Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
வழக்கு விவரங்களை செல்போன் மூலம் அறிந்து கொள்ள புதிய செயலி அறிமுகம்; சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி தகவல்
Page 1 of 1
வழக்கு விவரங்களை செல்போன் மூலம் அறிந்து கொள்ள புதிய செயலி அறிமுகம்; சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி தகவல்
சென்னை,
நாடு முழுவதும் வழக்கு ஆவணங்களை ‘டிஜிட்டல்’ மயமாக்க சுப்ரீம் கோர்ட்டு முடிவு செய்தது. அதன்படி ஐகோர்ட்டு, மாவட்ட கோர்ட்டுகளில் டிஜிட்டல் மையங்கள் தொடங்கப்பட உள்ளன. இதற்கான பணிகள் நடந்து வருகிறது. சென்னை ஐகோர்ட்டில் அமைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் மையத்தின் திறப்பு விழா நேற்று நடந்தது.
சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி மதன் பி.லோகுர் மையத்தை திறந்து வைத்தார். அதேபோன்று சமரச தீர்வு மூலம் வழக்குகளுக்கு விரைவில் தீர்வு காண்பது குறித்த மாவட்ட நீதிபதிகளுக்கான பயிற்சியையும் அவர் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியின் போது அவர் கூறியதாவது:–
ஆவணங்களை பாதுகாப்பாக வைத்திருப்பது நீதிபரிபாலனத்துக்கு மிகவும் அத்தியாவசியம் ஆகும். ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்குவதால் இடம் மிச்சமாகும். ஆவணங்களை ஸ்கேன் செய்து சேமித்து வைப்பதன் மூலம் தேவைப்படும் ஆவணங்களை எளிதாக பெற முடியும்.
கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்கு விவரங்களை செல்போன் மூலம் தெரிந்து கொள்ள புதிய செல்போன் செயலியை அறிமுகப்படுத்தி உள்ளோம்.
இந்த செயலி தொடங்கப்பட்ட ஒரு வாரத்தில் 2 லட்சம் பேர் இந்த செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர். இந்த செயலி அடுத்த வாரம் முதல் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும்.
அதேபோன்று இ–மெயில் மூலம் வழக்குகள் குறித்த விவரங்களை அறிந்து கொள்ளும் வசதியையும் அறிமுகப்படுத்தி உள்ளோம். இந்த வசதி தொடங்கப்பட்ட 24 மணி நேரத்தில் 3 லட்சம் பேர் தங்களை சேர்த்துக்கொண்டுள்ளனர்.
தேசிய நீதித்துறை தகவல் தொகுப்பில் ஏற்கனவே 4 ஐகோர்ட்டுகள் இணைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் வழக்கு விவரங்களை உடனுக்குடன் பெற முடியும். அடுத்த 10 நாட்களில் மேலும் 10 ஐகோர்ட்டுகள் இதில் இணைக்கப்படும்.
நீதி கிடைப்பதில் தாமதம் இருப்பதாக மக்கள் கூறி வருகின்றனர். மின்னனு மயமாக்கப்படுவதால் இன்னும் 2 மாதங்களில் இதில் பெரிய அளவில் மாற்றம் ஏற்படும்.
கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்குகளை சமரச தீர்வு மூலம் விரைந்து முடிக்க முடியும். இதனால் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை வெகுவாக குறையும். பொதுவாக சமரச தீர்வு 60 நாட்களுக்குள் முடிவுக்கு வர வேண்டும்.
ஆனால் புதுடெல்லியில் ஏராளமான வழக்குகள் 30 நாட்களில் முடிவுக்கு வந்துள்ளன. சமரச தீர்வு மூலம் பேசி தீர்க்கப்பட வேண்டிய வழக்குகளை முடிக்க சமரச தீர்வு மையத்தை அணுகுமாறு வக்கீல்களுக்கு, மாவட்ட நீதிபதிகள் அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதிகள் ஹுலுவாடி ரமேஷ், ராஜீவ்சக்தேர், புஷ்பா சத்யநாராயணா, கிருஷ்ணகுமார், கிருபாகரன், வைத்தியநாதன், தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயண், சுப்ரீம் கோர்ட்டு வக்கீல் எஸ்.செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
------------------------
தினத்தந்தி
நாடு முழுவதும் வழக்கு ஆவணங்களை ‘டிஜிட்டல்’ மயமாக்க சுப்ரீம் கோர்ட்டு முடிவு செய்தது. அதன்படி ஐகோர்ட்டு, மாவட்ட கோர்ட்டுகளில் டிஜிட்டல் மையங்கள் தொடங்கப்பட உள்ளன. இதற்கான பணிகள் நடந்து வருகிறது. சென்னை ஐகோர்ட்டில் அமைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் மையத்தின் திறப்பு விழா நேற்று நடந்தது.
சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி மதன் பி.லோகுர் மையத்தை திறந்து வைத்தார். அதேபோன்று சமரச தீர்வு மூலம் வழக்குகளுக்கு விரைவில் தீர்வு காண்பது குறித்த மாவட்ட நீதிபதிகளுக்கான பயிற்சியையும் அவர் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியின் போது அவர் கூறியதாவது:–
ஆவணங்களை பாதுகாப்பாக வைத்திருப்பது நீதிபரிபாலனத்துக்கு மிகவும் அத்தியாவசியம் ஆகும். ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்குவதால் இடம் மிச்சமாகும். ஆவணங்களை ஸ்கேன் செய்து சேமித்து வைப்பதன் மூலம் தேவைப்படும் ஆவணங்களை எளிதாக பெற முடியும்.
கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்கு விவரங்களை செல்போன் மூலம் தெரிந்து கொள்ள புதிய செல்போன் செயலியை அறிமுகப்படுத்தி உள்ளோம்.
இந்த செயலி தொடங்கப்பட்ட ஒரு வாரத்தில் 2 லட்சம் பேர் இந்த செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர். இந்த செயலி அடுத்த வாரம் முதல் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும்.
அதேபோன்று இ–மெயில் மூலம் வழக்குகள் குறித்த விவரங்களை அறிந்து கொள்ளும் வசதியையும் அறிமுகப்படுத்தி உள்ளோம். இந்த வசதி தொடங்கப்பட்ட 24 மணி நேரத்தில் 3 லட்சம் பேர் தங்களை சேர்த்துக்கொண்டுள்ளனர்.
தேசிய நீதித்துறை தகவல் தொகுப்பில் ஏற்கனவே 4 ஐகோர்ட்டுகள் இணைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் வழக்கு விவரங்களை உடனுக்குடன் பெற முடியும். அடுத்த 10 நாட்களில் மேலும் 10 ஐகோர்ட்டுகள் இதில் இணைக்கப்படும்.
நீதி கிடைப்பதில் தாமதம் இருப்பதாக மக்கள் கூறி வருகின்றனர். மின்னனு மயமாக்கப்படுவதால் இன்னும் 2 மாதங்களில் இதில் பெரிய அளவில் மாற்றம் ஏற்படும்.
கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்குகளை சமரச தீர்வு மூலம் விரைந்து முடிக்க முடியும். இதனால் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை வெகுவாக குறையும். பொதுவாக சமரச தீர்வு 60 நாட்களுக்குள் முடிவுக்கு வர வேண்டும்.
ஆனால் புதுடெல்லியில் ஏராளமான வழக்குகள் 30 நாட்களில் முடிவுக்கு வந்துள்ளன. சமரச தீர்வு மூலம் பேசி தீர்க்கப்பட வேண்டிய வழக்குகளை முடிக்க சமரச தீர்வு மையத்தை அணுகுமாறு வக்கீல்களுக்கு, மாவட்ட நீதிபதிகள் அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதிகள் ஹுலுவாடி ரமேஷ், ராஜீவ்சக்தேர், புஷ்பா சத்யநாராயணா, கிருஷ்ணகுமார், கிருபாகரன், வைத்தியநாதன், தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயண், சுப்ரீம் கோர்ட்டு வக்கீல் எஸ்.செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
------------------------
தினத்தந்தி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25148
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» லோக்பால் மசோதாவில் பிரதமரையும் உள்படுத்த வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி
» ’திருக்கோயில்’ புதிய செயலி அறிமுகம்
» நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு
» அர்ச்சகர் நியமனத்தில் தற்போதுள்ள நிலையே தொடர வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
» ஜனாதிபதியால் கருணை மனு நிராகரிக்கப்பட்ட 8 பேரை தூக்கில் போட சுப்ரீம் கோர்ட்டு தடை
» ’திருக்கோயில்’ புதிய செயலி அறிமுகம்
» நடன பார்கள் பற்றிய சில சட்ட பிரிவுகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு
» அர்ச்சகர் நியமனத்தில் தற்போதுள்ள நிலையே தொடர வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
» ஜனாதிபதியால் கருணை மனு நிராகரிக்கப்பட்ட 8 பேரை தூக்கில் போட சுப்ரீம் கோர்ட்டு தடை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|