சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17

» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28

» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25

» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24

» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23

» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19

» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18

» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16

» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12

» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06

» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59

» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57

» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58

» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54

» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35

» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32

» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50

» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42

» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14

» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36

» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

பொலிஸார் தன்னிச்சையாகவே துப்பாக்கி பிரயோகம் நடத்தினர்  Khan11

பொலிஸார் தன்னிச்சையாகவே துப்பாக்கி பிரயோகம் நடத்தினர்

Go down

பொலிஸார் தன்னிச்சையாகவே துப்பாக்கி பிரயோகம் நடத்தினர்  Empty பொலிஸார் தன்னிச்சையாகவே துப்பாக்கி பிரயோகம் நடத்தினர்

Post by நண்பன் Fri 3 Jun 2011 - 10:02

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய ஊழியர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்வதற்கு மேலிடத்தில் இருந்து எவ்வித உத்தரவும் வழங்கப் பட்டிருக்க வில்லை. ஊழியர் களுக்கும் பொலி ஸாருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலின் போது சில பொலிஸார் தன்னிச்சையாகவே துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளனர்.இது குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நியமித்துள்ள தனிநபர் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கூறினார்.

கட்டுநாயக்கவில் வேண்டுமென்றே குழப்பநிலை ஏற்படுத்தப்பட்டது. இதன் பின்னணியில் ஜே. வி. பி. யே உள்ளது. 1988- 89 காலப் பகுதி போன்ற அராஜக நிலையை ஏற்படுத்தும் நோக்கத்துடனேயே இவ்வாறு குழப்பநிலை ஏற்படுத்தப்பட்டதாக சந்தேகம் எழுவதாகக் கூறிய அமைச்சர், அது தொடர்பில் விரைவில் அம்பலப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறி விக்கும் ஊடகவிய லாளர் மாநாடு நேற்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. ஊடக வியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக ளுக்குப்

பதிலளித்த அமைச்சர், கட்டுநாயக்க சம்பவம் குறித்து தெளிவுபடுத்தினார்.

தனியார் ஓய்வூதியத்திட்டம் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படாத நிலையிலேயே ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்தே ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை இந்த ஓய்வுதியத் திட்டத்தில் சேர்த்துக்கொள்ளாதிருக்க முடிவு செய்யப்பட்டு அது குறித்து அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது. ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் 5.6 வருடங்களே பணியாற்றுகின்றனர். அந்த நேரத்தில் குழப்பநிலை மோசமடைந்திருக்கவில்லை.

தமது போராட்டம் வென்றதாக கோஷமெழுப்பியவாறு ஊழியர்கள் கடமைக்குத் திரும்ப முற்பட்ட போதே பொலிஸார் மீது கற்களாலும் தடிகளதலும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. பொலிஸார் ஓடிய போது பொலிஸ் நிலையங்களுக்குள்ளும் புகுந்து தாக்குதல் நடத்தப்பட்டது. அப்பொழுது பொலிஸாரிடம் ஆயுதம் இருக்கவில்லை.

இந்த நிலையிலேயே நிலைமையை சமாளிக்க மேலதிக பொலிஸார் வரவழைக்கப்பட்டனர். தமது மேலதிகாரிகளை தாக்குவதை தாங்க முடியாமல் பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் செய்திருக்கலாம். ஆனால் தொழிலாளர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டதை நாம் அனுமதிக்கவில்லை.

துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாக சந்தேகிக்கப்படும் இரு பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளதோடு சம்பவம் நடைபெற்ற அரை மணி நேரத்திற்குள் ஜனாதிபதி தனிநபர் ஆணைக்குழுவொன்றை நியமித்தார்.

இதற்கு முன்னரும் ஆர்ப்பாட்டாளர்களின் போது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் இறந்துள்ளனர். ஆனால் இவ்வாறு குறுகிய காலத்தினுள் நடவடிக்கை எடுக்கப்பட்டது கிடையாது.

உச்ச நீதிமன்ற முன்னாள் நீதியரசர் மகாநாம திலகரத்ன தலைமையிலான குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. சம்பந்தப்பட்டவர்களிடம் சாட்சியங்கள் பதியப்பட்டு வருகின்றன. 5 நாட்களுக்குள் ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும். இந்தத் தாக்குதலுடன் தொடர்புடைய 40-50 பேர் கைதானதோடு சிலர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அரசியலில் வங்குரோத்து நிலை அடைந்துள்ள ஜே. வி.பி. மீண்டும் 1988- 89 போன்று கிளர்ச்சி யுகத்தை உருவாக்கும் முயற்சியாக இத்தகைய குழப்பங்களை ஏற்படுத்துகின்றதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. தொழிற்சாலைகளை மூடிவிட ஜே. வி.பி. முயல்கிறது.

யுத்தம் முடிவடைந்து பொருளாதாரம் 8.5 வீத வளர்ச்சியை எட்டியுள்ளது. வேலையின்மைக்குத் தீர்வு காணப்பட்டுவருவதோடு சுற்றுலாத்துறை அபிவிருத்தி அடைந்து வருகிறது. இந்த நிலையை தடுக்க அராஜக வழிகள் மூலம் ஜே. வி. செயற்படுவதாக தெரிகிறது.

ஆனால் வரலாற்றில் முதற்தடவையாகவே இத்தகைய குழப்பநிலையின் போது துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு பொலிஸாரின் தவறை ஏற்று பொலிஸ் மா அதிபரும் ஓய்வு பெற்றுள்ளார்.

இதற்கு முன்னரும் பொலிஸ்மா அதிபர்களின் காலம் முடிவடைந்த பின்னர் ஓரிரு வருட பதவி நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் மஹிந்த பாலசூரிய அவ்வாறு பதவி நீடிப்பு கோராது பதவியில் இருந்து ஓய்வு பெற்றார்.

தற்பொழுது பதில் பொலிஸ் மா அதிபராக என். கே. இலங்ககோன் நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்த பொலிஸ் மா அதிபரை ஜனாதிபதி நியமிப்பார் என்றார்.

தனியார் ஓய்வூதியத் திட்டம் மீண்டும் கொண்டு வரப்படுமா என எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர்,

தனியார் ஓய்வூதிய சட்டமூலம் இடைநிறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் சுற்றுநிருபம் எதுவும் வெளியிடத் தேவையில்லை. இந்த சட்ட மூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட போதும் விவாதத்துக்கு எடுக்கப்படவில்லை. மீண்டும் இத்தகைய சட்டமொன்றை அரசுக்கு கொண்டு வரமுடியும். அதற்கு அரசாங்கத்துக்கு உரிமை உள்ளது. தனியார் துறையினருக்கு ஓய்வூதியத்திட்டமொன்று கொண்டு வருவதாக மஹிந்த சிந்தனையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தங்களுக்கு ஓய்வூதியம் தேவையில்லை என தனியார் ஊழியர்கள் கூறவில்லை.

ஆனால் அவசர பிரேரணையாக நாம் கொண்டுவரமாட்டேன்.

தினகரன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum