சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Today at 3:46

» பல்சுவை-3
by rammalar Yesterday at 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Yesterday at 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Yesterday at 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Yesterday at 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Yesterday at 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Yesterday at 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Yesterday at 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Yesterday at 6:17

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Yesterday at 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Yesterday at 5:05

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Yesterday at 4:34

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Yesterday at 4:29

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26

» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24

» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42

» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40

» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13

» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11

» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57

» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44

» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43

» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35

ராஜாவை மாற்றிய கத்தரிக்காய் Khan11

ராஜாவை மாற்றிய கத்தரிக்காய்

Go down

ராஜாவை மாற்றிய கத்தரிக்காய் Empty ராஜாவை மாற்றிய கத்தரிக்காய்

Post by rammalar Tue 2 Feb 2016 - 16:33

ராஜாவை மாற்றிய கத்தரிக்காய் Chithiram_2337382g
-மதகஜ ராஜாவுக்கு மிகவும் சுவையான உணவைச் சாப்பிட வேண்டும் என்று எப்போதுமே ஆசை. ஒரு நாள் அவர் மந்திரி சபையைக் கூட்டினார்.
-
“உலகிலேயே சுவையான உணவு எது?” என்று கேட்டார் அரசர்.
-
ஒவ்வொரு மந்திரியும் ஒவ்வொரு காய்கறி, பழம், விலங்குகளின் பெயரைச் சொன்னார்கள்.
-
கடைசியில் மந்திரி திம்மப்பனிடம் கேட்டார் அரசர்.
-
“மன்னா, உலகிலேயே மிகவும் சுவையான உணவு கத்தரிக்காய்தான்” என்றார் அவர்.
-
“ அப்படியா, உடனே கத்தரிக்காயைச் சமையுங்கள்” என்று சமையல்காரருக்கு ஆணையிட்டார் அரசர். கத்தரிக்காய் உணவு தயாரானவுடன் மிகவும் ஆவலாகச் சாப்பிட உட்கார்ந்தார்.
சாப்பிட்டுவிட்டு “தூ…”வெனத் துப்பிவிட்டு எழுந்தார் அரசர்.
-
“என்ன திம்மப்பரே, கத்தரிக்காய் ருசி சகிக்கலையே. இதைப் போய் எப்படி மிகவும் சுவையானது என்று சொன்னீர்கள்” என்று கோபமாகக் கேட்டார் அரசர்.
-
“மன்னா, இதில் கோபப்பட ஏதுமில்லை. நம் அரண்மனை சமையல்காரர்களுக்குக் கத்தரிக்காயைச் சமைக்கத் தெரியவில்லை. எனக்குத் தெரிந்து ஒரு பாட்டி இருக்கிறார். அவர் கத்தரிக்காய் சமைத்துக் கொடுத்தால் உலகிலேயே கத்தரிக்காய்தான் மிகவும் சுவையானது என்று நீங்களும் ஒத்துக் கொள்வீர்கள்” என்றார் மந்திரி.
-
“அப்படியானால் அந்தப் பாட்டியை உடனே அழைத்து வாருங்கள்” என்றார் அரசர்.
-
“மன்னா, பாட்டி இங்கே வரமாட்டார். நாம்தான் அங்கே செல்ல வேண்டும். அந்தப் பாட்டி காட்டில் இருக்கிறார்” என்றார் திம்மப்பன்.
-
“ஓ…அப்படியா, சரி. நாளைக்கே வேட்டைக்குக் கிளம்புவோம். அப்படியே பாட்டியின் கையால் கத்தரிக்காயைச் சமைத்து சாப்பிட்டுவிடுவோம்” என்றார் அரசர்.
-
மறுநாள் மன்னர் தன் படையோடு காட்டுக்குக் கிளம்பினார். காட்டில் படையினர் திசை மாறிச் சென்றுவிட்டார்கள். அரசரும் திம்மப்பனும் ஒன்றாகக் காட்டில் அலைந்து திரிந்தார்கள். உண்ண உணவு இல்லாமல் வாடினார்கள். இரு நாட்கள் ஓடின. இருவரும் பசியால் களைப்புடன் நடந்துகொண்டிந்தபோது ஒரு குடிசையைக் கண்டார்கள்.
--
“மன்னா, இதுதான் அந்தக் கத்தரிக்காய் பாட்டியின் வீடு” என்றார் திம்மப்பன்.
-
“மிகவும் நல்லது போ. உணவு இல்லாமல் நாம் இருவரும் பசியுடன் இருக்கிறோம். வா, பாட்டியைச் சென்று பார்ப்போம்” என்று அரசர் கூறினார்.
-
வீட்டுக்குள் இருவரும் நுழைந்தார்கள். தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டார்கள்.
-
“ பாட்டி மிகவும் பசியாக இருக்கிறது. சாப்பிட உணவு செய்து கொடுக்க முடியுமா?” என பசியால் பரிதாபமாகக் கேட்டார் அரசர்.
-
“பாட்டி, உங்கள் கையால் கத்தரிக்காய் சாப்பிட வேண்டும் என்று அரசருக்கு மிகவும் ஆசை. சாப்பாட்டுடன் கத்தரிக்காய் கிடைக்கும் அல்லவா?” என்று கேட்டார் திம்மப்பன்.
-
“கத்தரிக்காய் இல்லாத சாப்பாடா” என்று பாட்டி எதிர்க் கேள்வி கேட்டுவிட்டுச் சமைலறைக்குள் சென்றார்.
-
சிறிது நேரத்தில் கத்தரிக்காய் சாம்பார், கத்தரிக்காய் பொரியல், கத்திரிக்காய்க் கூட்டு எனச் சாப்பாடு தயாராகிவிட்டது.
-
அரசர் சாப்பாட்டைச் சாப்பிட்டார். அப்படியே மலைத்துப் போனார்.
-
“திம்மப்பரே, உண்மையிலேயே கத்தரிக்காய் மிகவும் சுவையான உணவுதான்” என்று விழுந்து விழுந்து பாராட்டினார் அரசர். பாட்டிக்குப் பரிசுகளும் வழங்கினார். அப்போது திசை மாறிய படையினரும் அங்கே வந்து சேர்ந்தார்கள்.
-
நாடு திரும்பியதும் அரசவையைக் கூட்டினார் அரசர். திம்மப்பன் கூறியதுபோல கத்தரிக்காய்தான் உலகிலேயே சுவையான உணவு என அறிவித்தார். அப்போது இடைமறித்தார் திம்மப்பன்.
-
“மன்னா, பசியோடு எந்த உணவைச் சாப்பிட்டாலும் அது சுவையாகத்தான் இருக்கும். காட்டில் இரண்டு நாட்கள் பசியுடன் இருந்தோம். அப்போது பசியோடு
கத்தரிக்காயைச் சாப்பிட்டதால்தான் அது மிகவும் சுவையாக இருந்தது.
-
கத்தரிக்காய் மட்டுமல்ல, அப்போது எதைச் சாப்பிட்டிருந்தாலும் அது சுவையானதாகத்தான் இருந்திருக்கும். உலகில் உள்ள எல்லா உணவு வகைகளுக்கும் ஒவ்வொரு சுவை இருக்கிறது. நாம் பசியுடன் சாப்பிடும் போதுதான் அது சுவைக்கிறது” என்று நீண்ட விளக்கம் கொடுத்தார்.
-
திம்மப்பனின் கூற்றை மன்னரும் உணர்ந்து ஏற்றுக்கொண்டார்.



தமிழ் தி இந்து காம்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24304
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum