Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!by rammalar Today at 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
;நீர்ப்பரப்பில் ஒரு மீன்
2 posters
Page 1 of 1
;நீர்ப்பரப்பில் ஒரு மீன்
நீர் தான் உயிர்; நிலம் கல்லறை
என்று மீனுக்குத் தெரியும்
தெரியாதது நீரு ம்கல்லறை என்று
நீந்திச் செல்லும் நீர்
கனவின் திரவ வடிவம்;
கனவின் சுழல்களில்
நிஜத்தின் பாம்புகளும்
பின்தொடரும்
கரையில் காத்துக்
கொண்டிருக்கின்றன
தூண்டில்கள்
நீரில்காத்துக்
கொண்டிருக்கின்றன
பசி கொண்ட
சிவப்புப் பற்கள் முதலைகள்
செதில்களின் ஊடாகக்
காற்று உயிர்ப்பின்
கீதம்வாசிக்கும்
நீச்சல் சுகமானது
நீச்சல் விதியானது
மெளனமாய்ச் சொட்டும்
கண்ணீருக்குக்
நீரே கல்லறை
நீச்சலும் எதிர்நீச்சலும்
நிம்மதி குலைத்தாலும்
நீருள்ள வரை
நீச்சல் தொடரும்
அநித்தியம் இங்கே
நித்தியமானது எனினும்
-
---------------------------------------
- வேலாயுதம் மாரியப்பன்
**
என்று மீனுக்குத் தெரியும்
தெரியாதது நீரு ம்கல்லறை என்று
நீந்திச் செல்லும் நீர்
கனவின் திரவ வடிவம்;
கனவின் சுழல்களில்
நிஜத்தின் பாம்புகளும்
பின்தொடரும்
கரையில் காத்துக்
கொண்டிருக்கின்றன
தூண்டில்கள்
நீரில்காத்துக்
கொண்டிருக்கின்றன
பசி கொண்ட
சிவப்புப் பற்கள் முதலைகள்
செதில்களின் ஊடாகக்
காற்று உயிர்ப்பின்
கீதம்வாசிக்கும்
நீச்சல் சுகமானது
நீச்சல் விதியானது
மெளனமாய்ச் சொட்டும்
கண்ணீருக்குக்
நீரே கல்லறை
நீச்சலும் எதிர்நீச்சலும்
நிம்மதி குலைத்தாலும்
நீருள்ள வரை
நீச்சல் தொடரும்
அநித்தியம் இங்கே
நித்தியமானது எனினும்
-
---------------------------------------
- வேலாயுதம் மாரியப்பன்
**
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25138
மதிப்பீடுகள் : 1186
Re: ;நீர்ப்பரப்பில் ஒரு மீன்
**
நீர்ப்பரப்பில். ஒருமீன்
ஊருக்குவெளியேசிவன்கோயில்
வேரறுக்கும் பாவம்வந்தனைசெய்தாலென
குளத்தருகேகை,கால்,முகம்கழுவ
தளத்தருகேசென்றனம்யாம்இன்று.
நீர்ப்பரப்பில்ஒருமீன்,பெருமீன்
பார்பாரெனகவர்ந்து இழுத்து
உயரத்துள்ளித் குதித்ததுஅழகாய்
வயிரம்பாய்ந்ததன்உடல்வளைத்து.
கைநிறையப்பொரிநீரில்இட
மைநிறத்து கருமீன் அதுவும்
வாய்திறந்துஉணவுஉண்ண
மாய்மாலம்பலவும்செய்ததுவே .
பொரிமிதக்கநீரில்,சிறுமீன்களும்
சாரி,சாரியாய்சுற்றிநீந்திவர
வாரிஅள்ளிஉண்ணமுயன்றதம்மா
நீர்ப்பரப்பில்யாம்கண்டமீனதுவும் .
- திருமதி ராணி பாலகிருஷ்ணன்
**
நீர்ப்பரப்பில். ஒருமீன்
ஊருக்குவெளியேசிவன்கோயில்
வேரறுக்கும் பாவம்வந்தனைசெய்தாலென
குளத்தருகேகை,கால்,முகம்கழுவ
தளத்தருகேசென்றனம்யாம்இன்று.
நீர்ப்பரப்பில்ஒருமீன்,பெருமீன்
பார்பாரெனகவர்ந்து இழுத்து
உயரத்துள்ளித் குதித்ததுஅழகாய்
வயிரம்பாய்ந்ததன்உடல்வளைத்து.
கைநிறையப்பொரிநீரில்இட
மைநிறத்து கருமீன் அதுவும்
வாய்திறந்துஉணவுஉண்ண
மாய்மாலம்பலவும்செய்ததுவே .
பொரிமிதக்கநீரில்,சிறுமீன்களும்
சாரி,சாரியாய்சுற்றிநீந்திவர
வாரிஅள்ளிஉண்ணமுயன்றதம்மா
நீர்ப்பரப்பில்யாம்கண்டமீனதுவும் .
- திருமதி ராணி பாலகிருஷ்ணன்
**
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25138
மதிப்பீடுகள் : 1186
Re: ;நீர்ப்பரப்பில் ஒரு மீன்
நீப்பரப்பில் வாழும்
உயிரினம் மீன் - அதில்
குளம், குட்டை, என்பதுடன்
பாட்டில், தொட்டில் என
மனம் விரும்பும் இடத்தில்
வளரும் ஒரு மீன்.......
அது சொல்லும் வாழ்க்கைப்படம்
அறியாயோ மானுடனே!
நீர் வளம் குன்றினால்
மீன் வளமும் குன்றுமே!
இயற்கையினை நேசித்து
செயற்கையினை பின் தாலி
காப்போம் நீர் வளத்தினை!
நீர் இருந்தால் மீன் உண்டு
இதைப் படைத்த இறைவன்
நமக்கு சொல்லும் பாடம்!
"நீர்ப்பரப்பில் ஒரு மீன்" போல
உற்சாகத்துடன் சுழன்று சுழன்று
வாழ்ந்தால் வெற்றி நிச்சயம்" என்பதுதானே?
**
மீனினை க்கண்டு நாரையின்
கண் பிதுங்கியதோ வதனைக் கண்டிட்டு
கோரையினிடையில் ஒதுங்கியதோ
உயிருக்கு ஆபத்தென வெதும்பியதோ
நீர்ப்பரப்பில் ஒரு மீன் தனிமையில்
கடவுளே யென்னை காப்பாற்றென
தண்ணீரில் கண்ணீர் ததும்பியதே
எவர் கண்ணேனும் கலங்கியதோ
காதலைத் தெரிந்தவள் காத்து நிற்பாள்
மீனுக்கு ஏங்கும் நாரையைப் போல்
காதலை அறியாதாள் பூத்து நிற்பாள்
தேவையற்ற ஒன்று என்று இவற்றுள்
ஒருத்தி கவலையில் ஏங்குவாள்
ஒருத்தி கவலையின்றி தூங்குவாள்
இங்கே மீன்விழி கொண்ட பெண்மான்
மலர்விழிகளிலும் அவ்வச்சம் தீராது
அரங்கேறும் அவல நிலைகள் தானே
வெட்டவெட்ட துளிர்விடும் முருங்கை
மரத்தைப் போன்றன்றோ துளிர்விடும்
வண்ணமாகவே இருக்கின்றது முடிவு
ஒன்று உண்டாகுமா துடிக்கின்றது
- ஆபிரகாம் வேளாங்கண்ணி, கண்டம்பாக்கத்தான்
உயிரினம் மீன் - அதில்
குளம், குட்டை, என்பதுடன்
பாட்டில், தொட்டில் என
மனம் விரும்பும் இடத்தில்
வளரும் ஒரு மீன்.......
அது சொல்லும் வாழ்க்கைப்படம்
அறியாயோ மானுடனே!
நீர் வளம் குன்றினால்
மீன் வளமும் குன்றுமே!
இயற்கையினை நேசித்து
செயற்கையினை பின் தாலி
காப்போம் நீர் வளத்தினை!
நீர் இருந்தால் மீன் உண்டு
இதைப் படைத்த இறைவன்
நமக்கு சொல்லும் பாடம்!
"நீர்ப்பரப்பில் ஒரு மீன்" போல
உற்சாகத்துடன் சுழன்று சுழன்று
வாழ்ந்தால் வெற்றி நிச்சயம்" என்பதுதானே?
**
மீனினை க்கண்டு நாரையின்
கண் பிதுங்கியதோ வதனைக் கண்டிட்டு
கோரையினிடையில் ஒதுங்கியதோ
உயிருக்கு ஆபத்தென வெதும்பியதோ
நீர்ப்பரப்பில் ஒரு மீன் தனிமையில்
கடவுளே யென்னை காப்பாற்றென
தண்ணீரில் கண்ணீர் ததும்பியதே
எவர் கண்ணேனும் கலங்கியதோ
காதலைத் தெரிந்தவள் காத்து நிற்பாள்
மீனுக்கு ஏங்கும் நாரையைப் போல்
காதலை அறியாதாள் பூத்து நிற்பாள்
தேவையற்ற ஒன்று என்று இவற்றுள்
ஒருத்தி கவலையில் ஏங்குவாள்
ஒருத்தி கவலையின்றி தூங்குவாள்
இங்கே மீன்விழி கொண்ட பெண்மான்
மலர்விழிகளிலும் அவ்வச்சம் தீராது
அரங்கேறும் அவல நிலைகள் தானே
வெட்டவெட்ட துளிர்விடும் முருங்கை
மரத்தைப் போன்றன்றோ துளிர்விடும்
வண்ணமாகவே இருக்கின்றது முடிவு
ஒன்று உண்டாகுமா துடிக்கின்றது
- ஆபிரகாம் வேளாங்கண்ணி, கண்டம்பாக்கத்தான்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25138
மதிப்பீடுகள் : 1186
Re: ;நீர்ப்பரப்பில் ஒரு மீன்
தன்நிகர் துணைதேடியே
தித்திக்கும் கனவோடு
நீங்காத நினைவோடு
அங்குமிங்கும் அலைமோதும்
மங்கையின் கன்னிமனம்....
அத்தானின் அன்பைப்பெற
தத்தித்தாவி குதித்தாடும்
தத்தை நெஞ்சம்....
நீர்ப்பரப்பில் நீந்தும்
ஒற்றை மீன்போல
காதல்கடலில் தத்தளிக்கும்
தாரகையின் கயல்விழிகள்...
- கவிஞர். க. இராமலெட்சுமி, தென்காசி
**
ஆகாய வெளியோ
அம்மாவாசை இரவோ
அதற்கு தெரியாது.
வெண்ணிலவின் ஒளியோ
வண்ணவில்லின் நிறங்களோ
அதன் மேல் பட வாய்ப்பில்லை
அலைகளின் ஆர்ப்பரிப்பும்
வலைகளின் சலசலப்பும்
கேட்காது .
பசியுடன் வட்டமிடும்
பருந்தைப் பற்றிய
பயமும் அதற்கு இல்லை.
சுவைக்க உணவு உண்டு !
சுவாசிக்க பிராணவாயு உண்டு !
சுற்றி நின்று கைதட்டும்
கூட்ட மும் அதற்கு உண்டு !
அந்த இல்லத்தின்
செல்வத்தைப்பெருக்க
கண்ணாடிக் குடுவைக்குள்
விடப்பட்ட
நீர்ப்பரப்பில்
நீந்திக் கொண்டிருக்கும் வண்ண மீனாம்
வாஸ்து மீன் தான் அது.!
- ஜெயா வெங்கட், கோவை
தித்திக்கும் கனவோடு
நீங்காத நினைவோடு
அங்குமிங்கும் அலைமோதும்
மங்கையின் கன்னிமனம்....
அத்தானின் அன்பைப்பெற
தத்தித்தாவி குதித்தாடும்
தத்தை நெஞ்சம்....
நீர்ப்பரப்பில் நீந்தும்
ஒற்றை மீன்போல
காதல்கடலில் தத்தளிக்கும்
தாரகையின் கயல்விழிகள்...
- கவிஞர். க. இராமலெட்சுமி, தென்காசி
**
ஆகாய வெளியோ
அம்மாவாசை இரவோ
அதற்கு தெரியாது.
வெண்ணிலவின் ஒளியோ
வண்ணவில்லின் நிறங்களோ
அதன் மேல் பட வாய்ப்பில்லை
அலைகளின் ஆர்ப்பரிப்பும்
வலைகளின் சலசலப்பும்
கேட்காது .
பசியுடன் வட்டமிடும்
பருந்தைப் பற்றிய
பயமும் அதற்கு இல்லை.
சுவைக்க உணவு உண்டு !
சுவாசிக்க பிராணவாயு உண்டு !
சுற்றி நின்று கைதட்டும்
கூட்ட மும் அதற்கு உண்டு !
அந்த இல்லத்தின்
செல்வத்தைப்பெருக்க
கண்ணாடிக் குடுவைக்குள்
விடப்பட்ட
நீர்ப்பரப்பில்
நீந்திக் கொண்டிருக்கும் வண்ண மீனாம்
வாஸ்து மீன் தான் அது.!
- ஜெயா வெங்கட், கோவை
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25138
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» நீர்ப்பரப்பில் ஒரு மீன்! வாசகர் கவிதைகள்! -கவிதைமணி
» மீன் பிடிக்கும் காட்சி இதுதான் அதிகூடிய மீன் பிடி
» மீன் மொய்லி: கேரளா மீன் குழம்பு
» மாதவிடாய் சுழற்சியை சீராக்கும் உணவுகள்!!!
» மீன் வாங்கப்போறீங்களா?? நெத்திலி மீன் குழம்பு
» மீன் பிடிக்கும் காட்சி இதுதான் அதிகூடிய மீன் பிடி
» மீன் மொய்லி: கேரளா மீன் குழம்பு
» மாதவிடாய் சுழற்சியை சீராக்கும் உணவுகள்!!!
» மீன் வாங்கப்போறீங்களா?? நெத்திலி மீன் குழம்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|