Latest topics
» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் ! by rammalar Today at 7:09
» சூடி மகிழலாம்- சிறுவர் அமுது
by rammalar Today at 6:55
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by rammalar Today at 4:43
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by rammalar Yesterday at 16:08
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Yesterday at 16:01
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by rammalar Yesterday at 4:01
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by rammalar Yesterday at 3:57
» லக்கி பாஸ்கர்-படத்தின் முதல் பாடல் வெளியானது!
by rammalar Yesterday at 3:46
» நடிகர் திலீபன் புகழேந்திக்கு ஜோடியாக 5 கதாநாயகிகள்!
by rammalar Yesterday at 3:38
» `துண்டு ஒரு தடவைதான் தவறும்!' - ஹெட்டை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
by rammalar Yesterday at 3:18
» AUS vs AFG புள்ளிப்பட்டியல் - இந்தியாவுக்கு ஆப்பு வைத்த ஆப்கானிஸ்தான்.. ஆஸி. அரை இறுதி வாய்ப்பு காலி
by rammalar Mon 24 Jun 2024 - 6:46
» அயோத்தியில் பாஜக தோல்வி எதிரொலி: ஹனுமன் கோயில் மடத் தலைவர் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்
by rammalar Mon 24 Jun 2024 - 6:40
» விண்ணிலிருந்து பூமிக்கு திரும்பும் ஏவுகலன் சோதனை வெற்றி! ISRO சாதனை!
by rammalar Mon 24 Jun 2024 - 6:35
» படித்ததில் ரசித்தது-
by rammalar Sun 23 Jun 2024 - 10:56
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி...
by rammalar Sun 23 Jun 2024 - 6:27
» அப்பாவின் பாசம் - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:55
» புறக்கணிப்பு - புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:52
» இரவின் மொழியில்...(புதுக்கவிதை)
by rammalar Sat 22 Jun 2024 - 15:50
» ’கடி’ ஜோக்ஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 15:18
» கிளி-மயில், என்ன வேறுபாடு?
by rammalar Sat 22 Jun 2024 - 15:17
» தினந்தோறும் இறைவனை வழிபடும் முறைகள்
by rammalar Sat 22 Jun 2024 - 15:16
» மூக்குத்தி அம்மன்- 2ம் பாகம்
by rammalar Sat 22 Jun 2024 - 15:15
» கன்னட நடிகை வீடியோவால் சைபர் கிரைம் விசாரணை
by rammalar Sat 22 Jun 2024 - 15:14
» ஆன்மிக சிந்தனை
by rammalar Sat 22 Jun 2024 - 15:12
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:11
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:10
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:09
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by rammalar Sat 22 Jun 2024 - 15:08
» நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ...
by rammalar Sat 22 Jun 2024 - 12:54
» ஜூன் 22: இன்று ஓரளவு குறைந்த தங்கம் விலை!
by rammalar Sat 22 Jun 2024 - 11:30
» வீட்டை எதிர்த்து தான் கல்யாணம் பண்ணுனேன்.. நடிகை தேவயானி
by rammalar Sat 22 Jun 2024 - 11:14
» சட்னி சாம்பார் - வெப் சீரிஸ்
by rammalar Sat 22 Jun 2024 - 10:42
» மீனாட்சி சவுத்ரி
by rammalar Sat 22 Jun 2024 - 7:31
» பயனுள்ள வீட்டு குறிப்புகள்
by rammalar Fri 21 Jun 2024 - 19:47
கார் உரிமையாளர்களுக்கு மானிய விலையில் டீசல் வழங்குவது நிறுத்தப்படும்
3 posters
Page 1 of 1
கார் உரிமையாளர்களுக்கு மானிய விலையில் டீசல் வழங்குவது நிறுத்தப்படும்
" கார் உரிமையாளர்களுக்கு மானிய விலையில் டீசல் வழங்குவது நிறுத்தப்படும்' என,
மத்திய அரசு அறிவித்துள்ளது. விலைவாசி உயர்வு தொடர்பான விவாதம் லோக்சபாவில் நடந்து வருகிறது. இதில், பங்கேற்று பேசிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள், "சொந்தமாக கார் வைத்திருப்பவர்களில் 15 சதவீதம் பேர், டீசல் பயன்படுத்துகின்றனர். இவர்களுக்கு மானிய விலையில் டீசல் வழங்குவதை நிறுத்த வேண்டும்' என, கோரிக்கை வைத்தனர். ஐக்கிய ஜனதா தள தலைவரும், தேசிய ஜனநாயக கூட்டணியின் கன்வீனருமான சரத் யாதவ் பேசுகையில், மானிய விலை டீசலை ஆடம்பர கார்கள் வைத்திருப்பவர்களுக்கும், டெலிகாம் டவர் கம்பெனிகளுக்கும், வர்த்தக மால்களுக்கும் வழங்குவது பற்றி அரசுக்கு கண்டனம் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்து பேசிய மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறுகையில்,""உங்களின் ஆலோசனையை ஏற்றுக் கொள்கிறோம். கார் உரிமையாளர்களுக்கு மானிய விலையில் டீசல் வழங்குவதை நிறுத்திவிட்டு எந்த வகையான நடைமுறையை கடைபிடிப்பது என்பது பற்றி ஆலோசிக்கப்படும்,'' என்றார். மத்திய அரசு, தற்போது டீசலுக்கு லிட்டருக்கு ரூ.6.08 மானியமாக வழங்கிவருகிறது. பெட்ரோல் விலையை, சந்தைவிலைக்கு ஏற்ப நிர்ணயம் செய்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டது. காஸ், டீசல், மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலையை, அமைச்சர்கள் குழு முடிவு செய்தது. இழப்பை சரிக்கட்ட மானியம் வழங்கப்பட்டது. இருப்பினும், எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்ட இழப்பை சரிக்கட்ட, கடந்த ஜூன் மாதம் டீசல் மற்றும் கெரசின், காஸ் ஆகியவற்றின் விலை உயர்த்தப்பட்டது. இந்தியாவுக்கு, 75 சதவீத கச்சா எண்ணெய் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. நாட்டில் தேவைப்படும் டீசலில், 10 சதவீதம் தொழில் துறைக்கும், 6 சதவீதம் ரயில்வேக்கும், 12 சதவீதம் விவசாயத் துறைக்கும், 15 சதவீதம் கார் உரிமையாளர்களுக்கும் போய் சேர்கிறது. இது தவிர, 8 சதவீதம் மின் சக்தி மற்றும் பஸ் போக்குவரத்திற்கு 12 சதவீதமும் பயன்படுகிறது.
சமீபத்தில் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்ட போதிலும், இன்னும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு 1.22 லட்சம் கோடி பாக்கி உள்ளது.
லோக்சபா கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு வெளியே வந்த நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறுகையில்," டீசல் விலையை நிர்ணயிப்பதை அரசு கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதற்கான சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன' என்றார்.
மத்திய பெட்ரோலிய அமைச்சர் ஜெய்பால் ரெட்டி நிருபர்களிடம் கூறுகையில், "" இந்தியாவில் டீசல் பயன்பாடு அதிகமாக உள்ளது. இருப்பினும் தயாரிப்பு செலவை விட குறைவாக கொடுக்கப்படுகிறது. மானிய விலையில் வழங்கப்படும் டீசலானது, லாரி மற்றும் பயணிகள் போக்குவரத்துக்கு முன்னுரிமை கொடுத்து அளிக்கப்படுகிறது. மேலும், விவசாய பயன்பாட்டிற்கும் அளிக்கப்படுகிறது. மானிய விலையில் விற்கப்படும் டீசல், பவர் ஜெனரேட்டர்கள் பயன்பாட்டிற்கு தவறாக உபயோக படுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. டீசல் விலையை, பயன்பாட்டிற்கு ஏற்ற இரட்டை விலை வைப்பதில் குழப்பம் உள்ளது. உண்மையானவர்களுக்கு மானியம், விவசாயிகள் மற்றும் போக்குவரத்து பயன்பாட்டுக்கு போய் சேரும் வகையில் அனைத்து அம்சங்களும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. இதற்கு விரைவில் இறுதி வடிவம் கொடுக்கப்படும்,'' என்றார்.
மத்திய அரசு அறிவித்துள்ளது. விலைவாசி உயர்வு தொடர்பான விவாதம் லோக்சபாவில் நடந்து வருகிறது. இதில், பங்கேற்று பேசிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள், "சொந்தமாக கார் வைத்திருப்பவர்களில் 15 சதவீதம் பேர், டீசல் பயன்படுத்துகின்றனர். இவர்களுக்கு மானிய விலையில் டீசல் வழங்குவதை நிறுத்த வேண்டும்' என, கோரிக்கை வைத்தனர். ஐக்கிய ஜனதா தள தலைவரும், தேசிய ஜனநாயக கூட்டணியின் கன்வீனருமான சரத் யாதவ் பேசுகையில், மானிய விலை டீசலை ஆடம்பர கார்கள் வைத்திருப்பவர்களுக்கும், டெலிகாம் டவர் கம்பெனிகளுக்கும், வர்த்தக மால்களுக்கும் வழங்குவது பற்றி அரசுக்கு கண்டனம் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்து பேசிய மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறுகையில்,""உங்களின் ஆலோசனையை ஏற்றுக் கொள்கிறோம். கார் உரிமையாளர்களுக்கு மானிய விலையில் டீசல் வழங்குவதை நிறுத்திவிட்டு எந்த வகையான நடைமுறையை கடைபிடிப்பது என்பது பற்றி ஆலோசிக்கப்படும்,'' என்றார். மத்திய அரசு, தற்போது டீசலுக்கு லிட்டருக்கு ரூ.6.08 மானியமாக வழங்கிவருகிறது. பெட்ரோல் விலையை, சந்தைவிலைக்கு ஏற்ப நிர்ணயம் செய்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டது. காஸ், டீசல், மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலையை, அமைச்சர்கள் குழு முடிவு செய்தது. இழப்பை சரிக்கட்ட மானியம் வழங்கப்பட்டது. இருப்பினும், எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்ட இழப்பை சரிக்கட்ட, கடந்த ஜூன் மாதம் டீசல் மற்றும் கெரசின், காஸ் ஆகியவற்றின் விலை உயர்த்தப்பட்டது. இந்தியாவுக்கு, 75 சதவீத கச்சா எண்ணெய் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. நாட்டில் தேவைப்படும் டீசலில், 10 சதவீதம் தொழில் துறைக்கும், 6 சதவீதம் ரயில்வேக்கும், 12 சதவீதம் விவசாயத் துறைக்கும், 15 சதவீதம் கார் உரிமையாளர்களுக்கும் போய் சேர்கிறது. இது தவிர, 8 சதவீதம் மின் சக்தி மற்றும் பஸ் போக்குவரத்திற்கு 12 சதவீதமும் பயன்படுகிறது.
சமீபத்தில் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்ட போதிலும், இன்னும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு 1.22 லட்சம் கோடி பாக்கி உள்ளது.
லோக்சபா கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு வெளியே வந்த நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறுகையில்," டீசல் விலையை நிர்ணயிப்பதை அரசு கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதற்கான சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன' என்றார்.
