சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்தது
by rammalar Today at 16:13

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Today at 16:10

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Today at 16:07

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Today at 16:03

» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Today at 15:51

» பேல்பூரி - கண்டது
by rammalar Today at 10:17

» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58

» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45

» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38

» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25

» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32

» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26

» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12

» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40

» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33

» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01

» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05

» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26

» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01

» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40

» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22

» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21

» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29

» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19

» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56

» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14

» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13

» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53

காதலின் வானிலை’வாசகர்களின் கவிதைகள்! - By கவிதைமணி -5 Khan11

காதலின் வானிலை’வாசகர்களின் கவிதைகள்! - By கவிதைமணி -5

Go down

காதலின் வானிலை’வாசகர்களின் கவிதைகள்! - By கவிதைமணி -5 Empty காதலின் வானிலை’வாசகர்களின் கவிதைகள்! - By கவிதைமணி -5

Post by rammalar Thu 25 Oct 2018 - 4:42

காதல்  -  அது 
மோதினால்  வரும்  வானிலை அறிக்கை
மிக பெரிய சூறாவளி!
கண்ணும்  கண்ணும்  நோக்கும் காதல்
விண்ணும் மண்ணும்  முத்தமிடும் 
அழகிய  மழை போல  குளிர்ந்து 
பழகிய  உள்ளங்களையும்  குளிர  வைக்கும்!
இதயமும் இதயமும்  பேசும்  காதல் 
பந்தய  குதிரைமேல்  அமர்ந்து 
வெற்றி வாகைச்  சூடும்  அமரக்காதல்!
காதலில்  வானிலை  அறிக்கை 
படிக்க  வேண்டுமா?
துடிக்கும்  இதயத்துடன்  பேசுங்கள்!
வெயிலும்  மழையும் மாறி மாறி 
சொல்லும் வானிலை அறிக்கை 
கேட்கும் மக்கள்...
காதல் வானிலை அறிக்கை  
கேட்டு   வெயில்  போல 
சுடுச் சொல் சொன்னால்  என்னாவது?  
காதலை காயப்படுத்தும்  சமூகத்தில் 
சாயம்  பூசும்  காதல்களே அதிகம்!
உணர்ந்து  உண்மையறிந்து  காதலித்து 
மகிழ்ச்சியான  வானிலை  அறிக்கை 
வாசியுங்கள்! நேசியுங்கள்
உண்மை  காதலை!

- உஷாமுத்துராமன், மதுரை 

**

மாமாவின் வீட்டிலே
மகிழ்வுடன் பூத்தது
மாதக்கணக்கிலே எந்தன்
மனதுக்குள் நிலைத்தது.

அறிவுச்சுடர் ஒளி வீசும்
ஆற்றல்கள் தந்தது
அகராதி தேடாமலே
அர்த்தம் பல தந்தது.

அஸ்திவாரம் இல்லாமலே
ஆனந்தம் முகிழ்த்தது
பார்வைகள் பரிமாற்றம்
பலநாட்கள் இனித்தது.

என்னவள் எனக்குத்தான் என
என்னுள்ளம் துடித்தது
ஏதும் மாற்றம் வந்திடுமோ என்ற
எச்சரிப்பும் தலை தூக்கியது.

காதலின் வானிலையில்
கடும் புயல் மையம் கொண்டால்
காக்க இனி யார் வருவார்?!
கடவுள் சித்தம் யார் அறிவார்?!

சொக்கநாதர் துணை இருக்க
சொந்தம் விட்டு விலகிடுமோ?
சொர்க்கம் காட்ட  வந்த மயில்
சோகம் காட்டி நகைத்திடுமோ?!

இந்தவாறு மனம் நினைக்க
நொந்த வாழ்வின் நிலையுணர்ந்தேன்
காதலின் வானிலையில்
கடுகி வந்த இன்ப மழை
காலமெல்லாம் எனை நனைத்து
கல்யாண வாழ்வு வரம் தந்ததையா.

- புலவர் களந்தை நரசிம்ம சுப்பிரமணியன்

**

நீலவண்ண வெளியில்
இதயம் உலவும் எண்ணங்கள்
நழுவித் தழுவும் மேகங்கள்.
பூத்ததுபிறை சிரித்தது புருவங்கள்
எண்ணிக்கைதான் முரண்.
மின்னல் அவள் தோரணம்
மேகம் தாங்கும் மண்டபம்.
இடி இடித்த மேளங்கள்
அர்ச்சுன ரதத்தின் தாளங்கள்.
கண்சிமிட்டும் விண்மீன்கள்
கதைகள் சொல்லும் பாட்டிகள்.
பறம்புக்காட்டில் பாரியின் 
தேரில்சிரித்த கொடிமுல்லையே 
வந்துசிரிக்கும் வானவில்.
பாரி சூடிய ஆதினி
அவள் கொண்டுமுடிந்த கொண்டையே
கறுத்துத்திரண்ட கொண்டல்கள்.
மழையில்துளிர்த்த‌ முதல் துளிகளே
சிப்பியில் உயிர்த்த‌ முத்துக்கள்.
இதுவெல்லாம்
ஏதோ பொழுதுகளில் 
நீலவண்ண வெளியில்
நீயும் நானும் 
சொல்லாடிய மொழிகள்
நீ மறந்தும் இருக்கலாம்.
ஆனால்
நாமும் தொலைந்த கணங்களே
மகிழ்ந்து முகிழ்ந்த கணங்கள்
மறக்க இயலாது.
மறுக்கவும் இயலாது.
தாலாட்டும் வானம்தானே சாட்சி !!

- ரமேஷ் கோபாலகிருஷ்ணன், பீனிக்ஸ், அமெரிக்கா

**

உள்ளத்தில் புயல் அடித்தது !
இருந்தும் உதடுகளுக்கு அமைதியாய்
ஒரு மௌனப்பூட்டு !!
பெயர் தெரியாத இலட்சம் பூக்களின்
வாசம் கூட்டி, வசந்தம்
நாசிக்குள் செலுத்தியது !!
உடலெங்கிலும் ஒரு வெப்பம் !
இருந்தும் சில பனிக்கட்டிகள்
படரும் மூளைக்குள் !!
மேகத்திலிருந்து இறங்கி
இடியும் மின்னலும்
இதயத்தில் நுழைந்தது !!
படபடத்துக் குழைந்தது !!
மெதுவாய் அவள்
என்னைத்தாண்டிச்சென்றாள்,
வியர்வை மறந்து,
மழை நீரை சுரக்கத்தொடங்கியது
என் உடல் !!
இப்படி , இப்படி,  எனக்குள் மாறிவரும்
வானிலைக்கு பெயர் தான் காதலோ ?  

- கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி, புதுவை

**

நாசூக்காக நாசி பக்கம் வீசி போன 
வாசம் வந்து பாசமாக பேசு மென்றோ 
காதலின் வானிலை ஏசுதிங்கே பதில் 
கூற வியலாது வாய்க் கூசுதிங்கே 

விரும்பியவை கிடைத்துவிட்டால் 
கோர்த்திடுவார் சரமாய்ப் புகழாரம் 
கிடைக்காத பட்சத்தில் வீதியில் 
இறங்கி வந்து அடித்திடுவார் டமாரம்

கண்ணுக்கு தெரிவதில்லை 
நெஞ்சிக்குள் இருப்பதெல்லாம்
பஞ்சிக்கும் நெருப்புக்கும் பகை 
புகையாத இடமில்லை ஆனாலும் 

வஞ்சி மகளோ வஞ்சித்து விட
பஞ்சாய்ப் பறக்குதடி காதலின் 
வானிலை அறிக்கை யிட்டதனால்
மழைவருமோ புயல்வருமோ சேர்த்த

மானம் மரியாதை கௌரவம் 
நொடிப் பொழுதில் பறந்திடுமோ 
அவரவ ரச்சமே கயிறாகி திரிந்து 
எவரெவர் கழுத்தை நெருக்குமோ

பொருத்திடுவோம் பொங்கி வழியும் 
எரியும் விறகை இழுத்திடும் ஞாயா லயம் 
அனைத்து காதலின் வானிலை 
செய்திகள் தமர்ந்திடும் தன்னாலே 

- ஆபிரகாம் வேளாங்கண்ணி

**

ஆகாரம் 
விளைந்திட
அள்ளி தந்திடும்! 

ஆழ்க்கிணற்றின்
 அடிவயிறோ காய்ந்திருக்க!

பசுமைப்பாய் விரித்திட 
பாய்ந்திடும் நதி,ஆறு பாலைவனமாகி இருக்க!

குளம்,குட்டை குப்பைத்தொட்டி,கழிவறை  ஆகிப்போயிக்க!

நிலை கண்டு 
நிலத்தினில் நின்று
நிழல் - உயிரின் சுவாசம் மேகம் தீண்ட!

நீலவானம் 
நிறம் மாறி
காதல் வானிலை'யில் 
கருவண்ண ஆடை மாற்றி!

நொடியில் 
மல்லிகை சரம் சூடி! 

மோகத்தினில் 
பொழிந்திடும் முத்தமழையோ! 

வழிந்தோடியது 
வையகமெங்கும்
வயல்வெளி'களை தேடி!

