சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Today at 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

கவிதை கஃபே - முகம் ஒளிரச் சிரிக்கிறது பௌர்ணமி! Khan11

கவிதை கஃபே - முகம் ஒளிரச் சிரிக்கிறது பௌர்ணமி!

Go down

கவிதை கஃபே - முகம் ஒளிரச் சிரிக்கிறது பௌர்ணமி! Empty கவிதை கஃபே - முகம் ஒளிரச் சிரிக்கிறது பௌர்ணமி!

Post by rammalar Wed 27 Feb 2019 - 14:24

அழகிப் போட்டி


அழகிப் போட்டி
நடக்குமிடம் சென்றுவிடாதே
போட்டியின்றி தோற்றுவிடுவர்
அனைவரும்!


வெறுமை


காலி செய்யப்பட்ட வீடுகளில்
இட்டு நிரப்ப முடியாத மௌனத்தில்...
மெலிதாய்க் கேட்டுக்கொண்டே இருக்கிறது
ஓர் அலறல் சப்தம்!
கோவை நா.கி.பிரசாத்


ஒடுங்குதல்


மரத்திலிருந்து
காற்று நீக்கிய
வேப்பம் பழச் சிதறலை
மிதித்து விளையாடும்
குழந்தைகளை,
ரசித்திருந்த காட்சியில்
எவரோ
கல்லெறிந்தது போலானது
வெளியில் போகாதே
என்ற வீட்டாரின் குரல்.
ஆளுர். செ. கருணா, விசயபுரம்.


தவிப்பு


மொட்டைமாடியில்
நீ வற்றல் காயவைக்கையில்
அக்கம் பக்கம் பார்த்து
யாரும் அறியாவண்ணம்
சத்தமின்றி
சாதுர்யத்தோடு
மெதுமெதுவாய்
அருகே வந்து 
எதிர்பாராத தருணத்தில்
வற்றலைக் கொத்திச் செல்ல
படபடத்துக் கொண்டிருக்கும்
காக்கையென இருக்கிறது
உன்னை
முத்தமிடத் தவிக்கும்
மனசு!
- சொ. சரவண பவா


அவசரம்


நீ - வாசல் தெளிக்க வரும் முன்பே
பூத்துவிட வேண்டுமென்று
அவரசப்பட்டே மலர்கிறது
தோட்டத்தின் பூசணி.
- ராம் பிரபு


யாரும் அழவில்லை


இத்தனை நாளும் இழுபறியாய்க்
கிடந்த பாட்டி இன்று போய்விட்டாள்
யாருமே அழவில்லை.
சமையலறைக்குச் சென்று
அம்மாவிடம் ஃபில்டர் காப்பி வாங்கி,
உறிஞ்சிக் கொண்டிருந்தார் தாத்தா.
வாசலில் விசிறியடித்த பேப்பரை
எடுத்து வந்து படித்துக்
கொண்டிருந்தார் அப்பா.
திருவிழா சமயத்தில்
இப்படி உயிரை விட்டுட்டாரே
சாமி புறப்பாடு நின்று போயிடுமே
தவித்தாள் அம்மா.
பத்து நாள் லீவு குஷியில்
துள்ளிக் கொண்டிருந்தான் அண்ணன்
நன் மட்டும் ஏன் அழணும்
டிவியை ஆன் செய்தேன்
அதுவும்,
போனால், போகட்டும் போடா
இந்தப் பூமியில் நிலையாய்
வாழ்ந்தவன் யாரடா? என்றது!
இராமநாச்சியார்

 -
------------------
நன்றி- கல்கி
& வாரமலர்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25138
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum