Latest topics
» பல்சுவை களஞ்சியம்by rammalar Today at 9:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 5 Jul 2024 - 19:21
» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Thu 4 Jul 2024 - 14:17
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by rammalar Wed 3 Jul 2024 - 19:27
» காவல் தெய்வம்
by rammalar Wed 3 Jul 2024 - 19:17
» இயற்கையின் விந்தை…
by rammalar Wed 3 Jul 2024 - 11:15
» பீட்ரூட் குழம்பு
by rammalar Tue 2 Jul 2024 - 13:53
» பீட்ரூட் ரைஸ்
by rammalar Tue 2 Jul 2024 - 13:47
» பீட்ரூட் வடை
by rammalar Tue 2 Jul 2024 - 13:42
» பீட்ரூட் ரசம்
by rammalar Tue 2 Jul 2024 - 13:38
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Tue 2 Jul 2024 - 4:02
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Tue 2 Jul 2024 - 3:55
» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24
» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18
» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33
» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44
» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59
» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13
» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06
» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45
» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17
» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16
» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29
» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30
» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30
» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25
» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23
» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47
ஜெயலலிதாவுடன் நல்லுறவு ஏற்படுத்த விரும்பும் இலங்கை
Page 1 of 1
ஜெயலலிதாவுடன் நல்லுறவு ஏற்படுத்த விரும்பும் இலங்கை
தமிழகத்தின் புதிய முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராமுக்கு பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்துள்ள இலங்கை அரசாங்கம் அவருடன் நல்லுறவுகளைக் கட்டியெழுப்ப ஆவலாக இருப்பதற்கான சமிக்ஞைகளை வெளிப்படுத்தியுள்ளது.
இந்தியாவிற்கான தனது மூன்று நாள் இருதரப்பு விஜயத்தை செவ்வாய்க்கிழமை பூர்த்தி செய்த வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் வாழ்த்துக் கடிதமொன்றை ஜெயலலிதாவுக்கு அனுப்பியுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை நேற்று புதன்கிழமை தெரிவித்துள்ளது.
போர்க் குற்றங்களுக்காக சர்வதேச நீதிமன்றத்தின் விசாரணைக்கு இலங்கை ஜனாதிபதியையும் அவரின் உதவியாளர்களையும் நிறுத்துவதற்கான உடனடி நடவடிக்கைகளை இந்திய மத்திய அரசாங்கம் மேற்கொள்ளவேண்டுமென ஜெயலலிதா, தேர்தல் பிரசாரத்தின்போது வலியுறுத்தியிருந்ததுடன், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு அவரின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் ஜெயா தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் மீண்டும் அந்தக் கருத்தை தெரிவித்திருந்தார்.
இந்தக் கடிதமானது இலங்கை தரப்பிலிருந்து முன்னொருபோதுமில்லாத விதத்திலான நல்லெண்ண நடவடிக்கையாக இருப்பதாக வட்டாரங்கள் கூறியுள்ளன. ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவிப்பது மட்டுமன்றி, இந்த விடயமானது அவருடன் செயற்படுவதற்கான கொழும்பின் விருப்பத்தை சுட்டிக்காட்டுவதாக அமைந்துள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
விடுதலைப்புலிகளுடனான யுத்தத்தின் பின்னர் தென்மாநிலமான தமிழகத்தின் ஆளுந்தரப்பின் நல்லெண்ணத்துடன் சமாதான முன்நகர்வுகளை மேற்கொள்ள வேண்டிய தேவையிருப்பதை கொழும்பு விளங்கிக் கொண்டிருப்பதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. தமிழ்நாட்டிலுள்ள தமிழ் மக்கள் இலங்கைத் தமிழர்கள் மீது அனுதாபமுடையவர்கள். இந்த யதார்த்தத்தைப் புரிந்துகொண்ட தன்மையே தமிழ்நாட்டுடன் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான தூண்டுதலை இலங்கை அரசாங்கத்திற்கு அளித்துள்ளதாக அந்த வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.
இதேவேளை, இந்தியத் தலைவர்களுடனான சந்திப்பின் பின் ஊடகங்கள் மத்தியில் டில்லியில் கருத்துத் தெரிவித்த பேராசிரியர் பீரிஸ், இலங்கை அரசாங்கம் தமிழ்ப் பிரதிநிதிகளுடன் ஆறு சுற்றுப்பேச்சுகளை நடத்தியிருப்பதாகவும் அதிகாரப்பகிர்வு விடயங்களுக்குத் தீர்வுகாணும் பேச்சுகளை ஆரம்பித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் வட பகுதிக்கு வெளியே 50 சதவீதமான தமிழர்கள் வாழ்வதாகவும் அதனால் இரு சபைகளைக் கொண்ட பாராளுமன்றத்தை அமைத்து அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்ளும் யோசனையை அரசாங்கம் முன்வைத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். தமிழ்ப் பிரதிநிதிகளும் சில யோசனைகளை அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளனர். அதற்குப் பதிலளிக்கப்படும். இது தொடர்ந்து இடம்பெறும் பேச்சுவார்த்தை என்று அவர் கூறியுள்ளார்.
அதேசமயம், புலிகளுக்கு எதிரான யுத்தம் தொடர்பான ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையை இலங்கை ஏன் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது தொடர்பாக பேராசிரியர் பீரிஸ் விளக்கமளித்ததுடன், அந்த அறிக்கையானது பல்வேறு முரண்பாடுகளை உள்ளடக்கியுள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இலங்கை மக்கள் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிக்கு தடைகளை இந்த அறிக்கை ஏற்படுத்தியுள்ளது என்பது அரசாங்கத்தின் நிலைப்பாடென அவர் அழுத்தியுரைத்துள்ளார்.
புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்களின் நிலைப்பாடு குறித்து கருத்துத் தெரிவித்த பேராசிரியர் பீரிஸ், அவர்களை பெரிதுபடுத்தவோ அல்லது ஓரங்கட்டவோ அரசாங்கம் விரும்பியிருக்கவில்லையெனவும் அதேசமயம், மீள்கட்டுமான நடவடிக்கைகளில் அவர்களை ஈடுபடுத்த விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பகுதிகளில் அகப்பட்டிருந்த பொதுமக்கள் மீது பாதுகாப்புப் படையினர் ஷெல் தாக்குதலை நடத்தியதாக குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டுள்ள ஐ.நா. அறிக்கை தொடர்பாக இலங்கைக்கு அழுத்தம் கொடுப்பதற்கு இதுவரை இந்தியா தயக்கமான நிலைப்பாட்டையே கடைப்பிடித்து வருகிறது. கூட்டறிக்கையில் கூட ஐ.நா. அறிக்கை பற்றி குறிப்பிடுவதை புதுடில்லி நிறுத்தியிருந்தது.ஆனால், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கை விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் யுத்தம் முடிவுக்கு வந்த பின்னரும் இரு வருடங்களாக நடைமுறையிலிருந்து வரும் அவசரகால ஒழுங்குவிதிகளை வாபஸ் பெற வேண்டுமென்றும் இந்தியா தெரிவித்துள்ளது.
இந்தியாவிற்கான தனது மூன்று நாள் இருதரப்பு விஜயத்தை செவ்வாய்க்கிழமை பூர்த்தி செய்த வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் வாழ்த்துக் கடிதமொன்றை ஜெயலலிதாவுக்கு அனுப்பியுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை நேற்று புதன்கிழமை தெரிவித்துள்ளது.
போர்க் குற்றங்களுக்காக சர்வதேச நீதிமன்றத்தின் விசாரணைக்கு இலங்கை ஜனாதிபதியையும் அவரின் உதவியாளர்களையும் நிறுத்துவதற்கான உடனடி நடவடிக்கைகளை இந்திய மத்திய அரசாங்கம் மேற்கொள்ளவேண்டுமென ஜெயலலிதா, தேர்தல் பிரசாரத்தின்போது வலியுறுத்தியிருந்ததுடன், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு அவரின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் ஜெயா தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் மீண்டும் அந்தக் கருத்தை தெரிவித்திருந்தார்.
இந்தக் கடிதமானது இலங்கை தரப்பிலிருந்து முன்னொருபோதுமில்லாத விதத்திலான நல்லெண்ண நடவடிக்கையாக இருப்பதாக வட்டாரங்கள் கூறியுள்ளன. ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவிப்பது மட்டுமன்றி, இந்த விடயமானது அவருடன் செயற்படுவதற்கான கொழும்பின் விருப்பத்தை சுட்டிக்காட்டுவதாக அமைந்துள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
விடுதலைப்புலிகளுடனான யுத்தத்தின் பின்னர் தென்மாநிலமான தமிழகத்தின் ஆளுந்தரப்பின் நல்லெண்ணத்துடன் சமாதான முன்நகர்வுகளை மேற்கொள்ள வேண்டிய தேவையிருப்பதை கொழும்பு விளங்கிக் கொண்டிருப்பதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. தமிழ்நாட்டிலுள்ள தமிழ் மக்கள் இலங்கைத் தமிழர்கள் மீது அனுதாபமுடையவர்கள். இந்த யதார்த்தத்தைப் புரிந்துகொண்ட தன்மையே தமிழ்நாட்டுடன் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான தூண்டுதலை இலங்கை அரசாங்கத்திற்கு அளித்துள்ளதாக அந்த வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.
இதேவேளை, இந்தியத் தலைவர்களுடனான சந்திப்பின் பின் ஊடகங்கள் மத்தியில் டில்லியில் கருத்துத் தெரிவித்த பேராசிரியர் பீரிஸ், இலங்கை அரசாங்கம் தமிழ்ப் பிரதிநிதிகளுடன் ஆறு சுற்றுப்பேச்சுகளை நடத்தியிருப்பதாகவும் அதிகாரப்பகிர்வு விடயங்களுக்குத் தீர்வுகாணும் பேச்சுகளை ஆரம்பித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் வட பகுதிக்கு வெளியே 50 சதவீதமான தமிழர்கள் வாழ்வதாகவும் அதனால் இரு சபைகளைக் கொண்ட பாராளுமன்றத்தை அமைத்து அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்ளும் யோசனையை அரசாங்கம் முன்வைத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். தமிழ்ப் பிரதிநிதிகளும் சில யோசனைகளை அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளனர். அதற்குப் பதிலளிக்கப்படும். இது தொடர்ந்து இடம்பெறும் பேச்சுவார்த்தை என்று அவர் கூறியுள்ளார்.
அதேசமயம், புலிகளுக்கு எதிரான யுத்தம் தொடர்பான ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையை இலங்கை ஏன் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது தொடர்பாக பேராசிரியர் பீரிஸ் விளக்கமளித்ததுடன், அந்த அறிக்கையானது பல்வேறு முரண்பாடுகளை உள்ளடக்கியுள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இலங்கை மக்கள் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிக்கு தடைகளை இந்த அறிக்கை ஏற்படுத்தியுள்ளது என்பது அரசாங்கத்தின் நிலைப்பாடென அவர் அழுத்தியுரைத்துள்ளார்.
புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்களின் நிலைப்பாடு குறித்து கருத்துத் தெரிவித்த பேராசிரியர் பீரிஸ், அவர்களை பெரிதுபடுத்தவோ அல்லது ஓரங்கட்டவோ அரசாங்கம் விரும்பியிருக்கவில்லையெனவும் அதேசமயம், மீள்கட்டுமான நடவடிக்கைகளில் அவர்களை ஈடுபடுத்த விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பகுதிகளில் அகப்பட்டிருந்த பொதுமக்கள் மீது பாதுகாப்புப் படையினர் ஷெல் தாக்குதலை நடத்தியதாக குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டுள்ள ஐ.நா. அறிக்கை தொடர்பாக இலங்கைக்கு அழுத்தம் கொடுப்பதற்கு இதுவரை இந்தியா தயக்கமான நிலைப்பாட்டையே கடைப்பிடித்து வருகிறது. கூட்டறிக்கையில் கூட ஐ.நா. அறிக்கை பற்றி குறிப்பிடுவதை புதுடில்லி நிறுத்தியிருந்தது.ஆனால், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கை விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் யுத்தம் முடிவுக்கு வந்த பின்னரும் இரு வருடங்களாக நடைமுறையிலிருந்து வரும் அவசரகால ஒழுங்குவிதிகளை வாபஸ் பெற வேண்டுமென்றும் இந்தியா தெரிவித்துள்ளது.
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» ஈழத் தமிழர்கள் மீள்குடியேற்றம்: ஜெயலலிதாவுடன் இலங்கை தூதர் சந்திப்பு
» இலங்கை செல்லும் இந்திய வெளியுறவு செயலாளர் ஜெயலலிதாவுடன் இன்று சந்திப்பு
» மதுவை ஒழிக்க விரும்பும் உலகம்; திணிக்க விரும்பும் தமிழ்நாடு!
» நல்லுறவு
» மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு
» இலங்கை செல்லும் இந்திய வெளியுறவு செயலாளர் ஜெயலலிதாவுடன் இன்று சந்திப்பு
» மதுவை ஒழிக்க விரும்பும் உலகம்; திணிக்க விரும்பும் தமிழ்நாடு!
» நல்லுறவு
» மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|