**

ஏக்கத்தில்   பைத்தியம்போல்   உளற   வைக்கும்
    ஏளனமாய்   ஊராரைப்   பார்க்க   வைக்கும்
தூக்கம்தாம்    வாராமல்   புரள   வைக்கும்
    தூயபாலும்   பழமெல்லாம்   கசக்க   வைக்கும்
நீக்கமற   யார்முகத்தைப்   பார்த்த   போதும்
    நினைத்தவரின்   உருவந்தான்   தெரிய  வைக்கும்
தீக்கனல்தாம்    பட்டவுடல்   தகித்தல்   போல
    திரும்பதிரும்ப   நினைவுநெஞ்சைத்   துடிக்க   வைக்கும் !

உடல்தன்னை    இளைக்கவைத்துப்   பெண்கள்    மேனி
    உள்ளயெழில்   பசலையாக    மாற   வைக்கும்
இடம்தேடிச்   சந்திக்கத்    தோழி   தோழன்
    இருவரையும்    உதவிக்காய்க்   கெஞ்ச   வைக்கும்
படபடப்பில்   உடல்தளர்ந்து  நடுங்கிக்  கைகள்   
    பணிகளினைத்   தவறுகளாய்   செய்ய  வைக்கும்
மடமையொடு   மறதிவரும்   சொன்ன   சொல்லை
    மறுபடியும்   மறுபடியும்    சொல்ல   வைக்கும் !

அருகருகே   அமர்ந்தபடி   பேசிப்   பேசி
    அலைபாயும்   மனமடக்க   முடிந்தி   டாமல்
ஒருநொடியும்   பிரிந்திடாமல்   அணைப்ப   தற்கும்
    ஓயாமல்  நினைவுகளில்  மூழ்க   வைக்கும்
கருவாகிக்   கவிதைகளாய்   எழுதி   எழுதி
    கரம்பேசிக்   குறுஞ்செய்தி    அனுப்பி   வைக்கும்
திருமணத்தை   எதிர்த்தவரை   எதிர்த்தே   ஓடித்
    திருத்தாலி  கட்டுதற்கே  துணிய  வைக்கும் !

- பாவலர்  கருமலைத்தமிழாழன்


**
எனக்கு உயிரானவளே - காதலின்  வானிலையில்
நண்பர்கள் குரு கிரகமாகி விடுகிறாா்கள
எதிரிகளாே சனி கிரகமாகி விடுகிறாா்கள்
நீ வானில் வீதியுலா செல்வதைப்படம்பிடிக்கவே
பூமியிலிருந்து செயற்கைக் கோள்கள்யாவும் படையெடுக்கின்றன;
கோள்களின் சுழற்சியெல்லாம் சட்டென நிற்கிறதடி
உனது நடை அழகை காண்கையில்;
உனது பாதம்படாத நட்சத்திரப் பூக்களெல்லாம் - காதலெனும்
வானிலையில் தன்னைத்தானே எரித்துக் கொள்கின்றன;
விண்கற்களும் ஒன்றொடொன்று மோதிக்கொள்கின்றன - இப்பேரழகியைப்
பெறுவதற்கு ஆடவனாய் பிறக்கவில்லையே என்றெண்ணி;
என்னவளே காதல்வானில் மறந்தும் சிரித்துவிடாதே
மேகமற்ற நிலையிலும் மின்னல் தோன்றிவிடும்;
வானவில் ஆடையும் வளைந்தேவிட்டது - நீ
அணிந்த கைத்தறி ஆடையழகுக்கு ஈடாகாமல்;
இடி தாக்குதல்கூட ஏதுமற்றுப்போகிறதடி - நீ
சட்டென வீசிய காந்தப்பாா்வைக்கு முன்னால்;
வானவெளியில் உன் கருங்கூந்தலையும் உலறவிடாதே -
கருமேகம் மயங்கி உன்னை காதலித்துவிடப்போகிறது;
என்னவளே காதலின்வானிலையில் என்னிலையை மறந்தேனடி..
உன்னிலையோடு ஒருநிலையாய் சிலையாய் நின்றேனடி...

- கவிஞர் - இரா. விநாயகமூர்த்தி 

**
மின்னல் ஒளியில் 
செய்த மின்சாரவிழியே..
மழையோடு மறைந்து 
தோன்றும் வானவில்லே..
மனதிற்குள் பெய்திடும்
அழகான காதல்மழையே..
காற்றோடு மேகமும்
பேசும் கவிதைமொழியே..
புயலையும் தென்றலாய்
தவழவைத்த காதலியே..
கனவுஎன்னும் வானில்
மிதக்கவைத்த நிலவே..
காதல்மழை சுமந்து
செல்லும் கருமுகிலே..
வெயிலோடு மழையும்
கொஞ்சிய காலநிலையே..
விண்ணை பெண்ணாக்கியது
காதலின் வானிலையே..
- கவிஞர் நா. நடராசு

**
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23668
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum