சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Today at 15:22

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 4:43

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

அவமதிப்பு வழக்கு: நீதிபதி கர்ணனுக்கு மனநல மருத்துவ பரிசோதனை Khan11

அவமதிப்பு வழக்கு: நீதிபதி கர்ணனுக்கு மனநல மருத்துவ பரிசோதனை

Go down

அவமதிப்பு வழக்கு: நீதிபதி கர்ணனுக்கு மனநல மருத்துவ பரிசோதனை Empty அவமதிப்பு வழக்கு: நீதிபதி கர்ணனுக்கு மனநல மருத்துவ பரிசோதனை

Post by rammalar Tue 2 May 2017 - 4:27

புதுடெல்லி,

கொல்கத்தா ஐகோர்ட்டு நீதிபதி சி.எஸ்.கர்ணனுக்கு 
மனநல மருத்துவ பரிசோதனை நடத்த சுப்ரீம் கோர்ட்டு 
உத்தரவிட்டது.

நீதிபதி கர்ணன்

-
சென்னை ஐகோர்ட்டு நீதிபதியாக பணியாற்றியவர் சி.எஸ்.கர்ணன். கடந்த 2011–ம் ஆண்டு நவம்பர் மாதம், இவர், சக நீதிபதிகள் தன்னை சாதி அடிப்படையில் பாரபட்சமாக நடத்துவதாக குற்றம் சாட்டினார்.

2014–ம் ஆண்டு ஜனவரி மாதம், நீதிபதிகளை தேர்வு செய்யும் ‘கொலிஜியம்’ அமைப்புக்கு எதிராக கருத்துகளை தெரிவித்தார். பின்னர், சென்னை ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்து ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் கடிதங்கள் எழுதினார். பிறகு அவர் கொல்கத்தா ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்டார்.

அவமதிப்பு வழக்கு

-
சக நீதிபதிகளுக்கு எதிரான நீதிபதி கர்ணனின் கடிதங்கள் அடிப்படையில், சுப்ரீம் கோர்ட்டு தானாக முன்வந்து அவர் மீது அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. அதை விசாரிக்க தலைமை நீதிபதி தலைமையில் 7 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சட்ட அமர்வு அமைக்கப்பட்டது. நீதிபதி கர்ணன் நேரில் ஆஜராக வேண்டும் என்று இந்த அமர்வு சம்மன் அனுப்பியது. ஆனால், நீதிபதி கர்ணன் ஆஜராகாததால், அவர் நீதிமன்ற பணிகள் எதையும் செய்யக்கூடாது என்று கடந்த பிப்ரவரி 8–ந்தேதி உத்தரவு பிறப்பித்தது.

இதையடுத்து, கடந்த மார்ச் 31–ந்தேதி, சுப்ரீம் கோர்ட்டு அரசியல் சட்ட அமர்வு முன்பு நீதிபதி கர்ணன் ஆஜரானார். அப்போது, சக நீதிபதிகளுக்கு எதிரான அவரது குற்றச்சாட்டுகளுக்கு அரசியல் சட்ட அமர்வு விளக்கம் கேட்டது.

தனக்கு நீதிபதி அதிகாரம் மீண்டும் வழங்கப்பட வேண்டும் என்ற நீதிபதி கர்ணனின் கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டது. அதனால், தான் மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராக போவதில்லை என்று நீதிபதி கர்ணன் கூறினார்.

வெளிநாடு செல்ல தடை

-
அதையடுத்து, நீதிபதி கர்ணன் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தார். தனக்கு எதிரான வழக்கை விசாரித்து வரும் தலைமை நீதிபதி உள்ளிட்ட நீதிபதிகள், ஏப்ரல் 28–ந்தேதி, தன் முன்பு ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.

அன்று யாரும் ஆஜராகாததால், அவர்கள் மே 1–ந்தேதி (நேற்று) ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டதுடன், அவர்கள் வெளிநாடு செல்ல அனுமதிக்கக்கூடாது என்று விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இது, நீதித்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மனநல மருத்துவ பரிசோதனை

-
இந்நிலையில், நீதிபதி கர்ணனுக்கு எதிரான அவமதிப்பு வழக்கு, தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான அரசியல் சட்ட அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:–


கொல்கத்தா ஐகோர்ட்டு நீதிபதி கர்ணனுக்கு மே 4–ந்தேதி மனநல மருத்துவ பரிசோதனை நடத்த வேண்டும். கொல்கத்தா அரசு மருத்துவமனை, இதற்கான டாக்டர்கள் குழுவை அமைக்க வேண்டும். அந்த குழுவுக்கு உதவ போலீஸ் அதிகாரிகள் அடங்கிய குழுவை மேற்கு வங்காள மாநில போலீஸ் டி.ஜி.பி. அமைக்க வேண்டும்.

மருத்துவ பரிசோதனை பற்றிய அறிக்கையை மே 8–ந்தேதியோ அல்லது அதற்கு முன்போ சுப்ரீம் கோர்ட்டில் டாக்டர்கள் குழு சமர்ப்பிக்க வேண்டும். அதற்கு மறுநாள் (9–ந்தேதி) இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும்.

உத்தரவை பரிசீலிக்க வேண்டாம்

-
நீதிபதி கர்ணன் விரும்பினால், இந்த உத்தரவு பற்றிய தனது கருத்தை தெரிவிக்கலாம். மே 8–ந்தேதிக்குள் அவரிடம் இருந்து எந்த பதிலும் வராவிட்டால், சொல்வதற்கு அவரிடம் எதுவும் இல்லை என்ற முடிவுக்கு வருவோம்.

நீதிபதி கர்ணன், நீதித்துறை பணிகள் எதுவும் மேற்கொள்ளக்கூடாது என்று கடந்த பிப்ரவரி 8–ந்தேதி நாங்கள் உத்தரவிட்டு இருந்தோம். அதன்படி, அந்த தேதிக்கு பிறகு அவர் பிறப்பித்த எந்த உத்தரவையும் நாடு முழுவதும் உள்ள எந்த கோர்ட்டோ, தீர்ப்பாயமோ, ஆணையமோ பரிசீலிக்க தேவையில்லை.

இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர்.


நீதிபதி கர்ணன் பதில் உத்தரவு

-
இதற்கிடையே, தான் மருத்துவ பரிசோதனை செய்துகொள்ள மாட்டேன் என்று நீதிபதி கர்ணன் கூறியுள்ளார். அவர் கூறியதாவது:–

நான் நிரபராதி. நல்ல உடல்நிலையுடனும், மனநிலையுடனும் இருக்கிறேன். என்னை மேலும் அவமானப்படுத்துவதற்காக, இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்.

எனது விருப்பத்தை மீறி, என்னிடம் மருத்துவ பரிசோதனை செய்ய வந்தால், மேற்கு வங்காள போலீஸ் டி.ஜி.பி.யை இடைநீக்கம் செய்யும் உத்தரவை பிறப்பிப்பேன்.

எனக்கு எதிராக உத்தரவு பிறப்பித்த சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி உள்ளிட்ட 7 நீதிபதிகளையும் டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று, அங்குள்ள மனநல மருத்துவர்கள் குழு முன்பு ஆஜர்படுத்துமாறு டெல்லி போலீஸ் டி.ஜி.பி.க்கு நான் உத்தரவிடுகிறேன். அங்கு 7 பேருக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தி, அந்த அறிக்கையை 7–ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி கர்ணன் கூறினார்.

அவர் கையெழுத்திட்ட இந்த உத்தரவு, பத்திரிகைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தினத்தந்தி
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24039
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics
» வழக்கு விவரங்களை செல்போன் மூலம் அறிந்து கொள்ள புதிய செயலி அறிமுகம்; சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி தகவல்
» நக்கீரன் ஆசிரியர் கோபால் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
» சொத்துக்குவிப்பு வழக்கு; மீண்டும் 22 ம் தேதி ஜெ., ஆஜராக நீதிபதி உத்தரவு
» 900 பேர் கொல்லப்பட்ட வழக்கு: ஹொஸ்னி முபாரக்கிடம் மறுவிசாரணை செய்யும் நீதிபதி விலகல்
» விஜய் நடித்து, தீபாவளிக்கு திரையிடப்படவுள்ள ‘மெர்சல்’ படத்துக்கு தடை கோரிய வழக்கு தலைமை நீதிபதி அமர

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum