Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!by rammalar Today at 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
தமிழகத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரிக்கு பிறகே உள்ளாட்சி தேர்தல் நடத்த முடியும் -மாநில தேர்தல் ஆணையம்
Page 1 of 1
தமிழகத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரிக்கு பிறகே உள்ளாட்சி தேர்தல் நடத்த முடியும் -மாநில தேர்தல் ஆணையம்
புதுடெல்லி,
தமிழக உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் கடந்த ஆண்டே
முடிவடைந்த நிலையில், அவற்றுக்கான தேர்தல் நடத்துவதில்
தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது. இது தொடர்பாக
சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகளும் நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில், உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை 15 நாட்களுக்குள்
வெளியிட மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி ‘
தமிழ்நாடு பொது நல வழக்குக்கான மையம், மதுரை’ சார்பில்
கே.கே.ரமேஷ் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு ஒன்றை
தாக்கல் செய்திருந்தார்.
விசாரணை நடந்தது
இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் ரஞ்ஜன் கோகாய்,
நவீன் சின்கா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று
விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் மூத்த
வக்கீல் அரியமா சுந்தரம், மாநில தேர்தல் ஆணையம் தரப்பில்
மூத்த வக்கீல் ரஞ்சித் குமார், மனுதாரர் தரப்பில் வக்கீல்
ஜெயசுகின் ஆகியோர் ஆஜராகி இருந்தனர்.
இந்த வழக்கு விசாரணை தொடங்கியதும் தமிழக அரசு மற்றும்
மாநில தேர்தல் ஆணையத்தின் தரப்பில் முன்வைக்கப்பட்ட
வாதங்கள் வருமாறு:-
தொகுதி மறுவரையறை
தமிழ்நாட்டில் தொகுதி மறுவரையறை தொடர்பான வழக்கு
தற்போது நிலுவையில் உள்ளது. 1991 மக்கள் தொகை
கணக்கின்படி முன்பு தொகுதி மறுவரையறை செய்யப்பட்டது.
தற்போது 2011-ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்
அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்ய வேண்டும்.
இது தொடர்பான வழக்கு ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டில்
நீதிபதி ஜே.செல்லமேஸ்வர் தலைமையிலான அமர்வு முன்பு
நிலுவையில் உள்ளது. தொகுதி மறுவரையறை குறித்த
அறிவிப்பு இப்போதுதான் வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்த பணிகள் அடுத்த ஆண்டு (2018) ஜனவரி
மாதத்தில்தான் முடிவடையும்.
இந்த அறிக்கை பிப்ரவரி மாதத்தில்தான் தாக்கல் செய்யப்படும்.
எனவே அதற்கு பிறகுதான் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை
வெளியிட்டு தேர்தல் நடத்த முடியும்.
எனவே, இந்த வழக்கை தொகுதி மறுவரையறை கோரி தி.மு.க.
ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டில் தொடுத்துள்ள வழக்குடன் இணைத்து
விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும்
இவ்வாறு தமிழக அரசு மற்றும் மாநில தேர்தல் ஆணையம் சார்பில்
வாதிடப்பட்டது.
ஏற்க தேவையில்லை
இதற்கு மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் ஜெயசுகின் ஆட்சேபம்
தெரிவித்தார். அவர் தனது வாதத்தில், ‘சென்னை ஐகோர்ட்டு
ஏற்கனவே இது தொடர்பான வழக்கை முழுக்க விசாரித்து அனைத்து
அம்சங்களையும் பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டு செப்டம்பர்
17-ந் தேதி தேர்தலை அறிவித்து நவம்பர் 17-ந் தேதிக்குள் நடத்தி முடிக்க
வேண்டும் என்று உத்தரவிட்டது.
எனவே, தமிழக அரசு மற்றும் மாநில தேர்தல் ஆணையத்தின்
கோரிக்கையை ஏற்க தேவையில்லை’ என்று குறிப்பிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஏற்கனவே சுப்ரீம்
கோர்ட்டில் நிலுவையில் உள்ள தொகுதி மறுவரையறை தொடர்பான
வழக்குடன் இந்த வழக்கையும் இணைத்து விசாரிக்க உத்தரவிட்டனர்.
தினத்தந்தி
தமிழக உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் கடந்த ஆண்டே
முடிவடைந்த நிலையில், அவற்றுக்கான தேர்தல் நடத்துவதில்
தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது. இது தொடர்பாக
சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகளும் நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில், உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை 15 நாட்களுக்குள்
வெளியிட மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி ‘
தமிழ்நாடு பொது நல வழக்குக்கான மையம், மதுரை’ சார்பில்
கே.கே.ரமேஷ் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு ஒன்றை
தாக்கல் செய்திருந்தார்.
விசாரணை நடந்தது
இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் ரஞ்ஜன் கோகாய்,
நவீன் சின்கா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று
விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் மூத்த
வக்கீல் அரியமா சுந்தரம், மாநில தேர்தல் ஆணையம் தரப்பில்
மூத்த வக்கீல் ரஞ்சித் குமார், மனுதாரர் தரப்பில் வக்கீல்
ஜெயசுகின் ஆகியோர் ஆஜராகி இருந்தனர்.
இந்த வழக்கு விசாரணை தொடங்கியதும் தமிழக அரசு மற்றும்
மாநில தேர்தல் ஆணையத்தின் தரப்பில் முன்வைக்கப்பட்ட
வாதங்கள் வருமாறு:-
தொகுதி மறுவரையறை
தமிழ்நாட்டில் தொகுதி மறுவரையறை தொடர்பான வழக்கு
தற்போது நிலுவையில் உள்ளது. 1991 மக்கள் தொகை
கணக்கின்படி முன்பு தொகுதி மறுவரையறை செய்யப்பட்டது.
தற்போது 2011-ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்
அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்ய வேண்டும்.
இது தொடர்பான வழக்கு ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டில்
நீதிபதி ஜே.செல்லமேஸ்வர் தலைமையிலான அமர்வு முன்பு
நிலுவையில் உள்ளது. தொகுதி மறுவரையறை குறித்த
அறிவிப்பு இப்போதுதான் வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்த பணிகள் அடுத்த ஆண்டு (2018) ஜனவரி
மாதத்தில்தான் முடிவடையும்.
இந்த அறிக்கை பிப்ரவரி மாதத்தில்தான் தாக்கல் செய்யப்படும்.
எனவே அதற்கு பிறகுதான் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை
வெளியிட்டு தேர்தல் நடத்த முடியும்.
எனவே, இந்த வழக்கை தொகுதி மறுவரையறை கோரி தி.மு.க.
ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டில் தொடுத்துள்ள வழக்குடன் இணைத்து
விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும்
இவ்வாறு தமிழக அரசு மற்றும் மாநில தேர்தல் ஆணையம் சார்பில்
வாதிடப்பட்டது.
ஏற்க தேவையில்லை
இதற்கு மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் ஜெயசுகின் ஆட்சேபம்
தெரிவித்தார். அவர் தனது வாதத்தில், ‘சென்னை ஐகோர்ட்டு
ஏற்கனவே இது தொடர்பான வழக்கை முழுக்க விசாரித்து அனைத்து
அம்சங்களையும் பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டு செப்டம்பர்
17-ந் தேதி தேர்தலை அறிவித்து நவம்பர் 17-ந் தேதிக்குள் நடத்தி முடிக்க
வேண்டும் என்று உத்தரவிட்டது.
எனவே, தமிழக அரசு மற்றும் மாநில தேர்தல் ஆணையத்தின்
கோரிக்கையை ஏற்க தேவையில்லை’ என்று குறிப்பிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஏற்கனவே சுப்ரீம்
கோர்ட்டில் நிலுவையில் உள்ள தொகுதி மறுவரையறை தொடர்பான
வழக்குடன் இந்த வழக்கையும் இணைத்து விசாரிக்க உத்தரவிட்டனர்.
தினத்தந்தி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25138
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» உள்ளாட்சி தேர்தல்: வேட்பு மனு தாக்கலுக்கு சொத்து பட்டியல் அவசியம்- ஆணையம் உத்தரவு
» ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக குற்றச்சாட்டு பதிவு செய்தாலே 6 ஆண்டு தடை: தேர்தல் ஆணையம் பரிந்துரை
» அடுத்த மாதம் 3வது வாரத்தில் உள்ளாட்சி தேர்தல்-திமுக கூட்டணியில் காங் நீடிக்குமா?
» உள்ளாட்சித் தேர்தல் தேதியை அறிவிப்பதில் சிக்கல்: தேர்தல் ஆணையம் ஐகோர்ட்டில் பதில் மனு
» உ.பி., உள்ளாட்சி தேர்தல்: பா.ஜ.,வில் 25 முஸ்லிம்கள்
» ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக குற்றச்சாட்டு பதிவு செய்தாலே 6 ஆண்டு தடை: தேர்தல் ஆணையம் பரிந்துரை
» அடுத்த மாதம் 3வது வாரத்தில் உள்ளாட்சி தேர்தல்-திமுக கூட்டணியில் காங் நீடிக்குமா?
» உள்ளாட்சித் தேர்தல் தேதியை அறிவிப்பதில் சிக்கல்: தேர்தல் ஆணையம் ஐகோர்ட்டில் பதில் மனு
» உ.பி., உள்ளாட்சி தேர்தல்: பா.ஜ.,வில் 25 முஸ்லிம்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|