Latest topics
» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்ததுby rammalar Yesterday at 16:13
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Yesterday at 16:10
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Yesterday at 16:07
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Yesterday at 16:03
» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Yesterday at 15:51
» பேல்பூரி - கண்டது
by rammalar Yesterday at 10:17
» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58
» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45
» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38
» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25
» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32
» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26
» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12
» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40
» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33
» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01
» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05
» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26
» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01
» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40
» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22
» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21
» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29
» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19
» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49
» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56
» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37
» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14
» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13
» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53
கேரளாவில் ஜூலை 1–ந்தேதி முதல் மதுபான ‘பார்’கள் மீண்டும் திறக்கப்படுகின்றன
2 posters
Page 1 of 1
கேரளாவில் ஜூலை 1–ந்தேதி முதல் மதுபான ‘பார்’கள் மீண்டும் திறக்கப்படுகின்றன
திருவனந்தபுரம்,
கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான முந்தைய
ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆட்சியின் போது 5 நட்சத்திர
ஓட்டல்களில் உள்ள மதுபான பார்கள் தவிர மற்ற அனைத்து
இடங்களிலும் உள்ள மதுபான பார்கள் மூடப்பட்டன.
இதனால் அங்கு சுற்றுலா துறை பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில், அங்கு மூடப்பட்ட மதுபான ‘பார்’களை
மீண்டும் திறக்குமாறு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு
தலைமையிலான தற்போதைய ஆளும் இடதுசாரி ஜனநாயக
முன்னணி, அரசுக்கு சிபாரிசு செய்தது.
மீண்டும் திறக்கப்படுகிறது
அதன்படி புதிய மதுபான கொள்கையை அறிவித்துள்ள
கேரள அரசு, வருகிற ஜூலை 1–ந்தேதி முதல் மீண்டும்
மதுபான பார்களை திறப்பதற்கு அனுமதி வழங்க முடிவு
செய்து உள்ளது.
இதுபற்றி கேரள முதல்–மந்திரி பினராயி விஜயன் நேற்று
திருவனந்தபுரத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்
கூறியதாவது:–
முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசின் மதுபான கொள்கை
தோல்வி அடைந்து விட்டது. 5 நட்சத்திர ஓட்டல்கள் தவிர
மற்ற இடங்களில் உள்ள மதுபான பார்களை மூட
உத்தரவிட்டதால், சுற்றுலா தொழில் பெரிதும்
பாதிக்கப்பட்டது.
ஜூலை 1–ந்தேதி முதல்...
கேரள அரசு தற்போது புதிய மதுபான கொள்கையை வகுத்து
உள்ளது. இந்த புதிய மதுபான கொள்கை வருகிற
ஜூலை 1–ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி
அன்று முதல் கேரளாவில் உள்ள 3 மற்றும் 4 நட்சத்திர
ஓட்டல்களில் மதுபான பார்கள் திறக்க உரிமம் வழங்கப்படும்.
மதுபானம் அருந்துவதற்கான குறைந்தபட்ச வயது வரம்பு
21 வயதில் இருந்து 23 வயதாக உயர்த்தப்படுகிறது.
இவ்வாறு பினராயி விஜயன் கூறினார்.
மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் இருந்து
500 மீட்டருக்கு அப்பால்தான் மதுபான கடைகள் இருக்க
வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவால்
மதுபான பார்கள் பாதிக்கப்பட்டதாகவும், அவை வேறு
இடங்களில் மாற்றி அமைக்கப்படும் என்றும் அவர்
தெரிவித்தார்.
குறையவில்லை
முன்னதாக இடதுசாரி ஜனநாயக முன்னணியின் அமைப்பாளர்
வைக்கம் விஸ்வம் நிருபர்களிடம் பேசுகையில், கடந்த
காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போது, 5 நட்சத்திர ஓட்டல்களில்
உள்ள மதுபான பார்கள் தவிர மற்ற அனைத்து பார்களும்
மூடப்பட்ட போதிலும் கேரளாவில் மதுபானம் அருந்துவது
குறையவில்லை என்றும், மதுபானம் கிடைப்பதை கட்டுப்
படுத்துவது தங்கள் கொள்கை இல்லை என்றும்,
விழிப்புணர்வு பிரசாரத்தின் மூலம் மது அருந்துவதை
குறைப்பதுதான் தங்கள் கொள்கை என்றும் அப்போது அவர்
கூறினார்.
சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே பிறப்பித்த உத்தரவில்
குறிப்பிட்டுள்ள நிபந்தனைகளின்படி மதுபான பார்களை திறக்க
ஒப்புதல் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
காங்கிரஸ் எதிர்ப்பு
கேரளாவில் மீண்டும் மதுபான பார்களை திறக்கும் அரசின்
முடிவுக்கு எதிர்க்கட்சியான காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்து
உள்ளது.
-
-------------------------------
தினத்தந்தி
கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான முந்தைய
ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆட்சியின் போது 5 நட்சத்திர
ஓட்டல்களில் உள்ள மதுபான பார்கள் தவிர மற்ற அனைத்து
இடங்களிலும் உள்ள மதுபான பார்கள் மூடப்பட்டன.
