Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவைby rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07
» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38
» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38
கீதாஞ்சலியில் ஒரு க(வி)தை:
Page 1 of 1
கீதாஞ்சலியில் ஒரு க(வி)தை:
‘நான் வீடு வீடாகச் சென்று பிச்சை எடுத்துக் கொண்டிருந்தேன்.
திடீரென்று உனது தங்க ரதம் ஒரு அற்புதமான கனவு போல
தூரத்தில் தெரிந்தது;
யார் இந்த மன்னர்களுக் கெல்லாம் மன்னன் என நான் வியந்தேன்!
(விறுவிறுவென்ற கதைத் துவக்கம்!)
‘எனது துயரங்களுக்கெல்லாம் முடிவு வந்து விட்டது என
எண்ணினேன். கேட்காமலே கொடுக்கப்படும் பிச்சைக்காகவும்,
என்னைச் சுற்றிலும் புழுதியில் வாரி இறைக்கப்படும்
செல்வங்களுக்காகவும் நான் காத்துக் கொண்டிருந்தேன்.
(என்ன நடக்கிறது, நடக்கப் போகிறது என்ற நமது எதிர்பார்ப்பு!)
‘அந்த ரதம் நான் இருந்த இடத்தில் வந்து நின்றது.
உன் பார்வை என்மீது விழுந்தது; நீ ஒரு புன்னகையுடன் கீழிறங்கி
வந்தாய். என் வாழ்வின் பேரதிர்ஷ்டம் கடைசியில் வந்தே விட்டது
என நான் கருதினேன்.
நீ திடீரென உனது வலது கையை என் முன்பு நீட்டியபடி கேட்டாய்,
“எனக்குக் கொடுப்பதற்காக உன்னிடம் என்ன உள்ளது?”
(அடடா, எப்படிப்பட்ட திருப்பம்!)
‘ஆஹா! இப்படி ஒரு பிச்சைக்காரனிடம் கைநீட்டிப் பிச்சை
கேட்பது எந்த விதத்தில் சேர்த்தியான அரசனின் வேடிக்கை?
நான் குழப்பத்திலாழ்ந்து, என்ன செய்வதென்று புரியாமல்
நின்றேன். பின்பு எனது பையினுள் கையை விட்டு, மெல்ல
ஒரு சின்னஞ்சிறு தானியத்தை எடுத்து உனக்குக் கொடுத்தேன்.
(புரியாத நிகழ்ச்சி; முடிவு என்ன?)
‘ஆனால், அந்த நாளின் இறுதியில் எனக்கு ஒரு ஆச்சரியம்
காத்திருந்தது; என் பையிலிருந்த எல்லாவற்றையும் தரையில்
கொட்டிப் பார்த்தபோது, ஒரு சின்னஞ்சிறிய தங்க தானியம்
அந்தக் குவியலில் இருந்ததைக் கண்டேன்!
என்னிடமிருக்கும் அனைத்தையும் உனக்குக் கொடுக்க
எனக்கு ஏன் மனமிருக்கவில்லை என்ற பச்சாதாபத்தில்
தவித்து அழலானேன்.’ (ஹ்ம்ம். முடிவு புரிந்தது).
ஆனால் இது தெய்வத்துக்கும் மனிதனுக்குமான ஒருவிதமான
உலகாயதமான பிணைப்பு என்பதில் நம் யாருக்கும் ஐயமில்லை!
(பத்தில் ஒன்பது பேர் இப்படித்தான் செய்கிறோம்!)
சிறுகதைக்கான வடிவத்தில் அழகான கவிதையாக இதை
(வங்க மொழியில்) தாகூர் சொல்லியிருக்கும் பாணி மிகவும்
வியக்க வைக்கிறது.
இப்போது சொல்லுங்கள். உரைநடையில் இந்தக் கதையை
இவ்வளவு அழகாகக் கூறியிருக்க முடியுமா?
ஒரு வங்காள நண்பர், இதை அழகாக வங்க மொழியில்
வாசித்துக் காண்பித்த போது கண்களில் நீரே வந்து விட்டது!
தாகூரின் கவிதைகளில் காணும் அழுத்தமான வார்த்தை
ஜாலங்களை, அவற்றின் பூரணத்துவத்தை, லா ச ராவின்
சிறுகதைகளில் நாம் உணரலாம்.
இவர்கள் இருவருடைய எழுத்துக்களுமே அவற்றின்
பொருட்செறிவுக்காகத் திரும்பத் திரும்பப் படிக்கத் தூண்டும்
சக்தி வாய்ந்தவை.
-
----------------------------
படித்ததில் பிடித்தது
திடீரென்று உனது தங்க ரதம் ஒரு அற்புதமான கனவு போல
தூரத்தில் தெரிந்தது;
யார் இந்த மன்னர்களுக் கெல்லாம் மன்னன் என நான் வியந்தேன்!
(விறுவிறுவென்ற கதைத் துவக்கம்!)
‘எனது துயரங்களுக்கெல்லாம் முடிவு வந்து விட்டது என
எண்ணினேன். கேட்காமலே கொடுக்கப்படும் பிச்சைக்காகவும்,
என்னைச் சுற்றிலும் புழுதியில் வாரி இறைக்கப்படும்
செல்வங்களுக்காகவும் நான் காத்துக் கொண்டிருந்தேன்.
(என்ன நடக்கிறது, நடக்கப் போகிறது என்ற நமது எதிர்பார்ப்பு!)
‘அந்த ரதம் நான் இருந்த இடத்தில் வந்து நின்றது.
உன் பார்வை என்மீது விழுந்தது; நீ ஒரு புன்னகையுடன் கீழிறங்கி
வந்தாய். என் வாழ்வின் பேரதிர்ஷ்டம் கடைசியில் வந்தே விட்டது
என நான் கருதினேன்.
நீ திடீரென உனது வலது கையை என் முன்பு நீட்டியபடி கேட்டாய்,
“எனக்குக் கொடுப்பதற்காக உன்னிடம் என்ன உள்ளது?”
(அடடா, எப்படிப்பட்ட திருப்பம்!)
‘ஆஹா! இப்படி ஒரு பிச்சைக்காரனிடம் கைநீட்டிப் பிச்சை
கேட்பது எந்த விதத்தில் சேர்த்தியான அரசனின் வேடிக்கை?
நான் குழப்பத்திலாழ்ந்து, என்ன செய்வதென்று புரியாமல்
நின்றேன். பின்பு எனது பையினுள் கையை விட்டு, மெல்ல
ஒரு சின்னஞ்சிறு தானியத்தை எடுத்து உனக்குக் கொடுத்தேன்.
(புரியாத நிகழ்ச்சி; முடிவு என்ன?)
‘ஆனால், அந்த நாளின் இறுதியில் எனக்கு ஒரு ஆச்சரியம்
காத்திருந்தது; என் பையிலிருந்த எல்லாவற்றையும் தரையில்
கொட்டிப் பார்த்தபோது, ஒரு சின்னஞ்சிறிய தங்க தானியம்
அந்தக் குவியலில் இருந்ததைக் கண்டேன்!
என்னிடமிருக்கும் அனைத்தையும் உனக்குக் கொடுக்க
எனக்கு ஏன் மனமிருக்கவில்லை என்ற பச்சாதாபத்தில்
தவித்து அழலானேன்.’ (ஹ்ம்ம். முடிவு புரிந்தது).
ஆனால் இது தெய்வத்துக்கும் மனிதனுக்குமான ஒருவிதமான
உலகாயதமான பிணைப்பு என்பதில் நம் யாருக்கும் ஐயமில்லை!
(பத்தில் ஒன்பது பேர் இப்படித்தான் செய்கிறோம்!)
சிறுகதைக்கான வடிவத்தில் அழகான கவிதையாக இதை
(வங்க மொழியில்) தாகூர் சொல்லியிருக்கும் பாணி மிகவும்
வியக்க வைக்கிறது.
இப்போது சொல்லுங்கள். உரைநடையில் இந்தக் கதையை
இவ்வளவு அழகாகக் கூறியிருக்க முடியுமா?
ஒரு வங்காள நண்பர், இதை அழகாக வங்க மொழியில்
வாசித்துக் காண்பித்த போது கண்களில் நீரே வந்து விட்டது!
தாகூரின் கவிதைகளில் காணும் அழுத்தமான வார்த்தை
ஜாலங்களை, அவற்றின் பூரணத்துவத்தை, லா ச ராவின்
சிறுகதைகளில் நாம் உணரலாம்.
இவர்கள் இருவருடைய எழுத்துக்களுமே அவற்றின்
பொருட்செறிவுக்காகத் திரும்பத் திரும்பப் படிக்கத் தூண்டும்
சக்தி வாய்ந்தவை.
-
----------------------------
படித்ததில் பிடித்தது
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23938
மதிப்பீடுகள் : 1186
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|