மத்திய பெட்ரோலிய அமைச்சர் ஜெய்பால் ரெட்டி நிருபர்களிடம் கூறுகையில், "" இந்தியாவில் டீசல் பயன்பாடு அதிகமாக உள்ளது. இருப்பினும் தயாரிப்பு செலவை விட குறைவாக கொடுக்கப்படுகிறது. மானிய விலையில் வழங்கப்படும் டீசலானது, லாரி மற்றும் பயணிகள் போக்குவரத்துக்கு முன்னுரிமை கொடுத்து அளிக்கப்படுகிறது. மேலும், விவசாய பயன்பாட்டிற்கும் அளிக்கப்படுகிறது. மானிய விலையில் விற்கப்படும் டீசல், பவர் ஜெனரேட்டர்கள் பயன்பாட்டிற்கு தவறாக உபயோக படுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. டீசல் விலையை, பயன்பாட்டிற்கு ஏற்ற இரட்டை விலை வைப்பதில் குழப்பம் உள்ளது. உண்மையானவர்களுக்கு மானியம், விவசாயிகள் மற்றும் போக்குவரத்து பயன்பாட்டுக்கு போய் சேரும் வகையில் அனைத்து அம்சங்களும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. இதற்கு விரைவில் இறுதி வடிவம் கொடுக்கப்படும்,'' என்றார்.
Re: கார் உரிமையாளர்களுக்கு மானிய விலையில் டீசல் வழங்குவது நிறுத்தப்படும்
சாமான்ய மக்களுக்கு வழங்கப்படும் விலையைவிட வரி ஏய்ப்பு செய்யற பணக்கார வர்கத்திற்க்கு மூன்று மடங்கு விலையில் விநியோகம் செய்யவேண்டும். மறுக்கும் பணக்கார வர்கத்திற்க்கு பார பட்சமின்றி அனைத்து சலுகைகளும் ரத்து செய்யப்பட வேண்டும்...அரசு செய்யுமா? ஏழையின் குரல் எடுபடுமா?
Re: கார் உரிமையாளர்களுக்கு மானிய விலையில் டீசல் வழங்குவது நிறுத்தப்படும்
இ்ன்று தமிழகத்தின் பல இலவசங்களை அதிகமாக அனுபவித்துக்கொண்டு இருப்பவர்கள் பணக்காரர்களே இலவச கரண்டில் இருந்து இலவச மருத்துவம் வரை ....டீசலிலா அவர்கள் ஊழல் செய்ய மாட்டார்கள் இது காருக்கு இது வேனுக்கு என்று எப்படி கண்டுபிடிப்பார்கள் ...மடையர்கள்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: கார் உரிமையாளர்களுக்கு மானிய விலையில் டீசல் வழங்குவது நிறுத்தப்படும்
jasmin wrote:இ்ன்று தமிழகத்தின் பல இலவசங்களை அதிகமாக அனுபவித்துக்கொண்டு இருப்பவர்கள் பணக்காரர்களே இலவச கரண்டில் இருந்து இலவச மருத்துவம் வரை ....டீசலிலா அவர்கள் ஊழல் செய்ய மாட்டார்கள் இது காருக்கு இது வேனுக்கு என்று எப்படி கண்டுபிடிப்பார்கள் ...மடையர்கள்
ஆவேசமான பதிலாயிருக்கு அதிகமா பாதிக்கப்பட்டுட்டிங்களோ
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» பெண்களை கார் ஓட்ட அனுமதிக்கும் வரை, சவுதி அரேபியாவுக்கு கார் ஏற்றுமதி செய்ய வேண்டாம்
» மக்கள் அனைவருக்கும் பாதுகாப்பு வழங்குவது எனது பொறுப்பு
» நேரடி மானிய திட்டம் : தமிழகத்தில் அக்.1ல் துவக்கம்
» திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள்!
» மீள்குடியேற முன்வராதவர்களின் நிவாரணங்கள் நிறுத்தப்படும்
» மக்கள் அனைவருக்கும் பாதுகாப்பு வழங்குவது எனது பொறுப்பு
» நேரடி மானிய திட்டம் : தமிழகத்தில் அக்.1ல் துவக்கம்
» திடீரென நிறுத்தப்படும் திருமணங்கள்!
» மீள்குடியேற முன்வராதவர்களின் நிவாரணங்கள் நிறுத்தப்படும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|