இதனால் அங்கு சுற்றுலா துறை பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில், அங்கு மூடப்பட்ட மதுபான ‘பார்’களை
மீண்டும் திறக்குமாறு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு
தலைமையிலான தற்போதைய ஆளும் இடதுசாரி ஜனநாயக
முன்னணி, அரசுக்கு சிபாரிசு செய்தது.
மீண்டும் திறக்கப்படுகிறது
அதன்படி புதிய மதுபான கொள்கையை அறிவித்துள்ள
கேரள அரசு, வருகிற ஜூலை 1–ந்தேதி முதல் மீண்டும்
மதுபான பார்களை திறப்பதற்கு அனுமதி வழங்க முடிவு
செய்து உள்ளது.
இதுபற்றி கேரள முதல்–மந்திரி பினராயி விஜயன் நேற்று
திருவனந்தபுரத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்
கூறியதாவது:–
முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசின் மதுபான கொள்கை
தோல்வி அடைந்து விட்டது. 5 நட்சத்திர ஓட்டல்கள் தவிர
மற்ற இடங்களில் உள்ள மதுபான பார்களை மூட
உத்தரவிட்டதால், சுற்றுலா தொழில் பெரிதும்
பாதிக்கப்பட்டது.
ஜூலை 1–ந்தேதி முதல்...
கேரள அரசு தற்போது புதிய மதுபான கொள்கையை வகுத்து
உள்ளது. இந்த புதிய மதுபான கொள்கை வருகிற
ஜூலை 1–ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி
அன்று முதல் கேரளாவில் உள்ள 3 மற்றும் 4 நட்சத்திர
ஓட்டல்களில் மதுபான பார்கள் திறக்க உரிமம் வழங்கப்படும்.
மதுபானம் அருந்துவதற்கான குறைந்தபட்ச வயது வரம்பு
21 வயதில் இருந்து 23 வயதாக உயர்த்தப்படுகிறது.
இவ்வாறு பினராயி விஜயன் கூறினார்.
மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் இருந்து
500 மீட்டருக்கு அப்பால்தான் மதுபான கடைகள் இருக்க
வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவால்
மதுபான பார்கள் பாதிக்கப்பட்டதாகவும், அவை வேறு
இடங்களில் மாற்றி அமைக்கப்படும் என்றும் அவர்
தெரிவித்தார்.
குறையவில்லை
முன்னதாக இடதுசாரி ஜனநாயக முன்னணியின் அமைப்பாளர்
வைக்கம் விஸ்வம் நிருபர்களிடம் பேசுகையில், கடந்த
காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போது, 5 நட்சத்திர ஓட்டல்களில்
உள்ள மதுபான பார்கள் தவிர மற்ற அனைத்து பார்களும்
மூடப்பட்ட போதிலும் கேரளாவில் மதுபானம் அருந்துவது
குறையவில்லை என்றும், மதுபானம் கிடைப்பதை கட்டுப்
படுத்துவது தங்கள் கொள்கை இல்லை என்றும்,
விழிப்புணர்வு பிரசாரத்தின் மூலம் மது அருந்துவதை
குறைப்பதுதான் தங்கள் கொள்கை என்றும் அப்போது அவர்
கூறினார்.
சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே பிறப்பித்த உத்தரவில்
குறிப்பிட்டுள்ள நிபந்தனைகளின்படி மதுபான பார்களை திறக்க
ஒப்புதல் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
காங்கிரஸ் எதிர்ப்பு
கேரளாவில் மீண்டும் மதுபான பார்களை திறக்கும் அரசின்
முடிவுக்கு எதிர்க்கட்சியான காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்து
உள்ளது.
-
-------------------------------
தினத்தந்தி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23668
மதிப்பீடுகள் : 1186
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» ஜூலை 11ம் தேதி முதல் ரயில்வே ஊழியர் 'ஸ்டிரைக்'!
» ஜூலை 1-ம் தேதி முதல் புதுச்சேரி-ஐதராபாத் இடையே விமான சேவை தொடக்கம்
» 4 இலட்சம் அரச ஓய்வூதியருக்கு ஜூலை முதல் கொடுப்பனவு அதிகரிப்பு
» மீண்டும் கேரளாவில் பன்றிக் காய்ச்சல்-1,190 பேர் பாதிப்பு
» டெல்லி மார்க்கெட்டில் 13-ந்தேதி மீண்டும் குண்டு வெடிக்கும்; தீவிரவாதிகள் புதிய மிரட்டல்
» ஜூலை 1-ம் தேதி முதல் புதுச்சேரி-ஐதராபாத் இடையே விமான சேவை தொடக்கம்
» 4 இலட்சம் அரச ஓய்வூதியருக்கு ஜூலை முதல் கொடுப்பனவு அதிகரிப்பு
» மீண்டும் கேரளாவில் பன்றிக் காய்ச்சல்-1,190 பேர் பாதிப்பு
» டெல்லி மார்க்கெட்டில் 13-ந்தேதி மீண்டும் குண்டு வெடிக்கும்; தீவிரவாதிகள் புதிய மிரட்டல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|