Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவைby rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13
» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47
» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07
» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00
நான் அரசியலுக்கு வருவதில் தவறு ஏதுமில்லை என நினைக்கிறேன்: உதயநிதி ஸ்டாலின் நேர்காணல்
Page 1 of 1
நான் அரசியலுக்கு வருவதில் தவறு ஏதுமில்லை என நினைக்கிறேன்: உதயநிதி ஸ்டாலின் நேர்காணல்
-
நகைச்சுவைப் படங்களில் அறிமுகமாகி,
பின்னர் ‘மனிதன்’, ‘கெத்து’ என்று சீரியஸான படங்களில்
நடித்துவந்த உதயநிதி ஸ்டாலின் இப்போது மீண்டும்
‘சரவணன் இருக்க பயமேன்’ படத்தின் மூலம் நகைச்சுவை
படங்களின் பக்கம் திரும்பியிருக்கிறார்.
இப்படத்துக்காக திரையரங்குகளை ஒப்பந்தம் செய்வதில்
பிஸியாக இருந்த அவரிடம் பேசியதிலிருந்து...
‘சரவணன் இருக்க பயமேன்’ படத்தின் மூலம் மீண்டும்
நகைச்சுவைப் படங்களின் பக்கம் திரும்பியிருக்கிறீர்களே?
வித்தியாசமான படங்களோடு அவ்வப்போது நகைச்சுவைப்
படங்களிலும் நடிக்க வேண்டும் என்பது என் விருப்பம். ‘
சரவணன் இருக்க பயமேன்’ முழுக்க எழில் சார் படம்தான்.
அவருடைய முந்தைய 3 படங்களின் பாணியிலேயே
இந்தப்படமும் இருக்கும்.
இதுவரை நான் தயாரித்த படங்களில், கொடுத்த பட்ஜெட்டை
விடக் கொஞ்சம் அதிகமாக செலவாகும். ஆனால், முதல்
முறையாக கொடுத்த பட்ஜெட், சொன்ன நாட்கள் என
அனைத்திலுமே குறைவாக முடித்துக் கொடுத்து விட்டார்
எழில் சார்.
இதுவரை நான் நடித்த படங்களில் பேயெல்லாம் இருக்கது .
இதில் கொஞ்சம் இருக்கிறது. பேயை வைத்துக் காமெடி
செய்துள்ளோம். இப்படத்தில் எனக்கு வில்லன் மாதிரியான
காமெடி கதாபாத்திரத்தில் சூரி கலக்கியிருக்கிறார்.
படத்தில் தொப்பி சின்னமெல்லாம் இடம்பெற்றுள்ளதாமே?
கட்சி தொடர்பான சில விஷயங்கள் படத்தில் இருக்கிறது.
அதில் சின்னமாகத் தொப்பியை வைத்தோம். ஆனால்,
தற்போதுள்ள அரசியல் சூழலை வைத்து நாங்கள் அப்படிப்
படமாக்கவில்லை. எங்களுடைய படத்தின் படப்பிடிப்பு
முன்பே முடிந்துவிட்டது.
அப்பா இந்தப் படத்தைப் பார்த்தபோது, அக்காட்சிகள் வரும்
போது சிரித்தார். அப்போதுதான் எங்களுக்கே தெரிந்தது.
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25129
மதிப்பீடுகள் : 1186
Re: நான் அரசியலுக்கு வருவதில் தவறு ஏதுமில்லை என நினைக்கிறேன்: உதயநிதி ஸ்டாலின் நேர்காணல்
நீங்கள் 3 நாட்கள் கழித்து படங்களை விமர்சனம் செய்யச் சொல்லி யுள்ளீர்களே. இது சாத்தியம் என நினைக்கிறீர்களா?
கண்டிப்பாகச் சாத்தியமில்லைதான். படம் நன்றாக இருந்தால் உடனே யும், நன்றாக இல்லை என்றால் மூன்று நாட்கள் கழித்தும் விமர்சனம் செய்யுங்கள் என வேண்டுகோள்தான் வைத்தேன். இன்று சமூக வலைதளத் தின் தாக்கம் மிகவும் பெருகிவிட்டது. ஒரு படத்தின் ரிசல்ட் என்ன என்பது ரிலீஸான நாளிலேயே சமூக வலைதளங்கள் மூலம் தெரிந்துவிடுகிறது. இந்நிலையில் 120 ரூபாய் வசூலித்துவிட்டு, படத்தை பற்றி 3 நாட்கள் கழித்துத்தான் பேச வேண்டும் என்பதில் நியாயமில்லைதான்.
பட வெளியீட்டில் இப்போது நிறையச் சிக்கல்கள் இருக்கிறதே. ஒரு தயாரிப்பாளராக இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
தமிழ் திரையுலகைப் பொறுத்தவரையில் படம் தயாரிப்பது கொஞ்சம் கடினம் என்றால், வெளியிடுவது மிகவும் கடினம். நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் சம்பளம் மட்டுமே படத்தின் பட்ஜெட்டில் பாதியை எடுத்துக் கொள்கிறது. அதை எல்லாம் கடந்து வெளியீட்டு தேதி அறிவித்தால், அதே வேளையில் 5 படங்கள் போட்டிக்கு வருகின்றன. அனைவருமே போட்டி போட்டுக் கொண்டு திரையரங்குகளை ஒப்பந்தம் செய்வதால் படத்தின் வசூல் பாதிக்கிறது. இதனால் 95 சதவீத படங்கள் தோல்வியடைகின்றன. திருட்டு விசிடி, பண மதிப்பு நீக்கம் உள்ளிட்டவற்றால் தமிழ் சினிமாவுக்குக் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
உங்களின் நெருங்கிய நண்பர் விஷால். அப்படி யிருந்தும் தயாரிப்பாளர் சங்கம் - நடிகர் சங்கம் என எதிலுமே உங்களைக் காண முடிவதில்லையே?
விஷால் நடிகர் சங்கத்தில் செயலாளராக இருப்பது அவருடைய தனிப்பட்ட விஷயம். இப்போதும் எங்களுடைய நட்பு தொடர்கிறது. நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கம் தொடர்பாக நாங்கள் பேசிக் கொண்டதே இல்லை. இரண்டு சங்கங்களிலுமே நான் எதற்காகவும் போய் நின்றது கிடையாது. அவர்களுடைய உதவியை நான் எதிர்பார்ப்பதும் கிடையாது. அதே போல அவர்களும் என்னிடம் எதையும் எதிர்பார்ப்பதில்லை.
உதயநிதி ஸ்டாலின் வழக்கறிஞர்கள் அணி, மருத்துவர்கள் அணி என உருவாகிவிட்டதே. அரசியலுக்கு வருவீர்களா?
அப்படி ஒரு எண்ணம் தற்போதைக்கு இல்லை. தாத்தா மற்றும் அப்பா இருவருக்காகவும் தேர்தல் பிரச் சாரத்தில் ஈடுபட்டுள்ளேன். எனது கவனம் தற்போது முழுமையாக சினிமாவில் இருக்கிறது. பின்வரும் நாட்களில் என்ன நடக்கும் என்பதை இப்போதைக்கு சொல்ல முடியாது. மேலும், நான் அரசியலுக்கு வருவதில் தவறு ஏதுமில்லை என நினைக்கிறேன்.
-
கா.இசக்கி முத்து
தி இந்து
கண்டிப்பாகச் சாத்தியமில்லைதான். படம் நன்றாக இருந்தால் உடனே யும், நன்றாக இல்லை என்றால் மூன்று நாட்கள் கழித்தும் விமர்சனம் செய்யுங்கள் என வேண்டுகோள்தான் வைத்தேன். இன்று சமூக வலைதளத் தின் தாக்கம் மிகவும் பெருகிவிட்டது. ஒரு படத்தின் ரிசல்ட் என்ன என்பது ரிலீஸான நாளிலேயே சமூக வலைதளங்கள் மூலம் தெரிந்துவிடுகிறது. இந்நிலையில் 120 ரூபாய் வசூலித்துவிட்டு, படத்தை பற்றி 3 நாட்கள் கழித்துத்தான் பேச வேண்டும் என்பதில் நியாயமில்லைதான்.
பட வெளியீட்டில் இப்போது நிறையச் சிக்கல்கள் இருக்கிறதே. ஒரு தயாரிப்பாளராக இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
தமிழ் திரையுலகைப் பொறுத்தவரையில் படம் தயாரிப்பது கொஞ்சம் கடினம் என்றால், வெளியிடுவது மிகவும் கடினம். நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் சம்பளம் மட்டுமே படத்தின் பட்ஜெட்டில் பாதியை எடுத்துக் கொள்கிறது. அதை எல்லாம் கடந்து வெளியீட்டு தேதி அறிவித்தால், அதே வேளையில் 5 படங்கள் போட்டிக்கு வருகின்றன. அனைவருமே போட்டி போட்டுக் கொண்டு திரையரங்குகளை ஒப்பந்தம் செய்வதால் படத்தின் வசூல் பாதிக்கிறது. இதனால் 95 சதவீத படங்கள் தோல்வியடைகின்றன. திருட்டு விசிடி, பண மதிப்பு நீக்கம் உள்ளிட்டவற்றால் தமிழ் சினிமாவுக்குக் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
உங்களின் நெருங்கிய நண்பர் விஷால். அப்படி யிருந்தும் தயாரிப்பாளர் சங்கம் - நடிகர் சங்கம் என எதிலுமே உங்களைக் காண முடிவதில்லையே?
விஷால் நடிகர் சங்கத்தில் செயலாளராக இருப்பது அவருடைய தனிப்பட்ட விஷயம். இப்போதும் எங்களுடைய நட்பு தொடர்கிறது. நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கம் தொடர்பாக நாங்கள் பேசிக் கொண்டதே இல்லை. இரண்டு சங்கங்களிலுமே நான் எதற்காகவும் போய் நின்றது கிடையாது. அவர்களுடைய உதவியை நான் எதிர்பார்ப்பதும் கிடையாது. அதே போல அவர்களும் என்னிடம் எதையும் எதிர்பார்ப்பதில்லை.
உதயநிதி ஸ்டாலின் வழக்கறிஞர்கள் அணி, மருத்துவர்கள் அணி என உருவாகிவிட்டதே. அரசியலுக்கு வருவீர்களா?
அப்படி ஒரு எண்ணம் தற்போதைக்கு இல்லை. தாத்தா மற்றும் அப்பா இருவருக்காகவும் தேர்தல் பிரச் சாரத்தில் ஈடுபட்டுள்ளேன். எனது கவனம் தற்போது முழுமையாக சினிமாவில் இருக்கிறது. பின்வரும் நாட்களில் என்ன நடக்கும் என்பதை இப்போதைக்கு சொல்ல முடியாது. மேலும், நான் அரசியலுக்கு வருவதில் தவறு ஏதுமில்லை என நினைக்கிறேன்.
-
கா.இசக்கி முத்து
தி இந்து
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25129
மதிப்பீடுகள் : 1186
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|