Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!by rammalar Today at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
கூட்டமைப்பின் சிந்தனையில்தான் அறிக்கையின் பலமும், பலவீனமும் உள்ளது
Page 1 of 1
கூட்டமைப்பின் சிந்தனையில்தான் அறிக்கையின் பலமும், பலவீனமும் உள்ளது
கூட்டமைப்பின் சிந்தனையில்தான் அறிக்கையின் பலமும், பலவீனமும் உள்ளது
அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பிற்கும் இடையிலான பேச்சுவார்த்தைத் தொட ரின் ஐந்தாவது கட்டம் நேற்று முன்தினம் இடம் பெற்றுள்ளது.இரு தரப்பிற்கும் இடையில் நடந்த இப் பேச்சு வார்த்தையின்போது அதிகாரப் பகிர்வு குறித்துப் பேசப்பட்டதாக கூறப்படுகின்றது.இதுவரை அடிப்படைப் பிரச்சினைகள் பற்றி பேச்சு நடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில்- அவ் வாறு அடிப்படைப் பிரச்சினைகள் பற்றிப் பேசிய போது, புனர்வாழ்வு முகாம்களில் உள்ளவர்களின் விவகாரம் மற்றும் தடுப்பு முகாம்களில் உள்ளவர் களின் பெயர் விபரங்கள் என்பன குறித்து பிரஸ்தா பிக்கப்பட்டிருந்தன.
தடுப்பு முகாம்களில் உள்ளவர்களின் பெயர் விபரங்களை வெளியிடுதல்- புனர்வாழ்வு முகாம் களில் உள்ளவர்களை விடுவித்தல்- சிறைகளில் அடைக்கப்பட்டிருப்பவர்கள் தொடர்பில் சட்டரீதியான நடவடிக்கைகளை எடுத்தல் என்பன தொடர்பில் திகதிகள் குறித்து இணக்கம் காணப்பட்டிருந்தன. ஆனால் இணக்கம் காணப்பட்ட விடயங்கள் சார்ந்து எதுவுமே நடக்கவில்லை. இது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு “அரசு எங்களை ஏமாற்றி விட்டது” என அறிக்கை விட்டதும் தெரிந்ததே. அரசு ஏமாற்றினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்னசெய்ய முடியும்? அது விடயத்தில் கூட்ட மைப்பில் குறைகாண முடியாது. அரசு எங்களை ஏமாற்றி விட்டதெனப் பகிரங்கப் படுத்துவதை மட்டுமே அவர்கள் செய்யமுடியும்.
ஆனால் நேற்று முன்தினம் அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது மாகாண சபைகளுக் கான அதிகாரப் பகிர்வு பற்றிப் பேசப்பட்டதாகக் கூறப் படுவது, ஓ! இங்குதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுவட்டை மாற்றி ஓடுகின்றது என்பதை தெளிவுபடுத்துகின்றது. தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளான மீள் குடியேற்றம், தடுப்பு முகாம்களில் இருப்பவர்க ளை அறிதல், புனர்வாழ்வு முகாம்களிலிருந்து விடு வித்தல், சிறைகளில் வாடும் தமிழ் இளைஞர்க ளின் விடுதலையில் கவனம் செலுத்துதல் என்ற நிலைமைகளுக்கு இன்னமும் முடிபுகாணாமல் அதி காரப்பகிர்வு பற்றிப் பேசுவதானது தாலிகட்டியபிறகு பொருத்தம் பார்ப்பது போன்றது.
ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை வெளியிட்டிருக்கும் வேளையில் அதனை ஆதரிப்பதாக கூட்டமைப்பு அறிக்கை விடுத்திருக்கும் சந்தர்ப்பத்தில், மிகவும் நிதானமாக நடக்கவேண்டிய தலையாய பொறுப்பு கூட்டமைப்பிற்கு உண்டு. நாம் இவற்றைக் கூறும்போது, யானையைப் பார்த்த குருடர்கள் போல எம்மைப் பார்ப்பவர்களும் இருக்கவே செய்வர். அதற்காக எங்கள் தலையில் நாங்களே மண்னை அள்ளிக் கொட்டக் கூடாதென்பதற்காக இதனைப் பிரஸ்தாபித்தாக வேண்டும். ஏனெனில் ஐ.நா. நிபுணர் குழு விடுத்த அறிக்கை யின் பின்னால் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களின் மரணங்கள், பேரழிவுகள், அவஸ்தைகள் எனப் பல்வேறு இழப்புக்கள் உள்ளன.
ஐ.நாவின் அறிக்கைக்காக தமிழர்கள் கொடுத்தவை மனித மொழிகளில் கூறக்கூடியவை அல்ல. ஆகையால் நிதானம் அவசியம். இதுபோன்ற சந்தர்ப் பம் முன்பு ஏற்பட்டதுமில்லை, இனிமேலும் ஏற்படப் போவதுமில்லை. ஆகையால், இனப்பிரச்சினைத் தீர்வுக்கான பேச்சுக்கு இது உகந்த காலமா? என்று ஒருகணம் சிந்தியுங்கள். உங்கள் சிந்தனையில்தான் அறிக் கையின் பலமும், பலவீனமும் தங்கியுள்ளது
அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பிற்கும் இடையிலான பேச்சுவார்த்தைத் தொட ரின் ஐந்தாவது கட்டம் நேற்று முன்தினம் இடம் பெற்றுள்ளது.இரு தரப்பிற்கும் இடையில் நடந்த இப் பேச்சு வார்த்தையின்போது அதிகாரப் பகிர்வு குறித்துப் பேசப்பட்டதாக கூறப்படுகின்றது.இதுவரை அடிப்படைப் பிரச்சினைகள் பற்றி பேச்சு நடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில்- அவ் வாறு அடிப்படைப் பிரச்சினைகள் பற்றிப் பேசிய போது, புனர்வாழ்வு முகாம்களில் உள்ளவர்களின் விவகாரம் மற்றும் தடுப்பு முகாம்களில் உள்ளவர் களின் பெயர் விபரங்கள் என்பன குறித்து பிரஸ்தா பிக்கப்பட்டிருந்தன.
தடுப்பு முகாம்களில் உள்ளவர்களின் பெயர் விபரங்களை வெளியிடுதல்- புனர்வாழ்வு முகாம் களில் உள்ளவர்களை விடுவித்தல்- சிறைகளில் அடைக்கப்பட்டிருப்பவர்கள் தொடர்பில் சட்டரீதியான நடவடிக்கைகளை எடுத்தல் என்பன தொடர்பில் திகதிகள் குறித்து இணக்கம் காணப்பட்டிருந்தன. ஆனால் இணக்கம் காணப்பட்ட விடயங்கள் சார்ந்து எதுவுமே நடக்கவில்லை. இது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு “அரசு எங்களை ஏமாற்றி விட்டது” என அறிக்கை விட்டதும் தெரிந்ததே. அரசு ஏமாற்றினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்னசெய்ய முடியும்? அது விடயத்தில் கூட்ட மைப்பில் குறைகாண முடியாது. அரசு எங்களை ஏமாற்றி விட்டதெனப் பகிரங்கப் படுத்துவதை மட்டுமே அவர்கள் செய்யமுடியும்.
ஆனால் நேற்று முன்தினம் அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது மாகாண சபைகளுக் கான அதிகாரப் பகிர்வு பற்றிப் பேசப்பட்டதாகக் கூறப் படுவது, ஓ! இங்குதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுவட்டை மாற்றி ஓடுகின்றது என்பதை தெளிவுபடுத்துகின்றது. தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளான மீள் குடியேற்றம், தடுப்பு முகாம்களில் இருப்பவர்க ளை அறிதல், புனர்வாழ்வு முகாம்களிலிருந்து விடு வித்தல், சிறைகளில் வாடும் தமிழ் இளைஞர்க ளின் விடுதலையில் கவனம் செலுத்துதல் என்ற நிலைமைகளுக்கு இன்னமும் முடிபுகாணாமல் அதி காரப்பகிர்வு பற்றிப் பேசுவதானது தாலிகட்டியபிறகு பொருத்தம் பார்ப்பது போன்றது.
ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை வெளியிட்டிருக்கும் வேளையில் அதனை ஆதரிப்பதாக கூட்டமைப்பு அறிக்கை விடுத்திருக்கும் சந்தர்ப்பத்தில், மிகவும் நிதானமாக நடக்கவேண்டிய தலையாய பொறுப்பு கூட்டமைப்பிற்கு உண்டு. நாம் இவற்றைக் கூறும்போது, யானையைப் பார்த்த குருடர்கள் போல எம்மைப் பார்ப்பவர்களும் இருக்கவே செய்வர். அதற்காக எங்கள் தலையில் நாங்களே மண்னை அள்ளிக் கொட்டக் கூடாதென்பதற்காக இதனைப் பிரஸ்தாபித்தாக வேண்டும். ஏனெனில் ஐ.நா. நிபுணர் குழு விடுத்த அறிக்கை யின் பின்னால் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களின் மரணங்கள், பேரழிவுகள், அவஸ்தைகள் எனப் பல்வேறு இழப்புக்கள் உள்ளன.
ஐ.நாவின் அறிக்கைக்காக தமிழர்கள் கொடுத்தவை மனித மொழிகளில் கூறக்கூடியவை அல்ல. ஆகையால் நிதானம் அவசியம். இதுபோன்ற சந்தர்ப் பம் முன்பு ஏற்பட்டதுமில்லை, இனிமேலும் ஏற்படப் போவதுமில்லை. ஆகையால், இனப்பிரச்சினைத் தீர்வுக்கான பேச்சுக்கு இது உகந்த காலமா? என்று ஒருகணம் சிந்தியுங்கள். உங்கள் சிந்தனையில்தான் அறிக் கையின் பலமும், பலவீனமும் தங்கியுள்ளது
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|