி, இயற்கையை அழித்துக் கொண்டிருக்கிறது.
`பிக்கினி’ என்னும் பவளத்தீவில் அணுகுண்டை வெடித்து சோதனை செய்தார்கள். அதனால் கடலில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டு, பல கோடி டன் எடையுள்ள நீர் மேலே எழும்பியது. வானை நோக்கி சிதறிய அதன் அதிர்ச்சியில் மேகங்கள் குளிர்ந்து மாதக்கணக்கில் பேய் மழையாக கொட்டியது. அதனால் ஏற்பட்ட சீதோஷ்ண மாற்றத்தால் கடலடியில் வாழ்ந்த உயிரினங்கள் அழிந்தன.
அந்த பகுதியில் தொடர்ந்து எழும்பும் உயரமான அலைகள் அந்த கடற் பகுதியையே, ஆபத்தான இடமாக மாற்றிவிட்டது. ஆக மனிதனை அழிக்க பரிசோதிக்கப்படும் அணுகுண்டுகள் இயற்கையை துவம்சம் செய்துகொண்டிருக்கின்றன. இயற்கையை பேரழிவை நோக்கி இழுத்து செல்லும் விஷயங்களில் பிளாஸ்டிக்கும் ஒன்று. மட்காத இந்த பிளாஸ்டிக், கடல்வாழ் உயிரினங்களுக்கு ஆபத்தாக முடிவது மட்டுமின்றி நிலப்பரப்பையே மாசுபடுத்தி நிலத்தடி நீரை பூமிக்கு செல்லவிடாமல் தடுக்கிறது.
இயற்கையின் அழிவால் இன்று பல உயிரின வகைகளே இல்லாமல் போய்விட்டன. இன்னும் பல மெல்ல மெல்ல அழிந்து கொண்டிருக்கின்றன.
இயற்கையை நேசித்த ரவீந்தரநாத் தாகூர் அதனை வரமாக நினைத்து பூஜித்தார். மனிதர்களை இயற்கையை நோக்கி பயணிக்க வைத்தார். இந்திய மண்ணின் இயற்கை வளங்களை பொக்கிஷமாக வர்ணித்தார். விந்திய, ஹிமாசல, யமுனா கங்கா… என்று இயற்கை போகும் பாதையில் எண்ணத்தை செலுத்தி இவையே தெய்வம் என்று குறிப்பிடுகிறார்.
கேட்கும் வரம் தரும் தெய்வமாக இயற்கை இருக்கும்போது அதை காக்கும் மனிதர்களாக நாம் உருவெடுக்கவேண்டும். அழகான இயற்கை நம்மை வாழ வைக்கிறது. பூமித்தாயின் அழகுமிக்க அணிகலன் இயற்கை. இதை மாசுபடுத்தாமல் வாழ்வதுதான் மனிதனுக்கு பெருமை.
இந்த உலகம் அழகானது. அழகான இந்த உலகில் படைக்கப்பட்ட உயிர்கள் அனைத்தும் வாழ வழி இருக்கிறது. எல்லா உயிர்களுக்கும் மகிழ்ச்சியை அளிக்கக்கூடியது இந்த பூமி. அதனால்தான் பூமியை தாய் என்கிறோம். தாயாக இருப்பதால்தான் உயிர்கள் அனைத்திற்கும் பாகுபாடின்றி உணவளிக்கிறது, இந்த பூமி. உயிர்களுக்கு உறைவிடமாகவும், பாதுகாப்பு அரணாகவும் இயற்கை அமைந்துள்ளது.
இயற்கையை புரிந்து கொண்டு உயிரினங்கள் வாழ்கின்றன. அதனால் அவை இயற்கையை அழிக்க முற்படுவதில்லை. ஆனால் அந்த அறிவும், உணர்வும் மனிதனிடம் மிக குறைவாகவே இருக்கிறது. ஆறறிவு கொண்ட மனிதன் வாரி வழங்கும் இயற்கையை வறண்டு போகச்செய்கிறான். இதை ஒரு அழிவின் தொடக்கம் என்று சொல்லலாம்.
மாசுபட்ட இயற்கை மனிதனுக்கு உதவாது. காசுக்காக அழிக்கப்படும் இயற்கை, காசு கொடுத்தாலும் மீண்டும் திரும்பவராது. மனித மனங்களுக்குள் தேவைகள் திணிக்கப்படும்போது அவை ஆசைகளாக உருவாகி, விரைவாகவே பேராசையாகிவிடுகிறது. அந்த பேராசை தீயில் மெல்ல மெல்ல இயற்கை அழிக்கப்படுகிறது. அதை உணரும் நேரத்தில் நம்மை சுற்றி பேரிழப்புகள் பல நிகழ்ந்திருக்கும்.
மனிதனைத் தவிர இந்த பூமியில் வாழும் எந்த உயிரினமும் இயற்கையை அழிப்பதில்லை. கொடூரமான சிங்கம், புலி கூட பசிக்கும்போது மட்டுமே பிராணிகளை வேட்டையாடுகிறது. கண்ணில்படும் உயிரினங்களை எல்லாம் அது அழித்துவிட்டு செல்வதில்லை. தனது உடல் தேவைக்கு மட்டும் அது இயற்கையிடம் அனுமதிபெற்று அழிக்கிறது. மனிதன் மட்டும் பின் விளைவுகளை பற்றி சிந்திக்காமல் இயற்கையை சீண்டி பார்க்கிறான்.
கடலோர பகுதிகளில் இருக்கும் சவுக்கு காடுகளை கண்மண் தெரியாமல் அழித்ததன் விளைவு, சுனாமியால் நாம் பேரழிவை சந்தித்தோம். இயற்கைக்கு மனிதன்மேல் எந்த கோபமும் இல்லை. மனிதனின் இயற்கை மீதான முரட்டுத்தனம்தான் அவனுக்கு வினையாக முடிகிறது. விலங்குகளின் இருப்பிடமான காடுகளை அழிப்பதால் அது இருக்க இடமின்றி ஊருக்குள் புகுந்து விடுகிறது. மனிதன் காடுகளை அழிப்பது, அவனுக்கே அழிவாக மாறுகிறது.
நம்மை சுற்றி இருக்கும் இயற்கை நமக்கு சொந்தம். அதை நாம் சவுகரியங்களுக்காகவும், பணத்திற்காகவும் அழிப்பது, நம் வீட்டுக்கூரையில் நாமே தீ வைத்துக்கொள்வது போன்றதாகும். தற்போது நமது வீட்டுக்கு தீவைத்துக்கொண்டு நாமே குளிர் காய்வதுபோல் இயற்கையை அழித்துக்கொண்டிருக்கிறோம்.
அறிவியல் வளர்ச்சியும் இயற்கையை அழிக்கிறது. நவீன கண்டுபிடிப்பான பூச்சிக்கொல்லி மருந்துகள், இருதலைக்கொள்ளியாக இயற்கையையும் அழிக்கிறது. மனிதனையும் அழிக்கிறது. அறிவியலின் அசுர வளர்ச்சி பூமியின் மேற்பரப்பில் உள்ள ஓசோன் மண்டலத்தில் துளைகளை ஏற்படுத்தி புற ஊதாக்கதிர்களை பூமிக்கு அனுப்பி, பூமியை வெப்ப மண்டலமாக மாற்றி, இயற்கையை அழித்துக் கொண்டிருக்கிறது.
`பிக்கினி’ என்னும் பவளத்தீவில் அணுகுண்டை வெடித்து சோதனை செய்தார்கள். அதனால் கடலில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டு, பல கோடி டன் எடையுள்ள நீர் மேலே எழும்பியது. வானை நோக்கி சிதறிய அதன் அதிர்ச்சியில் மேகங்கள் குளிர்ந்து மாதக்கணக்கில் பேய் மழையாக கொட்டியது. அதனால் ஏற்பட்ட சீதோஷ்ண மாற்றத்தால் கடலடியில் வாழ்ந்த உயிரினங்கள் அழிந்தன.
அந்த பகுதியில் தொடர்ந்து எழும்பும் உயரமான அலைகள் அந்த கடற் பகுதியையே, ஆபத்தான இடமாக மாற்றிவிட்டது. ஆக மனிதனை அழிக்க பரிசோதிக்கப்படும் அணுகுண்டுகள் இயற்கையை துவம்சம் செய்துகொண்டிருக்கின்றன. இயற்கையை பேரழிவை நோக்கி இழுத்து செல்லும் விஷயங்களில் பிளாஸ்டிக்கும் ஒன்று. மட்காத இந்த பிளாஸ்டிக், கடல்வாழ் உயிரினங்களுக்கு ஆபத்தாக முடிவது மட்டுமின்றி நிலப்பரப்பையே மாசுபடுத்தி நிலத்தடி நீரை பூமிக்கு செல்லவிடாமல் தடுக்கிறது.
இயற்கையின் அழிவால் இன்று பல உயிரின வகைகளே இல்லாமல் போய்விட்டன. இன்னும் பல மெல்ல மெல்ல அழிந்து கொண்டிருக்கின்றன.
இயற்கையை நேசித்த ரவீந்தரநாத் தாகூர் அதனை வரமாக நினைத்து பூஜித்தார். மனிதர்களை இயற்கையை நோக்கி பயணிக்க வைத்தார். இந்திய மண்ணின் இயற்கை வளங்களை பொக்கிஷமாக வர்ணித்தார். விந்திய, ஹிமாசல, யமுனா கங்கா… என்று இயற்கை போகும் பாதையில் எண்ணத்தை செலுத்தி இவையே தெய்வம் என்று குறிப்பிடுகிறார்.
கேட்கும் வரம் தரும் தெய்வமாக இயற்கை இருக்கும்போது அதை காக்கும் மனிதர்களாக நாம் உருவெடுக்கவேண்டும். அழகான இயற்கை நம்மை வாழ வைக்கிறது. பூமித்தாயின் அழகுமிக்க அணிகலன் இயற்கை. இதை மாசுபடுத்தாமல் வாழ்வதுதான் மனிதனுக்கு பெருமை.
Re: சுற்றுபுறசுழல்- பல தளங்களின் தொகுப்பு
மண்ணின் மக(ரு)த்துவம்
இந்த உலகம் பஞ்ச பூதங்களால் ஆட்கொள்ளப் பட்டு இயங்குகிறது. நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று இணைந்து செயல்பட்டால்தான் உலகில் உயிர்கள் உயிர்வாழ முடியும். இவற்றில் ஏதேனும் ஒன்றில் பாதிப்பு என்றாலும் உலகம் அழிவு நிலைக்குச் சென்றுவிடும்.
இவற்றுள் மண்ணைப் பற்றியும், அதில் அடங்கியுள்ள மருத்துவத்தைப் பற்றியும் ஒவ்வொருவரும் அறிந்துகொள்வது அவசியம்.
மண் உயிர்கள் அனைத்தையும் தாங்கி நிற்கும் அரண். மண்ணை பொறுமைக்கு எடுத்துக் காட்டாகச் சொல்வார்கள். இத்தகைய சிறப்பு வாய்ந்த மண்ணில் மருத்துவக் குணங்களும் உண்டு. இதை சித்தர்கள் அன்றே உணர்ந்து மண்ணின் மருத்துவ மகிமையைக் கூறியுள்ளனர்.
மனிதனின் பேராசையால் மண் சீரழிக்கப்பட்டு வருகிறது. இரசாயன வேதிப் பொருட்கள், தொழிற்சாலைக் கழிவுகள் இவற்றால் மண் வளம் கெட்டுவிட்டது. விவசாயம் செழித்த நிலங்கள் உவர் நிலங்களாகக் காட்சியளிக்கின்றன. மண்ணின் மகத்துவம் புரியாமல் அவற்றின் மேல் கான்கிரீட் தளங்களை அமைத்துவிட்டோம். இதனால் பசுமையை இழக்கிறோம்.
நிலத்தடி நீரை இழக்கிறோம். எல்லாவற்றையும் இழந்து செயற்கை நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம். இதனால் பூமி அங்காங்கே நில நடுக்கமாகவும், எரிமலையாகவும் வெடித்துக் கொண்டு இருக்கிறது.
உலக உயிர்களை எல்லாம் வாழ வைப்பது மண்தான். அதோடு அதற்கு தேவையான உணவு வகைகளை வளர்த்துத் தருவதோடு தானே மருந்தாகவும் அமைகிறது.
மண்ணின் மகத்துவத்தை அறிந்து அதிலுள்ள மருத்துவ மகிமைகளைகண்டு மண்குளியல், மண்பட்டி என இரு சிகிச்சை முறைகளைக் கூறியுள்ளனர் சித்தர்கள்.
மண் எல்லா இடத்திலும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. ஒவ்வொரு இடத்திற்கும் ஒவ்வொரு தன்மை கொண்டதாக இருக்கிறது.
இதில் மருத்துவத்திற்காகப் பயன்படுவது சுத்தமான புற்று மண் மட்டுமே. இதில் உப்பு, உவர், சுண்ணாம்பு, கந்தகம், மைக்கா என எதுவுமே கலந்திருக்கக் கூடாது. மண் ஊறவைக்கும் நீரும் அவ்வாறே தூய்மையானதாக இருக்க வேண்டும்.
இத்தகைய மண் இரத்த ஓட்டத்தடை, தூக்கமின்மை, நரம்புத் தளர்வு, தோல் நோய்கள் போன்றவற்றுக்குச் சிறந்த சிகிச்சையாக விளங்குகிறது.
இயற்கை மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் பலவகைச் சிகிச்சை முறைகளில் மண் சிகிச்சையும் ஒன்று.
புற்று மண்ணுக்கு உறிஞ்சும் சக்தி உண்டு. வெப்பத்தை கிரகிக்கும் தன்மையும் உண்டு.
மண் சிகிச்சை இரு வகைகளில் அளிக்கப்படுகிறது.
1. மண்ணை உடல் முழுவதும் பூசிக் கொள்ளும் சிகிச்சை.
2. மண்பட்டி – மண்ணை துணியில் சுருட்டி, வேண்டிய இடத்தில் பட்டி போடுவது.
மண்பூச்சு
உடல் முழுவதும் மண் பூசுவது அல்லது குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் மண் பூசுவது என இரு வகைகளில் மண்பூச்சு சிகிச்சை முறை நடைபெறுகிறது.
நன்கு குழைத்த மண்ணைப் பூசி 20 நிமிடங்கள் கழித்து குளித்து வருவதுதான் இந்த சிகிச்சை முறை. இதனை குளிர்காலத்தில் செய்யக் கூடாது. வெயில் நேரத்தில் நிழலில் அமர்ந்து இந்த சிகிச்சையை செய்ய வேண்டும்.
குழைத்த மண்ணை காலிலிருந்து மேல் நோக்கி பூச வேண்டும். கண், வாய், காது தவிர்த்து உடல் முழுவதும் பூசுதல் நல்லது.
இதனால் உடல் சூடு தணிகிறது.
உடலை இயக்குகின்ற வாத, பித்த, கபத்தின் நிலை சீராகுகிறது. தச வாயுக்களின் செயல்பாடு தூண்டப்படுகிறது. பித்த அதிகரிப்பு குறைவதால் இரத்தம் சுத்தமாவதுடன் இரத்தம் தங்குதடையின்றி உடல் முழுவதும் சென்று அடைகிறது.
உடலில் உள்ள நச்சுத்தன்மை வாய்ந்த நீர்களை மண் உறிஞ்சிக் கொள்கிறது. இதனால் உடல் உறுப்புகள் பலம் பெறுகின்றன. நரம்புகள் புத்துணர்வு பெறுகின்றன. எலும்புகள் வலுவடைகின்றன. மேலும் மன அழுத்தம் குறைகிறது. சரும பாதிப்புகள் நீங்கி சருமம் பாதுகாப்படைகிறது. அதுபோல் உடலில் சில குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள கட்டி, புண், படை போன்றவற்றுக்கு அப்பகுதியில் மண் பூச்சைத் தொடர்ந்து சில நாட்கள் செய்து வந்தால் விரைவில் குணம் கிடைக்கும்.
வயிற்றைச் சுற்றி மண் பற்றுப் போட்டால் அசீரணம், மலச்சிக்கல், வயிற்றுக் கடுப்பு ஆகியவை குணமாகும். நெற்றியில் பற்று போட்டால் தலைவலி நீங்கும்.
இன்றும் கிராமங்களில், சோப்புகளுக்குப் பதிலாக கரப்பான் என்ற மண் வகையை உடம்பில் தேய்த்து குளிக்கும் வழக்கம் உள்ளது.
மண்ணை, வயிற்றுப் பகுதியில் வைத்துக் கட்டினால் அஜீரணம், வாயுக் கோளாறு, வயிற்றுப்பொருமல் போன்றவை நீங்கும். மேலும் உடலின் உஷ்ணத்தைக் குறைப்பதால் வயிற்றுப் போக்கு உள்ளவர்களுக்கு உடனே நிவாரணம் கிடைக்கும்.
பொதுவாக மண் பட்டியை 15 நிமிடங்களுக்கு மேல் கட்டியிருக்கக் கூடாது.
கை, கால், மூட்டு வலி, இடுப்பு வலி, கழுத்து வலி போன்றவற்றிற்கு மண்பட்டி சிகிச்சை நல்லது.
ஆகையால்தான் இயற்கை சிகிச்சை முறைகளில் மண் குளியல் முக்கிய சிகிச்சை முறையாக கருதப்பட்டு செயல்படுத்தி வருகிறார்கள். பழங்காலங்களில் எல்லா கிராமங்களிலும் இதை பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். இன்றைய கால கட்டத்தில் சிறந்த சிகிச்சை முறையாக செய்தும் வருகிறார்கள்.
இந்த உலகம் பஞ்ச பூதங்களால் ஆட்கொள்ளப் பட்டு இயங்குகிறது. நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று இணைந்து செயல்பட்டால்தான் உலகில் உயிர்கள் உயிர்வாழ முடியும். இவற்றில் ஏதேனும் ஒன்றில் பாதிப்பு என்றாலும் உலகம் அழிவு நிலைக்குச் சென்றுவிடும்.
இவற்றுள் மண்ணைப் பற்றியும், அதில் அடங்கியுள்ள மருத்துவத்தைப் பற்றியும் ஒவ்வொருவரும் அறிந்துகொள்வது அவசியம்.
மண் உயிர்கள் அனைத்தையும் தாங்கி நிற்கும் அரண். மண்ணை பொறுமைக்கு எடுத்துக் காட்டாகச் சொல்வார்கள். இத்தகைய சிறப்பு வாய்ந்த மண்ணில் மருத்துவக் குணங்களும் உண்டு. இதை சித்தர்கள் அன்றே உணர்ந்து மண்ணின் மருத்துவ மகிமையைக் கூறியுள்ளனர்.
மனிதனின் பேராசையால் மண் சீரழிக்கப்பட்டு வருகிறது. இரசாயன வேதிப் பொருட்கள், தொழிற்சாலைக் கழிவுகள் இவற்றால் மண் வளம் கெட்டுவிட்டது. விவசாயம் செழித்த நிலங்கள் உவர் நிலங்களாகக் காட்சியளிக்கின்றன. மண்ணின் மகத்துவம் புரியாமல் அவற்றின் மேல் கான்கிரீட் தளங்களை அமைத்துவிட்டோம். இதனால் பசுமையை இழக்கிறோம்.
நிலத்தடி நீரை இழக்கிறோம். எல்லாவற்றையும் இழந்து செயற்கை நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம். இதனால் பூமி அங்காங்கே நில நடுக்கமாகவும், எரிமலையாகவும் வெடித்துக் கொண்டு இருக்கிறது.
உலக உயிர்களை எல்லாம் வாழ வைப்பது மண்தான். அதோடு அதற்கு தேவையான உணவு வகைகளை வளர்த்துத் தருவதோடு தானே மருந்தாகவும் அமைகிறது.
மண்ணின் மகத்துவத்தை அறிந்து அதிலுள்ள மருத்துவ மகிமைகளைகண்டு மண்குளியல், மண்பட்டி என இரு சிகிச்சை முறைகளைக் கூறியுள்ளனர் சித்தர்கள்.
மண் எல்லா இடத்திலும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. ஒவ்வொரு இடத்திற்கும் ஒவ்வொரு தன்மை கொண்டதாக இருக்கிறது.
இதில் மருத்துவத்திற்காகப் பயன்படுவது சுத்தமான புற்று மண் மட்டுமே. இதில் உப்பு, உவர், சுண்ணாம்பு, கந்தகம், மைக்கா என எதுவுமே கலந்திருக்கக் கூடாது. மண் ஊறவைக்கும் நீரும் அவ்வாறே தூய்மையானதாக இருக்க வேண்டும்.
இத்தகைய மண் இரத்த ஓட்டத்தடை, தூக்கமின்மை, நரம்புத் தளர்வு, தோல் நோய்கள் போன்றவற்றுக்குச் சிறந்த சிகிச்சையாக விளங்குகிறது.
இயற்கை மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் பலவகைச் சிகிச்சை முறைகளில் மண் சிகிச்சையும் ஒன்று.
புற்று மண்ணுக்கு உறிஞ்சும் சக்தி உண்டு. வெப்பத்தை கிரகிக்கும் தன்மையும் உண்டு.
மண் சிகிச்சை இரு வகைகளில் அளிக்கப்படுகிறது.
1. மண்ணை உடல் முழுவதும் பூசிக் கொள்ளும் சிகிச்சை.
2. மண்பட்டி – மண்ணை துணியில் சுருட்டி, வேண்டிய இடத்தில் பட்டி போடுவது.
மண்பூச்சு
உடல் முழுவதும் மண் பூசுவது அல்லது குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் மண் பூசுவது என இரு வகைகளில் மண்பூச்சு சிகிச்சை முறை நடைபெறுகிறது.
நன்கு குழைத்த மண்ணைப் பூசி 20 நிமிடங்கள் கழித்து குளித்து வருவதுதான் இந்த சிகிச்சை முறை. இதனை குளிர்காலத்தில் செய்யக் கூடாது. வெயில் நேரத்தில் நிழலில் அமர்ந்து இந்த சிகிச்சையை செய்ய வேண்டும்.
குழைத்த மண்ணை காலிலிருந்து மேல் நோக்கி பூச வேண்டும். கண், வாய், காது தவிர்த்து உடல் முழுவதும் பூசுதல் நல்லது.
இதனால் உடல் சூடு தணிகிறது.
உடலை இயக்குகின்ற வாத, பித்த, கபத்தின் நிலை சீராகுகிறது. தச வாயுக்களின் செயல்பாடு தூண்டப்படுகிறது. பித்த அதிகரிப்பு குறைவதால் இரத்தம் சுத்தமாவதுடன் இரத்தம் தங்குதடையின்றி உடல் முழுவதும் சென்று அடைகிறது.
உடலில் உள்ள நச்சுத்தன்மை வாய்ந்த நீர்களை மண் உறிஞ்சிக் கொள்கிறது. இதனால் உடல் உறுப்புகள் பலம் பெறுகின்றன. நரம்புகள் புத்துணர்வு பெறுகின்றன. எலும்புகள் வலுவடைகின்றன. மேலும் மன அழுத்தம் குறைகிறது. சரும பாதிப்புகள் நீங்கி சருமம் பாதுகாப்படைகிறது. அதுபோல் உடலில் சில குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள கட்டி, புண், படை போன்றவற்றுக்கு அப்பகுதியில் மண் பூச்சைத் தொடர்ந்து சில நாட்கள் செய்து வந்தால் விரைவில் குணம் கிடைக்கும்.
வயிற்றைச் சுற்றி மண் பற்றுப் போட்டால் அசீரணம், மலச்சிக்கல், வயிற்றுக் கடுப்பு ஆகியவை குணமாகும். நெற்றியில் பற்று போட்டால் தலைவலி நீங்கும்.
இன்றும் கிராமங்களில், சோப்புகளுக்குப் பதிலாக கரப்பான் என்ற மண் வகையை உடம்பில் தேய்த்து குளிக்கும் வழக்கம் உள்ளது.
மண்ணை, வயிற்றுப் பகுதியில் வைத்துக் கட்டினால் அஜீரணம், வாயுக் கோளாறு, வயிற்றுப்பொருமல் போன்றவை நீங்கும். மேலும் உடலின் உஷ்ணத்தைக் குறைப்பதால் வயிற்றுப் போக்கு உள்ளவர்களுக்கு உடனே நிவாரணம் கிடைக்கும்.
பொதுவாக மண் பட்டியை 15 நிமிடங்களுக்கு மேல் கட்டியிருக்கக் கூடாது.
கை, கால், மூட்டு வலி, இடுப்பு வலி, கழுத்து வலி போன்றவற்றிற்கு மண்பட்டி சிகிச்சை நல்லது.
ஆகையால்தான் இயற்கை சிகிச்சை முறைகளில் மண் குளியல் முக்கிய சிகிச்சை முறையாக கருதப்பட்டு செயல்படுத்தி வருகிறார்கள். பழங்காலங்களில் எல்லா கிராமங்களிலும் இதை பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். இன்றைய கால கட்டத்தில் சிறந்த சிகிச்சை முறையாக செய்தும் வருகிறார்கள்.
Re: சுற்றுபுறசுழல்- பல தளங்களின் தொகுப்பு
பேரழிவை சீரமைக்க 90 நாட்கள்!
vayal
[size=16]என்ன செய்ய வேண்டும்… எப்படிச் செய்ய வேண்டும்?
ஆலோசனை சொல்லும் ஐ.ஏ.எஸ். அதிகாரி
தமிழகம் சந்தித்து இருக்கும் பேரழிவைச் சீர்செய்ய இன்னும் 90 நாட்களே உள்ளன. வரும் மே மாதம் சட்டமன்றத் தேர்தல் நடக்க இருக்கிறது. அதற்கான தேர்தல் அறிவிப்பு தேதி வெளியாவதற்குள் புனரமைப்புப் பணிகளைச் செய்தாக வேண்டும். அரசுக்கு இருக்கும் நெருக்கடி இது. அதற்குள் நிலைமையை எப்படிச் சரி செய்யலாம்? – பதற வைக்கும் கேள்வி இது.
இப்போது பதவியில் இருக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரி யாரிடமும் இதனைக் கேட்க முடியாது. அவர்களுக்குப் பதில் சொல்லும் அதிகாரம் தரப்படவில்லை என்பதால் ஓய்வுபெற்ற அதிகாரி சிவக்குமாரிடம் கேட்டோம். தமிழக அரசில் 35 ஆண்டுகள் பணியில் இருந்து ஓய்வுபெற்றவர் அவர். 2001-ம் வருடத்தில் இருந்து 2006-ம் ஆண்டு வரை தமிழகம் சந்தித்த சுனாமி, ஒரு பூகம்பம், 4 வறட்சி, 7 வெள்ளம்… ஆகியவற்றை நேரடியாகப் பணியில் இருந்து 5 வருட காலத்தில் கவனித்த அனுபவம் உள்ள அவர் சொன்ன ஆலோசனைகள் இங்கே…
‘‘தற்போது சென்னை மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பு கடந்த 100 ஆண்டுகளில் சந்திக்காதது. சுமார் 15 லட்சம் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டி ருக்கிறார்கள். சென்னையை ஒட்டியுள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்களிலும் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை பல லட்சங்களைத் தாண்டும். சுனாமி, வறட்சி, நிலநடுக்கம் ஆகியவற்றைவிட வெள்ளப் பாதிப்பு கொடுமையானது.
[/size]
மாநில பேரிடர் மேலாண்மை கமிஷனராக சந்தானம் பணியாற்றிய போது, நான் கூடுதல் கமிஷனராக இருந்தேன். பேரிடர் நிர்வாகத்தை அறிந்தவன் என்ற அடிப்படையில் சில யோசனைகளைச் சொல்ல நினைக்கிறேன்.
எத்தனை பேர் இறந்தார்கள்? எத்தனை வீடுகள் பாதிப்பு? சொத்து மதிப்பு எவ்வளவு?… போன்ற சேதங்களை உடனடியாகக் கணக்கீடு செய்யவேண்டும். இப்போது சுமார் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் வரை தனியார் மற்றும் பொது சொத்துக்கள் சேதம் அடைந்துள்ளன. அடையாறு மற்றும் கூவம் நதிக்கரைகளில் குடியிருந்த சுமார் ஒன்றரை லட்சம் குடிசை வீடுகள் முற்றிலுமாக அழிந்து விட்டன. அங்கு குடியிருந்தவர்கள் அனைவரும் ஏழைத் தொழிலாளர்கள். அவர்களின் அடையாளங்களான ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, மின் அட்டை, வங்கி கணக்குப் புத்தகங்கள், குழந்தைகளின் பாடப் புத்தகங்கள், கேஸ் சிலிண்டர்… இப்படி அடிப்படையான ஆதாரங்கள் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன. அந்த அசல் ஆவணங்களுக்கு நகல் ஆவணங்கள் வழங்க வேண்டும். நிரந்தர குடியிருப்புகளில் வெள்ள நீர் புகுந்ததால், வீட்டுப் பொருட்கள், ஆவணங்கள், சோபா, கார், டி.வி. ஃப்ரிட்ஜ், ஏசி, பீரோவில் உள்ள துணிமணிகள், சமையல் பொருட்கள் போன்றவை முழுமையாக அழிந்துவிட்டன. ஒரு வீட்டுக்கு குறைந்தபட்சம் ஒரு லட்சம் முதல் 3 லட்சம் ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டிருக்கிறது. பாதிப்புகளை எதிர்கொண்டவர்களைக் கணக்கிட்டு, உடனடி நிவாரணமாக குடும்பத்துக்கு உதவித்தொகை வழங்கலாம். வீட்டுக்கடன் செலுத்து பவர்களுக்கு ஓர் ஆண்டுக்கு தவணைகட்ட விதிவிலக்கு வழங்க மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்.
வெள்ள நிவாரண நிர்வாகத்தில் அனுபவம் உள்ள அமைச்சர் ஒருவரை தனிப் பணியாக நியமிக்க வேண்டும். அவருக்கு முக்கிய முடிவுகள் எடுக்கும் அதிகாரத்தையும் அளிக்கவேண்டும். மூத்த ஐ.ஏ.ஸ். ஒருவரை தலைமைச் செயலாளர் அந்தஸ்த்தில் நியமிக்க வேண்டும். ஏற்கெனவே வெள்ளப் பணிகளைக் கவனித்த அனுபவம் உள்ள அதிகாரிகளை அவருக்குக் கீழே நியமிக்க வேண்டும். பிறகு, பகுதிவாரியாகப் பிரித்து துடிப்பான இளம் அதிகாரிகள் வசம் நிவாரணப் பணிகள் ஒப்படைக்கப்பட வேண்டும். முதலில் ஆற்றங்கரை, புறம்போக்கு பகுதிகளில் உள்ள பாதிக்கப்பட்ட குடிசைகளின் எண்ணிக்கையைக் கணக்கீடு செய்ய வேண்டும். அடுத்து, நிரந்தரமான குடியிருப்புகள் பற்றிய விவரங்களைப் பகுதிவாரியாகத் தயார் செய்யவேண்டும்.
மின்சாரத் துறை, கல்வித் துறை, மருத்துவத் துறை, சிவில் சப்ளைஸ், மெட்ரோ வாட்டர், உள்ளாட்சித் துறை, நெடுஞ்சாலை, பொதுப்பணித் துறை… போன்ற துறைகள் சேதங்களைக் கணக்கெடுத்து உடனடியாகச் சீர் செய்யவேண்டும். சீர் செய்யவேண்டிய பணிகளைச் செயல்படுத்த டெண்டர் விடவேண்டும். அம்பத்தூர், கிண்டி போன்ற தொழிற்பேட்டைகளில் ஏராளமான தொழிற்சாலைகள் அடியோடு சேதப்பட்டுள்ளன. சென்னையில் உள்ள நூற்றுக்கணக்கான ஐ.டி. நிறுவனங்களில் வெள்ளநீர் புகுந்துவிட்டது. அவற்றைச் சீரமைக்க நடவடிக்கைத் தேவை.
[/size]
மற்ற மாவட்டத்தில் இருந்து துப்புரவுப் பணியாளர்கள், கொத்தனார்கள், மரம் வேலை செய்கிறவர்கள், எலக்ட்ரீஷியன்கள், பிளம்பர்கள், க்ளீனர்கள், பெயின்டர்கள்… என பல ஆயிரம் பேர்களை உடனடியாக வரவழைத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும். செங்கற்கள் மற்றும் சிமென்ட் மட்டுமே சுமார் 50 ஆயிரம் டன் தேவைப்படும். இவற்றை நியாயமான விலையில் மக்களுக்குக் கிடைக்க அரசு ஆணைகள் வெளியிட வேண்டும். ஆஸ்பெஸ்ட்டாஸ் கூரைகள் அமைக்க போதிய அளவில் வெளி மாநிலத்தில் இருந்து இறக்குமதி செய்யவேண்டும். இது ஒருபுறமிருக்க… வெள்ளத்தால் சீரழிந்த நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள், மாநகராட்சி ரோடுகள்.. சரிசெய்ய கணக்கெடுத்து வேண்டிய டெண்டர்கள் விடவேண்டும். அப்போதுதான் சென்னை மாநகரத்தின் இயல்பு வாழ்க்கையை குறிப்பிட்ட காலத்துக்குள் புனர் அமைக்க முடியும்’’ என்றார் அவர்.
ஆட்சியாளர்களின் கனிவான கவனத்துக்கு![/size]
vayal
[size=16]என்ன செய்ய வேண்டும்… எப்படிச் செய்ய வேண்டும்?
ஆலோசனை சொல்லும் ஐ.ஏ.எஸ். அதிகாரி
தமிழகம் சந்தித்து இருக்கும் பேரழிவைச் சீர்செய்ய இன்னும் 90 நாட்களே உள்ளன. வரும் மே மாதம் சட்டமன்றத் தேர்தல் நடக்க இருக்கிறது. அதற்கான தேர்தல் அறிவிப்பு தேதி வெளியாவதற்குள் புனரமைப்புப் பணிகளைச் செய்தாக வேண்டும். அரசுக்கு இருக்கும் நெருக்கடி இது. அதற்குள் நிலைமையை எப்படிச் சரி செய்யலாம்? – பதற வைக்கும் கேள்வி இது.
இப்போது பதவியில் இருக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரி யாரிடமும் இதனைக் கேட்க முடியாது. அவர்களுக்குப் பதில் சொல்லும் அதிகாரம் தரப்படவில்லை என்பதால் ஓய்வுபெற்ற அதிகாரி சிவக்குமாரிடம் கேட்டோம். தமிழக அரசில் 35 ஆண்டுகள் பணியில் இருந்து ஓய்வுபெற்றவர் அவர். 2001-ம் வருடத்தில் இருந்து 2006-ம் ஆண்டு வரை தமிழகம் சந்தித்த சுனாமி, ஒரு பூகம்பம், 4 வறட்சி, 7 வெள்ளம்… ஆகியவற்றை நேரடியாகப் பணியில் இருந்து 5 வருட காலத்தில் கவனித்த அனுபவம் உள்ள அவர் சொன்ன ஆலோசனைகள் இங்கே…
‘‘தற்போது சென்னை மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பு கடந்த 100 ஆண்டுகளில் சந்திக்காதது. சுமார் 15 லட்சம் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டி ருக்கிறார்கள். சென்னையை ஒட்டியுள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்களிலும் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை பல லட்சங்களைத் தாண்டும். சுனாமி, வறட்சி, நிலநடுக்கம் ஆகியவற்றைவிட வெள்ளப் பாதிப்பு கொடுமையானது.
[/size]
[size]
மாநில பேரிடர் மேலாண்மை கமிஷனராக சந்தானம் பணியாற்றிய போது, நான் கூடுதல் கமிஷனராக இருந்தேன். பேரிடர் நிர்வாகத்தை அறிந்தவன் என்ற அடிப்படையில் சில யோசனைகளைச் சொல்ல நினைக்கிறேன்.
எத்தனை பேர் இறந்தார்கள்? எத்தனை வீடுகள் பாதிப்பு? சொத்து மதிப்பு எவ்வளவு?… போன்ற சேதங்களை உடனடியாகக் கணக்கீடு செய்யவேண்டும். இப்போது சுமார் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் வரை தனியார் மற்றும் பொது சொத்துக்கள் சேதம் அடைந்துள்ளன. அடையாறு மற்றும் கூவம் நதிக்கரைகளில் குடியிருந்த சுமார் ஒன்றரை லட்சம் குடிசை வீடுகள் முற்றிலுமாக அழிந்து விட்டன. அங்கு குடியிருந்தவர்கள் அனைவரும் ஏழைத் தொழிலாளர்கள். அவர்களின் அடையாளங்களான ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, மின் அட்டை, வங்கி கணக்குப் புத்தகங்கள், குழந்தைகளின் பாடப் புத்தகங்கள், கேஸ் சிலிண்டர்… இப்படி அடிப்படையான ஆதாரங்கள் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன. அந்த அசல் ஆவணங்களுக்கு நகல் ஆவணங்கள் வழங்க வேண்டும். நிரந்தர குடியிருப்புகளில் வெள்ள நீர் புகுந்ததால், வீட்டுப் பொருட்கள், ஆவணங்கள், சோபா, கார், டி.வி. ஃப்ரிட்ஜ், ஏசி, பீரோவில் உள்ள துணிமணிகள், சமையல் பொருட்கள் போன்றவை முழுமையாக அழிந்துவிட்டன. ஒரு வீட்டுக்கு குறைந்தபட்சம் ஒரு லட்சம் முதல் 3 லட்சம் ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டிருக்கிறது. பாதிப்புகளை எதிர்கொண்டவர்களைக் கணக்கிட்டு, உடனடி நிவாரணமாக குடும்பத்துக்கு உதவித்தொகை வழங்கலாம். வீட்டுக்கடன் செலுத்து பவர்களுக்கு ஓர் ஆண்டுக்கு தவணைகட்ட விதிவிலக்கு வழங்க மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்.
வெள்ள நிவாரண நிர்வாகத்தில் அனுபவம் உள்ள அமைச்சர் ஒருவரை தனிப் பணியாக நியமிக்க வேண்டும். அவருக்கு முக்கிய முடிவுகள் எடுக்கும் அதிகாரத்தையும் அளிக்கவேண்டும். மூத்த ஐ.ஏ.ஸ். ஒருவரை தலைமைச் செயலாளர் அந்தஸ்த்தில் நியமிக்க வேண்டும். ஏற்கெனவே வெள்ளப் பணிகளைக் கவனித்த அனுபவம் உள்ள அதிகாரிகளை அவருக்குக் கீழே நியமிக்க வேண்டும். பிறகு, பகுதிவாரியாகப் பிரித்து துடிப்பான இளம் அதிகாரிகள் வசம் நிவாரணப் பணிகள் ஒப்படைக்கப்பட வேண்டும். முதலில் ஆற்றங்கரை, புறம்போக்கு பகுதிகளில் உள்ள பாதிக்கப்பட்ட குடிசைகளின் எண்ணிக்கையைக் கணக்கீடு செய்ய வேண்டும். அடுத்து, நிரந்தரமான குடியிருப்புகள் பற்றிய விவரங்களைப் பகுதிவாரியாகத் தயார் செய்யவேண்டும்.
மின்சாரத் துறை, கல்வித் துறை, மருத்துவத் துறை, சிவில் சப்ளைஸ், மெட்ரோ வாட்டர், உள்ளாட்சித் துறை, நெடுஞ்சாலை, பொதுப்பணித் துறை… போன்ற துறைகள் சேதங்களைக் கணக்கெடுத்து உடனடியாகச் சீர் செய்யவேண்டும். சீர் செய்யவேண்டிய பணிகளைச் செயல்படுத்த டெண்டர் விடவேண்டும். அம்பத்தூர், கிண்டி போன்ற தொழிற்பேட்டைகளில் ஏராளமான தொழிற்சாலைகள் அடியோடு சேதப்பட்டுள்ளன. சென்னையில் உள்ள நூற்றுக்கணக்கான ஐ.டி. நிறுவனங்களில் வெள்ளநீர் புகுந்துவிட்டது. அவற்றைச் சீரமைக்க நடவடிக்கைத் தேவை.
[/size]
[size]
மற்ற மாவட்டத்தில் இருந்து துப்புரவுப் பணியாளர்கள், கொத்தனார்கள், மரம் வேலை செய்கிறவர்கள், எலக்ட்ரீஷியன்கள், பிளம்பர்கள், க்ளீனர்கள், பெயின்டர்கள்… என பல ஆயிரம் பேர்களை உடனடியாக வரவழைத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும். செங்கற்கள் மற்றும் சிமென்ட் மட்டுமே சுமார் 50 ஆயிரம் டன் தேவைப்படும். இவற்றை நியாயமான விலையில் மக்களுக்குக் கிடைக்க அரசு ஆணைகள் வெளியிட வேண்டும். ஆஸ்பெஸ்ட்டாஸ் கூரைகள் அமைக்க போதிய அளவில் வெளி மாநிலத்தில் இருந்து இறக்குமதி செய்யவேண்டும். இது ஒருபுறமிருக்க… வெள்ளத்தால் சீரழிந்த நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள், மாநகராட்சி ரோடுகள்.. சரிசெய்ய கணக்கெடுத்து வேண்டிய டெண்டர்கள் விடவேண்டும். அப்போதுதான் சென்னை மாநகரத்தின் இயல்பு வாழ்க்கையை குறிப்பிட்ட காலத்துக்குள் புனர் அமைக்க முடியும்’’ என்றார் அவர்.
ஆட்சியாளர்களின் கனிவான கவனத்துக்கு![/size]
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|